Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச் சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அவர் சமூகமளித்திருந்த நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். …………………………………. ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார். அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார். அதன்படி, குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432719
  2. நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக பாரிய குற்றச்சாட்டு! நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நீண்டகாலமாகத் தொடங்கின. சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுகளை நீதிவான் நீதிமன்றம் கவனத்தில் கொண்ட பின்னர், 2021 இல் அமுலாக்கத் துறை முறையாக தனது விசாரணையைத் தொடங்கியது. இன்று நடந்த விசாரணையில், வழக்கில் முக்கிய முறைப்பாட்டாளராக இருக்கும் சுவாமிக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு நீதிபதி கோக்னே அமுலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், சோனியா மற்றும் ராகுல் காந்தியின் சட்டப் பிரதிநிதிகள், ED-யின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தங்கள் சமர்ப்பிப்புகளைத் தயாரிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவால் 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1937ஆம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. ஏ.ஜே.எல். நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இந்நிறுவனத்தின் மூலம் உருது மொழியில் குவாமி ஆவாஸ் (Qaumi Awaz) என்ற பத்திரிகையும் இந்தி மொழியில் நவ்ஜீவன் என்ற தினசரி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. அந்த காலத்தின் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட், இந்திய சுதந்திரப் போராட்டத்தால் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் சிறந்த தேசியவாத பத்திரிகை என்ற புகழை அடைந்தது நேஷனல் ஹெரால்ட். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் கடுமையான மற்றும் கூர்மையான தலையங்க பாணி மற்றும் நேருவின் கடும் வார்த்தைகளைக் கொண்ட பத்திகள் காரணமாக, பிரித்தானிய அரசாங்கம் அப்பத்திரிகையை 1942 ஆம் ஆண்டில் தடை செய்தது. இதனால், அந்த தினசரி பத்திரிகை தற்காலிகமாக செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பத்திரிகை செயல்படத் தொடங்கியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று, நாட்டின் பிரதமராக நேரு பதவியேற்றபின்னர், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குனர் குழு தலைவர் பொறுப்பை அவர் இராஜினாமா செய்தார். ஆனால், அப்பத்திரிகையின் கொள்கையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிப்பதில் காங்கிரஸ் தொடர்ந்து செயலாற்றி வந்தது. 1963ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அப்பத்திரிகை குறித்து ஜவஹர்லால் நேரு பேசுகையில், “பொதுவாக காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்கும் அதேவேளையில் சுயாதீனமான கண்ணோட்டத்தை நேஷனல் ஹெரால்டு பேணுகிறது” என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் நிதியின் மூலமாக செயல்பட்ட போதும், இந்தியாவின் சிறந்த பத்திரிகையாளர்களின் அரவணைப்பின் மூலம், முன்னணி ஆங்கில செய்தித்தாளாக உருவெடுத்தது. ஆனால், 2008 ஆம் ஆண்டில் பொருளாதார காரணங்களுக்காக மீண்டும் அப்பத்திரிகை நிறுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டில் அப்பத்திரிகை இணைய பதிப்பாக மீண்டும் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியால் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியை பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்ட் மூடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஏ.ஜே.எல். நிறுவனம் 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் இந்த கடனை வழங்கியது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை இருவரும் கொண்டிருந்தனர். மீதமுள்ள 24% பங்குகள், காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1432652
  3. பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத குழுக்கள் தொடர்ச்சியாக இங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குஜ்தார் மாவட்டத்தில் இராணுவத்தால் நடத்தப்படும் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் பதில் ஆணையர் யாசிர் இக்பால் தெரிவித்தார். தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பலூச் இன பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து, மாணவர்கள் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். காயமடைந்தவர்களல் பல மாணவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதனால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2025/1432634
  4. உங்களுடைய கொள்கை அது, எனக்கு வேஷம் போடத் தெரியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம், இந்தியாவை காறித் துப்பி விட்டு, போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
  5. முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார். அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார். அதன்படி, வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார். https://athavannews.com/2025/1432616
  6. உடனடியாக.... நல்லூரில் திறக்கப் பட்ட மாமிசக் கடை, மூடப் பட வேண்டும். நல்லூரில்.... மாமிசக் கடையை வைத்தவன், முதலில்... சோனக தெருவில், பன்றி இறைச்சி கடையை திறந்து விட்டு வரட்டும்.
