Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜனிகாந்தும் இந்தித் திரையுலகும்

Featured Replies

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது.

படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்கின்ற புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்கை எல்லாம் ரஜினிகாந்த் பேசினார். ஆனால் பின்பு சில ஆண்டுகள் கழித்து „அம்மா என்று அழைக்காத உயிரில்லையே' அணியில் அவரும் சேர்ந்து ஜெயலலிதாவை „தைரிய லட்சுமி' என்று எல்லாம் புகழ்ந்தது தனிக்கதை.

இப்படி சினிமாவிலும் அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள „பாட்சா' படத்தை இப்பொழுது இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெருகூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் திரையிரங்குகளில் படம் வெளியிடப்படுகிறது.

உண்மையில் „பாட்சா' திரைப்படம் ஒரு இந்திப் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதுதான்.

அமிதாப்பச்சன் நடித்த „ஹம்' என்கின்ற திரைப்படம் அது. அந்தப் படத்தில் அமிதாப்பச்சனின் தம்பிகளில் ஒருவராக ரஜினிகாந்தும் நடித்திருப்பார். பாட்சாவில் வருவது போலவே அமிதாப்பச்சனின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன்களில் ஒருவராகவே ரஜினிகாந்த் இருப்பார்.

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் ரஜினிகாந்த் குறிப்பிடத்தக்களவு இந்திப் படங்களில் நடித்திருந்தாலும் அவரால் வட இந்தியாவில் ஒரு உச்ச நடிகராக மாற முடியவில்லை. ஓரிரு படங்களிலேயே தனிக் கதாநாகயகனாக நடித்தார். „கங்வா' (இந்தியில் எடுக்கப்பட்ட மலையூர் மம்பட்டியான்) போன்ற படங்களை குறிப்பாகச் சொல்லலாம்.

மற்றையபடி இரண்டு மூன்று கதாநாயகர்களில் ஒருவராக, அல்லது கதநாயகனுக்கு தோழனாகவே இந்திப் படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். இப்படி நடித்த சில படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன.

ரஜினிகாந்தும் சிறிதேவியும் நடித்த படம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். ஆர்வமாக போய் பார்த்தால் யாரோ ஒரு வட இந்திய நாயகனும் சிறிதேவியும் டுயட் பாடிக் கொண்டிருப்பார்கள். ரஜினிகாந்த் வேறு ஒரு குரலில் பேசிக் கொண்டு கதநாயகனுக்கு தோழனாக நடித்துக் கொண்டிருப்பார்.

அதன் பிறகுதான் தாம் ஒரு மொழிமாற்றுப் படத்திற்கு வந்திருக்கிறோம் என்பது ரசிகர்களுக்கு புரியத் தொடங்கும். இப்படி எண்பதுகளின் கடைசியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பலமுறை நடந்திருக்கிறது.

ரஜினிகாந்தும் தான் நடிக்கின்ற இந்திப் படங்கள் தமிழில் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகத்தான் இருப்பார். அப்படியிருந்தும் யாராவது அதை தமிழில் வெளியிட்டு விடுவார்கள்.

இதில் இன்னும் சோகம் என்னவென்றால் அனேகமான இந்திப்படங்களில் ரஜனிகாந்தை இடையிலோ அல்லது முடிவிலோ சாகடித்து விடுவார்கள்.

ஆனால் என்னதான் சொன்னாலும் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு என்று வட இந்தியாவில் ரசிகர்கள் இருக்கத்தான் செய்தார்கள். இதனால்தான் இரண்டாவது, மூன்றாவது கதநாயகனாக என்றாலும் ரஜனிகாந்த்தால் பல இந்திப் படங்களில் நடிக்க முடிந்தது.

