Everything posted by தமிழ் சிறி
-
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நேற்றையதினம் நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவில் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர். அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை, நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. https://athavannews.com/2025/1443294
-
கருத்து படங்கள்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனும், சிவஞானமும் சேர்ந்து தீக்குளித்தால்…. எனது ஆதரவு உண்டு. 👍🏽😀- கொழும்பிற்கு வருகிறது அமெரிக்க கடற்படையின் லிட்டோரல் போர்க்கப்பலான சான்டா பாப்ரா
இந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்னும்… ஶ்ரீலங்காவிலா சுற்றித் திரிகிறார். 😂- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
போரின் ஆரம்பத்திலேயே… உக்ரைனுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று, ஒரு சில யாழ் கள உறுப்பினர்கள் தீர்க்கதரிசனமாக முற்கூட்டியே கூறியதையும் பொருட்படுத்தாமல், உக்ரேனுக்கு கொம்பு சீவி விட்டவர்கள் இப்போ… எந்த பதுங்கு குழிக்குள் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
💐 நினைவஞ்சலி 💐 யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் சிறந்த சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி, அமைதியான பண்பும், அர்ப்பணிப்பும், அன்பும் கொண்டிருந்த யாழ். இந்துவின் பெருமைமிகு மைந்தர், வைத்தியர் வெங்கடாசலம் சுதர்சன் அண்ணா அவர்கள், சுகயீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்துச் சென்றார். மருத்துவத் துறையில் தமது ஆற்றலும் அறிவும் முழுமையாக அர்ப்பணித்து, நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் காக்கக் காரணமாக இருந்து, சமூகத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த அன்னாரின் திடீர் பிரிவு எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் இனிய நினைவுகள் என்றும் எம்முடன் நிலைத்திருக்கும். இறைவன் அன்னாரின் ஆன்மாவை சாந்தியடைய அருள்புரிவானாக. துயருற்ற குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், எமது இதயபூர்வமான அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏 ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 Yarl Gulan- புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அது என்ன... சிவப்பு வெல்வெட் கேக்? ஒரு நாளும் அதை கண்ணால் கண்டதுமில்லை, உண்டதுமில்லை. ஒரு து துண்டு, அனுப்பி விடுங்க ப்ளீஸ். 😂- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
இப்படியான இளமரணங்களுக்கு எமது சமுதாயமும் சேர்ந்து தான் பொறுப்பெடுக்க வேண்டும். தங்களை கவனிப்பதற்கு முதல் மற்றவர்களை கவனிப்பதற்கு எமது சமூகம், குடும்பம் போன்றவற்றால் பிள்ளைகள் வடிவமைக்கப்படுகிறார்கள். அதுதான் சரியெனவும் தொடர்ந்து கதைத்து பப்பாவில் ஏத்துவதால் பிள்ளைகளும் நல்லபிள்ளை எண்டால் தன்னை கவனியாமல் மற்றவர்களை பார்ப்பதென நினைத்துக்கொள்கிறார்கள், அவ்வாறு வடிவமைக்கப்படுகிறார்கள். நம்மாக்கள் தங்களை தாங்களே கவனிப்பது பிழையெனவும் நினைத்துக்கொள்கிறார்கள். தங்களை கவனிப்பதை விடுத்து மற்ற அனைவரையும் பார்ப்பதற்காகவே மறைமுகமாக குடும்பங்களால் வடிவமைக்கப்படுகிறோம். யாரும் இறந்தால் அவர் அவரை வடிவாய் பார்த்தவர், அவவை வடிவா பார்த்தவர் என்பதில் ஆரம்பிக்கிறது இப்படியான Design