Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது கதையில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையில்லை

அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார்.

உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....?

வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத்திரி மருந்தெண்டு வந்த அழைப்புகளில 16வது அழைப்பு இது. முகம் தெரியாத அந்தத் தம்பி உடனடியாக உதவி தேவைப்படுகிற போராளியின் மருத்துவச்சான்றிதழ் , செலுத்தப்பட்ட பணத்திற்கான ரசீதுகள் அத்தோடு இரத்தம் கசிந்தபடி அவனது கால்கள் பஞ்சையும் சிவப்பாக்கியிருந்த பஞ்சுகளால் சுற்றப்பட்ட அந்தப்போராளியின் படம் , சத்திரசிகிச்சை உடையோடு ஒரு பொம்மைபோல கட்டிலில் கிடக்கிற கோலத்தை படம் பிடித்து எல்லாவற்றையும் மின்னஞ்சல் செய்திருந்தான்.

அக்கா அவன் இந்தியாவில தண்ணீர் விநியோகம் செய்யிற வேலைதான் செய்தவன்...அன்றாட கூலிதான் குடும்பத்திற்கான வருமானம்....2பிள்ளைகள் மனைவியும் இவனைத்தான் நம்பியிருக்கினம் கடைசி முயற்சியென்ற வரையும் முயன்றுவிட்டோம். ஆளைப்பாக்கேலாம இருக்குதக்கா என்று அடிக்குறிப்பும் இட்டிருந்தான்.

60ஆயிரம் ரூபா இந்தியப்பணம் கிட்டத்தட்ட 900€. யாரிட்டையும் உடனடியாகத் திரட்ட முடியாது என்பதனை அவனுக்கு அஞ்சலிட்ட கையோடு ஸ்கைப்பில் ஓடிவந்தான் அவன். ஏதாவது முயற்சி செய்யுங்கோக்கா....சரியான பாவமாயிருக்கு....கடன் குடுக்காட்டி பொலிஸில குடுத்திருவாங்களக்கா....வெளிநாட்டு உதவியளோ சொந்தங்களோ ஒருதருமில்லையக்கா.....கெஞ்சினான் அவன். சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கட்டிலில் சுருண்டு போனவனின் மனைவியின் தொலைபேசியிலக்கத்தையும் எழுதிவிட்டு ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ என அவர்களுக்காக மன்றாடினான் தொடர்பில் வந்த சக போராளி.

சிகிச்சை முடிந்து இரத்தக்கறையோடு கிடந்த அந்தத் தம்பியின் மருத்துவச் சான்றிதழை பிறிண்ட் எடுத்தேன். 32வயது அவனுக்கு. செய்யப்பட்ட சிகிச்சைக்கான ஒவ்வொரு செலவுகளும் அட்டவணைப்படுத்தப்பட்டு கணக்கு போடப்பட்டிருந்தது. அவனது படத்தை பார்க்க அந்தரமாயிருந்தது. அவனது முகத்தைப் பார்த்த பின்னர் எதுவும் செய்ய முடியாதென்று ஒதுங்கவும் முடியாமல் அவன் கண்ணுக்குள் நின்றான்.

அவனது மனைவியின் தொலைபேசியை அழைத்தேன். சொல்லுங்க அக்கா....அவள் அழ ஆரம்பித்தாள். நாங்கள் எங்களுக்கெண்டு ஒண்டையும் கொண்டு வரேல்லையக்கா....ஏதோ உயிரைக்காப்பாற்றுவமெண்டு மட்டும்தான் நினைச்சு இந்தியா வந்தனாங்கள்....இவர் கடைசியாத்தான் காயம்பட்டவர்.....வந்தோடனும் ஒரு வேலையும் கிடைக்கேல்ல...தண்ணி சப்ளை வேலையும் வீடுகளுக்கு பெயின்ற் அடிக்கிற வேலையும் தெரிஞ்சாக்களை பிடிச்சு எடுத்தவர். டொக்ரர்மார் சொன்னவை....கனக்க நடக்கப்படாது நிக்கப்படாதெண்டு ஆனா அப்பிடியிருந்தா பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறும் குடுக்கேலாதெண்டு வேதவனையோடைதானக்கா வேலைக்குப் போனவர்....கால் ஏலாம வந்தப்பிறகுதான் வெளிநாட்டுக்காறாள் ஒருதரின்ரை தொடர்பு கிடைச்சோடணும் ஒப்பிறேசனுக்கு உதவி கேட்டம்....ஓமெண்டு நம்ப வைச்சிட்டு இப்ப எங்களை ஏமாத்தீட்டினமக்கா....அவள் அழுதாள்.

