Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. கொழும்பிலும் பல வருடங்களுக்கு முன் சிங்கள பகுதியில் ஷாருகான் போன்ற பொலிவூட் நடிகர்களை கொண்டு ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது அதில் ஒரு குண்டு வெடித்து தலை தப்பினால் போதும் என அவர்கள் ஒட்டி போய்விட்டார்கள்
  2. அருமையான கட்டுரை. நானும் என்னை இப்பொழுதே வரப்போகும் தனிமையான நாட்களுக்காக தயார் செய்து கொண்டு வருகின்றேன்
  3. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசியுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான். ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். CSK னு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்'' எனக் கூறினார். சீமானின் இந்த பேச்சு, தற்போது தமிழகத்தில் நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது https://www.madawalaenews.com/2024/01/i_858.html
  4. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. நள்ளிரவு கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயனித்த வாகனத்தில் 4 பேர் பயனித்துள்ளதாகவும் அவர்களில் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக ராகம வைத்தியசலையில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. https://www.madawalaenews.com/2024/01/blog-post_48.html
  5. பல்லுள்ளவர் பக்கோடா சாப்பிடுகின்றார்
  6. யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உயர்தர பரீட்சை முடிந்ததும், மாணவியுடன் தலைமறைவான இளைஞனை கடத்தி, சித்திரவதை செய்து, கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும் கைது செய்ய கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். கோப்பாய் பிரதேசத்திலுள்ள 21 வயதான மாணவனும், மாணவியும் காதல் வசப்பட்டிருந்தனர். தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் இருவரும் தோற்றியுள்ளனர். நேற்று முன்தினம் (13) பரீட்சை முடிந்ததும், மாணவனும், மாணவியும் ஒன்றாக தலைமறைவாகி விட்டனர். இருவரும், முல்லைத்தீவில் உள்ள மாணவனின் உறவினர் வீடொன்றில் தங்கியிருப்பதை அறிந்த மாணவியின் குடும்பத்தினர், சில அடியாட்களையும் அழைத்துக் கொண்டு, இரண்டு வாகனங்களில் முல்லைத்தீவு சென்றனர். நேற்று, முல்லைத்தீவு சென்ற இந்த கும்பல், வீடொன்றில் தங்கியிருந்த மாணவனையும், மாணவியையும் பிடித்தனர். இருவரையும் தனித்தனியாக வாகனங்களில் ஏற்றி, யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மாணவனை, இருபாலையிலுள்ள அடியாள் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை அடித்து சித்திரவதை செய்தனர். மாணவியுடனான காதல் உறவை தொடரக்கூடாது என மிரட்டியுள்ளனர். அத்துடன், மாணவனின் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக வீடியோ படமும் எடுத்தனர். மாணவனிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகளை பறித்ததுடன், அவரிடமிருந்து atm அட்டையை பறித்து, அருகிலுள்ள மதுபானச்சாலையொன்றுக்கு சென்று, அந்த அட்டையின் மூலம் ரூ.45,000 க்கு மதுபானம் கொள்வனவு செய்து அருந்தியுள்ளனர். பின்னர், மாணவனை விடுதலை செய்தனர். மாணவன் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கடத்தலுடன் தொடர்புடைய மாணவியின் தந்தை, தாயின் சகோதரி, மாணவியின் சகோதரன் ஆகியோர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும் பொலிசார் தேடி வருகின்றனர். https://vampan.net/52069/