கள். சுயம், சுயசிந்தனை,சுயமரியாதை, சுயநலன். இதுகளை மறந்து மற்றவர்களுக்காகவே Design செய்யப்படுகிறோம். கடவுளை வெளியில் தேடுவது போல் எங்களை நாங்களே கவனிப்பதில் இருந்து விலகி நாடு, தமிழ், வீடு, தொழில் போன்றவற்றை வளர்த்து கொள்வதற்காக வடிவமைக்கப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் முதல் எங்களை நாங்களே கவனிக்க வேண்டும் என்பதை செய்வதில்லை. அதை பார்த்து கொண்டிருக்கும் பிள்ளைகளும் அதே போல் வந்து விடுகிறார்கள். அதுதான் சரியென கற்பிக்கப்படுகிறார்கள். அல்லது மற்றவர்களை பார்ப்பதற்காக தங்களை கவனியாமல், தங்களை வளர்த்து கொள்ளாமல் குடும்பபங்களை இளவயதில் தொழில்களால் பொறுப்பெடுப்பதால் தொடர்ந்தும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். தங்களை தாங்களே கவனியாததால் அவர்களை கவனிப்பதற்கு சேர்ந்து இருப்பவர் முறியவேண்டிவரும். அல்லது போராடவேண்டிவரும். தங்களை தாங்களே கவனியாததால் நேற்று இறந்த வைத்தியர் போன்ற இளமரணங்களை நமது சமுதாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆழ்ந்த அநுதாபங்கள். முகப்புத்தகம் முழுக்க இப்படி ஓர் மரணத்திற்காக அழுததை கவனிக்க கூடியதாக இருந்தது. மாறி வடிவமைத்திருந்தால் தானும் வாழ்ந்து தொடர்ந்து சமூகத்திற்காகவும் சேவையாற்றியிருக்கலாம். ஆக்கம் : Kalichelvi Paskaran உண்மை உரைகல்- நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு. 🙏 இலங்கையின் மிக உயரமான அசையும் கட்டுமானம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறம். ஆங்கிலேயரின் குறிப்பேடுகளில் தகவல் லண்டன் அருங்காட்சியகத்தில் ஆவணங்கள். நல்லூரானின் சப்பறம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கட்டப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் இலங்கையின் உயரமான அசையும் கட்டுமானம் என்று ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. அக் குறிப்பேடுகள் இப்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஒருமுறை வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் தர்மகத்தா வைத்திலிங்க செட்டியாரும் அவரது மனைவியும் நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர். அப்போது வைத்திலிங்கச் செட்டியாரின் மனைவி செட்டியாரிடம் ஒரு குறுணி வேலுக்கு இந்தளவு பெரிய சப்பறம் தேவையா? என்று கேட்டுள்ளார். இருவரும் திருவிழா முடிந்து வீட்டுக்கு சென்று தூங்கும் போது இருவர் கனவிலும் சிறிய வேல் மிகப் பிரமாண்டமாக சப்பறத்திற்கு மேலாக வானளாவ காட்சி கொடுத்ததாம். மறுநாள் நல்லூர் ஆலய அறங்காவலர் ரகுநாத மாப்பாண முதலியாரைச் சந்தித்து விடயத்தை சொல்லி சப்பறத் திருவிழா உபயத்தை தமக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க ரகுநாதரால் வைத்திலிங்கச் செட்டியாருக்கு சப்பற திருவிழா உபயம் வழங்கப்பட்டது. அதற்கு பிரதிபலனாக ஏராளமான நிலபுலங்களை எழுதிவைத்ததோடு முருகனை அலங்காரம் செய்வதற்கு ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வைத்திலிங்கச் செட்டியார் கொடுத்தார். அதன்பின் மிக நீண்டகாலம் வைத்திலிங்க செட்டியார் பெயரிலேயே சப்பறத் திருவிழா நடைபெற்று வந்தது. ஆரம்பகாலத்தில் நல்லூர் சப்பறம் நூற்று முப்பது அடியாக கட்டப்பட்டதாக குறிப்புக்கள் உண்டு. 