Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5425
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. Watch Annai Velankanni Matha Prathanai Song Title : Masilla Annaye Album : Annaivelankanni Prathanai Subrabatham
  2. உலகின் மிகப்பெரிய விலங்கு: யாளி நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை விட மிக பெரிய விலங்கு நமது குமரி கண்டத்தில் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா! ஆம் நமது பகுதியில் இருந்த உலகிலே மிக பெரிய விலங்குதான் யாளி .இதை பண்டைய தமிழர்கள் தன் திறமைகளால் அதன் மனதை கட்டுபடுத்தி அதை போர்களில் பயன்படுத்தினர் .அத்தகைய விலங்கை பற்றி காண்போம். யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில்காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம்போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். பொதுவாக யாளியின் முக்கிய வகைகள் · சிம்ம யாளி · மகர யாளி · யானை யாளி சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும், ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும், யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் நிலை ஆகும் யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன. யாழியில் எத்தனை வகைகள் உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா? என்னைப்பொருத்தவரை.... யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட... சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல... எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல... தமிழரின் புராதன விலங்கு யா‌ழி அவை போற்றப்பட வேண்டும். தமிழ் வேந்தன்
  3. அது சரி,புரியுது கால் சறுக்கினால் அவற்றை அந்த இரண்டு ம் போச்சு பிறகு கட்டடை ஊண்டிதான் தெரியணும் 🤭
  4. குக்கூ பாடலின் இன்னுமோர் வடிவமைப்பு https://www.facebook.com/robin.love.184007/videos/919821168841885/
  5. உருவாய் அருவாய் - திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. ......... பதவுரை ......... உருவாய் ... ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், அருவாய் ... குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராய் ... மலராகவும், மருவாய் ... அம் மலரின் மணமாகவும், மணியாய் ... மாணிக்கமாகவும், ஒளியாய் ... அதன் ஒளியாயும், கருவாய் ... சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், உயிராய் ... சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், விதியாய் ... அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், கதியாய் ... முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், குகனே ... உள்ள முருகக் கடவுளே குருவாய் வருவாய் அருள்வாய் ... என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன்.
  6. தூங்கும் அழகி என்பது ஒரு அழகிய இளவரசி மற்றும் ஒரு இளவரசன் பற்றிய செவ்வியல் தேவதைக் கதை ஆகும். 1697 ஆம் ஆண்டில் சார்லஸ் பெரால்ட் வெளியிட்ட "மதர் கூஸ் கதைகள்" தொகுப்பில் இது முதலாவது கதையாகும். இந்தோனேசியாவில் பஞ்சமாசின் நகரில் உள்ள Echa,என்ற பெண் 2017 இல் 13 நாட்கள் தொடர் தூக்கத்திலும் ,ஒவ்வொரு தடவையும் குறைவாக/கூடுதலாகவும் தூங்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.அவரை சோதனை செய்த Ansari Saleh hospital ,அவருக்கு hypersomnia என்ற நோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். (Tribunn-இந்தொனேசியா) கொலொம்பியா,அக்காசியஸ் ஐ சேர்ந்த 17 வயதான Sharik Tovar, என்ற பெண் 48 நாட்கள் தொடர் தூக்கத்திலும் சென்ற ஆண்டு 2 மாதங்கள் தூக்கத்தில் இருந்த இவருக்கு 2 வயதில் இருந்தே Kleine-Levin syndrome என்ற நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது.இவர்களுக்கு தூக்கத்திலேயே திரவ உணவை கொடுப்பதாக தாயார் கூறுகிறார். (Caracol News) இப்படியான தொடர் தூக்க நோய் உள்ளவர்கள் 40 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த அழகன் கும்பகர்னன் ஆறு மாதம் தூக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
  7. கம்பர் (கல்வியின் வெற்றி) 1938 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் சி. நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்
  8. Manthiri Kumari (1950) அந்த காலத்திலும் பாடல் இல்லாத நடனம் நல்லாத்தான் இருக்கு
  9. அது ஒண்ணுமில்லைங்கோ உள்ள அந்த சத்தம் கேட்டிச்சு , அதுதான் அந்த பூனை எலி புடிக்குமே , அது விரட்டி விரட்டி துரத்திச்சாம் .......பூனை புடிச்சுதா இல்லையா ஏன்னு ...........😜
  10. Ennai Pol Oruvan (1976) MS. Viswanathan Kannadasan Stars:Shivaji Ganesan, Chittor V. Nagaiah, Sharada தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும் நாளென விடிந்தாயோ வார்த்தைகள் தந்து காவியம் பாட மேடையும் கொடுத்தாயோ நூலெனவே நான் இளைப்பேன் நாயகன் ஆசையில் தானே நூலெனவே நான் இளைப்பேன் நாயகன் ஆசையில் தானே
  11. திரைப்படம்:- மறுபிறவி ரிலீஸ்:- 09th பிப்ரவரி, 1973 இசை:- T.R. பாப்பா; உதவி:- கோவர்தன்; பறவை இசை பாடுவதும் உறவா சுகமா எங்கும் ஆனந்தம் பாடும் இயற்கை இன்பப் பாட்டொன்று பாடும் இளமை இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை (அலை)
