Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் தமிழர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள் மணிவாசகன். நானும் இலண்டனில் இருந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழர்கள்(ஆண்கள்) திருமணம் செய்யமுன்பு விழுந்து விழுந்து உதவி செய்வார்கள். திருமணத்தின் பின்பு சிலர் மாறிவிடுகிறார்கள்.

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

<p>

மணி அந்த மலிபன் பிஸ்கற் வான் நீங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்திலையோ நிண்டது.?? இந் தாக்குதல் பற்றியும் விரிவான பதிவொன்று எழுதியிருக்கிறன். விரைவில் இங்கும் இணைக்கிறன்.

வாசிக்க ஆவலாக இருக்கிறேன்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

(நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

ஆனாலும் ஓக்டோபர் 20ம் திகதி ஒரு முக்கியமான கிறிக்கெற் போட்டி நடைபெற இருந்ததால் ( இந்திய இலங்கை ஆட்டமாகவோ அல்லது இந்திய பாகிஸ்தான் ஆட்டமாகவோ இருக்க வேண்டும் சரியாக நினைவில்லை) வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

இலங்கை, பாகிஸ்தான் ,இந்தியா ,மேற்கிந்தியா தீவுகளுடன் நடைபெற்ற போட்டிகளின் இறுதிப் போட்டி மேற்கிந்தியா தீவுக்கு எதிரான போட்டி http://www.espncricinfo.com/ci/engine/match/65865.html

Edited by கந்தப்பு

  • 7 months later...
  • தொடங்கியவர்

இலண்டன் தமிழர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள் மணிவாசகன். நானும் இலண்டனில் இருந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழர்கள்(ஆண்கள்) திருமணம் செய்யமுன்பு விழுந்து விழுந்து உதவி செய்வார்கள். திருமணத்தின் பின்பு சிலர் மாறிவிடுகிறார்கள்.

ஐயையோ நான் அப்படி அல்ல கந்தப்பு அண்ணா! :D

  • தொடங்கியவர்

இந்தத் தொடர் குறித்து திண்ணையில் வைத்து நிழலி நேற்றைய தினம் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அத்துடன் ஒரு தொடரை இடைநடுவில் எதுவித விளக்கமும் இன்றி நிறுத்தியது தவறு என நானும் எண்ணுவதால் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

 

என்னுடைய வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் தாயகத்தில் கழிந்தது. இந்தக் காலப்பகுதியின் பெரும்பகுதி தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் கழிந்திருக்கிறது.

 

மட்டக்களப்பு அம்பாறை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிற்கும் பயணித்திருக்கிறேன். தொழில் காரணமாக பல்வேறு பட்ட மக்களுடன் சந்தித்து பல விடயங்களை அறிந்திருக்கிறேன். அந்த வகையில் எனது பார்வையில் இனவாதம் என்பது ஒரு இனக்குழுமம் சார்ந்தது அல்ல என்பதும் எல்லா இனங்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனது எண்ணமாக இருக்கிறது.

 

ஆனாலும் இன மத உணர்வுகள் இலகுவில் மக்களிடம் விதைக்கப்படக் கூடியது என்பதுடன் உணர்வுபூர்வமான ஒரு விடயமாகவும் இருப்பதால் அரசியல் வாதிகள் தமது நலன் கருதி மக்களிடம்இனவாத நஞ்சினை விதைக்கிறார்கள் என்பதும்எனது கருத்து. இது இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பல நாடுகளில்இடம்பெற்று வருகிறது. தேர்தல் நாட்கள் நெருங்கியதும் பார்பர் மசு+தி பிரச்சினையை பாரதீய ஜனதாக் கட்சி கிளறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

 

இந்த நிலையில் என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் கண்ட சந்தித்த பல இன மக்கள் தொடர்பிலான சம்பவங்களை பதிவாக்குவதே இந்தத் தொடரின் எண்ணாயிருந்தது.

 

இது குறித்து சில உறவுகள் காரசாரமான எதிர்க்கருத்தையும் முன்வைத்திருந்தது உண்மை. ஆனாலும் அந்த வாதப் பிரதிவாதங்களால் இந்தத் தொடரை நான் நிறுத்தியிருப்பேன் என என்னை அறிந்தவர்கள் நம்பமாட்டார்கள்.

 

காரணம் நான் இதை விட பெருமளவான விமர்சனங்களைச் சந்தித்த 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தொடரை  பத்திரிகையில்  ஒரு தொடராக பலகாலமாக தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். 