1977 ம் ஆண்டு சப்பறம் முறிந்தது. அதன் பின்னர் சப்பறத்தின் உயரம் நூறு அடிகளாக குறைக்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாகவும் நல்லூர் வீதி மாற்றியமைத்தமை காரணமாகவும் யாழ்ப்பாணக் கோட்டை சண்டை காரணமாக சில வருடங்கள் சப்பறம் இழுக்கவில்லை. அதன் பின்னர் 1999 ம் ஆண்டு மீண்டும் பெரிய சப்பறம் இழுக்கப்பட்டது. பின் வீதியின் அகலம் போதாததால் சப்பறப் படல்கள் குறைக்கப்பட்டு சப்பறத்தின் உயரம் 80 அடியாக குறைக்கப்பட்டது. பழைய சப்பறச் சகடை பழுதடைந்ததன் காரணமாக 2021 ம் ஆண்டு புதிய சப்பறச் சகடை செய்யப்பட்டது. வேல் பெருமானுடைய ழுழுத் தோற்றத்தையும் சப்பறத்தின் மேல் பகுதியில் உள்ள கண்ணாடியில் காணமுடியும். கீழே உள்ள ஓவியம் ஆங்கிலேயர் காலத்தில் கைகளால் வரையப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறத்தின் பென்சில் ஓவியம். தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழா எதிர்வரும் 20.08.2025 புதன்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதி - வீர செங்குந்தர் மரபு Babu Babugi- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் இணக்கப்பாடின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரை நிறுத்துவதற்காக இச் சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜிலுள்ள எல்ம்ஹர்ஸ்ட் – ரிச்சர்ட்சன் கூட்டு இராணுவ தளத்தில் இடம்பெற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இரு உலக வல்லரசுகளும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடியிருந்த நிலையில் எவ்வித உடன்படிக்கைகளும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எந்த பொது அறிக்கையையும் இரண்டு நாடுகளும் வெளியிடவில்லை. இதேவேளை, இந்த முக்கியமான சந்திப்புக்குப் பின்னர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்த போதிலும், இரண்டு ஜனாதிபதிகளும் எவ்வித அறிவிப்புகளை வௌியிடாமல் வௌியேறியிருந்தனர். எவ்வாறாயினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரைன் ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தமது வலுவான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.google.com/inputtools/try/- ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது" உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து. Thanthi TV ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது" உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து. Thanthi TV ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
🔴 “No deel but progress has been made” யுக்ரைன் மீதான யுத்தம் குறித்தான அலஸ்கா பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பேசும்போது “ஒப்பந்தங்கள் எதுவும் செய்துக்கொள்ளப்படவில்லை ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். 6 வருடங்களின் பின்னர் இந்த வரலாற்று சந்திப்பு அமெரிக்க - ரஷ்ய ஜனாதிபதிகளிடையே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
இன்னும் ஐம்பது வயதைக் கூட அவர் எட்டவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே அவரைப் பல வழிகளில் போட்டிகள், கழகங்கங்கள், தனியார் வகுப்புக்கள் என அவதானித்ததிலிருந்து மிகவும் பண்பான அமைதியான சுபாவம் கொண்ட மிகுந்த தன்னடக்கமுடைய மாணவன். கடின மான உழைப்பாளி. உயிரியல் துறையில்மிக இக்கட்டான வசதிகளற்ற போராட்ட காலத்தில் அதிசிறந்த புள்ளிகள் நிலைகளைப் பெற்றதால் நாடளாவிய தெரிவுப் பட்டியலில் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குச் சென்ற விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்திய மாணவர்களில் அவரும் ஒருவர். நான் புலம்பெயர்ந்த தேசத்திற்கு வந்தபின்னர் யாழ்.