Everything posted by ரசோதரன்
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியாரின் வழி நின்று, தமிழுக்கு இன்னும் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று நானும் என் பங்கிற்கு சொல்கின்றேன். 'காட்டுமிராண்டி மொழி' என்று சொன்னால் இங்கு கடுங்கோபம் வந்துவிடும் பலருக்கு, அதனால் மிகப்பழைய மொழி, ஆனால் அங்கேயே தங்கி நின்று விட்டது என்று சொல்கின்றேன். முதலாவதாக குற்றெழுத்து விதிகள் இலகுவாகப்படவேண்டும் அல்லது இல்லாமல் ஆக்கப்படவேண்டும். ஒரு மொழியில் அதன் சொற்கள் இணைவதும், பிரிவதும் இவ்வளவு சிரமமானதாக இருக்கக்கூடாது. உதாரணமாக, வெற்றிக் கழகமும் சரி, வெற்றி கழகமும் சரி என்ற விவாதங்களில் விஜய் மீது வந்த எரிச்சலை விட, தமிழ் மீது வந்த திணறல்கள் தான் அதிகம். இதை மிக இலகுவாக்கலாம். திசைச்சொற்களுக்காக சில புதிய எழுத்துகளும் தேவை. பல திசைச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சமனான கலைச்சொற்களை உருவாக்கத் தேவையில்லை. உலகில் முன்னோக்கி செல்லும் மொழிகள் அதையே தான் செய்கின்றன.....................
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அதர்மத்திற்கு, அநியாயத்துக்கு யோசித்தே தீருவம் என்று சிலர் பிடிவாதமாக பிறந்திருக்கின்றார்கள்....... அந்த இந்திய நண்பரைச் சொல்லுகின்றேன்........🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣............... 2026ம் ஆண்டு தேர்தல்களுடன் ஒரு முடிவுக்கு வரும் போல. தெரிந்து தான் சீமான் சிவப்பு என்றாலும் பரவாயில்லை என்று கையில் எடுத்திருக்கின்றார்..............🫣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அந்தப் பெண் ஒன்றுக்கு செரீனா தானே பெயர்................ சசிகலாவின் வீட்டுக்காரருடன் இருந்தார் என்று கஞ்சா வைத்து அந்தப் பெண்ணை பிடித்து அடைத்து வைத்தனர்............. சசிகலா எப்பவும் போயஸ் கார்டனிலேயே இருந்தால் நடராஜனும் தான் என்ன செய்வார் என்று அப்ப யோசித்திருக்கின்றோம். ஆனால் சீமானோ இப்படி கீழிறங்கி கீழிறங்கி யோசிக்கின்றாரே........... இதே பெரியார் சொன்னார் என்ற பிரச்சனையை துக்ளக் சோ 70ம் ஆண்டுகளில் கிளப்பி, பின்னர் சோ நீதிமன்றில் மன்னிப்பு கேட்டதாக செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தனர். புத்தக விழாவிற்கு சீமான் போனது, அங்கு பேசியது, புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது, பபாசி நிறுவனர்களுடன் முரண்டுபட்டது, பின்னர் பெரியாரை வம்புக்கு இழுப்பது இது எல்லாமே இருட்டு அறைக்குள் சீமான் எதையோ தேடுவது போல இருக்கின்றது. இது எல்லாம் விஜய்யால் வந்த வினை.....................🤣. இருக்கின்ற எட்டு வீதத்தில் ஆறு அல்லது ஏழு வீதம் அங்கே போய் விடும் போல இருக்குதே என்று சீமான் கலங்கிப் போயிருக்கின்றார் போல............. தமிழ்நாட்டில் இது போராட்ட காலம். தினமும் ஒரு கட்சி ஏதோ ஒரு விடயத்திற்காகப் போராடுகின்றது. திமுக கூட ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றது. அன்புமணி, பிரேமலதா, வைகோ, புஸ்ஸி ஆனந்த், எடப்பாடி, தினகரன், சீமான், சாட்டையடி அண்ணாமலை இப்படி எல்லோரும் தெருவில் இறங்கி நிற்கின்றனர்...................... அதனால் சீமானை உடனடியாக குறையும் சொல்ல முடியவில்லை.............. லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்றால் அவரும் வேறு என்ன தான் செய்கின்றது......................🤣................. கொஞ்சம் காரசாரமாக எடுத்து விடுகின்றார்...............
