Everything posted by தமிழ் சிறி
-
2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!
2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது! இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பணவனுப்பல் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.9% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 6.57 பில்லியன் அமெரிக்க டொலராகும். அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1438922
-
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது! எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகின் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438919
-
பிரதமர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல்!
பிரதமர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல்! புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெளிவூட்டல் கலந்துரையாடல் தொடரின் முதல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று (12) வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயன்முறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்களைக் குறைத்தல், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், மாகாண சபை அளவில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விரைவான தீர்வுகள் வழங்குதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக இந்த சீர்திருத்தத்தை தனித்தனியாகப் பார்க்க வேண்டாம், ஒட்டுமொத்த செயன்முறையிலும், அமைப்பிலும் இங்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எப்போதும் இந்த நாடு வளர்ச்சியடைந்துவரும் நாடு என்று மட்டும் கூறினால் போதாது, அந்த முறையை மாற்ற வேண்டும். அதை நாம் தான் செய்ய வேண்டும். இதனை மாற்ற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மட்டுமல்ல நிர்வாக துறையினர், பெற்றோர்கள் உட்பட அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த சீர்திருத்தத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது பல்கலைக்கழகம், உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி மூலம் முன்னேறிச் செல்ல இதன் மூலம் வழியமைக்கப்படுகிறது. நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் கட்டாயமாக கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் இந்த செயன்முறையில் அரச சேவைக்குரிய இடமாற்றங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்களைச் சரியான முறையில் சமப்படுத்த வேண்டும். மாகாண அளவில் ஆசிரியர் அதிபர் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மாகாண சபை மூலம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள். தற்போது பாடசாலைகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் பொறுப்புகூற வேண்டும், அதற்காக பாடசாலைகளின் நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இணங்கி வேலை செய்வோம். அரசாங்கம் என்ற வகையில் கல்வி சீர்திருத்தத்திற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக கல்விக்காக ,மனித வளத்தை மேம்படுத்த, அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி வசதிகளை வழங்குவேன் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நமக்கு இருப்பது இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதுதான். முதல் ஆண்டு நமக்கு கடினமாக இருக்கும் ஆனால் மூன்று நான்கு ஆண்டுகள் செல்லும்போது எளிதாக செய்ய முடியும். மாகாண அளவில் இந்த செயன்முறையை முன்னெடுக்கும் போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த கலந்துரையாடல் முக்கியமானது . நம் பிள்ளைகளுக்காக இந்த மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மேலும் குறிப்பாக, வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். https://athavannews.com/2025/1438925
-
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்.பொதுநூலக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் !
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்.பொதுநூலக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. திட்டமுன்னேற்ற மீளாய்வை இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளுமாறும், இவற்றுக்குப் பொறுப்பாக பதவிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்குமாறும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆர்.குருபரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் ஆகியோருடன் யாழ். பொதுநூலகத்தின் பிரதான நூலகர், மத்திய கட்டடங்கள் திணைக்களப் பொறியியலாளர், மாநகர சபையின் பொறியியலாளர், நூலகம் நிறுவனத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1438910
-
நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
நெடுந்தீவுக்கு சென்றிருந்த சுற்றுலா படகு விபத்து – பயணிகள் பாதுகாப்பாக மீட்பு! யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன்போது 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறியரக சுற்றுலா படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் இதன்போது பணியாளர்கள் உள்ளுர்சுற்றுலா பயணிகள் உட்பட 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்பகுதியைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளனர். குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி சமிக்ஞையை அவதானித்த நெடுந்தீவு தனியார் படகு பணியாளர்கள் விரைந்து செயற்பட்ட நிலையில் படகில் இருந்த 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பாக தங்களின் படகிற்கு மாற்றியுள்ளனர். இதேவேளை குறித்த படகில் இருந்து உள்ளுர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு முழுமையாக கடல் நீரில் முழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மிட்கப்பட்ட பயணிகள் கடற்படையினரின் ஒத்துழைப்பில் குறிகாட்டுவானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438913
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
மற்ற பிரபல கல்லூரிகள் எல்லாம்.. வெளியில் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லைப் போலுள்ளது.
