Everything posted by தமிழ் சிறி
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
4-5 வயதுடைய சிறுமி செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் டிலக்சன்
-
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, https://athavannews.com/2025/1439315
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
நீங்கள்… சுத்தி, சுத்தி எங்கை வாறியள் எண்டு விளங்குது. 😂 ஊரில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மீது புலம் பெயர் மக்கள் அதிக கௌரவத்துடன் அவர்களை மதிக்க வேணும். 🙂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பத்து வகையான போலி ரெசிபி செய்வது எப்படி .... பருப்பு போலி (Chana Dal Poli / Puran Poli) தேவையான பொருட்கள்: பூரணத்திற்குப்: கடலை பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி மாவிற்குப்: மைதா – 1 கப் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – சிட்டிகை செய்முறை: 1. மாவுக்கான பொருட்கள் சேர்த்து மென்மையாக பிசைந்து ஓய விடவும். 2. கடலை பருப்பை வெந்து வெல்லத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 3. சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவால் மூடி, வட்டமாக தேய்க்கவும். 4. தாவாவில் நெய் விட்டு போலி சுடவும். --- 2. தேங்காய் போலி (Coconut Poli) தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – ¾ கப் ஏலக்காய் – சிறிதளவு மைதா – 1 கப் மஞ்சள் தூள், உப்பு – சிறிதளவு நெய் – தேவையான அளவு செய்முறை: 1. வெல்லம் உருக்கி தேங்காயுடன் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. மாவை பிசைந்து உருண்டை எடுத்து மேலே தேங்காய் பூரணம் வைத்து தேய்க்கவும். 3. நெய்யில் சுட்டு பரிமாறவும். --- 3. சக்கரை பொங்கல் போலி (Sweet Pongal Poli) செய்முறை: 1. வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து சக்கரை பொங்கல் போல தயார் செய்யவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி போன்று பரிமாறலாம். --- 4. சக்கரை போலி (Sugar Poli) தேவையானவை: சர்க்கரை – 1 கப் மைதா – 1 கப் தேங்காய் (விருப்பம்) – ¼ கப் ஏலக்காய் – சிறிது செய்முறை: 1. சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. பூரணமாக வைத்து மாவில் மூடி தேய்த்து சுடவும். --- 5. பால் போலி (Milk Poli) செய்முறை: 1. பால் கொதிக்க வைத்து சர்க்கரை, தேங்காய், சிறிது ரவை சேர்த்து கொழுக்கட்டு போலக் கெட்டியாக செய்யவும். 2. அதை பூரணமாக வைத்து போலி செய்யவும். --- 6. கொதுமை மாவு போலி (Wheat Flour Poli) மாற்றம்: மைதா பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம். இதனால் fibre அதிகமாக இருக்கும், ஆரோக்கியமானது. --- 7. பீடருட் போலி (Beetroot Poli) செய்முறை: 1. பீட்ரூட்டை உரித்து அரைத்துப் பாகு தயாரிக்கவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி செய்யலாம். அழகான ரோஸ் கலர் கிடைக்கும். --- 8. சோயா போலி (Soy Poli) செய்முறை: 1. சோயா கிரான்யூல்ஸ் வேக வைத்து பிசைந்து வெல்லத்துடன் கிளறி பூரணமாக்கவும். 2. போலி வடிவத்தில் செய்து சுடவும். --- 9. முந்திரி போலி (Cashew Poli) செய்முறை: 1. முந்திரியை நன்கு அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து பாகு செய்து பூரணமாக்கவும். 2. போலி சுடவும் – இது ரொம்ப ரிச் ஸ்வீட் போலி ஆகும். --- 10. பாசிப்பருப்பு போலி (Moong Dal Poli) செய்முறை: 1. பாசிப்பருப்பை வேக வைத்து வெல்லத்துடன் சேர்த்து பூரணமாக்கவும். 2. சாதாரண போலி போலச் செய்யலாம். --- பொதுவான குறிப்புகள்: எல்லா போலிக்கும் மைதா அல்லது கோதுமை மாவை மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஓய வைக்க வேண்டும். நெய் அல்லது நெய்+எண்ணெய் கலந்தது சுட வழிகிறது. சுடும்போது தீயை மிதமாக வைத்தால் மென்மையான போலி கிடைக்கும். திண்டுக்கல் சமையல்
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
மன்னிக்கவும் அல்வாயன். நான்தான் தவறான தகவலை வழங்கி விட்டேன். மேலே நீங்களும், நிழலியும் கூறியதே சரியான தகவல்.- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
தகவலுக்கு நன்றி நிழலி. 🙂- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
6 வயது சிறுமி பாலியல் குற்றவாளிக்கு, ஆண்மை நீக்க உத்தரவிட்ட மடகஸ்கார் நீதிமன்றம்!- இரசித்த.... புகைப்படங்கள்.
