Everything posted by colomban
-
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு
காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 34 வருடங்களுக்கு முன், இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று 03-08-2024 நினைவு கூறப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்ஆ பள்ளிவாசலில், இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும். அவர்களுக்காக பிரார்த்திப்போம். https://www.jaffnamuslim.com/2024/08/34.html கிழக்கு முஸ்லிம்களின் இழப்புகளுக்கு நீதி வேண்டும் காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் சரியாக 33 வருடங்களாகின்றன. இன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக இன்று காத்தான்குடியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, குருக்கள்மடம் கடத்தலும் படுகொலையும்,பல்வேறு குணடுத் தாக்குதல் சம்பவங்கள், அவ்வப்போதான ஆட்கடத்தல்கள், கல்விமான்களை இலக்கு வைத்த படுகொலைகள் என அக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இவ்வாறான வன்முறைகளால் சுமார் 7000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மிக நெருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த நாட்டை பிரிவினையிலிருந்தும் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து எவ்வாறு விரட்டப்பட்டதன் மூலம் தமது வாழ்வையே தொலைத்தார்களோ அதேபோன்று கிழக்கு முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட வன்முறைகளால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவித நஷ்டயீடுகளையோ நீதியையோ அவர்கள் பெறவில்லை என்பது கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறும் இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுக்கு எவரும் உரிய பதிலளிப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்களின் அவலங்களை வைத்தே அரசியல் செய்து அதிகாரங்களுக்கு வந்தனர். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் இந்த இழப்புகளை சந்தைப்படுத்தியும் அவற்றுக்கு தீர்வு தருவதாகவும் கூறியே அரசியல் செய்தன. இன்றும் செய்து வருகின்றன. எனினும் மக்களுக்கு எந்தவித நலனும் கிடைத்ததாக இல்லை. அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்து வருகிறார். அண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவுடனும் பேச்சு நடத்தியிருந்தார். இருப்பினும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகள் தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்சினையாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது. எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும். யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/15564
-
மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!
லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது. "மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன. மூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர். மேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது! அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை. 1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன. 1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும். 1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது. உலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன. மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை. முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் "தாகசாந்தி" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலிகள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்! வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்! இச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள். கந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்! https://tamilcircle.info/ 006.08.01ஆம் திகதி மூதூர், புலிப் பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்படுகிறது. முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்: மரணமானோர் - 54 படுகாயமடைந்தோர் - 196 காணாமற்போனோர் - 05 மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24 பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425 முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286 மக்களில் 99% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது. வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தளங்கள் என அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டன. 2006.08.04 ஆம் திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள் சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள். அப்பாவி மக்களை அழித்து அகதிகளாக்க நினைத்தோர் தடயமின்றி மறைந்து போயினர். - அபு அரிய்யா - https://www.jaffnamuslim.com/2024/08/18.html
-
ஐந்து பெண்களை திருமணம் செய்து , 49 பெண்களுடன் தொடர்பிலும் இருந்த நபர் ஏமாற்று,மோசடி குற்றச்சாட்டில் கைது.
ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைதுசெ ய்ய பொலிஸார், ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி பொறி வைத்தனர். அந்த பெண் அதிகாரியை திருமணம் தொடர்பாக சமால் சந்திக்க வந்தபோது அவரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சமாலிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை திருமண தளங்கள் மூலம் குறிவைத்து தான் ஒரு பொலிஸ் அதிகாரி எனக்கூறி சமால் அவர்களிடம் பேசியும் சந்தித்தும் வந்துள்ளார். பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை கட்டாயப்படுத்தி கார் மற்றும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. சமாலால் பாதிக்கப்பட்ட பெண், முதலில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று ரூ.8.15 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். மேலும் தொழில் தொடங்க ரூ.36 லட்சம் கொடுத்துள்ளார். மற்றொரு பெண், வங்கியில் கடன் வாங்கி ரூ.8.60 லட்சம் பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும் சமாலுக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தின் மூலம் சமால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை திரும்ப கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்துள்ளார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், அவர் மேலும் 49 பெண்களுடன் மேட்ரிமோனியல் தளத்தில் சாட்டிங்கில் இருப்பது பொலிஸாருக்கு தெரிய வந்தது. அவரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், ரூ.2.10 லட்சம் ரொக்கம், கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் திருமணம் செய்துகொண்டதற்கான இரண்டு ஒப்பந்த சான்றிதழ்களை பொலிஸார் கைப்பற்றினர். சமலின் மூன்று வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் முடக்கினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது https://madawalaenews.com/1780.html
-
உனக்கு எப்போது திருமணம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த நபரை அ*டித்துக் கொ*ன்றவர் கைது.
எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். முதியவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட போது திருமணம் குறித்து அவர் கேட்டுக்கொண்டே இருந்ததது மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டதால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். https://madawalaenews.com/1797.html
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குழந்தையின் தாயார், " குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது https://seithy.com/breifNews.php?newsID=320990&category=TamilNews&language=tamil
-
கூலிப்படை மூலம் தனது கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி – இலங்கையில் பதிவான சோக சம்பவம்
கூலிப்படை மூலம் தனது கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி – இலங்கையில் பதிவான சோக சம்பவம் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றுள்ளது. அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்த போது, வாள் முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது. வாள் வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அந்நிலையில், குடும்பஸ்தரின் கொலையை , நகைக்கான கொலையாக மாற்றவே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், கொலையானவரின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://madawalaenews.com/1577.html
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
அதாவது கனடாவில் விசிட் விசாவில் வந்திருப்பவர்கள் இப்படி ரோட்டில் அசிங்க்ம் செய்கின்றார்களா?
-
தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன்
"தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள்" தமிழர்கள் வழமைபோல் பிரிந்து நீயா நான என அடிபட்டு தங்களாது "ஒற்றுமையை" நிருபிப்பார்கள். இப்பொழுதெல்லாஅம் சியத்த சிங்கள டீ வியில் செய்தியின் ஒரு பகுதியான "டெலிவிசன் டெலிவெகிய" என்னும் நிகழ்சியே விரும்பிப் பார்க்கின்றேன். இதில் அரச ஊழல்களை அப்பட்டமாக அம்பலபடுத்துவார்கள்
-
மலிபன் பிஸ்கட்
இதுதான் ஐயா எனது பிறந்த இடம். மலிபனுக்கு முன்னால் இருக்கும் St. Paul's ஆஸ்பத்திரியிலேயே, நான் பிறந்த்தேன், 5 - 19 வயது வரை இந்த வாசத்தை முகர்ந்து கொண்டல்லவா முன்னால் இருக்கும் பாடசாலயில் படித்து வந்தேன். எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். தவழ்ந்து, ஒடி விளையாடிய தெருவல்லவ இது. மெலிபனும் அதன் சுற்றுவட்டமும் என் வாழ்வின் ஒரு அங்கம். போன மாதம் ஒரு நாள் இங்கு வந்து பனிசை சாப்பிட்டுகொண்டு, குளிர் பானத்தை குடித்தவாறு பழைய நினைவுகளை மீட்டினேன்.
-
கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்
ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்-முபாறக் அப்துல் மஜித் பாறுக் ஷிஹான் ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது.நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது முன்னாள் ஜனாதிபதி அவர்கள் தான் ஜனாதிபதியாக இருந்து ஏன் விரட்டி அடிக்கப்பட்டேன் என்பதை புத்தகம் ஒன்றினை எழுதி வெளியீட்டிருக்கின்றார்.என்னை பொறத்தமட்டில் இந்த புத்தகமானது தற்போது வெளியீட வேண்டிய அவசியம் இல்லை என்றே கூற முடியும்.இந்த புத்தகத்தை எழுதிவிட்டு அவர் இறந்த பின்னர் இந்த புத்தகம் வெளிவந்து இருந்தால் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை அவருக்கு கொடுத்து இருக்கும்.இப்போது இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டு தான் ஒரு குற்றமும் செய்யவில்லை .தன்னை சிலர் பழிவாங்கி விட்டார்கள் என்பது போன்று கூறுகின்றார். ஆனால் அவர் வெளியிட்ட புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை.அந்த புத்தகம் தொடர்பில் வெளிவந்த செய்திகளை நாங்கள் பார்க்கின்ற போது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது. நாடு இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.ஜனாசா எரிப்பை நிறுத்துங்கள்.அது தொடர்பில் பேச எங்களுக்கு அனுமதி தாருங்கள் என கேட்டிருந்தோம்.