Jump to content

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4856
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by புலவர்

  1. https://fb.watch/n6-o8Rooe5/ முழுமையான காணொளி. இன்று திருகோணமலையில் நடந்தது நாளை யாழ்ப்பாணத்திலும் நடக்கும்.நாங்கள் 13 ஐ அமுல் படுத்தச் சொல்லி இந்தியாவுக்கு னடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
  2. சீமான் என்காரணத்துக்காகச் சொன்னார் என்று பாருங்கள். இராமநாத புரத்தில் மோடி போட்டியிட்டால் தானே அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சொன்னார். அதற்கு திமுக போட்டியிலிருந்து விலகுமா? எனென்றால் மோடியை கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்லும் தீமுக போட்டியிலிருந்து விலகி சீமானுக்கு ஆரவு கொடுக்குமா? அப்படிக் கொடுக்காவிட்டாலும் மோடியை வீழ்த்தவதற்கு திமுக போட்டியிட்டால் தான் திமுகவுக்கு அதரவு தருவதாகச் சொன்னார். மேலும் திமுகவுடனே விஜஸயுடனோ எந்த டீலும் இல்லை. நாளை சீமான் சிசாரைணக்குச் செல்கிறார். அதேநேரம் விஜி>வீரலட்சுமி தீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். வீலலட்சுமிமீதே விஜி குற்றங்சாட்டிய நிலையில் சீமானுக்கும் விஜிக்கும் சமாதானம் எற்பட்டதற்காக கோவிலில் அன்னதானம் செய்கிறேன் என்று விழுந்தும் மீசையில் மண்பட வில்லை என்று சொல்லும் வீரலட்சுமி யார் என்பதமும் அவரை பின்னணியில் இருந்து இயக்குவது யார் என்பதும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மைகள்.
  3. சீமானை ஈழத்தமிழர்கள் குருட்டுத்தனமாக ஆதரிக்கவில்லை. ------ திராவிட போர்வையைப் போர்த்திக் கொண்டு தழிழிகளை அழித்த காங்கிரசுக்கு துணைபோகும் திமுக .கம்னியூஸ்ட்டுகள் மற்றம் 2 சீற்றுக்காக ------++++ அதரவளிக்கும் விடுதலைச்சிறுத்தைகள் .மேலும் அதிமுக. பாஜக எதுவுவே தமிழ்மக்களுக்கு அதரவாக நிற்கமாட்டார்கள் என்பது வரலாறு சொல்லும் பாடம்.சமான் இன்று மிகவும் வலிமையான நிலையில் உள்ளார். அடுத்த அடுத்த தேர்தல்களில் சீமானை தவிர்த்து அரசியல் செய்வது முடியாத நிலைமை உருவாகும்.தமிழ்நாட்டு அரசானது தமிழ்மக்களின் மீது கரிசனை உள்ள ஒருவரினால் ஆளப்படும் போது அது ஈழத்தமிழர்களுக்கு பெரும்பலமாக அமையும்.இன்றைய பூகோள அரசியற் சூழலில இந்தியா விரும்பியோ விரும்பாமலோ யழத்தமிழரைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. காரணம் சீனா. இந்த நிலையில் வலுவான உறுதியான தமிழர் ஆதரவுத்தலைமை தமிழகத்தில் இருந்தால் இந்தியா ஈழத்தமிழர்களைப் பாவிக்காமல் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஆதரவு தரவேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். ரஸீவ்காந்தி பகாலையால் தமிழகத்தின் ஆதரவு இதை;துக்கு இல்லை என்ற நிலையை உடைத்தெறிறிந்து திராவிட மாயைக்குள் இருந்த தமிழர்கரகளை தமிழ்த்தேசியம் என்ற பதியக ருத்தியலின் கீழ் அணிதிரள வைத்தது சுpமான்தான். சீமானின் வளர்ச்சி இப்போதைய 'ழலில் ஈழத்தமிழர்களுக்கு அவசிமானது.
  4. சீமான் தான் விஜயலட்சுமியுடன் பேசவில்லை என்று மறுத்துள்ளார். 29 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.