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
🤣.................... அண்ணா, உங்களின் பெற்ற மனது பதைபதைத்துக் கொண்டே இருக்கும். எல்லாம் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்.................. பல வருடங்களின் முன், மகனின் பல்கலைக் கழக முதல் வருடம் பாஸ்டன் நகரில். அந்த வருடம் ஒரு நாள் அடித்த பனியில் அந்த நகரமே மூடப்பட்டது. எதுவுமே வேலை செய்யவில்லை. மகனுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நாங்கள் நாட்டின் ஒரு மூலையில், பிள்ளை இன்னொரு மூலையில். இறுதியில் ஒருவாறு அந்தப் பல்கலைக் கழக போலீஸுடன் தொடர்பு கொண்டோம். அவர்கள் அங்கு ஒரு விடுதியில் ஒன்றாக தங்க வைக்கப்பட்டிருந்த பல மாணவர்களில் மகனை கண்டுபிடித்து, எங்களுடன் கதைக்கவிட்டனர். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஆடித்தான் போனோம்..............
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள். 'வைதேகி காத்திருந்தாள்' வந்த பின் இவரின் குரல் மேல் வந்த மயக்கம் இன்னும் போகவில்லை. இவருடைய பாடல்களையும், பாடகி ஜென்சியினுடைய பாடல்களையும் தனித்தனியாக கேட்பது ஒரு தெரபி போல.....................🙏.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
'நாங்கள் இங்கே மிஷனரி பணிகளுக்காக வரவில்லை.................' என்று Henry Kissinger சொன்னதை உலகில் உள்ள பல நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒட்டிவைக்க வேண்டும். அவர்களின் தேவைகளும், காரியங்களும் முடிந்தவுடன் கழன்றுவிடுவார்கள் அமெரிக்காவும், எந்த வல்லரசும். வெளியில் இருந்து வந்து எவரும் தீர்வு எதுவும் தரப்போவதில்லை. நாங்களே ஒரு தீர்வை எட்டினால் தான் உண்டு. இல்லாவிட்டால் முக்குளித்து முக்குளித்து மரியான அகழி வரை நாடு போகும்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு. இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
கப்பலில் போனவர்கள் திரும்பி வரும்போது வெள்ளை மா கொண்டு வந்ததாகச் சொல்வார்கள்...............🤣.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஹலோ ஜோசப் த ட்ரீமர், என்ன கேள்வி இது............................🤣. எத்தனை கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், காமிக்ஸ் ஒன்று கூட சமீபத்தில் வந்திருந்தது. ஒரு முழுப்படம் தான் இன்னும் எடுக்கப்படவில்லை. அதையும் எடுத்து விடுவோமா என்று இரண்டு மூன்று பேர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்........... 1930ம் ஆண்டுகளிலேயே சிலர் ஊரிலிருந்து உள்ளூரில் செய்த கப்பலில் ஏறி அமெரிக்கா வந்தார்கள். அன்றிலிருந்து கோதுமை மாவை அமெரிக்கன் மா என்று சொல்லவும் ஆரம்பித்தார்கள்.................😜.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
👍.................. இதையே தான் ஜெயமோகனும், யுவன்சங்கர்ராஜாவும் சொன்னதாக மேலே ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். என்னுடைய ஒரு அனுபவத்தை இங்கு களத்தில் முன்னர் பகிர்ந்திருந்தேன். அகாலமான ஒரு நண்பனுக்கு நினைவஞ்சலி மலர் ஒன்று வெளியிட நண்பர்களிடமிருந்து ஆக்கங்களை பெற்றிருந்தோம். ஆக்கங்களை பரிசீலித்து, திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி என்னிடமும் கொடுக்கப்பட்டது. நான்கு கட்டுரைகள் ஒரே மாதிரியானவை. எந்த வித உணர்வும் அற்ற, இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 'பிளாஸ்டிக்' கட்டுரைகள். நான்கையும் திருப்பி அனுப்பி, சொந்தமாக சில வசனங்கள் எழுதிக் கொடுங்கள், அது போதும் என்று சொன்னோம்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
காட்டோர ஊருக்குள் யானைகளும், காட்டு மிருகங்களும் வருவது போலத்தான் இதுவும். காடுகளை ஊர்களாக்கினால் காட்டு மிருகங்கள் வேறு எங்குதான் போவது................ லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மக்கள் தொகை மிக அதிகமாக அதிகரித்த பின், மக்கள் நகரிலிருந்து வெளியே அடிவாரங்களையும், மலைகளையும் நோக்கிப் போனார்கள். அத்துடன் வசதி படைத்தவர்கள் மலை உச்சிகளில் குடியேறினர். புதிய வீடுகள், மிகப் பெரிய வீடுகள் அத்துடன் ஆரம்பத்தில் நகர்ப் பகுதிகளில் இருப்பதை விட இவற்றின் விலை குறைவாக இருந்தது. ஆகவே மக்கள் அதிகமாக இந்த இடங்களை நோக்கிப் போனார்கள். இன்று இந்தப் பகுதிகளும் நகர்களாகி விட்டது, அத்துடன் இன்று விலைகளும் எல்லா இடங்களிலும் ஒன்றே. மிக உலர்ந்த காலநிலை, அதிக வெப்பம், எளிதில் தீப்பற்றும் இந்த மண்ணின் மரங்கள் மற்றும் புதர்கள் இவற்றுடன் சேர்த்து மிக வேகத்துடன் வீசும், மிக உலர்ந்த காற்றும் வருடத்தில் சில நாட்கள் வீசும். இவையே தான் மலைகளிலும், அதையொட்டிய பகுதிகளிலும் தீ ஆரம்பிப்பதற்கும், பரவுவதற்கும் மூல காரணங்கள். இது இயற்கையின் ஒரு சுற்று தான். இப்படித்தான் மலைக்காடுகளில் இருக்கும் முதிய மரங்கள் அழிவதும், புதிய மரங்கள் உண்டாவதும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இப்பொழுது, புதிதாக மனிதர்கள் போய் இடையில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். அத்துடன் மனிதர்களின் புதிய நடவடிக்கைகளால் மண் அரிப்பு, நிலச்சரிவு என்பனவும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு துவாரத்தை நாங்கள் அடைக்க முற்பட்டால், இன்னுமொரு துவாரத்தை இயற்கை உண்டாக்கும் போல.....................