  12. எஸ் பி பாலசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி. ஆரம்பகாலத்தில் மெல்லிசை குழுவில் கச்சேரி நடத்தியதில் தொடங்கி பின்பு கின்னஸ் சாதனை படைத்தது வரை அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் சில சுவாரஸ்ய துளி....................... 1. சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்திருக்கின்றார் எஸ்பிபாலசுப்ரமணியம். 2. தெலுங்கு பட இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பினை முதன் முதலாக கிடைக்கப் பெற்றார். படம் : "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா". இதனால் தனது 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு 'கோதண்டபாணி' என பெயர் சூட்டி குருவுக்கு நன்றி செலுத்தினார் எஸ்.பி.பி., 3. எம்ஜிஆருக்கு இவர் பின்னணி பாடிய முதல் பாடல் "அடிமைப் பெண்" திரைப்படத்தில் வரும் "ஆயிரம் நிலவே வா" என்ற பாடல் ஆகும். 4. "பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ" என்ற "சுமதி என் சுந்தரி" படப் பாடலின் மூலம் சிவாஜி கணேசனுக்கும் முதன்முதலாக பின்னணி பாடும் வாய்ப்பினை பெற்றார். 5. இசையமைப்பாளர் ஜி தேவராஜன் இசையமைப்பில் "கடல்பாலம்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியதன் மூலம் மலையாளத் திரையுலகில் கால்பதித்தார். 6. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் இசையமைப்பில் இவர் பாடிய முதல் பாடல் "ஆயிரம் நிலவே வா" எனும் "அடிமைப் பெண்" படப் பாடல். 7. இசையமைப்பாளர்கள் சங்கர்- கணேஷ் இசையமைப்பில் இவர் பாடிய முதல் பாடல் "கல்யாண ராமனுக்கும்" எனத் தொடங்கும் "மாணவன்" திரைப்படப் பாடல். 8. நடிகர் ரவிச்சந்திரனுக்கு இவர் பாடிய முதல் பாடல் "இறைவன் என்றொரு கவிஞன்" என ஆரம்பிக்கும் "ஏன்?" திரைப்படப் பாடல். 9. இளையராஜாவின் இசையமைப்பில் இவர் பாடிய முதல் திரைப்பட பாடல் "பாலூட்டி வளர்த்த கிளி" என்ற படத்தில் வரும் "நான் பேச வந்தேன்" என்ற பாடல். எஸ் ஜானகியோடு இணைந்து பாடியிருப்பார். 10. சில பாடல்களுக்கிடையே இவர் உதிர்க்கும் சிரிப்பு, பாடலின் சுவையை இன்னும் அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி இவருக்கே உண்டான தனித்தன்மை என்றால் அது மிகையல்ல. 11. ரஜினி, கமல், விஜயகாந்த் என அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர் எஸ் பி பாலசுப்ரமணியம். உதாரணம் பல. அதில் சில "கம்பன் ஏமாந்தான்" கமலுக்கு, "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன" ரஜினிக்கு, "சின்ன...மணிக் குயிலே" விஜயகாந்திற்கு. 12. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெமினிகணேசன், நாகேஷ், அர்ஜுன், கே பாக்யராஜ், மோகன், சல்மான்கான், அனில் கபூர், கிரிஷ் கர்னாட் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஏனைய மொழித் திரைப்படங்களில் பின்னணி பேசி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கின்றார். 13. "துடிக்கும் கரங்கள்", "மயூரி", "சிகரம்", "தையல்காரன்", "ஊர்பஞ்சாயத்து" மற்றும் "உன்னைச் சரணடைந்தேன்" போன்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். 14. "மனதில் உறுதிவேண்டும்" "கேளடி கண்மணி", "சிகரம்", "குணா", "தலைவாசல்", "திருடா திருடா", "காதலன்", "உல்லாசம்" "ரட்சகன்", "பிரியமானவளே", "நாணயம்" என பல தமிழ் படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடமேற்று நடித்தும், தனக்குள் இருக்கும் அபார நடிப்பாற்றலை வெள்ளித்திரையில் மின்னச் செய்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். 15. "சங்கராபரணம்" படப்பாடல்கள் அனைத்தும் கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. தனது கேள்வி ஞானத்தைக் கொண்டு அப்படப்பாடல்களை அபாரமாக பாடி, முதல் முறையாக தேசிய விருதினையும் வென்றெடுத்தார் எஸ் பி பாலசுப்ரமணியம். 16."ஏக் துஜே கே லியே" திரைப்படத்தில் "தேரே மேரே பீச் மே" என்ற பாடலை பாடி, ஹிந்தி திரையுலகில் தனது திரையிசை கணக்கை துவக்கினார் எஸ் பி பாலசுப்ரமணியம். 17. மத்திய அரசின் "தூய்மை இந்தியா" திட்டத்திற்கு, ஆந்திர மாநிலத்தின் தூதராக 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம். 18. இத்தனை பன்முகத்தன்மை வாய்ந்த இந்த மாபெரும் இசைக் கலைஞன் ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 40000க்கும் அதிகமான பாடல்களை பாடி "கின்னஸ் புத்தகத்தில்" இடம் பிடித்துள்ளார். 19. ஜி.தேவராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மஹாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, மணிசர்மா, பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, இமான், அனிருத் என அந்தக்கால ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் முதல் இந்தக்கால இசையமைப்பாளர்கள் வரை பலரது இசையமைப்பாளர்களின் இசையில் பாடி உள்ளார். 20. நிலவை மையமாக வைத்து எஸ்.பி.பி., பாடிய 250க்கும் மேற்பட்ட பாடல்கள் 'சூப்பர் ஹிட்' ஆனது. ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே. கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை. 21 .'கேளடி கண்மணி'யில் 'மண்ணில் இந்தக் காதல்' அமர்க்களத்தில் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார். 22. ரஜினியின் பல படங்களுக்கு இவர் பாடிய 'ஓபனிங் சாங்' ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. 23. பல தொலைக்காட்சி தொடர்களுக்கு 'டைட்டில்' பாடல் பாடியுள்ளார். 24. 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பாரதிராஜா வற்புறுத்தியும் எஸ்.பி.பி மறுத்துவிட்டார். 25. சில பாடல்களுக்கிடையே எஸ்.பி.பி., உதிர்க்கும் சிரிப்பு, அதன் சுவையை அதிகரிக்கும். பல குரலில் பாடுவது இவருக்கே உரிய தனித்தன்மை-------------------------------. 