  7. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை, 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான். ஏ.எச்.ஹஸ்பர்_ இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்தார் செந்தில் தொண்டமான்! கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள்,500 கோலங்களுடன் பொங்கல் விழா! இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று (08)திருகோணமலையில் இடம்பெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் "பொங்கல் திருவிழா" தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். https://www.madawalaenews.com/2024/01/1008-1500.html
  8. காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத‌ கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முனைவது உலகெங்கிலும் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகின்ற மாணவர் சேட்டிலைட்டுகள் 🛰️ ஆகும். இவ்வகையான மாணவர் சேட்டிலைட்டுகள் satellite 🛰️ நிறைய விண்ணுக்கு ஏவப்பட்டு கொண்டிருக்கிறது. Please Google, YouTube பன்னி‌ பாருங்க. இந்த சேட்டிலைடினை காத்தாங்குடி மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைப்பதே எனது ஆசை. இந்த சாட்டிலைட்டுக்கு நான் வைத்திருக்கும் பெயர் "KATSAT" 🛰️ ஆகும் (Kattanakudy Satellite என்பதன் சுருக்கம்). இந்த Satellite 🛰️ உடன் தொடர்பு கொள்வதற்கும் தொடர்ச்சியாக விண்வெளி 🌌 ஆராய்ச்சிகளை செய்வதற்கும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் "Kattanakudy Space Research Institute 📡" (KSRI)‌ என்ற‌ நிறுவனம் நிறுவப்படும். பெயரும் நல்லா இருக்கு இல்ல 😃. இந்த KATSAT 🛰️ திட்டத்தில் இரண்டு பிரிவு காணப்படும். 1. சாட்டிலைட்‌ satellite 🛰️ தயாரிப்பு 2. ராக்கெட் 🚀 தயாரிப்பு இந்த satellite 🛰️ இனை இரண்டு வழியில் விண்வெளிக்கு அனுப்ப‌ முடியும். 1. சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (International Space Station) அனுப்பப்படுகின்ற Cargo Spaceship 🚀 மூலம் இவ்வாறு மாணவர்களினால் தயாரிக்கப்படுகின்ற சேட்டிலைட் இணை அனுப்பி அங்கே இருக்கின்ற Astronaut உதவியுடன் விண்ணில் Manual ஆக‌ launch செய்வது. இது சம்பந்தமான‌ ஆராய்ச்சிகளை‌ நாம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நான்‌ தொடங்கிட்டன்.. 2.‌ அல்லது நாமே ராக்கெட்டினை 🚀 தயாரித்து அதனுள் நமது Satellite யினை 🛰️ வைத்து விண்ணுக்கு அனுப்புவது. இதற்கான தேடல்கள், நல்ல முன் உதாரணங்கள்‌ தமிழ் நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். Google பன்னி‌ பாருங்க. நாம் அனுப்ப இருக்கின்ற இந்த KATSAT 🛰️ ஆனது காலநிலை சம்பந்தமான தரவுகளை சேகரித்து அனுப்புகின்ற வேலையினை பிரதானமாக செய்யும். அவ்வப்போது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப: - இலங்கை சார்ந்த சேட்டிலைட் படங்களை எடுத்து அனுப்புதல், - அவசரகால warning ⚠️ யினை‌ முன்கூட்டியே கூட்டியே தெரியப்படுத்துதல், - மாணவர்கள் எப்படி ஒரு செய்மதியுடன்‌ தொடர்பாடல் (satellite communication) செய்தல் போன்ற பயிற்சிகளை (training) வழங்குவதற்காக இந்த சாட்டிலைட் பயன்படுத்தப்படும். இதனுடைய fun factor ஆக: - தானாகவே விண்வெளி புகைப்படங்கள் எடுத்து அனுப்புவது. - ஒவ்வொரு ஆண்டினை பூர்த்தி செய்கின்ற பொழுதும் Kattanakudy Satellite 🛰️ என்ற LED யினை விண்ணில் ஒளிரச் செய்து வீடியோ எடுத்து அனுப்புவது. - விண்வெளியில் கிடைக்கின்ற ஒலிகளினை record (30 second) செய்து அவ்வப்போது அனுப்புதல்.