  7. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு! ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்தன. இது மத்திய கிழக்கு உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியத்தில் விநியோக கிடைப்பைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 00.03 GMT மணியளவில் 86 காசுகள் அல்லது 1.32% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $66.24 ஆக இருந்தது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 90 காசுகள் அல்லது 1.45% உயர்ந்து $62.93 ஆக இருந்தது. அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்கள், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாகக் கூறுகின்றன என்று, இந்த விடயத்தை நன்கு அறிந்த பல அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, CNN செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இது குறித்து இஸ்ரேலிய தலைவர்கள் இறுதி முடிவை எடுத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி CNN மேலும் கூறியது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர்களில் ஈரான் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. மேலும், இஸ்ரேலிய தாக்குதல் நாட்டிலிருந்து எண்ணெய் ஓட்டத்தை சீர்குலைக்கக்கூடும். சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றுமதி செய்யும் வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் நீரிணையின் வழியாக எண்ணெய் கப்பல் ஓட்டத்தைத் தடுப்பதன் மூலம் ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற கவலையும் உள்ளது. எனினும், மசகு எண்ணெய் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சில அறிகுறிகளும் இருந்தன. செவ்வாயன்று அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, கடந்த வாரம் அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு உயர்ந்தது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவில், மே 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் மசகு எண்ணெய் இருப்பு 2.5 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன. புதன்கிழமை பிற்பகுதியில் எரிசக்தி தகவல் நிர்வாகத்திடமிருந்து அமெரிக்க அரசாங்க எண்ணெய் இருப்பு தரவுகளையும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்றனர். மேலும், கஜகஸ்தானின் எண்ணெய் உற்பத்தி மே மாதத்தில் 2% அதிகரித்துள்ளது என்று ஒரு தொழில்துறை வட்டாரம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இது OPEC+ இன் உற்பத்தியைக் குறைக்கும் அழுத்தத்தை மீறுவதாகும். https://athavannews.com/2025/1432604
  8. ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்! சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1432614
  9. அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா! ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த விவகாரம் ஜப்பான் பிரதமர் ஷிகெரு ஈஷிபா தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. இந்நிலையில் தான் தெரிவித்த கருத்துதவறானது எனவும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்த டகு எடோ, விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷிஞ்ஜிரோ கோயிசுமி புதிய விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432608
  10. ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள். ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு. வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று 2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு அகதியினுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம் என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான் உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன். 140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் இலங்கை தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும் மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர் இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை தடுத்து நிறுத்த கூறியும் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருந்தார். தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி விட்டனர் எனவும் அந்த மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை பரிசலித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனை விரைவாக தீர்மானிக்குமாறு நீதிமன்றம் உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான் உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன். ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான் இறுதியாக கூறியது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள் இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ் உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான் ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு விடயம்தான். இந்த இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர் நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள் சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம் இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது. இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக காடைனமாக வைத்திய சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது. அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும் கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள். அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம். உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ் மக்களுடைய மனநிலை இப்போதும் ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக என்று சொல்லி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும். ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு பாகிஸ்தான் மீது விருப்பமில்லை. பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே மகாத்மா காந்திக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு வீதிக்கு காந்தி வீதி என்று பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்தவர்களையும் அவர்கள் தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட பெயர்களை பார்க்கிற போது இந்திரா சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம். ஆனால் இந்தியா தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது? பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய விடயம் இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால் உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே வீடு கட்டி கொடுத்தது இந்தியா தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய கடந்த கால யுத்தத்தின் காரணமாக உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய அமைச்சர்களாக மாறும் அளவுக்கு இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். உமாகுமரன் என்று சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும் பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பிரதானியாவை பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட் ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர் வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள். ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ் மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள். அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம் இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும் அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி அவர்களை தங்களுடைய குடிமக்களாக அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள் முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இலங்கையில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு காலத்திலே அவர்களுடைய குடியுரிமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள் எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள் என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக பேசுவதற்கான வாய்ப்பையே நிராகரித்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம். உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம். உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக நாங்கள் உங்களை பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர் தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில் தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும் என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும், மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வரலாறுகளை கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். குறிப்பாக இந்த இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும் 9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த வகையான போராட்டங்களை எந்த வகையான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று சொல்லக்கூடிய அமைப்புக்கு வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக் கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை துறக்கவில்லை. யாரோ யாரோ என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை. அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும் அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களினுடைய உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள் எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால் இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது விடயங்களை பற்றிதான் நாங்கள் பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை பறைக்கிறது எங்களுடைய இறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம் பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம் அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம் ஆசி பெற்று வந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் காத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில் வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ் இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக சில கருத்துக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி இருப்பதாக சோதி இருக்கிறார்கள். இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் நான் இந்த நேரத்தில் முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான் உங்களோடு இன்னும் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு துருவான செய்தி வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள். அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட வேண்டும். இன்னும் ஒரு கருத்து இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும் தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து. அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான் இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள் உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள வேண்டும் அவர்களை அப்படியும் கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள் வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே ஏற்கனவே நமது சத்திரத்தில் பல டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள். எங்களுடைய மக்களுக்கான போராட்டம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள் ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது 2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும் எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும் எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும் இருந்திருந்தார்கள். இந்த தேசம் தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம் இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும் சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை. அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள் நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த அத்தனை விடயங்களையும் மாற்றியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின் பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ் மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய பிராந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம் https://tamilwin.com/ நன்றி: @பெருமாள் ################# ####################### இந்தியாவை நம்பி ஏமாறும்... @Kandiah57 அண்ணை போன்றவர்கள், நேரம் ஒதுக்கி இந்தக் கட்டுரையை வாசிக்க பரிந்துரை செய்கின்றேன். 🙂
