Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த சொல்வது பச்சைப் பொய்! வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற உண்மையை மறைக்க வேண்டாம்!! -சம்பந்தன்

Featured Replies

'வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது. அதுதான் உண்மை. தெற்கில் இருப்பது போன்ற நிலைமை வடக்கு, கிழக்கில் இல்லை. ராஜபக்சாக்கள் ஒரு விடயத்தைச் சொல்லும்போது உண்மையைப் பேசுவதில்லை. அவர்கள் உண்மையை மழுப்பிப் பேசுகின்றனர். இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற அரசின் யுத்த வெற்றி விழாவில் உரையாற்றும்போது வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டா என்றும், படைக்குறைப்பு செய்யப்படமாட்டா என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பது தொடர்பில் கருத்துவெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் முழுமையாக அகற்றப்படவேண்டுமென நாம் எப்போதுமே கோரவில்லை. அப்படியான எந்தக் கோரிக்கையையும் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்வைத்ததில்லை. இராணுவத்தின் பிரசன்னம் அங்கு குறைக்கப்படவேண்டுமென்றே நாம் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.

அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும், அவமானத்தையும் கொடுக்கும் வகையில் இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் சகல கருமங்களிலும் படையினரின் தலையீடு இருக்கிறது. மக்கள் செய்யக்கூடிய விவசாயம், கைத்தொழில், வியாபாரம் என்பவற்றைக்கூட இராணுவமே செய்யும் ஒரு நிலைமை வடக்கில் உள்ளது.

மக்களின் தனிப்பட்ட வைபவங்களில் எந்தவித அழைப்பும் இல்லாமல் படையினர் கலந்துகொள்கின்றனர். அங்கு சிவில் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை அரச அதிபரோ, பிரதேச செயலாளரோ எடுப்பதில்லை. மாறாக படையினர்தான் அங்கு சிவில் நிர்வாகத்தின் தீர்மானங்களை எடுக்கின்றனர்.

தெற்கில் இருப்பதுபோல் படை முகாம்கள் வடக்கில் செயற்படுவதில்லை. தெற்கில் கல்யாண வீடுகளுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் படையினர் அழைப்பில்லாமல் செல்கின்றனரா என்று நான் கேட்க விரும்புகின்றேன். தெற்கில் சிவில் நிர்வாகத்தில் படையினரின் தலையீடு உள்ளதா என்பதை இவர்கள் முதலில் சொல்லட்டும்.

வடக்கில் ஒவ்வொரு 8 பேருக்கும் ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமை உள்ளது. வடக்கு, கிழக்கில் இருப்பதுபோலான நிலைமை தெற்கில் இல்லை. ராஜபக்சாக்கள் முதலில் யதார்த்தத்தை உணரவேண்டும். எதைச் சொன்னாலும் அவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. உண்மையை மழுப்பிப் பேசக்கூடாது. வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமென்பதுதான் எமது கோரிக்கை. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.pooraayam...1-00-28-45.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மற்ற நேரம் அவங்கள்..உண்மையோ சொல்லுறாங்கள்...அதுகளையும் மறுத்தீர்கள் என்றால் தமிழருக்கு வெகுவிரைவில் விமோசனம் கிடைக்குமே....

  • கருத்துக்கள உறவுகள்

இனி சுமந்திரனும் மாவையும் என்ன அறிக்கை விடப்போகிறார்களோ????

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவு குழுவில் பங்குபற்ற போகினம் போல, இன்னொரு திரியில நாளை அறிவிப்பு எண்டு இருக்குது, இவர்களும் இவர்களின் அரசியல் சாணக்கியமும், சிங்களவனின் அரசியலுக்கு முன்னால் கன்றுக்குட்டிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.