 

இந்தத் தொடரில் நான் எழுதிய சில விடயங்கள் குறித்து என்னுடைய உறவினர்களே முகம் சுழித்திருந்த் போதிலும் ஐம்பதிற்கு மேற்பட்ட பத்திகளை நான் இந்தத் தொடரில் எழுதியிருக்கிறேன்.

 

குறிப்பாக 'மதங்கொத்திகளிடம் அவதானமாயிருங்கள்' என்ற விடயம் சம்பந்தமாகவும் சந்திரனில் பாபா தோன்றுவது குறித்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் பெரும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தேன்.

 

எனவே யாழில் எனது நண்பர்கள் ஒருசிலர் கண்ணியமாக முன்வைத்த எதிர்வாதங்களால் இந்தத் தொடரை நிறுத்தினேன் என யாராவது நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம்..

 

சரி இந்தத் தொடரை  ஏன் தொடரவில்லை.

 

என்மனதில் பதிந்திருந்த தற்போது பதிவிடக் கூடிய பல விடயங்களை நான் ஏற்கனவே இதில் உள்ளடக்கி விட்டிருந்தது ஒரு காரணம்.

 

அப்படியாயின் மறைத்து எழுத வேண்டிய விடயங்கள் உள்ளதா என்றதொரு கேள்வி எழலாம். எனது சொந்தப் பெயரை விட புனைபெயரே பலரும் அறிந்த ஒன்றாக இருக்கின்ற நிலையிலும் தாயகத்தில் எனதுறவுகள் பலர் இன்னமும் இருக்கின்ற நிலையிலும் சில விடயங்களை தற்போதைய நிலையில் பதிவிட முடியாது. அவை என் கடந்த காலம் தொடர்பான சில முடிச்சுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன.

 

இரண்டாவதாக  புலம்பெயர் தேசங்களில் தாயகம்  தொடர்பில் இயங்கிக் கொண்டிருப்பவர்களில் இன்னமும் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் ஒரு பிரமுகரைச் சந்தித்த போது அவர் குறிப்பிட்ட ஒரு விடயம்:

 

அவர் கூறிய கருத்து இதுதான்!

 

தொடரென்று வருகின்ற போது வைக்கப்படும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது கடந்த காலத் தவறுகள் தொடர்பில் பதிவுகளை வைக்க வேண்டியிருக்கும்.தவறுகள் விமர்சிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும்இல்லை. மாறாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலியெதிர்பொன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு செயற்படுபவர்கள் பயனடைந்து விடக் கூடாது.

 

தவறுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முன்னதாக எமது தாயகத்தின் இன்றைய நிலையில் அல்லலுறும் மக்களின் நிலை, சிங்கள அரச பயங்கரவாதத்தினாலும் இராணுவத்தினாலும்அந்த மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், முன்னாள் போராளிகள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள்,மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய உதவிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சர்வதேசத்தின் துணையுடன் மீட்டெடுத்தல் என ஏராளமான அவசியமான பணிகள் எம்முன்னே இருக்கின்றன. அவை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

 

எனக்கு மிகவும் சரியாகப் பட்ட இந்த ஆலோசனையும் இந்தத் தொடரை தொடராமல்  விட்டதற்கான மற்றொரு காரணியாகும்.

 

எனவே காலங்கனிந்து வரும்போது மற்றும் சில பதிவுகள் இந்தப் பகுதியில் இணைக்கப்படும். (நாளை நடப்பதை யாரறிவார்)

 

அதுவரை தற்காலிகமாக இந்தத் தொடரை  நிறுத்திக் கொள்கிறேன்.

.

 

கள உறவுகளின் எதிர்ப்பைக் கண்டு ஓடி விட்டானா  அல்லது எதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்ற சந்தேகம் அல்லது கோபம் கொண்ட உறவுகளுக்கு என்நிலை புரியும் என எண்ணுகிறேன்.....

 

 

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்
எனவே காலங்கனிந்து வரும்போது மற்றும் சில பதிவுகள் இந்தப் பகுதியில் இணைக்கப்படும். (நாளை நடப்பதை யாரறிவார்)
இப்பதான் பிஞ்சு பிடிச்சிருக்கோ இனி காயாகி கனியாகும் .....நல்ல கனியான பின்பு இணையுங்கோ வாசிக்க நாங்கள் இருக்கிறோம்...:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.