  5. எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கும் விஜயலட்சுமி சீமானோடு பேசியிருந்தால் அதையும் பதிவு செய்து வைத்திருப்பார். அதைப் போட்டுக்காடட்டி உறுதிசெய்யும்வரை அதை நம்பத்தகுந்த ஆதாரமாக எடுக்க முடியாது. உண்மையில் விஜயலட்சுமியை பகடைக்காயாக வைத்து சமூனின் செல்வாக்கைச் சரிப்பதற்கு சீமானின் அரசியல் எதிரிகள் வீரலட்சுமியை வைத்து போட்ட திட்டம் பிசுபிசுத்துப் போய் உள்ளது. தனக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு சீமானின் அரசியல் பலததை சிதைக்கும் வேலையை அவர்கள் செய்தார்கள். விஜயலட்சுமி வழக்குப் போட வைத்து விட்டு விஜயலட்சுமியை அம்போ என்று விட்டு விட்டு அந்த வழக்கை வைத்து சீமானை கைதுசெய்து சீமானின் அரசியல்பலத்தை உடைக்கும் வேலையைச் செய்தார்கள். தான் கைவிடப்பட்டதை உணர்ந்த விஜயலட்சுமி பிச்ழச வேண்டாம் நாயைப்பிடி என்று வழக்கை வாபஸ்வாங்கிக்கொண்டு பெங்களுரக்கு ஓடிவிட்டார்.அவருக்கே இந்த வழக்கு எடுபடாது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவதூறு வழக்கும் அவர்மீது போடப்பட்டுள்ளது. இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடிவிட்டார்.
  6. இந்தக் காணொளியில் இருந்து உங்களுக்கு சார்பான அதாவது சீமானுக்கு எதிரான வகையில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள்.அனால் வேறு விடயங்களையும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையில் சண்டை எதற்காக வந்தது. நிச்சயமாக பணம் பங்கிடுவதாகத்தான் இருந்திருக்கும். அரசியல் ரீதியாக விஜயலட்சுமியை விட வீரலட்சுமி பலம் வாயந்தவர்.சமூன் மீது சேறு பூசுவதற்கு இந்த விடயத்தை திமுகவும் திராவிடர் கழகத்தினரும் தமிழ்த்தேசிய எதிரிகளும் விஜய லட்சுமி வீரலட்சுமியை வைத்து பணம் கொடுத்து தங்கள் உடகங்கள் மூலம் விடயத்தைப் பெரியதாக்கினார். ஆனால் சீமான் கைதுசெய்யப்பட்டால் அது சீமானுக்கு சாதகமாகத்தான் முடியும் என்ற நிலையில் அவர்கள் பின்வாங்க விஜயலட்சமி வகவிடப்பட்டார்.இனி அவர் பெங்களுர் போவது அவருக்கு நல்லது. ஊடகங்கள் தொடர்ந்து சீமாகனை எதிர்மறையாய் விமர்சிக்கப் போய் அது சீமானுக்கு விளம்பரமாகப் போய்விட்டது.
  7. 7 வருடங்கள் படித்து பெருந்தொகையாக மாணவர் கடனுடன் முதன்முதல் வேலை தொடங்கும் இளநிலை வைத்தியர்களுக்கு சாதராண கூலித்தொழிலாளி பெறும் சம்ளத்தைக் கொடுப்பது ஏற்கத்தக்கது அல்ல.அவர்களின் சம்பளத்தில் கடனுக்கான தொகை வரி மற்றும்பல கழிப்புகள்கழித்து கையில் எவ்வளவு தேறும்.இது எவ்வளவு பொறுப்பான வேலை. உயிர்காக்கும் போன்ற கொரோனோ பொன்ற பெருந்தோற்றுக் காலத்தில் எல்லோரும் வீட்டில்படுத்துக்கிடக்க அவர்களுக்கு சம்பளம் வழஙகிய அரசு உயிரைக் கொடுத்து களத்தில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் கொடுப்பது அவர்களது சேவையை உதாசீனம் செய்வதற்கு சமன்.அவுஸ்திரேலியா>அமெரிக்கா போன்ற நாடுகளில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள்.சாதாரண பட்டம் எடுத்தவர் நல்ல வருமானம் எடுக்க வைத்தியர்களுக்கு குறைவான சம்பளம் கொடுப்பது நியாயமற்றது.அதுவும் ரேம்காலம்பார்க்காது இரவுபகல் என வேலை செய்ய வேண்டும். இங்கிலாந்த இந்த விடயத்தில் படுமோசம்.