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
🙏............ ஆபத்து என்று தெரிந்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுவார்கள், சுவி ஐயா. Mandatory evacuation. இன்னமும் மற்ற இடங்களுக்கு பரவவில்லை. இன்றுடன் காலநிலையும், காற்றும் மீண்டும் மிதமாவதால், இது இத்துடன் நின்றுவிடும் என்றே நினைக்கின்றேன்.....................
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அது தான் என்னுடைய திட்டமும்.................😜. ஒரு நெருப்பு எரிவது Malibu என்னும் இடத்தில். அது பெரும் பணக்காரர்கள் வாழும் கடலுடன் கூடிய மலைப்பகுதியான இடம் அது. இந்தப் பாதை தான் சரி என்று நினைக்கின்றேன்...........
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இழப்பீடுகள் கிடைத்து விடும் பயப்படாதீர்கள், அண்ணா............ அந்தப் பகுதியில் இருப்பவர்களை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் சம்மதத்துடன் ஓரிரு நாட்கள் வேறு இடத்திற்கு போய் தங்கச் சொல்வார்கள். இன்றுடன் கடும் காற்று நின்றுவிடும்..................... அதன் பின்னால் எரிவது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்..................
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
என்னுடைய பகுதியில் நெருப்பு வருவதில்லை, அண்ணா........... உங்கள் மகள் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தொலைவில் ஒன்று எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது உங்கள் மகள் இருக்கும் இடத்திற்கு பரவாது. பயப்படாதீர்கள், அண்ணா...............
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது என்னுடைய பகுதி இல்லை, இது அமெரிக்காவின் பகுதி, அண்ணா.............🤣. ஆமாம், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சுற்றித்தான் எரிந்து கொண்டிருக்கின்றது. மலைப்பகுதிகளிலும், அடிவாரங்களிலும் எரிகின்றது. இது எப்போதும், வருடா வருடம், நடக்கும். எந்த வருடம், எந்த மலைகள் எரியும் என்பது தான் நடந்த பின்பே தெரிகின்றது. என்னுடைய வீடு மலையிலோ அல்லது அடிவாரத்திலோ இல்லை. கடற்கரைப் பக்கமாக உள்ளது. தேவைப்பட்டால், ஓடிப் போய் கடலுக்குள் விழும் திட்டம் ஒன்று கைவசம் இருக்கின்றது. ஃபயர் வந்ததால் பனாமாக் கால்வாய் கிடையாது என்று நீங்கள் சொல்வது கொஞ்சமும் நியாயம் இல்லை, அண்ணா................ பனாமாவிலும் ஃபயர் வரும்....................🤣.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்கா மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் என்னவானாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற நிலைப்பாடு தான் அமெரிக்காவில் இருக்கும் ட்ரம்பினதும், ட்ரம்பின் ஆதரவாளர்களினதும் கொள்கை, அண்ணா. அந்தக் கொள்கையைத் தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். அது சீனா, மெக்சிக்கோ, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளுடனான ஒரு மறைமுக, வர்த்தக யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகளுடனான, முக்கியமாக ஈரானுடனான, நேரடி யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். நேட்டோ வேண்டும் என்கின்றோம். அணு ஆயுத ஒப்பந்தங்கள் வேண்டும் என்கின்றோம். ஐநாவிற்கும், உலக ஸ்தாபனங்களிற்கும் அமெரிக்காவின் பெரிய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்கின்றோம். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் இருக்கின்றது என்கின்றோம்............ இப்பொழுது புதிதாக, பனாமாக் கால்வாய் பனாமாவிற்கும், கிரீன்லாந்து டென்மார்க்கிற்கும், கனடா கனடாவிற்கும் ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்கின்றோம், அண்ணா.............