  11. இந்தியாவின் உண்மை முகத்தை உரித்துக் காட்டிய கட்டுரை. பகிர்விற்கு நன்றி பெருமாள்.
  12. பியர் குடிப்பதற்கு சொல்லும் சாட்டு அது. சிறுநீர் பிரிய வேறு எத்தனையோ பானங்கள் உண்டு. சுத்தமான பச்சை தண்ணீரே போதும். சிலர் கவலையை மறக்க குடிப்பதாக சொல்வார்கள். அப்படி குடிக்கும் போது கவலை இன்னும் கூடி.. மதுவிற்கு அடிமையாகி.. சொத்து, சுகம், குடும்பம், உயிர் போன்றவற்றை இழந்து போனவர்களே அதிகம்.
  13. ஏராளன், ஜேர்மனியில் எல்லோருமே பியர் பிரியர்கள்தான். பிள்ளை பெற்ற பெண்களுக்கு... தாய்ப்பால் சுரக்கவும் ஒரு வகையான பியர் குடிக்கச் சொல்லி வைத்தியரே சொல்வார். இங்கு 800 வகையான பியர் உண்டு. கட்டுப்பாடு இல்லாமல் எல்லாம் கிடைத்தும்... அதனை அளவுடன் பாவிப்பார்கள். தெருவில் விழுந்து கிடந்து உருளுவதில்லை, மற்றவர்களுடன் வீண் சண்டைக்குப் போவதில்லை, சுவரில் ஒண்டுக்கு அடிப்பதில்லை... என்று நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். 😂 நான் முன்பு பியர் குடிப்பேன். இப்போது இல்லை. மேலுள்ள சம்பவத்தில்... கடற்கரை வெய்யிலில் மூன்று மணித்தியாலம் மண்ணில் புதையுண்டு இருந்தவருக்கு பியர் கொடுத்தது புத்திசாலித்தனமான செயலாக எனக்குத் தெரியவில்லை. 🤣
  14. துப்பாக்கிக்கு... தங்க முலாம் பூசி பாவிப்பதெல்லாம் ஸ்ரீலங்காவில்தான் நடக்கும். 😂 சந்தனம் மிஞ்சினால்.... 🤣 எல்லாம்... வக்கணையாக செய்தும், கடைசியில் சொதப்பி விட்டதே. 😂 🤣
  15. அவர் நீர்ச்சத்தை இழக்காமல் இருக்க... தண்ணீர் கொடுக்காமல், பியர் கொடுத்தது... மனதை நெகிழ வைத்தது. சுற்றுலா போவதென்றால் இப்படியான நாடுகளுக்குத்துத்தான் போக வேண்டும். 😂
  16. அத்துடன் இந்திய நீதிபதிகளும்... கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைப்பார்கள். இவர்களுக்கு எப்படி, எதற்காக அந்தப் பணம் கொடுக்கப் பட்டது என்பதை ஆளும் வர்க்கம் சொல்லவே மாட்டாது. டெல்லி நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் 15 கோடி பணம்.. எப்படி வந்தது? நீதிபதி எழுப்பும் சந்தேகம்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-15-crore-burnt-at-judges-residence-justice-yashwant-varma-faces-inquiry-explainer-690485.html
  17. ரசனிகாந்த்... தனது கையால், சோறு சாப்பிட்டார்.😂
  18. பொருட்கள் வாங்கும் வண்டில்கள் விடும் இடத்தில்... கார் நிறுத்தினால், இதுதான் நடக்கும். 😂
  19. முள்ளிவாய்க்கால் வராமல் கொழும்பில் சூட்டிங் நடாத்திய சுமந்திரன்… இந்த பெண்மணி தான் தீவிர புலியெதிர்ப்புவாதி, 2020 இல் சுமந்திரன் மட்டக்களப்பில் இவாவை தான் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட துடியா துடித்தவர். புலியெதிர்ப்புவாதிகள் எல்லாம் எங்கு ஒன்றாய் சங்கமிக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி. மட்டக்களப்பு இரகசியங்கள்
  20. சின்ன திருத்தம் சாரே. தமிழரசுக் கட்சியிம் ஈபிடிபி மாதிரிக் கட்சிதான். Rj Prasath Santhulaki சுத்துமாத்து சுமந்திரன்... தமிழரசு கட்சிக்குள் வந்ததில் இருந்து, கட்சி .... நாய் படாத பாடு படுகுது. 😂
  21. அகதிகளை வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்றால், அது இன்னும் பலர் வந்து குவிவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது போல் ஆகிவிடும். வரவே கூடாது, போங்கள் போங்கள் என்று கழுத்து பிடித்து தள்ளினால் அங்கே மனிதாபிமானம் மரணித்தே போய்விடும். அகதி என்ற நிலையை ஒருவன் தானே விரும்பி ஏற்படுத்திக் கொள்வது அல்ல. அவன் மீது வலிய வலிய திணிக்கப்படுவது. அவர்களின் துயரைப் போக்கி நிலையை மாற்றி மீள்குடியேற்றத்திற்கு வழி வகுப்பதே அறிவார்ந்த செயல். இதெல்லாம் சட்டத்திற்கும் அப்பால் வரவேண்டிய சிந்தனைகள். உச்ச மன்றத்திற்கு அத்தகைய சிந்தனைகள் வராமல் போவது துரதிஷ்டம். Ezhumalai Venkatesan
  22. ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை? உச்ச நீதிமன்றத்தைச் சாடிய சீமான். ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்களுக்கு சொந்தமாக குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணையின்போது பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. எனினும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன். அத்துடன் இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?’ வேறு நாட்டிற்கு செல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ” ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான 10 கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்கின்ற நிலம் தான் தமிழ்நாடு எனவும், இது இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது எனவும், இதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் அதிக அளவு வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு ஆகும். அங்கு வாழும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும், சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சீனாவின் ஒரு பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இந்திய நாட்டில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கும்போது தடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும், கல்வி, விளையாட்டுஇ,அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில் இரட்டை குடியுரிமை அல்லது தற்காலிக குடியுரிமை என்று ஏதாவது ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கோடிக்கணக்கான மக்களின் இறுதி நம்பிக்கையாய் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனவும்,இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்ட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1432569

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.