„கிராவ்தார்' என்று ஒரு இந்திப் படம் 1985இல் வெளிவந்தது. இந்தப் படத்திற்கு இந்திய திரைப்பட வரலாற்றில் நிச்சயமாக ஒரு இடம் இருக்கும். இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குகின்ற அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ரஜனிகாந்த் ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

ஆயினும் ரஜினிகாந்திற்கு படத்தில் மூன்றாம் இடம்தான். இந்தப் படத்திலும் ரஜினிகாந்த் வில்லன்களிடம் சூடு வாங்கி இறந்து போவார். ஆனால் சூடு வாங்கிய பின்னரும் ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி வில்லன்களை அடித்து விட்டு, அதே சிகரட்டோடு இறப்பார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினிகாந்தால் இந்திப் பட உலகில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கமல்ஹாசனாலும் அது முடியவில்லை. இருவருமே தொண்ணூறுகளில் இந்திப் படங்களில் நடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டோ, அல்லது முற்றாகக் கைவிட்டு விட்டோ தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கினார்கள்.

வட இந்தியாவில் தென்னிந்திய நடிகர்களை வளர விடக் கூடாது என்று இந்தி நடிகர்கள் பல சதிகளை செய்ததாக கமல்ஹாசன் கூறியதாகக் கூட ஒரு செய்தி உண்டு.

இன்றைக்கு ரஜனிகாந்த் மிகப் பெரிய உச்சத்தை தொட்டுவிட்டார். ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ஆகி விட்டார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு, அதிக வசூலை குவித்த படமாக ரஜினிகாந்தின் எந்திரன் படம்தான் விளங்குகிறது.

அப்படி என்னதான் இந்த மனிதரிடம் இருக்கிறது என்று பலரும் ஆர்வமாக ரஜினியை பார்க்கிறார்கள். அமிதாப்பச்சனோடு சம வயது உள்ள நண்பனாக நடித்த ரஜினிகாந்த் இன்றைக்கு அமிதாப்பச்சனின் மருமகளோடு டுயட் பாடி நடிப்பதை வட இந்திய ரசிகர்கள் ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற சந்தைப்படுத்தல் சாந்த தொழில்நுட்பம் ரஜினிகாந்தின் விம்பத்தை மேலும் பல மடங்கு பெருக்கச் செய்திருக்கிறது.

இதை வைத்து இப்பொழுது பாட்சா படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இந்தப் படம் இலாபத்தைக் கொடுத்தால் இந்தியில் ரஜினிகாந்தின் பழைய படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு பலர் போட்டி போடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சபேசன் திரும்பி வந்துவிட்டாரா? நான் நினைச்சன் ஆளாலை இனி.......... :D

  • தொடங்கியவர்

தொல்லை இல்லையென்றா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொல்லை இல்லையென்றா?

சீச்சீ.....அப்பிடியான நோக்கத்திலை நான் சொல்லேல்லை :o .....உங்களாலை இனி எழுதேலாது எண்டு சொல்ல வந்தன்.....கலியாணம்..காட்சியெண்டு வந்துட்டால் பொறுப்புகள் கூடுமெல்லே :D:lol:

சீச்சீ.....அப்பிடியான நோக்கத்திலை நான் சொல்லேல்லை :o .....உங்களாலை இனி எழுதேலாது எண்டு சொல்ல வந்தன்.....கலியாணம்..காட்சியெண்டு வந்துட்டால் பொறுப்புகள் கூடுமெல்லே :D:lol:

அவர் இப்பவும் விடிய முட்டைக் கோப்பி குடிக்கிறவராம்...களைச்சுப் போகமாட்டார் :D

'ஏக துஜே கேலியே' படத்தின் மூலம் உச்சிக்குப் போன கமலுக்குப் போட்டியாக அமிதாப்பால், ரஜனி ஹிந்திக்கு இறக்கப்பட்டார். ஆரம்பத்தில் 'அந்தாகானூன்' ஆக்ரி ராஸ்தா, அக்னிபாத் போன்ற படங்களில் ரஜனிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மிகக் குறுகிய காலம் கமலும் ரஜனியும் இந்தித் திரையில் உச்சியில் இருந்தார்கள். பின்பு இரண்டாம் மூன்றாம் கதாநாயகர்களாக தரமிறககப் பட்டபின், பழையபடி தமிழ் சினிமாவிற்கே திரும்பினார்கள்.

  • தொடங்கியவர்

குமாரசாமியும் நிழலியும் ஏதோ கட்டுரைக்கு கருத்துச் சொல்லியிருப்பார்கள் என்று பார்த்தால் நான் முட்டைக் கோப்பி குடிப்பதைப் பற்றி கதைக்கிறீர்கள்.

