Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. காஸாவில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை கோரி தலைநகரில் போராட்டம்! காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரியும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இன்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது காசாவில் நடந்த மோதலில் 15,000 குழந்தைகள் மற்றும் 7,500 பெண்கள் உட்பட 36,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். இதில் இலங்கை பலஸ்தீன ஒற்றுமைக் குழு, சோசலிச இளைஞர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385033
  2. 2ஆம் சங்கிலியனின் 405வது சிரார்த்த தினம்! யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன், 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம் இன்று யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில் யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன், யாழ் மாநகர ஆணையாளர், சமய பெரியோர்கள், வர்த்தகர்கள் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து யமுனா ஏரியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜமுனைநதி தீர்த்தமும் தெளிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1385031
  3. போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்! ”போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப் பொருளில் போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இந்த பேரணி இன்று நடைபெற்றது. நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்பக்கமாக அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது அங்கிருந்து நல்லூர் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் சமுர்த்தி அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயனாளிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385047
  4. இங்கிலாந்துப் பெண்ணின் பயணப் பொதியைத் திருடியவர் கைது! பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்துப் பெண்ணின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட கெமரா தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபாய் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1385057
  5. அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி! அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இப்போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதமும் பெருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இப்போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவந்த போதிலும் ரஷ்ய பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பைடன் தடைவிதித்திருந்தார். இந்நிலையில் குறித்த தடையை தற்போது தளர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். பைடனின் இந்த முடிவால் உக்ரேனின் ஆதரவு நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்கள் ஆயுதங்களை ரஷ்யாவிற்குள் உள்ள இராணுவ இலக்குகள் மீது பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்ளலாம் எனவும் ஜேர்மனியும் யோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் முடிவானது ரஷ்ய அதிகாரிகள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385065
  6. நன்நடத்தைப் பிணை என்றால்... அவர் மீண்டும் ஜனாதிபதி ஆவதில் சிக்கல் வருமா?
  7. ஆஹா... கிளம்பீயிட்டாங்கய்யா, கிளம்பீட்டாங்க. பயித்தம் பணியாரத்துக்கு ஆசைப்பட்டு, குமாரசாமி அண்ணையின்ரை பலகாரத்தை நாங்கள் கொண்டு வந்தது மன வருத்தமாக இருக்கு. 😂 🤣
  8. யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லத் தடை! உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தொடர்பாக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். அத்துடன், அனுமதிப்பத்திரம் இன்றி சில பகுதிகளில் சுண்ணாம்புக்கல் அகழப்படுவத்தோடு, வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சட்ட விதிமுறைகளுக்கு அமைய சுண்ணாம்புக்கல் அகழ வேண்டும் எனவும், அதனை உள்ளூர் தேவைக்கே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் விவசாய நடவடிக்கைக்காக அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும், அனுமதிப்பத்திர விதிமுறைகள் உரியவாறு பின்பற்றப்படுகின்றதா என தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மண் கொண்டுவருவதை தடை செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384921
  9. சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்! சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “நண்பா, போதைக்கும், புகைத்தலுக்கு முற்றுப்புள்ளிவைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மரதன் ஓட்ட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரினால் கொடியசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த மரதன் ஓட்டப்போட்டியானது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384934
  10. நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து : சீனாவினது ஆய்வில் வெற்றி! நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி இன்சுலின் ஊசிக்கு பதிலாக, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த புதிய முறை வெற்றியடைந்துள்ளதுடன், அந்த நோயாளிகளின் நீரிழிவு நிலை நீங்கியதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1384956
  11. டொனால்ட் டிரம் குற்றவாளி என தீர்ப்பு-4 ஆண்டுகள் சிறைத் தண்டனை! அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். இதன்படி ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2024/1384915
  12. சட்டவிரோத மதுபானம் அருந்தி நால்வர் உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம். தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இச்சட்டவிரோத மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுவந்துள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ”உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்கு மேலதிகமாக, தடயவியல் அறிக்கைகளை வரவழைத்து அவர்களின் மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384739
  13. அருட்தந்தை மா.சத்திவேல் அவர்களுக்கு தெரிந்தது, தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அல்லது... இந்த விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் திருட்டு பூனைகளாக இருக்கிறார்கள்.
