Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. @goshan_che பல விடயங்கள் சொல்லப் படுகின்றது. மூன்றாம் நிமிடத்தில் இருந்து கேட்கவும்.
  2. என்ன செய்யிறது அல்வாயன், எத்தனை நாளைக்கு போலி வேஷம் போடுறது. உண்மை ஒரு நாள் வெளியிலை வரத்தானே வேணும். 😂
  3. ஒருவர் அல்ல இருவர் அல்ல... ஒரேயடியாய்... 42 போதை வியாபாரிகளை கைது செய்து இருக்கின்றார்கள் என்றால், இவற்றை முழு காத்தான்குடி மக்களே வாங்கிப் பாவித்துள்ளார்கள் போலுள்ளது.
  4. பசில், இலங்கையில் இருக்கும் போதே.... சட்டத்தின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன். அமெரிக்காவில் இருந்து என்னென்ன செய்யப் போகின்றானோ. முதலில்... இவனை வெளிநாட்டுக்கு செல்ல விட்டதே தவறு. இப்ப... குத்துது, குடையுது என்றால் என்ன செய்வது. உள்ளூரில் இருக்கும்... மகிந்த, கோத்தாவையே... இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம், இப்ப... அமெரிக்காவில் இருக்கும் பசிலை பிடித்து... நொங்கு எடுக்கப போகிறார்களாம். எல்லாரும் பம்மாத்து விளையாட்டு காட்டுறாங்கள். மக்கள்தான்... எல்லாவற்றையும் ஆவென்று பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
  5. ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு, வெளியில் அவன் வேடன், உள்ளுக்குள் அவன் வேங்கை. சாலையின் ஓரத்தில் சகதியில் புரண்டவன், சாதி மதங்களால் வேதனை சுமந்தவன். ஆதிக்க சமூகத்தால் அலைந்து திரிந்தவன், அன்னை மொழியை அடி நெஞ்சில் உணர்ந்தவன். வேடன் வேடன் என்று விரட்டியடிக்கப்பட்டவன், மக்கள் விரும்பும் ஒருவனாய் வளர்ந்து நிற்பவன். பாட்டில் வறியோரின் வலியை சொன்னவன், பல்லாயிரம் மக்களின் மனங்களை கவர்ந்வன். தாங்கிடா வலிகளை தனக்குள்ளே சேர்த்தவன் வேங்கையின் வீரம்பெற்று வீதியுலா வருகின்றான். தயாளன் கனியன்
  6. வர வர.... ஜேர்மன் காரருக்கும், ஆப்கானிஸ்தான், சிரியா பயங்கரவாதிகளின் வியாதி தொற்றுகின்றது போலுள்ளது.
  7. ரம்பா - இந்திரன் தம்பதியினருக்கு, தோள் அளவிற்கு வளர்ந்த மூன்று பிள்ளைகள் உள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்க. 🤣
  8. அட கறுமமே... வில்லங்கம் எந்த ரூபத்தில் வருகின்றது. மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்துவதும், ஆசிரியர்களுக்கு ஆபத்துப் போல் தெரிகின்றது. பாடசாலையின் பெயரைப் பார்க்க தமிழ் ஆசிரியர், அதிபர், மாணவி, வாள்வெட்டுக்காரர் போலுள்ளது.
  9. சைவ உணவுகள் மட்டும் பரிமாறப் படும் என... அறிவிக்க வைத்த, வேலன் சுவாமி ஜீ... அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். முட்டையும் அசைவம் என்ற படியால்.... இனி அந்த உணவகத்தில் இருந்து, முட்டை பொரிக்கின்ற வாசம் கூட... வெளியே வரப்படாது. வந்தால்.... மீண்டும் போராட்டம் வெடிக்கும். ஆமா.... 😂 நல்லூர் கந்தனுக்கு அரோகரா.... என்று கும்மி அடியுங்க. 😂 வேல்... வேல்... வெற்றி வேல்.