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
நேற்று யாழில் 9A எடுத்த மகள். இன்று தந்தை விபத்தில் பலி! பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Selvakumar Natkunasingam
-
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
சங் அம்மாவிற்கு பென்சன் எடுக்கிற வயது வந்திட்டுது. இனி எங்கை போறது. 😂
-
சிரிக்கலாம் வாங்க
கட்டிலில்... மதில் கட்டிய தம்பதிகள். 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஐ... லவ் யூ. ❤️ 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அப்பப்பா... வெக்கை... தாங்க முடியலை. 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படத்தைப் பார்க்க, தலை சுத்துதா... 😂- இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார். அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார். எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார். இதேவேளை, வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார். அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றியுள்ளார் அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438886- உணவு செய்முறையை ரசிப்போம் !
எள்ளுப் பாகு அல்லது எள்ளு உருண்டை செய்யும் முறை.- வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு!
படத்தில் 58 வயது இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் பொலிஸாரால் செருகப் பட்ட தடியும், பொலிசாரின் அடையாள இலட்சனைகளும் காணப்படுகின்றது.- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முக்கிய மொழிப் பாடங்களான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சித்தி வீதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கில மொழியில் சித்தி வீதம் 73.82% ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப தவணை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk- சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி!
சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk- எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் மற்றும் காற்று செல்லாமல் தான் மேலே எழும்பும்போது இழுவை திறன்(pulling power) இல்லாமல் இஞ்சின் செயலிழந்து கீழே விழுந்து விட்டது என்று ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு கூட தெரியும். கடமை என்பது காலில் கிடக்கும் செருப்புக்கு சமம் என்று கருதக்கூடிய பணியாளர்களை ஒவ்வொரு நிறுவனமும் பதவியில் அமர்த்திருக்கிறது .ரயில் வரும்போது கேட்டை திறந்து விடுவது, சாலையில் பள்ளத்தை தோண்டி போட்டு விட்டு எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் செல்வது, மனித உயிர்களுடன் விளையாடும் பொறுப்பற்ற பணியாளர்களால், அதிகாரிகளால் அனைத்து நிலைகளிலும் மனித உயிர்கள் மாண்டு போகிறது. உண்மை உரைகல்- கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்!
கல்கிசை - காங்கேசன்துறை குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை தினசரி ஆரம்பம்! கொழும்பு: இலங்கையின் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் மிக முக்கியமான ரயில் சேவைகளில் ஒன்றான கல்கிசை - காங்கேசன்துறை இடையேயான குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை (A/C Train), தினசரி சேவையாக அமுலுக்கு வந்துள்ளது. பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இலங்கை ரயில்வே திணைக்களம் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. முக்கிய அம்சங்கள்: தினசரி சேவை: முன்னர் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மாத்திரம் இயக்கப்பட்ட இந்த சொகுசு ரயில், இனிமேல் வாரத்தின் ஏழு நாட்களும் சேவையில் ஈடுபடும். பயண அட்டவணை - கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை: காலை 5:15 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும். காலை 5:40 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும். மதியம் 12:45 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். பயண அட்டவணை - காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை வரை: நண்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும். மாலை 8:00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். மாலை 8:30 மணிக்கு கல்கிசையை சென்றடையும். யாழ் தேவி ரயில் சேவை மாற்றம்: நேர மாற்றம்: இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக, பிரபலமான யாழ் தேவி ரயில் சேவையின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய புறப்படும் நேரம்: யாழ் தேவி ரயில் இனி காலை 6:40 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். முந்தைய நேரம்: முன்னதாக யாழ் தேவி ரயில் காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை, வடக்கு நோக்கிய மற்றும் தெற்கு நோக்கிய பயணிகளுக்கு, குறிப்பாக வணிகப் பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Dharussafa NEWS- கருத்து படங்கள்
- வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியதுடன் பொலிசாரின் இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர். இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என தெரிவித்தனர். இந் நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 58வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்று தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1438856- இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்!
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்! இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக அவர் தெளிவுபடுத்தினார். இந்த விடயத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடங்கிய அப்போதைய அரசாங்கமும் அமைச்சரவையும் விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தை கண்டறிந்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படும். இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மீண்டும் மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1438835- மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி!
மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர். பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையிறவு உப்பளம் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி A9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருப்பதால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பயணிகள் பயத்துடனே பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பலமுறை இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும் மற்றும் இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை. இதனை இலங்கை மின்சார சபை கண்டும் காணாமலும் இருப்பதற்கான காரணமும் தெரியவரவில்லை இவ்வாறே பூநகரி பிரதான வீதியிலும் ஒரு சில மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ” உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி ஏற்படும் விபத்தையும் அசௌகரியத்தையும் தடுக்குமாறு ஆதவன் செய்திப் பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது. https://athavannews.com/2025/1438818 - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.