ஓடின சைக்கிள் சில்லை ஒருமாதிரி கொண்டுவந்து ஒய்யாரமாய் வீட்டிலே ஒளிரும் விளக்காக்கி ஒரின்பம் காண்கின்றேன்❤️ Thava Arumugam- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் எந்த நாடு என்று தெரியவில்லை. ஆனால்... ஜேர்மனியில் இருந்து சென்ற மற்ற ஒருவர் சண்டித்தனம் செய்து இருக்கின்றார். இந்த விடுமுறைக்கு... இன்னும் நிறைய சம்பவம் நடக்கும் போலுள்ளது.- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர். அரசன் எவ்வழியோ... குடிகளும் அவ்வழியே. 😂 அதுக்காக.. மற்ற சிங்களப் பகுதிகள் திறம் என்று நினைக்கப் படாது. 🤣- பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்
- விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்!
விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழியிலே குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பெண்களின் ஆடைகளுடன் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் சர்வதேச நீதி வேண்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் புற்றுக்குள் இருந்து கொண்டு பாம்பு வந்தது போல ஜேவிபி கட்சியின் முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச கோஷமிடுகின்றனர். 1988, 1989 களில் எந்த காரணமும் இல்லாமல் ஜேவிபினர் போராடினார்கள். தமிழ் மக்கள் போராடியதற்கு காரணம் இருக்கிறது. ஜேவிபி போராடியதற்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும். எத்தனை கொலைகளை செய்தீர்கள்? விமல் வீரவன்ச இங்குள்ள புதைகுழிகளில் இருந்து வரும் எலும்புக்கூடுகள் தொடர்பாக இன்று பல கதைகளை கூறுகிறார். எல்லாவற்றையும் மூடி மறைத்து தாங்கள் கொலைகளை செய்து முடித்துவிட்டு தேவையில்லாமல் பல விடயங்களை விமல் வீரவன்ச கதைக்கிறார். விமல் வீரவன்ச தனது சொந்த வீட்டிலேயே வேலைக்காரியை கொலை செய்தவர். கொலைகாரன் விமல் வீரவன்சவை கைது செய்து அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை யாழ்ப்பாணத்தில் இருந்து நான் வலியுறுத்துகிறேன். அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீங்கள் அரசாங்கம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. இந்த நேரத்தில் செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக விமல் வீரவன்ச அறிக்கை விட என்ன காரணம்? ஜேவிபியுடன் சுற்றிவிட்டு பின்னர் ராஜபக்ஷ பக்கம் பாய்ந்து சென்றார். அடுத்தவர்களை பயமுறுத்தி தன்னை விளம்பரப்படுத்தி தனது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிக் கொண்டு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு திரிகின்றார். கடந்த காலங்களில் அவர் செய்த ஒரே ஒரு கொலை மட்டுமே வெளியில் வந்தது. ஆனால் இன்னும் எத்தனை நடந்தது என்று தெரியாது. இந்த தருணத்தில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439284- இலங்கைக்கான தனது பிரீமியம் சலுகையை விரிவுபடுத்தும் எமிரேட்ஸ்!
இலங்கைக்கான தனது பிரீமியம் சலுகையை விரிவுபடுத்தும் எமிரேட்ஸ்! உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே இயங்கும் EK650/651 விமானங்களில் அதன் மறுசீரமைக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானங்களை பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம், இலங்கையில் பிரீமியம் எகானமி இருக்கைகளைக் கொண்ட இரண்டாவது தினசரி விமானமாக எமிரேட்ஸ் மாறும். தற்போது, எமிரேட்ஸின் விரிவான வலையமைப்பில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் பிரீமியம் எகானமியை வழங்குகின்றன. பிரீமியம் எகானமியை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் கொழும்புக்கான பயணங்களைத் திட்டமிடுபவர்கள் தங்கள் முழு பயணத்தையும் முன்பதிவு செய்து, உயர்ந்த பயண அனுபவத்தையும் அனுபவிக்கலாம். எமிரேட்ஸின் EK650 விமானம் துபாயிலிருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பு வந்தடைகிறது. திரும்பும் விமானம் EK651 கொழும்பிலிருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு துபாய் சென்றடைகிறது. (துபாய் நேரம்) பிரீமியம் எகானமி டிக்கெட்டுகளை emirates.com, எமிரேட்ஸ் ஆப் அல்லது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயண முகவர்கள் மூலமாகவும், எமிரேட்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். https://athavannews.com/2025/1439250- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி! ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் போது காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமும் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாகத் துன்புறுத்தி தாக்கும் வகையில் அக்காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439241- பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை இழந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குறித்த ஆர்ப்பாட்டம் பங்கேற்றிருந்தார். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439269- ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!
ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்! மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். கடந்த மாதம் மேல்சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலான கூட்டணியின் முக்கிய ஆதரவுடன் உறுதி செய்யப்பட்டது. ஜூன் மாதம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக ஆளும் கூட்டணியால் முன்மொழியப்பட்ட நான்கு வேட்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். மூத்த நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுடன் திமுக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், புகழ்பெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரை நியமித்தது. திமுக தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது மாநில சட்டமன்றத்தில் கூட்டணியின் வலுவான பெரும்பான்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (AIADMK), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் எம். தனபால் ஆகியோரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில் அதன் தொடக்கத்திலிருந்து கட்சியிலிருந்து ஒருவர் மாநிலங்களவையில் நுழைவது இதுவே முதல் முறை. கமல்ஹாசன் மாநிலங்களவையில் உறுப்பினராக இணைந்திருப்பது, தேசிய சட்டமன்ற விவாதங்களுக்கு ஒரு புதிய குரலைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது உறுப்புரிமை மேல்சபையில் திமுக தலைமையிலான கூட்டணியின் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்தும். https://athavannews.com/2025/1439288- ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?
கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு! ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டு ஏமனில் தன்னை துன்புறுத்திய ஒருவரை கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூலை 16 ஆம் திகதி (நாளை) அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது தலைநகர் சனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷாவின் வழக்கு, ஏமனில் இந்தியாவின் இராஜதந்திர பிரசன்னம் இல்லாததாலும், ஆளும் அதிகாரிகளை அங்கீகரிக்காததாலும் மேலும் சிக்கலாகியுள்ளது. இதனிடையே, கேரள தாதியரை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக மத்திய அரசு திங்களன்று (14) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1439273- விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!
18 நாள் விண்வெளிப் பயணத்தின் பின் பூமி திரும்பிய ஆக்சியம்-4 மிஷன் குழுவினர்! இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் மூன்று ஆக்சியன்-4 மிஷன் குழுவினரை சுமந்து வந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், செவ்வாய்க்கிழமை (15) இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவிலான திட்டமிடப்பட்ட நேரத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கியது. அதன்படி, குறித்த குழுவினர் சான் டியாகோ கடற்கரையில் பசுபிக் பெருங்கடலில் பிற்பகல் 3:01 மணியளவில் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் தரையிறங்கி, வரலாற்று சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) பணியை முடித்தனர். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமி திரும்புவதற்கு விண்கலம் சுமார் 22 மற்றும் அரை மணி நேரம் ஆனது. அந்தக் குழு 18 நாட்கள் ISS இல் தங்கி குறைந்தது 60 சோதனைகளை நடத்தியது. டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பறந்தபோது ஷுக்லா மற்றும் அவரது குழுவினர் – கமாண்டர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (போலந்து), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) – பாராசூட்களை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டனர். சுபன்ஷு சுக்லா தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுப்பாதையில் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் 1984 பயணத்திற்குப் பின்னர் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பணியில் அவர் பங்கேற்பது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு பெரிய முன்னேற்றமாகவும், நாட்டின் வரவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கான ஒரு படிக்கல்லாகவும் கருதப்படுகிறது. https://athavannews.com/2025/1439298- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
அப்ப இனி 10 வருசம் ஸ்ரீலங்கா மறியலில் இருக்கப் போகிறாரா. இது உண்மையில் நடந்தால்.. மகிழ்ச்சியான விடயம். எனக்கென்னவோ... நல்ல வக்கீலை பிடித்து, ஆள் தப்பி விடுவார் என்ற அச்சமும் உள்ளது.- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
ஒரு பதில் சொல்லலாமா. 😂 அமிர்தலிங்கத்தை நினைவு கூர... சுமந்திரனின் தமிழரசு கட்சியும் மறந்து விட்டது என்பதே உண்மை. ஆக, முன்னாள் ஒட்டுக் குழு... புளட் மட்டுமே, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்ந்தது. சும்மா... சகட்டு மேனிக்கு, பொய்க் கதைகளை அவிட்டு விட்டுக் கொண்டு இருக்கப் படாது. கேட்கிறவன் கேனையன் என்றால்... எருமை ஏரோப்பிளேன் ஓடுமாம். வரலாற்றின் குப்பைத் தொட்டியில்... சம்பந்தருடன், அமிர்தலிங்கமும் போய் விட்டார் என்பதே கள நிலைமை.- வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!
அமிர்தலிங்கத்தை நினைவு கூர... சுமந்திரனின் தமிழரசு கட்சியும் மறந்து விட்டது. ஆக, முன்னாள் ஒட்டுக் குழு... புளட் மட்டுமே, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்ந்தது. வரலாற்றின் குப்பைத் தொட்டியில்... அமிர்தலிங்கமும் போய் விட்டார் என்பதே கள நிலைமை.- காதுகளால் வாகனத்தை இழுத்த திருச்செல்வம்
திருச்செல்வத்துக்கு விசர் முத்திப் போட்டுது. 😂 🤣 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.