  8. 10 மாத தொடர்பில் 7 தரம் கருத்தரித்து 7 தரம் கருக்கலைப்பு செய்வது சாத்தியம் என்கிறீர்கள். சாதாரணமாகவழமையான மாதவிடாய்க்காலமான 28 நாளில் மாதவிடாய் வரவில்லை என்றால் 29 ஆம்நாள் கரு உருவாகியிருக்குமோ என்ற சந்தேகத்தில் சிறநீப்பரிசோதனை செய்து கரு உருவாகிவிட்டது என்று அன்றே கருக்கலைப்புச் செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் அன்றே மீண்டும் உடலுறவில் ஈடுபட்டு (இதெல்லாம் சாத்தியில்லை ஆனால் கணிதப்படி)அன்றே கரு உற்பத்தியாகி அடுத்த 29 ஆம் நாள் மீண்டும் கருக்கலைப்பு. மீண்டும்உடலுறவு கருக்கலைப்பு ரிப்பீட்டு.7 தரம் 29 சமன் 203 நாடகள். இணைகள் தொடர்பில் இருந்தது 10 தரம் 31 சமன் 310 நாட்கள். உங்களுக்காக அனைத்து மாங்களுக்கும் 31 நாட்கள் கொடுக்கிறேன். மாhவிடாய் வந்து 14 நாடகளின் பின்னே கருத்தருக்கும் வாய்ப்பு அதிகம். உங்களுக்காக 10வது நாள் என்று வைத்துக்கொண்டால்310-90 சமன் 220 நாட்கள். ஒவ்வொரு 14 நாடகளும் சிநுநிர்ப்பரிசோதனை செய்து கர்ப்பம் என்று அறிந்து 14 ஆம்நாளே கருக்கலைப்பு செய்து விட்டு மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்கிறார் என்றாலும்.கருத்தருக்க மீண்டும் 14 நாட்கள் செல்லும். அடுத்தடுத்து கருக்கலைப்பு செய்தால் பெண்ணின் உயருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பிருக்கு. சாதாரணமாக கருச்சிதைவு எற்பட்டாலே 3 மாதத்திற்கு பின்தான் கருத்தரிக்க வேண்டும் என்பது வைத்தியர்கள் சொல்லம் நடைமுறை. உப்படிப்பார்த்தாலும் கணக்கு இடிக்குதே.தலைசுத்துதே.
  9. சீமான் பேசிய நல்ல விடயங்களை நீங்கள் பார்பதில்லை. சீமான் உணர்ச்சி வேகத்தில் சில அபத்தங்களையும் பேசியிருப்பார். அவர்பற்றிய திமுகவின் பிரச்சார பீரங்கிகளின் வெட்டி ஒட்டல்களையும் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.30 இலட்சம் இளைஞர்கள் அனைவரும் மனநலம்சரியில்லாதவர்களாக அல்லது அடிமுட்டாள்கள் பகுத்தறிவற்ற கூட்டங்கள் என்று கோசான் நினைக்கலாம். ஆனால்நாங்கள் நினைக்கில்லை. ஒருவேளை கோசான் நினை;பது போன்று சீமானை ஆதரிப்பவர்கள் படிபறிவற்றவ பாமரக் கூட்டகளாக இருக்கலாம். பன்னாடையில் கள்ளை வடித்தால் கள்ளைக் கீழே விட்டு விட்டு எறும்புகளையும் குப்பைகளையும் வடிகட்டி வைக்குமாம்.