26. கன்னடத்தில் ஒரே நாளில் (1981 பிப்., 8ல் காலை 9:00 - இரவு 9:00 மணி) 21 பாடல்களை பாடி சாதனை படைத்தவர். தமிழில் 19, ஹிந்தியில் 16 பாடல்களை ஒரே நாளில் பாடினார். 27. நெல்லுாரில் உள்ள தன் பூர்வீக வீட்டை சமஸ்கிருத வேத பாடசாலை அமைக்க காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கினார். 28. ஏ.ஆர்.ரஹ்மான் - எஸ்.பி.பி., கூட்டணி பெரிய வெற்றியை பெற்றது. முதல் படமான ரோஜாவில் மூன்று பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. 29. சினிமா பாடல்கள் தவிர்த்து ஏராளமான பக்தி பாடல்களை எஸ்.பி.பி. பாடி உள்ளார். குறிப்பாக சிவனை வைத்து இவர் பாடிய ஆல்பம் மிகவும் பிரசித்து பெற்றவை. 30. பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் மட்டும் 6 மொழிகளில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான டூயட் பாடல்களை எஸ்.பி.பி., பாடியிருக்கிறார்.
  13. கந்தரநுபூதி நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். நூல் ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. (1) உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2) வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. (3) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும், தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4) மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே. (5) திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. (6) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே. (8) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்? தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9) கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே. (10) கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. (11) செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான் .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12) முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. (16) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற, வேலவர் தந்ததனால் பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17) உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதி காவல, சூர பயங் கரனே. (18) வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண, விக்ரம வேள், இமையோர் புரிதாரக, நாக புரந்தரனே. (20) கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. (21) காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே. (22) அடியைக் குறியாது அறியா மையினால் முடியக் கெடவோ? முறையோ? முறையோ? வடி விக்ரம வேல் மகிபா, குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே (23) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல, புரந்தர பூபதியே. (24) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? கையோ, அயிலோ, கழலோ முழுதும் செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே. (26) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில் ஏறிய வானவனே. (27) ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ? யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. (28) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று ஒவ்வாதது என உணர்வித் ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31) கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. (32) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா, முருகா, கருணாகரனே. (33) சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே. (34) விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா, சுர பூபதியே. (35) நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே.(36) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் தீது ஆளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. (38) மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே. (39) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40) சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41) குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42) தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. (43) சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லு மதோ? வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே. (44) கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோக தயாபரனே. (45) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா, கதிர் வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே. (46) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே. (47) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48) தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர, ஞான சுகாதிப, அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51) இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது
  14. Ethirkalam Release Date : 21 Feb 1970 Cast : Gemini Ganesan, Padmini Director : M. S. Solaimalai மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ. கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ. மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் ...
  15. அருள் நிறை மரியே வாழ்க - மாதா பாடல் அருள் நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.