மீண்டும் வருகின்ற கிழமை காணமால் போய் விடுவேன். ஆனால் பதின்மூன்றாம் திகதியில் இருந்து தொடர்ந்து வருவேன். எழுதுவேன். அதற்கான முன்னோட்டம்தான் இவைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியும் நிழலியும் ஏதோ கட்டுரைக்கு கருத்துச் சொல்லியிருப்பார்கள் என்று பார்த்தால் நான் முட்டைக் கோப்பி குடிப்பதைப் பற்றி கதைக்கிறீர்கள்.

மீண்டும் வருகின்ற கிழமை காணமால் போய் விடுவேன். ஆனால் பதின்மூன்றாம் திகதியில் இருந்து தொடர்ந்து வருவேன். எழுதுவேன். அதற்கான முன்னோட்டம்தான் இவைகள்.

அப்ப 13ம் திகதிக்குப்பிறகு வேலைக்கு போற ப்ளான் இல்லை? :huh:

அண்ணை நீங்கள் இப்படி ஆய்வுக் கட்டுரைகள் எழுதினால் நான் வரவெற்பபேன் ஆனால் வன்னியில் ;ட ; வடிவில் விட்டு அடிக்க போகிறார்கள் என்று மட்டும் ஆய்வுகள் செய்து போடாங்கோ.

  • தொடங்கியவர்

"ட" வடிவில் அடிக்கின்ற காலம் எல்லாம் முடிந்து விட்டது. இதைப் பற்றி சொல்வதற்கு அங்கேயும் யாரும் இல்லை. எழுதுவதற்கு தயாராகவும் இங்கேயும் யாரும் இல்லை.

"ட" வடிவில் அடிக்கின்ற காலம் எல்லாம் முடிந்து விட்டது. இதைப் பற்றி சொல்வதற்கு அங்கேயும் யாரும் இல்லை. எழுதுவதற்கு தயாராகவும் இங்கேயும் யாரும் இல்லை.

அப்ப கேக்கிறதுக்கு கேனையர்கள் மட்டும் இருக்கோமா? :lol:

சரி விடுங்கோ நீங்கள் ஏதோ நம்பிக்கையில் எழுதினீர்களோ தெரியாது.

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது.

படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்கின்ற புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்கை எல்லாம் ரஜினிகாந்த் பேசினார். ஆனால் பின்பு சில ஆண்டுகள் கழித்து „அம்மா என்று அழைக்காத உயிரில்லையே' அணியில் அவரும் சேர்ந்து ஜெயலலிதாவை „தைரிய லட்சுமி' என்று எல்லாம் புகழ்ந்தது தனிக்கதை.

இப்படி சினிமாவிலும் அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள „பாட்சா' படத்தை இப்பொழுது இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெருகூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் திரையிரங்குகளில் படம் வெளியிடப்படுகிறது.

உண்மையில் „பாட்சா' திரைப்படம் ஒரு இந்திப் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதுதான்.

அமிதாப்பச்சன் நடித்த „ஹம்' என்கின்ற திரைப்படம் அது. அந்தப் படத்தில் அமிதாப்பச்சனின் தம்பிகளில் ஒருவராக ரஜினிகாந்தும் நடித்திருப்பார். பாட்சாவில் வருவது போலவே அமிதாப்பச்சனின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன்களில் ஒருவராகவே ரஜினிகாந்த் இருப்பார்.

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் ரஜினிகாந்த் குறிப்பிடத்தக்களவு இந்திப் படங்களில் நடித்திருந்தாலும் அவரால் வட இந்தியாவில் ஒரு உச்ச நடிகராக மாற முடியவில்லை. ஓரிரு படங்களிலேயே தனிக் கதாநாகயகனாக நடித்தார். „கங்வா' (இந்தியில் எடுக்கப்பட்ட மலையூர் மம்பட்டியான்) போன்ற படங்களை குறிப்பாகச் சொல்லலாம்.

மற்றையபடி இரண்டு மூன்று கதாநாயகர்களில் ஒருவராக, அல்லது கதநாயகனுக்கு தோழனாகவே இந்திப் படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். இப்படி நடித்த சில படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன.