இது குறித்து பேச பல கடிதங்கள் அனுப்பி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை. ஒரு பெருமை பிடித்த மனிதனாக அவர் காணப்பட்டதனால் தான் இறைவன் அவருக்கு தண்டனை கொடுத்து இந்த நாட்டின் வரலாற்றிலே எந்தவொரு ஜனாதிபதிக்கும் நிகழாத ஒன்றை வழங்கி இருந்தான்.நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலைக்கு கோட்டபாய சென்றார்.இவரது புத்தகம் தற்போது உள்ள இனவாத சிந்தனையுடைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.ஜனாதிபதியின் அதிகாரம் என்பது சாதாரணமான அதிகாரமல்ல.சர்வதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம் ஆகும்.இந்த அதிகாரத்தை அவர் வைத்துக்கொண்டு மஹிந்த உட்பட தனக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளை ஒதுக்கினார். ஒரு கர்வம் உள்ள நபராக செயற்பட்ட காரணத்தினால் தான் அவர் தலை குப்புறமாக விழுந்தார்.இவ்வாறு விழுந்ததற்காக சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பழி போடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்திருந்தால் வெளியிட்ட புத்தகத்தில் தான் தவறு செய்தமையினால் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டிருந்தது என்பதை பகிரங்கமாக ஏற்று எழுதி இருந்தால் உண்மையில் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். யுத்த காலங்களில் கோட்டபாய ராஜபக்ச ஒரு ஹிரோவாக இருந்தார் என சொல்லப்பட்டாலும் முதலாவது ஹிரோவாக மகிந்த ராஜபக்ஸவே இருந்தார்.இவர் இரண்டாவது ஹிரோவாக இருந்தார் என்பதை இங்கு கூற முடியும்.மஹிந்த ராஜபக்ஸ தான் நாட்டினையும் யுத்தத்தையும் அக்காலப்பகுதியில் சரியாக கொண்டு சென்றவர்.அவரத உத்தரவினை செயற்படுத்தும் நபராகவே கோட்டபாய ராஜபக்ஸ என்பவர் இருந்தார். ஆனால் சில சினிமா படங்களில் ஜோக்கர்கள் சில வெளை கதாநாயகர்களாக மாறுகின்ற மாதிரி தன்னால் தான் யுத்தம் நிறைவு பெற்றது என்ற திமிர் அவரிடம் காணப்பட்டது.இப்போது அவர் ஒரு பூச்சியமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு புத்தகத்தை எழுதி அரசியலுக்கு மீண்டும் வருவார் என சிலர் நினைக்கின்றார்கள்.என்றார். https://madawalaenews.com/1205.html
-
ராயன் திரை விமர்சனம்
கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார். இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, சரவணன் கோவத்தில் சந்தீப்பை வீட்டுக்கு அனுப்ப சொல்கிறார். ஆனால், தனுஷ் தன் தம்பிகளோடு சரவணன் வீட்டுக்கு சென்று கொலை செய்கிறார். சரவணனை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் போலீசும், ஒரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களும் தேடுகிறார்கள். இறுதியில் தனுஷின் வாழ்க்கை என்ன ஆனது? தம்பிகள், தங்கையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், ராயன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, தம்பிக்கு ஆபத்து என்றவுடன் வெகுண்டு எழுவது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு சபாஷ் போட வைத்து இருக்கிறது. நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார் துஷாரா விஜயன். அன்ணனுக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நடிப்பு அரசி என்றே சொல்லலாம். துறுதுறு இளைஜனாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார் சந்தீப் கிஷன். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். செல்வராகவனின் நடிப்பு பிரமிப்பு. சரவணன், வரலட்சுமி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் அசுரன் என்று ஏற்கனவே நிரூபித்த தனுஷ், தற்போது இயக்கத்தில் அசுரன் என்று நிரூபித்து இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் போட்டி போட்டு நடிக்க வைத்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என சபாஷ் போட வைத்திருக்கிறார் தனுஷ். படத்திற்கு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமான் இசை. பின்னணியில் மிரட்டி இருக்கிறார். பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். https://www.tamilstar.com/raayan-movie-review/
-
யாழ்.கொள்ளைக்காரி கைது
தலைங்கம் அதிருகின்றது. யாழ் கொள்ளைக்காரி!! ரிவெல்வர் ரீட்டா, பிஸ்டல் பரிமளா, கன் பயிட் காஞ்சனா, அரிவாள் சொர்ணக்கா வரிசையில், பேதையவள் பெயர் என்னவோ?