வைத்தியசாலையிலோ அல்லது நோர்த்தேர்ண் இதர பல வைத்தியசாலைகளிலோ அவர் கையாலே மருத்துவம் சத்திரசிகிச்சை பெற்று குணமடைந்த ஏத்தனையோ பேர் அவரை வாயார வாழ்த்தி புகழ்ந்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து இருக்கின்றேன். சில ஆண்டுகளிற்கு முன்னர் என் சகோதரனிற்கு ஒரு சத்திரசிகிச்சை முடிந்த போது மிகச் சாதாரணமாக பல கவனிப்புகள் பற்றி அக்கறையாக சற்று சாவகமாகவே உரையாடினார். இன்னும் எத்தனையோ பேர் இவரின் சத்திர சிகிசாசைக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்து கொண்டிருப்பதாக அப்பப்போ கூறுவர். கண்ணூறு பட்டது போல காலையிலே காலன் காவு கொண்ட செய்தி காதுகளில் எட்டியும் கண்களில் பட்டும், இன்னும் நெஞ்சம் நம்ப மறுக்கின்றது. ஜனவரியில் பிறந்ததால் ஆண்டொன்று முந்தியே கற்க வாய்ப்புக்கிடைத்தது. ஆனாலும் அகவை ஐம்பதை அடைய முன்னர் அவசரப்பட்டு யமதர்மன் அகாலத்தில் அக்கரைக்கு அழைத்ததேனோ. அவர் தம் பாரியார், குழந்தைகளுக்கு ஆறுதல் கூறவே முடியாது நம்மால். ஆண்டவன் அவர்களுக்கு மிகுந்த தாங்கும் சக்தியுள்ள மனவலிமையைக் கொடுக்க வேண்டும். அன்னாரின் இழப்பு யாழ் . மருத்துவ சமூகத்திற்கு ஒரு ஈடுசெய்யப்பட முடியாத ஒரு பேரிழப்பாகும்.. அன்னாரின் ஆத்மா பரிபூரண சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவவனைப் பிரார்த்திப்போமாக. Sarulatha Ramachandran- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரை யாழ் போதனா வைத்தியசாலையும் யாழ் சமூகமும் இழந்து நிற்கின்றன, 50 வயதில் ஒரு இளம் குடும்பத்தை தவிக்க விட்டு இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றதை நினைத்து மனம் கனக்கின்றது. சுவாமி விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதி போன்றோர் 40 வயதில் பலதைச் சாதித்துச் சென்றது போல சுதர்சனும் 50 வயதில் நிறைய சாதித்து பலரின் அபிமானத்தை பெற்றுள்ளது சமூக வலைப்பதிவுகளில் இருந்து தெரிகின்றது. மாதம் ஓரிரு பதிவுகள் மட்டுமே போடும் வகையைச் சேர்ந்த ஒருவராக எனது முகநூல் நண்பராகவும் இருந்துள்ளார். அன்னாருக்கு எனது அஞ்சலிகளையும், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஓம் சாந்தி, சாந்தி சாந்தி!😢 Kumar Ganesh- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் திடீர் மறைவு – மருத்துவ சமூகத்திற்கு பேரிழப்பு. .................................................................................. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும். அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார்." அவரது ஆத்மா சாந்தியடையட்டும். Thangamuthu Sathiyamoorthy ·- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
ஆண்மையுள்ள வவுனியா வர்த்தக சங்கம்: சுமந்திரனுக்கு முதல் அடி! ஹர்த்தால் என்பது தேவையற்றது, ஏன் தேவையற்றது என்பது தொடர்பிலும் முன்னைய பதிவில் போட்டிருந்தேன். தவிர சுமந்திரன் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து ஹர்த்தாலுக்கு ஆதரவு கேட்டு வந்தார், ஆனால் ஆண்மையுள்ள வர்த்தக சங்கம் சுமந்திரனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில் வவுனியா வர்த்தக சங்கம் சரியான முடிவை துணிச்சலாக எடுத்திருக்கின்றது. இந்த முடிவு சாதாரணமானது இல்லை, தமிழர்கள் நலனை தாண்டி சுமந்திரனை முதல் முறை நேரடியாக எதிர்த்து ஒரு முடிவை வவுனியா வர்த்தக சங்கம் எடுத்திருக்கின்றது. இதில் உங்களுக்குள் ஒரு