Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Sasi_varnam

  1. நான் நுனிப்புல் மேய்ந்ததில் கதை இல்லை... நீங்கள் சொன்ன வந்த எத்தியோப்பிய + சிவிங்கி கதையை சொல்லுங்கோ என்று கேட்டேன்
  2. விவிலியத்தை அங்கும் இங்குமாக நுனிப்புல் மேய்ந்ததுண்டு, ஒட்டக சிவிங்கி கேள்விப்பட்டதில்லை. அது என்ன கதை?
  3. என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.
  4. dokumen.pubThe Satanic Force [1] - DOKUMEN.PUBஇந்த புத்தகம் ஈழ தமிழ் மக்களுக்கு இந்தியா இழைத்த துரோகம் பற்றி ஆதாரங்களுடன் கூறுகிறது...dokumen.pubThe Satanic Force [2] - DOKUMEN.PUBஈழ மக்களுக்கு துரோகம் இளைத்த இந்தியா...dokumen.pubThe Satanic Force [3] - DOKUMEN.PUBதலைவர் பிரபாகரன் வாழ்க...இந்த இணைதளத்தில் கூட volume 1 இன்- Part 1 / 2 / 3 தான் இருக்கிறது. மேலதிகமான பதிவுகள் இருந்தால் அறியத்தாருங்கள். மிக்க நன்றி.
  5. பகிரியில் வந்த செய்தி. அதையே இணைத்துள்ளேன். தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தவர்களையும் நாம் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான். ஆனால் தமிழ்நாட்டில் இருந்துவந்து பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தி. சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்பவர் கரும்புலியாக பலாலி இராணுதளத்தை தாக்கி 11.11.93 யன்று வீர மரணம் அடைந்திருக்கிறார். தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த மேலும் சில மாவீரர்கள் விபரம் வருமாறு, பிரிவு: கரும்புலி நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்:செங்கண்ணன் இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர் ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்) வீரப்பிறப்பு: 25.01.1975 வீரச்சாவு: 11.11.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: உமா இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 27.05.1972 வீரச்சாவு: 11.12.1999 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மணியரசி இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி ஊர்: தமிழகம். வீரப்பிறப்பு: 02.02.1977 வீரச்சாவு: 19.04.1996 நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: பத்மநாபன் இயற்பெயர்: பி.பத்மநாபன் ஊர்: திருச்சி, தமிழகம். வீரப்பிறப்பு: 27.07.1963 வீரச்சாவு: 16.03.1988 நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுனில் இயற்பெயர்: கதிரவன் ஊர்: தமிழகம். வீரச்சாவு: 11.04.1988 நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்) இயற்பெயர்: முத்தையா இராமசாமி ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 23.07.1962 வீரச்சாவு: 11.12.1991 நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: உதயசந்திரன் இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர் ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 05.05.1969 வீரச்சாவு: 09.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு பிரிவு: கடற்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: ஈழவேந்தன் இயற்பெயர்: துரைராசன் குமரேசன் ஊர்: தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 25.05.1969 வீரச்சாவு: 20.11.1992 நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சச்சு இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த் ஊர்: பியர், இந்தியா. வீரப்பிறப்பு: 04.09.1975 வீரச்சாவு: 20.12.1992 நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்) இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 01.01.1966 வீரச்சாவு: 13.05.1996 நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு நிலை: கப்டன் இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு) இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 31.05.1975 வீரச்சாவு: 19.05.1996 நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது .நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குற்றாளன் இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 08.08.1969 வீரச்சாவு: 16.07.1996 நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுதா இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன் ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு வீரப்பிறப்பு: 28.10.1980 வீரச்சாவு: 05.07.1999 நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: குருசங்கர் இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 18.04.1973 வீரச்சாவு: 25.07.1996 நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.. எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள்? அதில் எத்தனை பேர் வீர மரணம் அடைந்தார்கள்? என்ற முழு விபரம் கிடைக்கவில்லை.