-
அடுத்த ஜனாதிபதியை முஸ்லிம்களே தீர்மானிப்பர் – ஹரீஸ் எம்.பி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யார் என்பதை இந்த நாட்டு முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். கல்முனையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். “வடக்கில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது தெற்கில் 03 வேட்பாளர்கள் பக்கம் சிங்கள மக்கள் பிரிந்திருக்கும் பொழுது இந்த நாட்டு முஸ்லிம்கள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பர். இதனை எந்த அரசியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார்கள். எந்த ஊடகவியலாளரும் மறுக்க மாட்டார்கள். எங்கள் முன்னாள் தலைவர் அஷ்ரப் செய்தது போன்று அந்த வேட்பாளர்களிடம் எழுத்து மூலம் பேரம் பேசும் விடயங்களை ஆவணப்படுத்த வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். https://madawalaenews.com/1169.html
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை! முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை. அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர முஸ்லீம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அம்பாறை - கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதலில் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்த மனிதனும் மரணித்தாலும் இரங்கலை நாங்கள் தெரிவிப்பது சம்பிரதாயம் ஆகும். ஆனால் தற்போது முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை நாங்கள் தைரியத்துடன் கூற விரும்புகின்றோம். அதனால் தான் எங்கள் கட்சி அவர் தொடர்பிலான எந்தபொரு அறிக்கையும் வெளியிடவில்லை. அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர தமிழ் முஸ்லீம் உறவிற்கு பங்களிப்பு செலுத்தவில்லை. கல்முனை என்பது எந்த கால பிரச்சினை. சம்பந்தன் தலைவராக இருந்த காலத்தில் இருந்து காணப்படும் பிரச்சினை. நாங்களும் ஊடகங்கள் வாயிலாக பல வருடங்களாக கூறி வருகின்றோம். சம்பந்தன் ஏன் இதில் தலையிடாமல் இருக்கின்றார். அவர் கல்முனையில் உள்ள அரசியல்வாதிகளை அழைத்து கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஹென்றி மகேந்திரன் உட்பட நானும் கலந்து கொண்டிருந்தேன். இங்கு சம்பந்தன் கட்சி தலைவர் ஒருவர் வந்திருக்கின்றார். ஏன் இங்கு கலந்துரையாடுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் (றவூப் ஹக்கீம்) வரவில்லை. அப்போது நான் அங்கு ஒரு பிரச்சினை எழுப்பினேன். இந்த கலந்துரையாடலில் தலைவர்கள் தான் பேச வேண்டும். ஒரு பிரதி தலைவரோ அல்லது உப தலைவரோ கலந்து கொண்டால் சமத்துவமாக அமையாது என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டேன். அப்போது அந்த நேரத்திலாவது சம்பந்தன் முஸ்லீம் தரப்பின் சார்பாக ஹக்கீமை வரவழைத்திருக்க வேண்டும். அதனூடாக இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வினை பெற்றிருக்க முடியும். மிக இலகுவாக தீர்வு காண வேண்டிய பிரச்சினையை ஹக்கீமுடன் இணைந்து சம்பந்தனும் இழுத்தடித்தார் என்பதே கவலைக்குரியதாகும். ஆகவே மறைந்த ஒருவரை நாங்கள் வேண்டும் என குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் முஸ்லீம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அத்துடன் தமிழ் முஸ்லீம் உறவிற்கு கூட ஒன்றும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகின்றோம் என தெரிவித்தார். - அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான் - https://tamil.adaderana.lk/news.php?nid=189776
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தனின் மிதவாத அரசியல் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முதுபெரும் தமிழ் அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு இலங்கையின் தேசிய அரசியலில் பாரிய வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்படும் அனுதாபங்கள் மற்றும் அஞ்சலிகள் உணர்த்தி நிற்கின்றன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்று கொடுப்பதையே தனது ஒரே இலக்காகக் கொண்டு அரசியல் செய்த அவரை எந்தவொரு சக்தியாலும் விலைபேச முடியவில்லை. இறுதி வரை மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்த அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை மரணிப்பதற்கு முன்னரே பெற்றுக் கொடுப்பேன் என்ற உறுதியோடுதான் அரசியல் பணியை முன்னெடுத்து வந்தார். எனினும் அவரது முதுமை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதேபோன்று தென்னிலங்கையின் அரசியல் மாற்றங்களும் சமீபத்திய நிகழ்வுகளும் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களை பின்தள்ளியிருந்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையே தோற்றம் பெற்றது. அவர் பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அவரும் தைப்பொங்கலுக்கு முன் தீர்வு, சித்திரைப் புத்தாண்டுக்கு முன் தீர்வு என அறிக்கைகளை விட்டாரே தவிர உருப்படியான எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. தற்போது சம்பந்தன் உயிருடன் இருக்கும் காலத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனமை கவலைக்குரியது என ஜனாதிபதி தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பது இனி எட்டாக்கனியே என்பதையே சம்பந்தனின் மறைவு எடுத்துக் கூறுவதாகவுள்ளது. தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்தவரை சம்பந்தன் மிகவும் நிதானமானதொரு பாத்திரத்தை வகித்தார் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவிருந்தார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிந்த அவர் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின்றி அதனை சாத்தியமாக்க முடியாது என்ற யதார்த்தத்தையும் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருந்தார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு அவர் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது இத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என அவர் அடித்துக் கூறினார். இலங்கையில் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். இதற்காக அவர் பல தடவைகள் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுக்களையும் நடத்தியிருந்தார். இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்குமிடையில் உறவுப் பாலமாக விளங்கிய அன்னாரின் மறைவு இரு சமூகத்திற்கும் பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. சம்பந்தன் ஐயாவின் வெற்றிடம் எந்தவகையிலும் நிரப்பப்பட முடியாதது. ஆனால் அவரது சிந்தனைகள், அவரது எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் அவருக்குப் பின் வரும் தமிழ் தலைமைகளால் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். அவர் காட்டிய மிதவாத அரசியல்பாதை கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தாது அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என அவர் காட்டிய அரசியல்பாதையில் பயணிக்க அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அவர் விரும்பியது போன்றே எதிர்காலத்திலும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்ட அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17302
-
அஷ்ரப் எனும் சிங்கத்தின் பாசறையில் வளர்ந்த நாங்கள் சில்லறை அரசியலை பார்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க மாட்டோம் : மு.கா பிரதித்தலைவர் ஹரீஸ்
, அம்பாறை நூருல் ஹுதா உமர்- முஸ்லிம்களின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் எனும் சிங்கத்தின் ஆளுமைகளை கண்டு அவரின் பாசறையில் வளர்ந்த நாங்கள் இப்போது நடக்கின்ற சில்லறை அரசியலை பார்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம். அப்படியான ஒரு வீர தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது தலைவரின் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டும் அல்லது தலைவரின் மகனை அமைச்சராக்க வேண்டும் என்று அல்ல. அப்படியான கொள்கையில் அவர் வாழவும் இல்லை. இந்த மண்ணில் நாங்கள் அடிமைகளாக எங்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, நிம்மதியாக வாழ்வதற்கான பயத்தில் இருந்த போது தான் ஒரு பாதுகாப்பு கேடயமாக முஸ்லிம் காங்கிரஸ் உருவாகியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் நாட்டின் நாலா