‌ - தனக்கான ட்விட்டரை (X தளம்) அக்கவுண்ட் தொடர்ச்சியாக தானாகவே அப்டேட் செய்தல். - KATSAT இருக்கும் AI தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி சம்பந்தமான கேள்விகளுக்கு email மூலம் பதில் அளித்தல் போன்ற பல செயற்பாடுகளை நமது KATSAT 🛰️ செய்மதி கொண்டிருக்கும். இந்த சாட்டிலைட் launch 🚀 ஆனது NASA or ISRO இல் இருந்து காத்தான்குடியின் முதல் செய்மதி KATSAT 🛰️ விண்ணுக்கு ஏவப்படுகின்ற அதே தருணம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் அதே நேரத்தில் விண்ணை நோக்கி ஏவப்படும். இந்த வரலாற்று நிகழ்வினை கண்டுகளிக்க காத்தான்குடியில் அனைத்து மாணவர்களும் மத்திய கல்லூரி கிரவுண்டில் ஒன்று கூடி இருப்பர். இந்த ராக்கெட் லான்ச் ஆனது காத்தான்குடியில் எந்த மூலையில் இருந்தும் மக்கள் பார்வையிடக் கூடியதாகவே அமைந்திருக்கும். இதனது நேரடி ஒளிபரப்பும் குட்வின் ஜங்ஷனில் அமைந்திருக்கும் திரையிலும் மக்கள் பார்வைக்கு காட்டப்படும். 2019 ம் ஆண்டு எனது மனதில் தோன்றிய அந்த எண்ணம் இன்று அது முழு திட்டமாக உருவாகி வருகிறது. இறைவனின் உதவியினால் இந்த திட்டம் நான் மரணிப்பதெற்கு முன்னர் Project Lead ஆக இருந்து இந்த சாதனையை நம் மண்ணில் நிகழ்த்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். "வரலாறுகளுக்காக காத்திருக்கக் கூடாது அதனை நாமே தொடங்கி வைக்க வேண்டும்" கனவு காணுங்கள் என்ற‌ அப்துல் கலாம் ஐயாவின் வரிகளினை‌ உதாரணமாக கொண்டு நீங்களும் உங்களது பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டுங்கள். கொச்சிக்கா பிரச்சினை தானாகே தீரும். "அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி" இர்ஷாத் இஸ்மாயில் https://www.madawalaenews.com/2024/01/satellite.html
  9. இன்றுதான் இந்த ஹீரோவை பற்றி கேள்விப்படுகின்றேன். நாமெல்லம் 70 கிட்ஸ் எனக்கு தெரிந்ததெல்லம் ரூபவாகினியில் பார்த்த‌ Black-7, Doctor Who?, star track, bionic woman, incredible hulk போன்றவை
  10. இவை medical equipment / diagnosing equipment கீழ் வருகின்றது. இவை பொதுவாக tax அடிக்கபட வேண்டும். Pharmaceutical items அடிக்கப்ப‌டாது
  11. ஆம். வருமான வரியை Income Tax (நேர் வரி) நுகர்வோர் தலையில் கட்ட முடியாது, ஆன VAT ஐ நுகர்வோர் தலையில் (நேரில் வரி) கட்டலாம். எந்த ஒரு வ‌ருமானமும் பின்வரும் நான்கு வ‌ழிகளில் பெறப்படுகின்றது 1. தொழில் மூல‌ வருமானம் (Employment Incme) 2. வியாபர வருமானம் (Business Income) 3. முதலீட்டு வருமானம் (Capital Gain) 4. ஏனைய வருமானம் (Others) தனியொரு நபர், வேலையும் செய்து கொண்டு, வியாபாரம் , முதலீடு போன்றவற்றையும் மேற்கொண்டு வருமானம் உழைக்கலாம். அதற்கேற்ப வருமான மூலதாரத்தை அடிப்ப‌டையாக கொண்டு வரி அறவிடப்படும். இதன்போது, Tax Free Allowances, Relief, என்பனவும் கழிக்கபட வேண்டும். (to arrive at taxable income) VAT உள்ளும் , Standard Rated, Zero Rated, exempted என வகையுண்டு அவயும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். இந்த குடிகாரருக்கு alcohol and tobacco tax rate என்ன வென்று தெரியுமா? (40%) Advance Personal Income Tax பிடிக்கப்படுகின்றது. பின்பு இவை tax credit காட்டப்படும் WHT உம் சில வற்றிற்க்கு இவ்வ்வாறே.