  6. 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 
9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 
10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் (சொந்தப்பெயர் தெரியவில்லை)ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 
17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) ஊரின் பெயர் தெரியவில்லை,13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆயுதகுழு மோதல் வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் ஆயுதகுழுவால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதகுழு தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் அயுதகுழு பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 
26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 
28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 
30) வீரவேங்கை சலீம் 03.07.1987 அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 38) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 (பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை) 
39)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 40) வீரவேங்கை ரகீம் 08.05.1986 ( பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை) 41) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 42) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 43) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 44) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 45) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 46) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 47) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 48) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 49) வீரவேங்கை அருள் (மேலதிக விபரம் கிடைக்கப்பெறவில்லை) மன்னார்
 50) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 51) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 52) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 53) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 54) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 55) வீரவேங்கை அசீம் அஷாத் ( திகதி. இடம் தெரியவில்லை) 56) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 57) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 58) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 59) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 60) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 
61) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 
62) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 
63) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 64 வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 65) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 66) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 67) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா-பெண்புலி) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 68) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 69) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் ( ஒரு முஷ்லிம் பெண் மாவீரர், 68, ஆண்மாவீரர்கள் உட்பட 69 முஷ்லிம் மாவீரர்கள் வீரச்சாவை தழுவியதாக அறியமுடிகிறது) -அரியம் -25/11/2025-
  7. அண்ணை 71 ‘அண்ணை’ என்கிற அந்த வார்த்தை. அதை உச்சரிக்கும்போதே தேகமெல்லாம் சிலிர்க்கும். தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த வரலாறும் இந்த ஒரேஒரு வார்த்தைக்குள் அடக்கம்..! “அண்ணைக்காக போறன்” “அண்ணைய பார்த்துக்கொள்ளுங்கோ” “அண்ணைமேல சத்தியமா” “அண்ணை பார்த்துக்கொள்வார்” “அண்ணையே சொல்லிட்டார்” இப்படி எங்கள் வாழ்க்கையே அண்ணைதானே..! இந்த உலகத்தில் அண்ணையைப் போல கொள்கைப் பற்றுக்கொண்ட ஒரு தலைவன் உண்டா? அண்ணையைப் போல நிதானம்மிக்க ஒரு மனிதன் உண்டா? அண்ணையைப் போல உறுதிகொண்ட இன்னொரு வழிகாட்டி உண்டா? யாராலும் மிரட்டி அண்ணையைப் அடக்க முடியவில்லை. பேரம்பேசி பணியவைக்க முடிந்திருக்கவில்லை. பணத்தைக் காட்டி, இன்னபிற சலுகைகளைக் காட்டி அவரை விலைக்குவாங்க முடியவில்லை. அதுதான் அண்ணை..! எல்லாவற்றையும்விட அண்ணை எங்களுக்குத் தந்த பாதுகாப்பு இருக்கிறதே..! இந்த உலகத்தில் எங்குமே கிடைக்காத பாதுகாப்பு. சாமம் 3 மணிக்குகூட பெண்கள் தன்னந்தனியாக வீதியில் போகமுடியும். யாரும் கேட்கமாட்டார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவார்களோ, நகைகளை அறுப்பார்களோ, வாகனத்தில் வந்து கடத்துவார்களோ என எந்த அச்சமும் இல்லாத காலம் அது. போதைப்பொருள் கடத்தல் - கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வீடுபுகுந்து தாக்குவது.. பெற்றோல் குண்டு வீசுவது.. ஆளைவிட்டு மிரட்டுவது.. கட்டப்பஞ்சாயத்து.. இதெல்லாம் “கிலோ என்ன விலை?” என்று கேட்ட காலம் அது. வீதி ஒழுங்கை உங்களால் மீற முடியுமா அன்று? காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க முடியுமா? குற்றம் செய்துவிட்டு தப்ப முடியுமா? எதுவுமே முடியாது. ஒற்றைப் பார்வையாலேயே ஒரு தேசத்தைக் கட்டியாண்டவர் அண்ணை. அது அண்ணையின் காலம்..! பொற்காலம்! அந்தக் காலத்தில் அண்ணையின் பாதுகாப்பின்கீழ் வாழக்கிடைத்ததே தமிழர்களுக்குப் பெரும் பாக்கியம். அதைவிட வேறென்ன பெருமை இருந்துவிடப் போகிறது எமக்கு..? அண்ணையின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும்! அண்ணைக்கு வாழ்த்துக்கள்..!❤️ ~~ யாரோ எழுதிய வரிகள்...🙏
  8. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்
  9. ஜீவன் தொண்டமான் ஏனைய அரசியல் வியாதிகளை போல பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், அவரின் இந்த எதிர்ப்புக் கருத்தில் ஒரு உண்மையும் இருக்கிறது. வீட்டு பத்திரங்களை வழங்குகிறார்கள், அந்த வீடு இருக்கும் காணி யாருக்கு சொந்தம்? நிலத்துக்கான உரிமம் மலையக தமிழருக்கு எப்போது கிடைக்கும்?