கேள்வி வரும் சுமந்திரன் அவ்வளவு பெரிய ஆளா என்று, ஆம் எல்லாத்துக்கும் ஜிங் ஜக் போட்டு எதாவது பதவிகளை பெற வேண்டும் என்று நினைக்கிற, தற்போது பெற்றிருக்கிற அனைவருக்கும் அவர் பெரிய ஆள்த்தான். ஒருவருக்கு அரசியல் ஆசை, அதிகாரம் மீது மோகம் இருக்கின்றது என்றால் அவர்கள் அதை அடைய தற்போது வரை நாடுகின்ற கட்சி தமிழரசு கட்சிதான், அப்படி இருக்கும் போது அங்கு சுமந்திரனுக்கு செம்பு தூக்கினால்தான் இந்த அற்பர்களுக்கு எதாவது பதவி எலும்பு துண்டாக கிடைக்கும். அப்படி இருக்கும் போது வவுனியா வர்த்தக சங்கத்தில் இருக்கிறவர்களுக்கும் அரசியல் ஆசை, அதிகார மோகம் இருக்கலாம், ஆனால் அதற்காக விலை போகாமல் இந்த முடிவை எடுத்ததற்கு பாராட்டுக்கள். இனி ஏனைய வர்த்தக சங்கங்கள் இந்த முடிவை முன்மாதிரியாக வைத்து சுமந்திரன் மீது விசுவாசம் இருந்தாலும், என்ன தலைவரே வவுனியா வர்த்தக சங்கம் இப்படி செய்து விட்டார்கள், இனி நாங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள், ஆகவே கடை மூட முடியாது என்று முடிவெடுக்கலாம். ஆக மொத்தத்தில் ஹர்த்தால் இல்லை, அத்தோடு நான் நினைத்தால் எதை வேண்டுமென்றாலும் எந்த வழியிலோ செய்து முடிக்கலாம் என்று நினைக்கிற சுமந்திரனுக்கு இது நேரடியாக மக்கள் கொடுக்கும் முதல் செருப்படியாக அமையும். Nadarasa Jeyakanthan- கருத்து படங்கள்
- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ஹா.... ஹா.... ஹா... அருமையான கருத்தோவியம். சொல்லி வேலையில்லை. 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂 உங்களுடைய பிறந்த நாளுக்கு... என்னென்ன பலகாரம் செய்தனீர்கள். 😂- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
📌👉யாழின் பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்‼️‼️‼️ மருத்துவதுறையின் ஒரு தூண் சரிந்தது..! சிறந்த மருத்துவ ஆளுமை 😭 ஆழ்ந்த இரங்கல்கள் ..! சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதர்சன் மாரடைப்பால் மரணம் 😭😭😭 ( இன்று - 15-08-2025 ) கொழும்பில் காலமானார் 😭 யாழ் மண்ணிற்கு பேரிழப்பு 😭😭 யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் V. சுதர்சன் அவர்கள் மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர். நோயாளர்களை மிகவும் அன்புடன் கவனிப்பவர். அவரது மரணம் மிகவும் கவலையாக இருக்கின்றது. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை ஒன்றுக்காக சென்றிருந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .எனினும் அவர் உலகத்தை விட்டு பிரிந்து விட்டார். அவரது பிரிவால் வாடும் அவர் தம் குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். முகநூலில் இருந்து....- முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!
யாழ்ப்பாணத்தில் பல குண்டு வீச்சுகளுக்கும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையின் மகனும், பின்பு மகிந்தா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து கைத்துப்பாக்கியை காட்டி தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய இலங்கையின் கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகளில் ஒருவரான ரொஹான் ரத்வத்தை இன்று சிறையிலையே காலமானார். Prashanthan Navaratnam- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று கொழும்பில் காலமானார். வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1443164 - வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.