  10. திராவிடக்கட்சிகளுக்கு தமிழ்த்தேசியவாதிகள் இயக்கமாக இருப்பதில் பிரச்சினை இல்லை.(உதாரணமான நெடுமாறன்>சுபவீ.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும்பல தமிழ்தேpய இயக்கங்கள்.) அவர்கள் தமிழ்த்தேசியம் பேசலாம் ஆனால் மாறிமாறி திமுக .அதிமுக விற்கு அதரவாக தேர்தல் டமடைகளில் பேசலாம். பெச்சாளர்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் அரசியலில் இறங்கி வாக்ககளைப் பிரிக்கக் கூடாது.திமுகவின் 15 இற்கும் மேறபட்ட கட்சிக்கூட்டணிக்கும் அதிமுக தனித்தோ கூட்டணியாகவோ போட்டியிட்டால் அவர்களுக்கு இடையான வாக்கு வித்தியாசம் 3 அல்லது 4 சதவிகிதம்தான் எப்போதும் இருக்கும்.தனித்த வாக்குவங்கி திமுகவைை விட அதிமுகவுக்கு அதிகம். திருமா>கம்மினியூஜ்ட்டுகள் வேல்முருகன் கிருஸ்னசுவாமி பொன்றவர்களுக்கு நடாளுமன்றத்தேர்தலில் திருமாவுக்கு 2 சிற்மட்டும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்.காங்கிரசுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சி என்பதால் மந்திரிப்பதவிகளுக்ககாக கொஞ்சம் அதிக சீற்கள் ஒதுக்குவார்கள். ஆனால் சிமான் தனித்து நின்று 1>4>7 வீதம் என்று ஜம்பண்ணிக்கொண்டு போகிறார் வருகிற நாடாளுமன்றத்தில் 10 வீத்துக்கு மேல் தனித்து பெற்றால் இரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பும் கேள்வக்குறியாக்கப்படும் கூட்டணிக்கட்சிகள் இந்த சந்தர்பத்தை பாவித்து அதிக சீற்றுக்கள் கேட்பார்கள். அத்துடன் சொந்தச் சின்னத்தில் நிற்டகபாம் என்று அடம்பிடிப்பார்கள் அணிமாறுவதாக மிரட்டுவார்கள் சிலவேளைகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள். இதனால் சீமானை தட்டி வைக்க முயல்கிறார்கள். பணம் கொடுத்து சீமானை வாங்க முடியாததால் பெண்களை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுகிறார்கள். அதுவும் தேர்தல் நேரத்தில். விஸயலட்சுமி தேர்தல் நேரங்களில் மட்டும் வெளியே வருவார். 2011>2021 இப்பொழுது2023 .நாடளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உறங்குநிலைக்குப் போய் விடுவார். மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்கு வருவார்.திராவிடம் இப்பொழுதுதான் ஓருவலுவான தமிழ்த்தேசிய எதிரியைச்சந்திக்கிறது. அதிலும் இளந்தலைமுறை வாக்குகளை அது கணிசமாகப் பெறுகிறது. அதிலும் விஸய் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் பொழுது நிலமை மேலும் சிக்கலாகும்.அதுதான் இந்தச் சூதாட்டங்களை ஆடுகிறார்கள்.
  11. என்ன கோஷான் திமுக சுமானின் சாத்தானின் குழந்தைகள் பேச்சை டிவட்டி ஒட்டினமாதிரி செய்தியைப் போட்டிருக்கிறீர்கள். தமுகவால் செய்ய முடியாத 2 நிபந்தனைகளைப் போட்டிருக்கிறார் சீமான் . நாதக லோக்சபா தேர்தலில் நிச்சயம் போடடியிடும். எங்கப்பன் குதிருக்குள் இல்லை.https://tamil.oneindia.com/news/chennai/seeman-issue-tamil-outfit-leader-veeralakshmi-explains-clash-with-actress-vijayalakshmi-535413.html சண்டைதான்.. சண்டையே வந்தாலும் சீமானுக்கு எதிரான விஜயலட்சுமிக்கு ஆதரவுதான்.. வீரலட்சுமி திட்டவட்டம் Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-issue-tamil-outfit-leader-veeralakshmi-explains-clash-with-actress-vijayalakshmi-535413.html
  12. இந்த 3 காணொளிகளையும் பாருங்கள். இவை அடுத்தடுத்த நாட்களில் எடுக்கப்பட்ட காணொளிகள். திராவிடத்தின் நாடகம் அம்பலம். திராவிடம் கொடுத்த பணத்தை பிரிப்பதில் 2 லட்சுமிகளுக்கும் சண்டை. திராவிட நாடகம் அம்பலம்.