ரஜினிகாந்தும் சிறிதேவியும் நடித்த படம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். ஆர்வமாக போய் பார்த்தால் யாரோ ஒரு வட இந்திய நாயகனும் சிறிதேவியும் டுயட் பாடிக் கொண்டிருப்பார்கள். ரஜினிகாந்த் வேறு ஒரு குரலில் பேசிக் கொண்டு கதநாயகனுக்கு தோழனாக நடித்துக் கொண்டிருப்பார்.

அதன் பிறகுதான் தாம் ஒரு மொழிமாற்றுப் படத்திற்கு வந்திருக்கிறோம் என்பது ரசிகர்களுக்கு புரியத் தொடங்கும். இப்படி எண்பதுகளின் கடைசியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பலமுறை நடந்திருக்கிறது.

ரஜினிகாந்தும் தான் நடிக்கின்ற இந்திப் படங்கள் தமிழில் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகத்தான் இருப்பார். அப்படியிருந்தும் யாராவது அதை தமிழில் வெளியிட்டு விடுவார்கள்.

இதில் இன்னும் சோகம் என்னவென்றால் அனேகமான இந்திப்படங்களில் ரஜனிகாந்தை இடையிலோ அல்லது முடிவிலோ சாகடித்து விடுவார்கள்.

ஆனால் என்னதான் சொன்னாலும் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு என்று வட இந்தியாவில் ரசிகர்கள் இருக்கத்தான் செய்தார்கள். இதனால்தான் இரண்டாவது, மூன்றாவது கதநாயகனாக என்றாலும் ரஜனிகாந்த்தால் பல இந்திப் படங்களில் நடிக்க முடிந்தது.

„கிராவ்தார்' என்று ஒரு இந்திப் படம் 1985இல் வெளிவந்தது. இந்தப் படத்திற்கு இந்திய திரைப்பட வரலாற்றில் நிச்சயமாக ஒரு இடம் இருக்கும். இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குகின்ற அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ரஜனிகாந்த் ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

ஆயினும் ரஜினிகாந்திற்கு படத்தில் மூன்றாம் இடம்தான். இந்தப் படத்திலும் ரஜினிகாந்த் வில்லன்களிடம் சூடு வாங்கி இறந்து போவார். ஆனால் சூடு வாங்கிய பின்னரும் ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி வில்லன்களை அடித்து விட்டு, அதே சிகரட்டோடு இறப்பார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினிகாந்தால் இந்திப் பட உலகில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கமல்ஹாசனாலும் அது முடியவில்லை. இருவருமே தொண்ணூறுகளில் இந்திப் படங்களில் நடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டோ, அல்லது முற்றாகக் கைவிட்டு விட்டோ தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கினார்கள்.

வட இந்தியாவில் தென்னிந்திய நடிகர்களை வளர விடக் கூடாது என்று இந்தி நடிகர்கள் பல சதிகளை செய்ததாக கமல்ஹாசன் கூறியதாகக் கூட ஒரு செய்தி உண்டு.

இன்றைக்கு ரஜனிகாந்த் மிகப் பெரிய உச்சத்தை தொட்டுவிட்டார். ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ஆகி விட்டார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு, அதிக வசூலை குவித்த படமாக ரஜினிகாந்தின் எந்திரன் படம்தான் விளங்குகிறது.

அப்படி என்னதான் இந்த மனிதரிடம் இருக்கிறது என்று பலரும் ஆர்வமாக ரஜினியை பார்க்கிறார்கள். அமிதாப்பச்சனோடு சம வயது உள்ள நண்பனாக நடித்த ரஜினிகாந்த் இன்றைக்கு அமிதாப்பச்சனின் மருமகளோடு டுயட் பாடி நடிப்பதை வட இந்திய ரசிகர்கள் ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற சந்தைப்படுத்தல் சாந்த தொழில்நுட்பம் ரஜினிகாந்தின் விம்பத்தை மேலும் பல மடங்கு பெருக்கச் செய்திருக்கிறது.