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
🤣............. நான் படிச்சு படிச்சு, விழுந்து விழுந்து, உருண்டு உருண்டு, பிரண்டு பிரண்டு சொன்னேனே, விசுகு ஐயா......... இந்த ஆள் வேண்டாம் என்று. இவர் வந்தால் உலகத்திற்கு இன்னும் கேடு என்றால், என்ன கேடு என்று எதிர்க் கேள்வி தான் கேட்டார்கள். மருத்துவர் அர்ச்சுனா புத்திசாலி, ஆனால் பைத்தியக்காரர் போலவும் கதைப்பார், தெரிவார்............ ஆனால், நம்ம தல உள்ளும் புறமும் ஒன்றே...............
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
சைனாக்காரர்களால் வைரஸை நிற்பாட்ட முடியாது.......... ரஷ்யர்களால் உக்ரேனை நிற்பாட்ட முடியாது............... மத்திய கிழக்கால் இஸ்ரேலை நிற்பாட்ட முடியாது.............. அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
அண்ணா, உங்களின் லொகேஷனை பின்னர் அனுப்பி விடுங்கோ.............. ஏதாவது குண்டு மிஞ்சினால் அல்லது கெட்டுப் போகும் திகதி வந்தால், உங்களுக்கு ஒன்று.................😜.
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
🤣.................. கந்தையா அண்ணாவின் விருப்பப்படியே அதையே வைத்துக் கொள்ளட்டும், விசுகு ஐயா........... நமக்குத் தேவை தலைக்கு மேல் ஒரு கூரை, அடுப்படியில் சாப்பாடு, அதைவிட்டால் பந்தடிப்பதற்கு ஒரு இடமும், சில ஆட்களும்................... இவைகளை குறைவில்லாமல் தந்துவிட்டு என்ன பெயரையாவது வைத்துக் கொள்ளட்டும்...........🤣.
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
'யெஸ் சார்..............மார்வலஸ் ஐடியா.........' என்று சுற்றி இருப்பவர்கள் தலையாட்டிக் கொண்டு இருப்பார்கள் போல..................🤣.
-
தமிழர்களிடையே சர்வநிவாரண ஆரோக்கிய பானம்
நான் 2010ம் ஆண்டுகளில் வேலை செய்த நிறுவனத்திற்கு அருகிலேயே இந்த ஹேர்பல் லைஃப் நிறுவனமும் இருந்தது. பெருந்தெருவில் இருந்து பார்த்தாலே இதன் பெயர் தெரிவது போல, உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இதன் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதற்கு அருகில் தான் எனது வேலை இடம் என்று குறிப்பிட்டு இந்த நிறுவனத்தை ஒரு அடையாளமாக பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அது மட்டுமே தான் இந்த நிறுவனத்தின் ஒரே ஒரு பயன்பாடு எனக்கு. இங்கு இப்படி பல நிறுவனங்களும், பொருட்களும் உண்டு. சுகதேகியான ஒருவர் Balance Dietஐ தவிர்த்தால், நிச்சயம் பக்கவிளைவுகள் வந்தே ஆகும். உடல் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளால் சிலவற்றைத் தவிர்ப்பது வேறு............. தமிழ்நாட்டில் இருவர் இறந்த நிகழ்வு சில வருடங்களின் முன் என்று ஒரு ஞாபகம். இங்கு நண்பர்கள் சிலர் புரதம் மற்றும் கொழுப்புணவுகள் மட்டுமே என்று முயன்றிருக்கின்றனர். சமிபாட்டுப் பிரச்சனை மற்றும் சில ஒவ்வாமைகளும் ஏற்பட்டு, இப்பொழுது எல்லோரும் ஓரளவிற்கு சமச்சீரான ஒரு உணவுப் பழக்கத்திற்கு வந்துவிட்டனர் என்று நினைக்கின்றேன்.
-
மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
இலங்கை அரசு இவர்கள் எல்லோரையும் பர்மாவிற்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்து, பர்மா அரசை தொடர்பு கொண்டது. ஆனால் பர்மா அரசு இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இது ஒரு 'கடவுள் இருக்கார், குமார்..........' தருணம். இந்தச் சனங்கள் அந்தக் கொடிய அரசிடம் மீண்டும் போனால் அவர்களுக்கு கொடுமையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இலங்கையிலிருந்து எல்லா இனங்களையும் சேர்ந்த எத்தனை இலட்சம் மக்கள் அகதிகளாக உலகெங்கும் போய் வாழ்கின்றனர். இலங்கை நாடும் உலகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா............. இலங்கை அரசு இந்தச் சனங்களை அகதிகளாக அறிவித்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவேண்டும். சென்னையில் இந்த மக்கள் பலர் அகதிகளாக ஏற்கனவே வாழ்கின்றனர்.