  12. நன்றி நன்னி அவர்களே. உங்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி அனால் எழுதும்போது விடுபட்டுவிட்டது. குறிப்பு நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
  13. இந்த திரியில் கருத்தெழுத நான் தகுதியற்றவன் ஆனால் மனதில் பட்டதை எழுதுகின்றேன். இறந்து போன துவாராகவை மீண்டும் அவர் உயிரோடு எழுந்து வந்து மக்கள் மத்தியில் வாழுகின்றார் என்று கூறி அதன் மூலம் தாங்கள் வியாபாரத்தை நடத்த முயல்வது கடைந்தெடுத்த அயோக்கியதனம். இது இறந்த ஆன்மாக்களை நினவு கூறும் இந்த நவம்பர் மாதத்தில் இப்படிபட்ட‌ ஈனசெயல் மிகவும் அருவருக்கத்தக்கது. நிழலி அவர்களின் இந்த கருத்துடன் நான் ஒத்துபபோகின்றேன். இது எனக்கும் பொருந்தும் இங்கு என் மனம் இன்னும் நம்ம மறுப்பது, பொட்டு அம்மான் இறந்து போனதைதான், ஒரு வசீகரமான முகவெட்டுடைய திரைப்பட கதாநாயன் போன்ற‌ இவர் எங்கோ இன்னும் இருக்கின்றார் என்றே என் மனம் சொல்கின்றது. இவருடய சடலம் இன்னும் கிடைக்கவில்லை. டீ என் ஏ அறிக்கையும் இல்லை. ஒரு சாதாரண வியாபாரியே பிளான் ‍ஏ இல்லா விட்டால் பிளான் பீ வைத்திருப்பார். இவ்வளவு திறமை வாய்ந்த இவர் கடைசி நேரத்தில் ஒரு எக்ஸிட் ப்ளான் வைத்திருந்திருப்பர் என்பது, இவர் திறமை மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கைதான். மாவீரர் என்பவர் யார்? வரைவிலக்கனம் என்ன? இவர்கள் புலிகளின் அமைப்பில் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் மட்டுமா? அல்லது வேறு சகோதர இயக்கங்களிலும் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களும் உள்ளடங்குவார்களா?
  14. எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்! Posted 24th November 2020 by Jude Prakash Labels: நினைவுகள் வரலாறு https://kanavuninaivu.blogspot.com/
  15. ஆண்டாண்டு காலமாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் ஆண்டுக்காண்டு அடித்துத் துரத்தும் போது ஓடி ஒளிந்து கொண்டிருந்த மென்மையான சுபாவம் கொண்ட இனத்திற்குள், வீரத்தையும் ஓர்மத்தையும் விதைத்து, அடித்த எதிரியை திரும்ப அடித்து ஓட ஓட விரட்டிய வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் தான் எங்கள் தலைவர். ஓரு குட்டித் தீவில், அதியுச்ச சுயநலமிக்க, ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிறுபான்மை இனத்திற்காக, அந்த இனத்தின் ஆட்பலத்தையும் வளங்களையும் வைத்தே, எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமின்றி, முப்படைகளையும் உருவாக்கி, சர்வதேச ஆதரவுடன் போரிட்ட ஒரு அரசாங்கத்தை தோல்வியின் விளிம்புவரை கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த இராணுவ வித்தகன் தான் எங்கள் தலைவர். தன்னலம் துறந்து, இனத்திற்காகச் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் புரிந்து, தளராத கொள்கையுடன் இறுதிவரை போராடிய ஒரு யுக புருஷன் தான் எங்கள் தலைவர். அந்த யுக புருஷன் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வதா, இல்லை அந்த யுக புருஷன் காலத்திலும் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்காமல் போய் விட்டதே என்று ஏங்கித் தவிப்பதா? “விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ் வீடுகள் யாவிலும் மலரனான் படுகளம் மீதிலொரு புலியானான் பிரபாகரன் எங்கள் உயிரானான் பொங்கிடும் கடற்கரையோரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே தங்கத் தமிழீழ மண்ணில் எங்கள் தலைவன் பிறந்தான்” Posted 26th November 2020 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/
  16. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார். "உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை. அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார். கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் அறிவிக்கின்றார். அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள். ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன. இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள். சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார். கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள். மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை. ட்ரக்கை reverseல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம். ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார். ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார். பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது. “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” Posted 5th December 2021 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/2022/01/blog-post_10.html
  17. யூதர்களின் புனித நூலான டோரா எனப்படுவது பைபிளில் உள்ள முதல் 5 புத்தக‌ங்களுமே. அவையாவன ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பவயே. மேலும் கிறீஸ்து பிறந்தவுடன் கிறிஸ்த‌வம் தோன்றவில்லை அவர், பிறந்து,வாழ்ந்து ம‌ரித்து, விண்ணேற்றம் அடந்த பின்பு ஒரு மதமாக உருவாகியது. புனித பவுல் இந்த மத்தை பரப்ப ஒரு ஊக்கியாக இருந்தார். இதை அப்பொஸ்தலர் ந‌டபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம்.