  13. மழைநீரை எப்படிச் சேமிப்பது என்பது மன்னர் காலத்திலேயே நடைமுறையில் உள்ளது. அவர்கள்தான் குளங்களைக் கட்டினார்கள். கடல்நீரை உறிஞ்சி எடுக்கும் போது நிச்சயம் மீன்முட்டைகளும்மிகச்சிறி மீன்குஞ்சுகளும் உறிங்சப்படும் மிகச்சிறிய கண்களைக் கொண்ட வடிகட்டி என்றால் நீர் உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படும். மீன் பிடிக்கும் வலைகளில் கூட உரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கண்ணுள்ள வலைகளையே பாவிப்பதற்கு அனுமதி. திகச்சிறிய கண்ணுள்ள வலைகள் மீன்குஞ்சுகளையும் அள்ளிக் கொண்டு வருவதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன. மழை நீரத்தேக்குவதற்கு கடறகரையோர தரிசுநிலங்களில் பெரிய தடுப்பணைகளைக் கட்டி மழைநீரைத்தேக்கலாம் என்றுதான் சொல்கிறோம். மகை;காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் உட்புகாதிருப்பதற்கு சிறந்த வடிகால் அமைப்பை உருவாக்கி அந்த வடிகால்களுக்குகூடாக வரும்நீரையும் நிர்த்தேக்கங்களுக்குள் வந்து சேருமாறு செய்ய வேண்டும். இந்த முறையானது கடல்நீர நன்னீராக்குவதில் உள்ள செலவைவிட பலமடங்கு செலவுகுறைந்ததாகவும். வெள்ளப் சறந்த வடிகால்அமப்பை அமைப்பதன் மூலம் வாழ்விடங்களில்வெள்ளம் தேங்கி நிற்பதை தடுத்து நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி தொற்றுநோய்களையும் கட்டுப்படுத்தலாம்.ஒரேகல்லில் பல மாங்காய்கள்.
  14. https://fb.watch/mIzYtI8U2F/ சீமான் 2011ல் கூறிய விளக்கம் இந்த நடிகை பல பேர்மீது இதேமாதிரியான புகாரைக் கொடுத்திருக்கிறார் என்று கேள்வி.
  15. தீவகத்தில் பல பகுதிகளில் கடற்கரையோரங்களில் மழைநீர் கடலுடன் கலக்கும் இடங்களில் டபெருந்தடுப்பணைகளைக்கட்டுவதன் மூலம் மழைநீரைச்சேமிக்கலாம். அதேபோல் செம்மணிப்பகுதிகள்>ஆனையிறவு போன்ற பகுதிகளில் கடலில்கலக்கும் மழைநீரைச் கேகரிப்பதற்கான தடுப்பணைகளைைக்கட்லாம்.இரணைமடுபோன்ற குளங்களின் கொள்ளளவைக் கூட்டுவதற்கான முயற்சிகளைக் செய்யலா;. நின்று போன ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். அதை விடுத்து மழையே இல்லாத பாலவன நாடுகளில் வேறுவழியின்றி கடல்நீi நன்னீராக்குகிறார்கள் என்று நாமும் அதுபோல் செய்ய வேண்டியதில்லை. நமக்குத் தேவையான அளவு மழை கிடைக்கிறது. கடலில் கலக்கும் மழைநீi சேகரித்தால் ஒருவருடம் மழைவீழ்ச்சி குறைந்தாலும் தாக்குப் பிடிக்கலாம். ஆண்டுதோறும் பருவமழை கிடைக்கும் நமது பிரதேசத்துக்குரிய வழிமுறைகளில் நீரைப்பெறும் செலவு குறைந்த இலகுவான வழிமுறைகளைக் கைவிட்டு அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எதற்ககாக பெருமளவு பணத்தைக் கொடுத்து நமது கடல்வளத்தையும் அழிக்க வேண்டும். அருமையான கருத்து. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடும் ஒப்பத்தங்களில் அரசியல்வாதிகளுக்கு கொமிசன் போகிறதா?