  14. ஸ்ரீலங்காவுக்கு பல மில்லியன் டொலர் நட்ட ஈடு கிடைக்கப் போகுது போலை இருக்கு. சிங்களவனுக்கு எப்பவும்.... வெள்ளி திசைதான். 😂 🤣
  15. ஒரு சிறிய நாட்டில் 50 பேர் சிகரட் பாவனையால் மட்டும் இறப்பது மிகப் பெரிய தொகை. மறுபக்கம் விபத்தாலும், மது, போதைப்பொருள் பாவனையாலும் இறப்பவர்களின் தொகையும் மிக அதிகம். இதனைப்பற்றி அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. அவர்களின் சிந்தனை, கவனம், உழைப்பு எல்லாம் அடுத்த தேர்தலில் மட்டுமே உள்ளது.
  16. கவி அருணாசலம் சந்திப்பில் கலந்து கொள்ளாததால், நல்லதொரு கருத்தோவித்தை இழந்து விட்டோம் என்ற கவலை குமாரசாமி அண்ணாவிடமும் இருந்தது.
  17. 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்ட ‘All eyes on Rafah’ ஹேஷ்டெக் – பலஸ்தீனத்தின் AI புகைப்படம் ! காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது. அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது. குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன. பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது. All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384810 ################# ################# ####################
  18. சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்! இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார். இரத்தினபுரி, கஹாவத்த, கட்டங்கி பகுதியைச் சேர்ந்த இவர், மலேசியாவுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384793
  19. அண்ணளவாக.... இரண்டு வருடத்தின் பின், @Paanch அண்ணையை யாழ்களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி. ❤️ அவருடன் வாரத்தில்... குறைந்தது இரண்டு முறையாவது வேறுவழிகளில் தொடர்பில் இருந்த போதும்.... யாழ்களத்தில் அவரின் எழுத்தை வாசித்த போது உண்மையிலேயே ஆனந்த பரவசம் அடைந்தேன். 😍 அவரை எப்படியும் அடுத்த சில நாட்களில் யாழிற்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன் என வேறு ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி அவர் மீண்டும் வந்தது இனம் புரியாத உச்ச மகிழ்ச்சி. 🥰 பாஞ்ச் அண்ணை மீண்டும் யாழ்.களத்தில் இணைவதற்கு சில சிரமங்களும், தடங்கல்களும் இருந்த போது அதனை நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கிய @மோகன் அண்ணா, @இணையவன், @நிழலி, @ஈழப்பிரியன், @குமாரசாமி அண்ணா ஆகியோருக்கும்... அவரை மீண்டும் காண ஆவலுடன் இருந்த யாழ். உறவுகளுக்கும் மிக்க நன்றி. 🙏
  20. இது மட்டும்தான்... அந்தப் பைக்குள்ளை இருந்தது என்று சொன்னால், ஸ்ரீலங்கா பொலிஸ் நம்பி.... அந்த வெள்ளைக்காரிதான் பொய் சொன்னதென்று பிடித்து விளக்கமறியலில் வைத்து விடுவார்கள். உங்களுக்கு மேலதிக போனசாக 5´000 டொலரும் கிடைக்கும். 🤣 ஒரு கல்லில்... பல மாங்காய்கள்.... 😂
  21. இவர் பயணித்த 37 நாடுகளில் இல்லாத கள்ளர், ஶ்ரீலங்காவில் இருக்கிறார்கள். 😂 களவிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அந்த மனிசியின், விமான பயண சீட்டையாவது திருப்பி கொடுத்து விடுங்க(டா)…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.