  18. ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும் ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும்
  19. ஆம் கர்த்தர் ஆபிராகாமுக்கு உன் சந்ததியை மணலைபோலவும், வானத்தின் நட்சத்திரங்களை போலவும் பொருகப் பண்னுவேன் என்றார்.
  20. ஆம் யோவான் புத்தகத்தில் இது குறிப்பிடபட்டுள்ளது. அருமை கோசான் இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
  21. ஆம் ஆகர் எனும் அடிமைப்பெண்ணுக்கு பிறந்தவனே இஸ்மவேல்.
  22. பலஸ்தீனியர்களுடன் நொருங்கி பழகியவர்கள் என்னும் அனுபவத்தில் சொல்கின்றேன். இவர்கள் சக மனிதர்களை, விசேடமாக எம்போன்ற ஆசியர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கஷ்டம்.
  23. ஜூலை மாதம் 23ஆம் திகதி, வவுனியா, தோணிக்கல் பிரதேசம் அந்த வீட்டில், அதிகப்படியான சந்தேசம் நிறைந்து காணப்பட்டது. அதற்குக் காரணம், அனைவரின் பாசத்துக்குப் பாத்திரமான மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமாகும். எனினும், அந்தக் குதூகலம் நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை. நேரம், நள்ளிரவு 12.05ஐ அண்மித்துக் கொண்டிருந்தது.... வீட்டுக்குள் நுழைந்த கூலிப்படை, அங்கிருந்தவர்களை வெட்டியும் குத்தியும் வீட்டுக்கு தீவைத்தும் படுபயங்கர கொடூர அட்டகாசங்களில் ஈடுபட்டது. வவுனியாவில் வர்த்தகம் செய்யும் ‘சுரேஸ்’ என்கின்ற முஹமட் இக்ஸாட், தோணிக்கல்லில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 19 வயதான பாத்திமா சஜானாவுக்கு, இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட, தனது நண்பர்கள், உறவினர்கள் என சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தார். கொழும்பில் இருந்து வந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த இக்ஸாட்டின் சித்தி, சித்தியின் கணவன் மற்றும் மகளான 21 வயதான பாத்திமா சசீமா சைனி, அவருடைய கணவன் சுகந்தன் ஆகியோரும் அன்றைய தினம் சஜானாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இரவு 12.05 மணியளவில் வீட்டின் முன் வாயில் கதவு (கேற்) தட்டப்பட்டது. வீட்டின் உரிமையாளரான ‘சுரேஸ்’, தனது மகளுக்கு ‘சப்பிரைஸ் கிப்ட்’ வந்துள்ளதாக நினைத்து, முன் கதவை திறந்து பிரதான வாயிலுக்கு சென்றிருந்தார். கூடவே, அவரின் மனைவியும் சசீமா சைனியின் தாயாரும் சென்றிருந்தனர். வாயில் கதவை திறந்ததும், அங்கு முகமூடி அணிந்திருந்த 10 இற்கும் மேற்பட்டவர்கள் “சுகந்தன் எங்கே” எனக் கேட்டனர். இதனால் அச்சமடைந்த ‘சுரேஸ்’, “எற்காக சுகந்தனைத் தேடுகின்றீர்கள்; நீங்கள் யார்” எனக் கேட்ட, மறுகணமே அவர் மீது வாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து ‘சுரேஸ்’, ஓடிச்சென்று தனது வீட்டில் ஒளிந்து கொண்டார். அவருடன் கூடவே சென்ற மற்றைய இரண்டு பெண்களும் பயத்தில் கத்தியுள்ளனர். இந்நிலையில், வீட்டின் முன் கதவு திறந்து காணப்படவே, வீட்டுக்குள் சென்ற கூலிப்படை, வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறி, சுகந்தனைத் தேடியுள்ளனர். இதன்போது, பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள், என்ன நடக்கின்றது என்பதை உணர முடியாத நிலையில், பயத்தால் உறைந்து, அறைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். இதன்போது, பெற்றோல் மற்றும் ஒயில் கலந்த கலன்களுடன் வந்த கூலிப்படை வீட்டுக்குத் தீவைத்தனர். இந்நிலையில் அறைக்குள் ஒளித்திருந்த சுகந்தன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறியபோது, வீட்டின் முன்புறம் அதிகளவில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. சுகந்தனின் மனைவியான சசீமா சைனி, தடக்கி விழுந்துவிடவே, அவரைத் தூக்குவதற்கு சுகந்தன் முயன்றுள்ளார். எனினும், அது சாத்தியப்படாத நிலையில், சுகந்தனிலும் தீபற்றியது. அதனால் தனது