  16. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மழை மிகவும் செpறிய அளவில் பெய்யும் பாலைவன நாடுகளில் தான் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.எமக்குத் தாராளமாக மழை பெய்கிறது. அந்த நன்னீரை கடலுக்குள் விட்டு கடல்நீரை ந்னீராக்குவதுதான் படித்தவர்கள் செய்யும் செயலா?அண்மைக்காலங்களில் உயிர் வேலி அமைபதை விடுத்து கூலிக்கு ஆள் இல்லாத காரணத்தாலும் நிரந்தரமாக இருக்கும் என்பதாலும் காணிகளைச்சுற்றி மதில்கள் கட்டப்படுவதால் மழைநீர் கடலுக்கு போவதற்குரிய வழிகள் அடைக்கப்படுவதால் மழைநீர் அந்தக் காணிகளில் தேங்கிநிற்கின்றது. ஒருமுறை நல்லூர்க்கந்தன் வீதிஎங்கும் வெள்ளம் நிறைந்திருந்தது. சிலநாட்களுக்கு சிரமம் இருந்தாலும் அந்தத்தண்ணீர் நிலத்தடி நீராக கீழிறங்குவதன் கமூலம் நலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. உவர்நீர: நன்னிராகிறது.ஒவ்வாரு வீட்டிலும் மழைநீரக் கிணற்றுக்குள் இறக்கும் வழிமுறைகளைச் செய்வதன் மூலமும் மழைநீர் சேமிப்புத்தொட்டிகளை அபை;பதன் மூலமும்மநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.மழைநீரைத்தேக்குவது சிறந்த வழிமுறையாகும்.கடல்நீரை நன்னீராக்குவது மலையைக் கில்லி எலி பிக்கும் வேலையாகும்.
  17. இத்திட்டத்துக்கு மிகப்பெரிய செலவுகள் ஏற்படும்.இவ்வளவு செலவு செய்து தண்ணியை இலவசமாக வழங்கமுடியாது.கட்டணம் அறவிடவேண்டிவரும். தண்ணிக்கு கட்டணம் அறவிடும முறையை கிராம்புற மக்கள் எப்படி பாரப்பார்கள்.. அதை விட கடல்நீரை பெரி ந்திரங்களின் உதவியுடன் உறிஞ்சும்பொழுத மீன்குஞ்சுகள் முட்டைகள் பவளப்பாறைகள் கடல்வாழ்தாவரங்கள் எல்லாம் அள்ளுப்பட்டுப் போக வாயப்புண்டு. கடல்வளத்திற்குப் பாதிப்பு ஏற்படும்.இதனை விட வருடாவருடம் பெய்யும் மழைநீரை கடலுக்குச் செல்ல விடாது தடுத்து குளங்கள் கட்டப்பட்டு சிறந்த வடிகால் முறைகள்மூலம் அந்தத் தண்ணீர் குளங்களில் சேமிப்பதால் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதுடன் நுளம்பு போன்றவற்றின் வளர்ச்சியைக் குறைத்து நோய்களைக் கட்டுப்புடுத்தலாம்.குளங்களில் இருக்கும் நன்னீரைச்சுத்திகரித்து மக்களுக்கு வழங்கலாம்.மழைமூலம் பெறும் நன்னீரைக் கடலுக்குள் விட்டு பலகோடிகள் செலவு செய்து மீண்டும் நன்னீராக்குவது முட்டாள்த்தனத்தின் உச்சம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.