  10. நானும் பார்த்திருக்கிறேன். மனோ ரஞ்சன் (NLFT) இயக்க ஸ்தாபகர் / உறுப்பினர். சந்திரிக்கா ஆதரவு, இப்போது NPP ஆதரவு. சிங்கள மொழியில் நல்ல ஆளுமை.
  11. இந்த காலப்பகுதியில் கண்டி / கம்பளை பகுதியில் வசித்த எங்களுக்கு தெரிந்தவகையில் இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (UNP)அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சிக்கென்றே வளர்க்கப்பட்ட ரௌடி கூட்டங்களால் தான் இது நடாத்தப்பட்டது. சிங்கள பொதுமக்கள் அடித்து நொறுக்கப்பட்ட தமிழர் உடைமைகளை உரிமையோடு அள்ளிச் சென்றார்கள். 😉 இந்த காலப்பகுதியில் JVP வெளியில் இயங்கியதாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்கள் 1983 July / Aug மாதங்கள் அளவில் தடைசெய்யப்பட்டார்கள். கொசுறுத் தகவல் - 1977 , JVP பொது தேர்தலில் Bell சின்னத்தில் போட்டியிட்டது. ரோஹன விஜேவீர எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் விக்ரமபாஹு பள்ளி திடலில் உரையாற்றினார். நான் அவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.
  12. மீண்டும் மீண்டும் நாம் உரத்து சொல்லவேண்டிய கருத்து. ஜூலை கலவரமல்ல... இனஅழிப்பு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.
  13. :) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.
  14. சட்டம் ஒரு இருட்டறை தமன்னா சொன்னாள்.. Legal significance Mitigation or restitution: In some cases, offering a public apology can be a condition of settlement, probation, or part of a plea agreement. It demonstrates remorse and willingness to make amends. Impact on sentencing or appeal: Judges sometimes consider a sincere apology as a sign of rehabilitation or acceptance of wrongdoing, potentially influencing a lighter sentence or favorably affecting an appeal. Defamation or contempt cases: In such cases, courts may specifically order a public apology as a form of remedy to repair reputational harm. b. Social and moral significance Restores public trust: Especially for public figures or cases that attracted media attention, an apology helps restore faith in accountability and integrity. Acknowledgment to victims: It recognizes harm done to victims or affected communities. Rehabilitation and reintegration: Publicly owning up can help an accused reintegrate into society by showing remorse and change.
  15. முந்திரிக்கொட்டை மாதிரி ஒருத்தர் சீமான் எப்படி வந்து இந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுவார், தம்பி விஜய் கட்சியை பிளந்து கட்டுவார் என்று மூக்கு சாஸ்திரம் சொல்லி மூக்கு உடைபட்டு இருக்கிறார். சீமானார் நாளைக்கும் இதே கருத்ததோடு இருந்தால் சந்தோசம்.
  16. எவ்ரி பாடி கதறு (f)பைங் ... தாட்ஸ் இன(f)ப் (f)போர் நௌ!!! 😁🗣️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.