மனைவியை தூக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, வெளியில் சென்று மண்ணில் புரண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். இதற்கிடையில், அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்தபோது, வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அறைகளுக்குள் ஒளித்து இருந்தவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு, அவர்களை மீட்டெடுக்க முயலும்போதே, பொலிஸாருக்கும் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கும் தகவலை அயலவர்கள் வழங்கினர். எரியும் வீட்டுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் அயலவர்கள் ஈடுபட்டு, மூன்று வயது முதல் 46 வயது வரையான ஒன்பது பேரை தீக்காயங்களுடன் மீட்டனர். இந்நிலையில், வீட்டுக்கு தீ வைத்த கும்பல் தப்பியோடி இருந்தது. வீட்டுக்குள் விழுந்து கிடந்த சசீமா சைனியை எவரும் காணாததால், அவர் வீட்டுக்குள்ளேயே தீக்காயம் மற்றும் மூச்சு திணறலால் மரணித்த நிலையில், தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட வவுனியா மாவட்ட பதில் நீதிவான் த. ஆர்த்தி ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில், சுகந்தன் (35 வயது), பாத்திமா சஜானா (19 வயது), தேவராணி (33 வயது), தாரணி (46 வயது), சுதர்சினி (46 வயது), ஆக்ஸட்டினா (ஏழு வயது), தர்வின் சுதர்சினி, தனுசா, முஹமட் இக்ஸாட் (40 வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கடும் காயங்களுக்குள்ளான சுகந்தன், வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறுநாள் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். சி.சி.ரி.வி காணொளிகளை முதலில் ஆராய்ந்தபோது, வீட்டின் வெளியில் இருந்த சி.சி.ரி.வி கமெரா உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டின் உட்பகுதியில் இருந்த கமெராக்களும் செயற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், அயல் வீடுகளில் உள்ள சி.சி.ரி.வி கமெராக்களை பரிசோதித்தபோது, முகமூடியும் கையுறையும் அணிந்த சிலர், கைகளில் கலன்கள், வாள்களுடன் வரிசையாக நடந்து வருவதையும் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதையும் கண்டுகொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவிலவின் கண்காணிப்புடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுஆராச்சியின் ஆலோசனையில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்தன. இதையடுத்து, தோணிக்கல் பகுதியில் உள்ள மயானத்தில் இருந்து கையுறை, கல்வனைஸ் பைப் என்பன, மோப்ப நாயின் உதவியுடன் மீட்கப்பட்டன. பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவில, வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நிலையில், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு, சிவில் புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்தன. இந்தக் குற்றச்செயலுக்கான திட்டம், தவசிகுளம் குளக்கட்டுப்பகுதியில் இருந்து திட்டமிடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கசிந்த நிலையில், குறித்த கிராமத்தில் விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தினர். இவ்வேளை, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது. இத்தொலைபேசி அழைப்பு, அப்பகுதியில் பல குற்றங்களைச் செய்திருந்த ஒருவருடைய அழைப்பாக இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக, தனக்கு சில தகவல்கள் தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். குற்றத்தடுப்பு பொலிஸார் அவரிடம் நேரடியாகத் தகவல்களைப் பெற்றபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வௌிவந்தன. இதன் பிரகாரம், குறித்த இடத்துக்கான அலைபேசி கோபுரத்தின் ஊடான