  10. நாதம்ஸ் வீட்டிற்குப் பக்கத்தில்தான்... ரம்பா, இந்திரனின் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. ஆளை கன நாள் இங்காலைப் பக்கம் காணாத படியால், ஆள்... அங்கு புரொபசர் வேலை பார்க்கிறாரோ தெரியவில்லை. 😂
  11. உண்மை. இது புரியாமல், ட்றம்ப் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கொண்டு நிற்கிறார். இங்கு இருந்த பல தொழிற்சாலைகள்…. தொழிலாளர் சம்பளம், வரி போன்றவை அதிகம் என்று வேறு நாடுகளுக்கு போய் விட்டார்கள்.
  12. பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்! இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) உயிழந்துள்ளார். ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதுடன் ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433029
  13. பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது! ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 57லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக 42 பேர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று(24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1433057
  14. கோவில் நிர்வாக சபையில் இருந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர், பணத்தை ஆட்டையை போட்டு கையும் களவுமாக பிடிபட்டு விட்டாராம், அவர் அம்பிட்டால்... மேலும் பல கூட்டுக் களவுகள் வரும் என்பதால்... அவரை தற்போதைய நிர்வாக சபை காப்பாற்ற முனைகின்றது என்று... முகநூலில் ஒரு செய்தி ஓடிக் கொண்டு உள்ளது. அதன் உண்மைத் தன்மை பற்றி தெரியவில்லை.
  15. ஆம்..... தூஷண பிக்கருக்கு, "நாதம்ஸ்" பல்கலைக்கழகத்திருந்துதான் இந்தப் பட்டம் வழங்கப் பட்டது. 😂 ரூம் போட்டு யோசித்திருப்பார் போலுள்ளது. 🤣
  16. பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது! புதிதாக பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று (23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு(24) பொலிசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1433060
  17. துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் 08 பேர் கைது! துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த பணம் வழங்கப்படவிருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில, தொடுவாவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நேற்று (23) இரவு மஹவெவ, சிவிராஜ மாவத்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனை செய்துள்ளனர். இதன்போது, முச்சக்கர வண்டியில் இருந்த கறுப்பு நிற பயணப் பையை பரிசோதித்தபோது, அதில் பெருந்தொகையான பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்ததுடன் முச்சக்கர வண்டியில் இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர். இதேவேளை, கடந்த 19ஆம் திகதி பேருவலை அருகே கடலில், சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள் தொகை பலநாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தமை தெரியவந்துள்ளதுடன் குறித்த படகில் இருந்த கேப்டன் உட்பட 6 பேருக்கு தலா 30 இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் விசாரணைமூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், துபாயில் இருந்து இயக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள், சிலாபம், தொடுவாவை, நீர்க்கொழும்பு , மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Athavan Newsதுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமை...துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் தொகையை க...
  18. புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்! புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இந்த போராடம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், தற்போதய நிருவாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எனத் தெரிவித்திருந்ததோடு, கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆலய நிருவக சபையினர் மற்றும் இன்று போராட்டத்தை முன்னெடுத்த மக்களையும் அழைத்து இது தெடர்பில் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2025/1433005
  19. ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை! ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை. இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது எனவும் இது நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் 25% கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 50% வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். https://athavannews.com/2025/1433051
  20. ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்! ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1433018
  21. விசுகர், கருத்து வறட்சி ஏற்படும் போது... கண்டபடி அடித்து விடுவதை எல்லாம், கணக்கில் எடுக்கக் கூடாது. சிலரின் கடந்த கால கருத்துக்களை அவதானித்துப் பார்த்தால்... பல இடங்களில், சாணி அடித்த வேலைகளையே இங்கும் செய்வதால்.... இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை. கை உழையும் மட்டும், தொண்டை தண்ணி வற்றும் மட்டும்... "அலட்டி" விட்டு போகட்டும் என்று கடந்து செல்லுங்கள் விசுகர். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.