பக்கங்களிலும் முஸ்லிம்கள் அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அப்போது இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆளும் தரப்புக்கு ஆதரவாக ஆட்சியாளர்களின் பங்காளிகளாக மாறி மௌனமாக இருந்தபோது தலைவர் அஷ்ரப் மட்டும் சாதாரணமான சட்டத்தரணியாக இருந்து கொண்டே முஸ்லிம்களுக்காக உரிமைக் குரல் கொடுத்தார். அந்த நாட்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்காக தலைவர் அஷ்ரபின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தையும், ஆளுமையையும் தலைவனுடைய அம்மன் கோயில் வீதிக்கு முன்பாக வசித்தவன் என்ற ரீதியில் அவருக்கு பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன்.அவருடைய எண்ணங்களையும், முஸ்லிம் சமூகம் நாட்டில் எவ்வாறு கௌரவமாக வாழ வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக முன்வைத்துள்ளார். நான் அவரை எட்டு - ஒன்பதாவது வயதிலிருந்து பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவரை நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பார்த்திருப்பீர்கள், ஒரு அமைச்சராக பார்த்திருப்பீர்கள், ஒரு தலைவராக பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அவரை கண்டது ஒரு நல்ல நியாயவாதியாக. சமூக நீதிக்கு முதன்மையான மகன் ஒரு ஆள் இருப்பாரானால் இந்த நாட்டில் அது தலைவர் அஸ்ரப் தான். அம்பாறை மாவட்டத்தில் அவருடைய குடும்பம் ஒரு செல்வந்த, கல்வி கற்ற குடும்பம். காரியப்பர் குடும்பம் என்பது மிகவும் உயர்ந்த குடும்பமாக கௌரவமாக நோக்கப்பட்டவர்கள். அந்த குடும்பத்தில் ஒரு வாரிசாக அஷ்ரப் அவர்கள் இருந்தாலும் எளிய மக்களின் தோழனாகவே அவர் வாழ்ந்தார்.தலைவர் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றம் நுழைவதற்கு முன்பே சமூகப் பிரச்சினைகளை கங்கணம் கட்டிக்கொண்டு தீர்வு கொடுத்தவர். துறைமுக அமைச்சராக இருந்த அவருக்கு கிட்டத்தட்ட துறைமுக நிலம் தலைவரின் சொந்த இடம் போலவே இருந்தது. ஆனால் தலைவர் அஸ்ரப் அதை வைத்து மற்றவர்களிடம் பணம் கேட்கும் மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. 10 சதமேனும் தனக்காக பெறாத நமது தலைவரை பற்றி ஏனைய நாடுகளின் தொழிலதிபர்கள் பேசி கேட்டிருக்கிறோம். சுத்தமான பொதுநல அரசியலையே முன்னெடுத்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான துறைமுகத்தை உருவாக்கினார். பல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார். இப்படியான தலைவரின் பாசறையில் பயின்ற நாங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு எதை இழந்தேனும் தீர்வை பெற்றுக் கொடுப்போம். உரிமைகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க தலைவர் அஸ்ரப் எங்களை பயிற்றுவிக்க வில்லை என்றார் https://www.importmirror.com/2024/07/blog-post_69.html
-
ஆங்கில வார்த்தை என்ன?
இலங்ககை ஆங்கிலத்தில் Shramadana campaign உ+ம் A Shramadana campaign was held on 13th of May 2023 என பாவிக்கப்படும்
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன. எதுவாக இருந்தாலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனத்தை முழுமையாக கொடுக்கலாம் என இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு வந்த நிலையில், அதன் நிறை மற்றும் குறைகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியானது இந்தியன் 2 கதை: 'பார்க்கிங் டாக்ஸ்' எனும் யூடியூப் சேனலை சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் உள்ளிட்டோருடன் நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்கின்றனர். ஆனால், அதன்மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்றதும், இந்தியன் தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்குகின்றனர். அதை தாய்பெய் நாட்டில் உள்ள காளிதாஸ் ஜெயராம் பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்கிறார். அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தாவை நெடுமுடி வேணுவின் மகனான பாபி சிம்ஹா கைது செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ளும் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: கதை ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் நிச்சயம் இந்திய மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் இந்தியன் 2. இயக்குநர் ஷங்கர் அதற்காக மெனக்கெட்டு கதையையும் இந்தியன் தாத்தா மட்டுமே இந்த நாட்டை திருத்த முடியாது இளைஞர்கள் உங்கள் வீட்டில் உள்ள களைகளை பிடுங்க முயற்சியுங்கள் என்கிற இரு வழி பாதை கதைக்கு நல்ல வலு சேர்த்துள்ளது. ஷங்கரின் புத்திசாலித்தனமும் அங்கே விளையாடி இருக்கிறது. ஆனால், அதை படமாக்கிய விதத்தில் ஷங்கரின் புத்திசாலித்தனம் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறியுள்ளது. இந்தியன் தாத்தாவையும் அந்நியனையும் மிக்ஸ் செய்து விட்டாரே ஷங்கர் என்று தான் பல இடங்களில் தோன்றுகிறது. விவேக்கின் ஒரு சில காமெடிகள் வொர்க்கவுட் ஆகிறது. ஆனால், பாபி சிம்ஹா காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. வர்மக் கலையை லேசாக இந்தியன் படத்தில் தொட்டுக் கொண்ட ஷங்கர் இந்த படத்தையே அதை மட்டுமே நம்பி எடுத்திருப்பது ஆடியன்ஸை திருப்திப்படுத்தவில்லை. அதிலும், வர்மக் கலை மூலமாக தொங்கியிருக்கும் வயதான உடம்பை ஒரு நொடியில் சிக்ஸ்பேக் உடம்பாக மாற்றும் காட்சிகளை ஷங்கர் எதை நம்பி வைத்தார் என தெரியவில்லை. பாசிட்டிவ்: இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் அடிக்கடி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல கமல்ஹாசன் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை செய்திருப்பதும், அந்த மெட்ரோ டிரெயின் ஃபைட் சீனும் மாஸ். விஜய் மல்லையாவை இந்த படத்திலும் போட்டு பொளந்துள்ளனர். கேலண்டர் சாங் குறியீடு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோடீஸ்வரர் என அவரை காட்டியதும், பெரிய திருமணத்தை குஜராத்தை சேர்ந்த நபர் நடத்துவதும், அவரது வீட்டில் தங்க டாய்லெட் உள்ளதாக காட்டும் காட்சிகள் எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது. மார்ஸ் கிரகத்துக்கு செல்வதாக இன்னொரு கோடீஸ்வரர் ஜீரோ கிராவிட்டியில் பயிற்சி செய்யும் இடத்திற்கே சென்று கமல்ஹாசன் அவரும் பறந்துக் கொண்டே சண்டை போட்டு அவரை வர்மக் கலை மூலமாக போட்டுத் தள்ளுவதும் சிறப்பு. இரண்டாம் பாதியில் சித்தார்த் உள்ளிட்ட அவரது யூடியூப் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதனால் அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளும் படத்திற்கு எமோஷனல் கனெக்ட்டை நன்றாகவே கடத்துகின்றன. கமல்ஹாசனை தாண்டி சமுத்திரகனியின் நடிப்பு சூப்பர். சித்தார்த் முடிந்த வரை நடிக்க முயற்சித்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தியன் பட பின்னணி இசை பலம் சேர்க்கிறது. நெகட்டிவ்: இந்தியன் தாத்தாவை காட்டுவதற்கு முன்பாக சித்தார்த் மற்றும் அவரது டீம் யூடியூப் மூலம் செய்யும் காட்சிகள் தொடங்கி கடைசியில் கிளைமேக்ஸில் வரும் டாம் அண்ட் ஜெர்ரி கேம் வரை சொதப்பலான திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை தியேட்டரில் சோதித்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புள்ளியான சகலகலா வல்லவன் என்கிற பெயரில் வரும் எஸ்.ஜே. சூர்யாவை விட்டு விட்டு மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை கமல்ஹாசன் போட்டுத் தள்ளுவது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. அடுத்த பாகத்தில் தான் அவருடன் மோத போகிறார் என தெரிகிறது. கம்பேக் இந்தியனில் தொடங்கும் படம் கோபேக் இந்தியனாக முடிவடைவதை போலவே இந்தியன் படத்தை பார்த்த உணர்வு இந்தியன் 2வில் குறைந்து விடுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே ரொம்பவே வீக்கான படமாக இந்தியன் 2 உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு இந்தியரும் இந்த படத்தை பார்த்து தங்கள் மனசாட்சி உறுத்தினாலே அதுதான் இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படும். https://tamil.filmibeat.com/reviews/kamal-haasans-indian-2-review-in-tamil-is-here-137447.html w-in-tamil-is-here-137447.html
-
எனது கிரீம் ஒன்றின் விலை 35,000 ரூபாய், தற்போது என் கைவசம் 25,000 கிரீம் ஓடர்கள் உள்ளன - இதனை வைத்து எனது வருமானம் என்னவென்று தீர்மானித்து கொள்ளுங்கள்.
பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்ஸ்மாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே பியுமி ஹன்ஸ்மாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட அவசியம் தனக்கு இல்லை என கூறினார். ''எனக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க வரசொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரச்சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சனிக்கிழமை தான் கடிதம் வந்தது. இன்னும் தேவையான பல ஆவணங்களை செய்து கொள்ள முடியவில்லை. 25,000 கிரீம் ஓடர்களும் உள்ளது. எனது கிரீம் ஒன்றின் விலை சுமார் 35,000 ரூபாய். அதனால் இலங்கை மக்கள் எனது வருமானம் குறித்து தீர்மானிக்க முடியும். அப்போது தெரியும் பியூமி ஹன்சமாலிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று''. https://www.madawalaenews.com/2024/07/35000-25000.html
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
நானும் எனது தங்கையின் வீட்டில் இருக்கும் நாயுடன் இப்பொழுது நன்கு பழகி விட்டேன். வெளியே போய் வந்தால் பாய்ந்து பிடிக்கும், முன்னங்கால்காலால் தாவி பாயும். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மா மரத்து நிழலின் கீழ் இருவரும் விளையாடுவோம். மரத்தில் ஓடும் அணில், பறக்கும் வண்ணத்துபூச்சி, சிறு பறவைகள், எல்லாவற்றையும் விரட்டி பிடிக்கும். நாய்களை எவ்வாறு கருணை கொலை செய்வார்கள்? இதற்கு சட்டரீதியனா முறைககள் என்ன? @Justin(ஜஸ்டின் ஐயா மிருக வைத்தியர் என்ற படியால் இதை பற்றி மேலதிக தகவல்களை தரவும்) இங்கு இலங்கையில் ஒரு சிறிய புத்தகம் வைத்துள்ளோம் அதில் பெயர் விபரங்கள் உண்டு, ஊசி போட்ட தினமும் குறிப்பிட்டு மிருக வைத்தியர் கையெழுத்து வைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன் என்னுடய மேலதிகாரி ஒர் பெண், ஒர் நாள் இவர் தன் நாயை பற்றி கூறும்போது " I will put her sleep" என ஆங்கிலத்தில் கூறினார். அதன் அர்த்தம் அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. நாயை கருணை கொலை செய்யப் போகிறதைதான் இப்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன்.
-
ரணில் பக்கம் சாய்வதற்காக, மார்ஷல் பதவியா..?
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திடம் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆறு நட்சத்திர ஜெனரலாக கருதப்படும் "மார்ஷல்" பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கின் யுத்த வெற்றிக்காக பொன்சேகா ஆற்றிய தியாகத்தை கருத்தில் கொண்டு இதற்கு முன்னர் பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு இம்முறை வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட மார்ஷல் பதவி இதற்கு முன்னர் உலகின் பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின், சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோ சேதுங், வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் இல் சுங், ஜெர்மனியின் முன்னாள் போர்த் தலைவர் ஹெர்மன் கோரிங் மற்றும் பிற உயர்மட்ட ரஷ்யாவின் தலைவர்கள் இதற்கு முன் மார்ஷல் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டனர். https://www.jaffnamuslim.com/2024/06/blog-post_744.html
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
எந்த ஒரு பொருளுக்கும் 4 நிலைகள் உள்ளதள்ளாவா? Introduction, growth, maturity and decline என இவைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா?
-
எம்மை பிரிக்க முடியாது
எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி அழுதுள்ளனர். 29 வயதுடைய பெண் ஒரு ஆசிரியை என்பதுடன் 35 வயதுடைய தாய் ஒருவருடன் ஓரின உறவில் பழகி உள்ளார். குறிப்பிட்ட தாய் தனது குழந்தையுடன் பாடசாலைக்கு செல்லும் போது ஆசிரியை உடன் காதல் உறவு கொண்டுள்ளார் . கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக கணவர்கள் வத்தளை பொலிஸாரிலும் கந்தானை பொலிஸாரிலும் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த வாரம் முதலாம் திகதி இந்த இரண்டு பெண்களும் கண்டி தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்த போது, இரு பெண்களின் நடத்தையில் கடும் வித்தியாசம் காணப்பட்டதை அவதானித்த தலதா மாளிகை பொலிஸார் அவர்களை கைது செய்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் வத்தளை மற்றும் கந்தானையில் காணாமல் போன பெண்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இரு பெண்களும் எச்சரிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். https://www.madawalaenews.com/2024/06/i_73.html
-
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை
படிக்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்ரது ஐயா. வாழ்வில் நடந்த இனிய சம்பவங்களை அசைபோடுவது எவ்வளவு மன மகிழ்சியை கொடுக்கின்ற்து. இப்பொழுது இந்த காக்கை தீவு மட்டக்குளி மிகவும் மாறி விட்டது. அருமையான காதலர் பூங்கா ஒன்றுள்ளது. இன்னும் இங்கு காதலர்கள் கைகோர்த்து திரிகின்றார்கள். மாலை மயங்கும் நேரத்தில் இங்கு சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு பூங்காவில் நடப்பது / உடற்பயிற்சி செய்வது எனக்கு மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இவர்களுடன் வேலை செய்துள்ளேன், பழகியுள்ளேன். ஊத்தைகள் எந்த நாடும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க கூடாது.