அழைப்புகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள், மரணடைந்த சுகந்தன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படை மற்றும் அந்தக் கிராம மக்கள் வழங்கிய தகவல் என்பவற்றின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். தவசிகுளம் பகுதியில் வைத்து, 31 ஆம் திகதி முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, நான்கு பேர் கைதாகினர். இந்நிலையில், இச்சம்பவத்தை செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நபர், வவுனியாவில் இருந்து தப்பி ஓடியிருந்தார். கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டன. இந்நிலையில், மிகுதி விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கமாறு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தொடங்கினர். இதன் பிரகாரம், சந்தேக நபர்களை தடுப்பு காவலுக்கு எடுத்து, விசாரணைமேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐந்து வாள்கள், கையுறைகள் உட்பட சில எரிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுத்து வைத்து விசாரணைமேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்த ஒருவர், பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் மூன்றாம் திகதி கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுப்பு காவல் உத்தரவை பெற்று விசாரணை செய்யப்பட்டார். விசாரணைகள் முடிவடைந்து, வைத்திய பரிசோதனைகளின் பின்னர், நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடந்த, 11ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்தபோதிலும், சாட்சி சிகிச்சை பெற்று வருவதால் அவர் நீதிமன்றத்துக்கு வர முடியாமையால், அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டதுடன், சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் வவுனியா நீதிவான் உத்தரவு வழங்கியிருந்தார். குறித்த சம்பவம் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு விவகாரத்தால் சம்பவித்தது என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ( சுகந்தன் பாத்திமாவை திருமணம் செய்வதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கொலை குற்றம் ஒன்றில் சிறைக்கு சென்ற வேளையில் அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் தகராறுகள் ஏற்பட்டுள்ளன ) அத்துடன் போதைப்பொருள் வியாபாரமும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்குமா என்பது தொடர்பிலான சந்தேகமும் மக்கள் மத்தியில் நிறைந்து காணப்படுகின்றது. ஏனெனில், மரணமடைந்த சுகந்தனும் பிரதான சந்தேக நபராக கைதானவரும் அடிதடி மற்றும் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமையையும் மக்கள் மறுப்பதற்கில்லை. இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. . எது எவ்வாறாயினும், சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில், தனி நபர்கள் தீர்ப்பு வழங்கும் ‘ரவுடீஸ’ போக்கு, ஒழுக்கமுள்ள சமூகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். https://www.madawalaenews.com/2023/08/i_875.html
  24. நல்லொதொரு அனுபவப பகிர்வு. ஏழப்பிரியன் ஐயா இது போன மார்கழியில் குளிரான காலப்பகுதியில் நடந்த சம்பவமா? மே, ஜுன் ஆகிய மாதங்களில் காலனிலை எப்படி இருக்கும்? ஏனென்றால் நான் அடுத்த மாதம் லாஸ் ஏஞலஸ், சன் ப்ரான்சிச்கோ, நியூ யேர்க், ஹூஸ்டன் மற்றும் ஓர்லாண்டோ ஆகிய பகுதிகளையும் கன‌டாவின் டொரோன்டாவுக்கும் விசிட் பண்ணலாம் என இருக்கின்றேன். இப்பொழுது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதா?
  25. க‌ட்டாரில் இருந்து எனக்கு கோல் / ஈமைல் பண்னியிருந்தால் நான் நல்ல உடை வாங்கி தந்திருப்பேனே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.