இதை வைத்து இப்பொழுது பாட்சா படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இந்தப் படம் இலாபத்தைக் கொடுத்தால் இந்தியில் ரஜினிகாந்தின் பழைய படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு பலர் போட்டி போடுவார்கள்.

இதில் ரஜனியைப் பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லை

ரஜனி என்பது பல சமன்பாடுகள் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடிகராகவே தெரிகின்றார் எனக்கு. எனக்கு அண்ணன்களாக இருந்தவர்களுக்கும் அவரைப் பிடித்து இருந்தது, பின் எனக்கு, அதன் பின் இப்ப என் மகனுக்கு அவரைப் பிடிக்கின்றது. தீவிர சினிமா பார்ப்பவர்களுக்கு கூட அவரைப் பிடிக்கும் (ஆனால் வெளியே சொல்ல தயங்குவார்கள்). எத்தனை சினிமா வந்தாலும், எத்தனை திரைப்பட விழாக்கள், குறும்படத் திரைப்பட விழாக்களுக்கு சென்று ஏனைய படங்களை ரசித்தாலும் ரஜனியை இன்றும் ரசிக்க முடிகின்றது...

ரஜனி தமிழ் சினிமாவில் நடிப்பதால் அவரை தமிழர் என கருதிய இந்தி ரசிகர்கள் தென்னிந்தியர்களின் மீது இருக்கும் இயல்பான வெறுப்பால் அவரை ஓரளவுக்கு மேல் ரசிக்க முடியாமல் போயிருக்கும் அல்லது ரசிக்க விரும்பாமல் விட்டிருப்பர். மணிரத்தினம் போல இந்திய தேசியத்தை, பார்ப்பனியத்தை உயர்த்தி வியாபாரம் செய்து இருந்தால் வட இந்தியர்களாலும் ரசிக்கப்பட்டு இருப்பார்

கமல் ,ரஜனி ,அமிதாப் நடித்த கிராப்டர் மிக மிக மோசமான படங்களில் ஒன்று .

சிவாஜி பார்க்க இரு மகன்களையும் கஷ்டப்படுத்தி கூட்டிக்கொண்டு போனேன் .ரஜனி ஸ்ரேயா வீட்டிற்கு பெண் பார்க்க விவேக் உடன் போகும் கட்டம் வர சகிக்கமுடியால் இருவரும் அடுத்ததிரையில் ஆங்கில படம் பார்க்க போய்விட்டார்கள் .அதன் பின் வந்து என்னவென்று உந்த கிழவன் ஸ்ரேயாவுடன் நடிக்க பார்க்கின்றீர்கள் என்று பேச்சு வேறு .

என்ன சொன்னாலும் ரஜனி ,கமல் ,சரத்குமார் ,விஜகாந்த் நடிக்கும் காதல் காட்சிகள் அருவருப்பையே தருகின்றன .

கமல் ,ரஜனி ,அமிதாப் நடித்த கிராப்டர் மிக மிக மோசமான படங்களில் ஒன்று .

சிவாஜி பார்க்க இரு மகன்களையும் கஷ்டப்படுத்தி கூட்டிக்கொண்டு போனேன் .ரஜனி ஸ்ரேயா வீட்டிற்கு பெண் பார்க்க விவேக் உடன் போகும் கட்டம் வர சகிக்கமுடியால் இருவரும் அடுத்ததிரையில் ஆங்கில படம் பார்க்க போய்விட்டார்கள் .அதன் பின் வந்து என்னவென்று உந்த கிழவன் ஸ்ரேயாவுடன் நடிக்க பார்க்கின்றீர்கள் என்று பேச்சு வேறு .

என்ன சொன்னாலும் ரஜனி ,கமல் ,சரத்குமார் ,விஜகாந்த் நடிக்கும் காதல் காட்சிகள் அருவருப்பையே தருகின்றன .

இனி என்னைப் போன்ற youths பார்ப்பது போல் அவர்களைப் பார்க்காமல், கதாநாயகிகளை மட்டும் பார்த்தால் அருவருப்பு வராது...

என்னவென்றாலும் காதல் காட்சிகளில் விஜயகாந்தை பார்க்க முற்பட்ட உங்கள் துணிச்சலை பாராட்டுகின்றேன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.