Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் இ.முருகையன்

Featured Replies

எனது மாமா முறையான கவிஞர் இ.முருகையனைப்பற்றிய சிறிய இரைமீட்டல் ***********************************************************

யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் , யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியப் பணியைத் தொடங்கிய முருகையன், அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கு கணிசமானளவு பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார். தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.

இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007 ஆம் ஆண்டில் முருகையனுக்கு வழங்கப்பட்டது.

முருகையன் தனது நூல்களுக்குப் பதிப்புரிமை கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பதிப்பகத்தாரிடம் தனது எழுத்துக்களை மக்களில் எவரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று சொல்லிவரும் வழக்கமுடையவர்.

எழுதிய நூல்கள்கவிதை நூல்கள் :

ஒருவரம் (கவிதைகள், 1964)

நெடும்பகல் (காவியம், 1967)

அது-அவர்கள் நீண்ட கவிதை (1986)

மாடும் கயிறு அறுக்கும் (1990)

நாங்கள் மனிதர் (1992)

ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001)

ஆதிபகவன் (1978)

பா நாடக நூல்கள் :

வந்து சேர்ந்தன, தரிசனம் (1965)

கோபுரவாசல் (1969)

வெறியாட்டு (1989)

மேற்பூச்சு (1995)

சங்கடங்கள் (2000)

உண்மை (மொழிபெயர்ப்பு, 2002)

எழுதிய மேடை நாடகங்கள் :

கடூழியம்

அப்பரும் சுப்பரும் (1971)

திறனாய்வு நூல்கள்

ஒருசில விதி செய்வோம்

இன்றைய உலகில் இலக்கியம்

கவிதை நயம் (பேரா. க. கைலாசபதியுடன் இணைந்து)

கட்டுரை நூல்கள் :

இளநலம்

மொழிபெயர்ப்பு நுட்பம்

வேறு :

திருவெம்பாவையர் (உரைநடைச் சித்திரம்)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி அறிந்திருக்கிறேன் ஆனால் அவர் உங்களிற்கு மாமா என்பது புதுத்தகவல்

சென்ற நூற்றாண்டு ஈழத்துக் கவிஞர்களில் மகாகவி, நீலாவணன், முருகையன் போன்றோர் மிக முக்கியமானவர்கள்.

மிகவும் நன்றி கோமகன்....

முருகையன் என்று நினைக்கின்றேன்... தமிழ் பிரதேசங்கள் இராணுவ முற்றுகைக்கு உள்ளாக தொடங்கிய மிக ஆரம்பகாலத்தில் ஓரு கவிதை எழுதி இருந்தார். இராணுவம் முற்றிலும் சூழ ஆக்கிரமித்து இருக்கும் போது எப்படிப்பட்ட நெருக்குவாரம் இருக்கும் என்ற ரீதியில். அவர் எழுதியது சுமார் 10 வருடங்கள் அல்லது அதற்கும் பின் வந்த காலங்களில் அது நடந்து இருந்தது

  • தொடங்கியவர்

மிகவும் நன்றி கோமகன்....

முருகையன் என்று நினைக்கின்றேன்... தமிழ் பிரதேசங்கள் இராணுவ முற்றுகைக்கு உள்ளாக தொடங்கிய மிக ஆரம்பகாலத்தில் ஓரு கவிதை எழுதி இருந்தார். இராணுவம் முற்றிலும் சூழ ஆக்கிரமித்து இருக்கும் போது எப்படிப்பட்ட நெருக்குவாரம் இருக்கும் என்ற ரீதியில். அவர் எழுதியது சுமார் 10 வருடங்கள் அல்லது அதற்கும் பின் வந்த காலங்களில் அது நடந்து இருந்தது

முருகையன்

வாயடைத்துப் போனோம்

'என் நண்பா, மெளனம் எதற்கு?'

என்று கேட்டிருந்தாய்.

வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.

'திக்' கென்ற மோதல் -

திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற

ஏற்ற வகையில்

இதமான நச்செண்ணெய்

ஊற்றி

அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்

இத்தனை தீய எ¡¢வு நடைபெறுமா?

எத்தனை தீய எ¡¢வு -தலையுடைப்பு,

குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்

பேசி இருந்த பிராணி

சடக்கென்று

வாரை இடுப்பாற் கழற்றி,

மனங்கூசாமல்

ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்

மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?

சுர்ரென்று

சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,

பிள்ளை அ¡¢வு, பிடுங்கல், வதை

பு¡¢ந்து

சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சா¢யாய் விளங்கவில்லை.

'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.

வாயடைத்துப் போனோம்;

வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

சுற்றி நின்ற வேலி

சுருக்கென்று சீறிற்றாம்.

நட்ட நடு இரவில் -

நாலுபேர் காணாத கன்னங்கா¢ இருட்டில் -

காற்சட்டை போடாமல்,

தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம்.

வேலி

பயிரை எல்லாம்

மேய என்று போயிற்றாம்.

மேயத் தொடங்கி விறுக்கென்று சப்பிற்றாம்.

மென்று மென்று தின்றதாம்.

மேல் இருந்த கொப்புகளை வா¡¢ இழுத்து

வளைத்து, முறித்தெறிந்து,

வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம்.

ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித்

தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை.

பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல்,

பெற்றோலை ஊற்றி நெருப்பும் கொழுத்திற்றாம்.

வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும்

வெந்து பொசுங்கிப் புதைந்து கா¢யாகி

நொந்து சுருண்டு -

வெறுஞ் சாம்பலாய்ப் போயினவாம்.

4

வேலை நிறுத்தமொன்றை

வேலை அற்ற சண்டியர்கள்

ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல்

வேலி பயிரை எல்லாம்

மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

காலிப் பயல்கள் கடையை உடைப்பதுபோல்

வேலி பயிரை எல்லாம்

மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

காடையர்கள் நு¡லகத்திற் கைவா¢சை காட்டுதல்போல்

வேலி பயிரை எல்லாம்

மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

கொன்று

தெருவிற் பிணங்கள் எறிவதுபோல்

வேலி பயிரை எல்லாம்

மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

5

வேலிக்குப் பயிர்கள் மேலே

வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -

வேலி ஏன்? காவல் ஏனோ?

காவலோ வேலியாலே?

(1981 / மல்லிகை)

http://library.senthamil.org/304.htm

மிக்க நன்றிகள் நிழலி உங்கள் எண்ணப்பகிர்வுகளுக்கு .அவரது கவிதைகளில் சில மாதிரிகள் மேலே தந்துள்ளேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.