உதவி செய்வேனென வாக்குறுதி கொடுத்தவரின் இலக்கத்தை வாங்கி அழைத்தேன். அது லைகா இலக்கம். தொடர்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அழைக்க வொயிஸ் மெயிலுக்குப் போய்க் கொண்டிருந்தது. பல லைகா இலக்கங்கள் ஏற்கனவே உதவுகிறோம் என பொழுது போக்காட்டிய அனுபவம் போல இதுவுமொரு லைகா போல.....

இந்தியா , இந்தோனேசியா , தாய்லாந்து , பர்மா , நேபாளம் ,ஆபிரிக்கா வரை எத்தனையோ போராளிகள் தெருத்தெருவாய் ஊனங்களோடும் உயிர்வாழ முடியாத வறுமையோடும் அவதிப்பட அந்த உயிர்களுக்கு உதவுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவதில் என்ன நிம்மதியைப் பலர் காண்கிறார்களோ தெரியவில்லை....?

தன்னுடைய இனத்தை நம்பி தன்னுடைய வாழ்வையும் இழந்து ஊனமாக அன்னிய நாடுகளில் அலைகிற போராளிகளுக்கு மறுவாழ்வை அல்லது மன நிம்மதியை யார் கொடுக்கப்போகிறோம்...?

விழுந்தவர்களை எழ தோழ் கொடுக்காமல் விடுதலையை யாருக்காக வெல்லப்போகிறோம்....?

(இது கதையில்லை ஒருவனின் அந்தரம் மிக்க வாழ்வின் துயர்)

03.06.2012

இந்தியா , இந்தோனேசியா , தாய்லாந்து , பர்மா , நேபாளம் ,ஆபிரிக்கா வரை எத்தனையோ போராளிகள் தெருத்தெருவாய் ஊனங்களோடும் உயிர்வாழ முடியாத வறுமையோடும் அவதிப்பட அந்த உயிர்களுக்கு உதவுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவதில் என்ன நிம்மதியைப் பலர் காண்கிறார்களோ தெரியவில்லை....?

உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்வதாகத் தம்பட்டம் அடிப்பவர்கள்!

இவர்கள் தான், எமது சமுதாயத்தின் குருவிச்சைகள்!

வளரும் மரத்திலிருந்து, உறிஞ்ச மட்டுமே, இவர்களுக்குத் தெரியும்!

வழக்கம் போல உங்கள் கதை வலிக்கின்றது!

மீண்டும் அதே, குற்ற உணர்வுடன் குறுகிப் போகின்றேன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதுவதென்று தெரியவில்லை

ஈரம் உள்ளோர் எல்லோரும் வீக்கத்துக்கும் அதிகமாக பாரங்களைச்சுமக்கின்றோம்.

போன வருடப்பிறப்புக்கு 843 ஈரோக்கள் பெறுமதியான அத்தியாவசியமான உடுப்புகள் (சாரங்கள் துவாய்கள் சட்டைகள்... ) சவுக்காரம் அரிசி பருப்பு ......... என அந்த நாளில் மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு சிறைக்குள் கொண்டு போனோம். அன்று அது முக்கியமாக தெரிந்தது. இன்று இது அதைவிட முக்கியமாகத்தெரிகிறது. ஆனாலும் முடியலையே என்னும் இயலாமை வருத்துகிறது.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்வதாகத் தம்பட்டம் அடிப்பவர்கள்!

இவர்கள் தான், எமது சமுதாயத்தின் குருவிச்சைகள்!

உதவுகிறேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றியதால் அந்தக் குடும்பம் இக்கட்டில் மாட்டித் தவிக்கிறது. வழிகள் ஏதும் திறக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாது போய்விட்டது புங்கையூரான்.

ஈரம் உள்ளோர் எல்லோரும் வீக்கத்துக்கும் அதிகமாக பாரங்களைச்சுமக்கின்றோம்.

ஈரமுள்ளவர்களைத்தான் இத்தகைய சுமைகள் வந்து மூச்சுக்குழல் அடைக்கிற துயரத்தை தருகிறது. என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல.

  • 3 weeks later...

பாவப்பட்ட பலர் இப்படித்தான் வாழ்கிறார்கள்.தமிழனின் தலைவிதி தமிழீழம் அமைந்தால்தான் மாற வழியுண்டு.

சவுக்காரம் அரிசி பருப்பு ......... என அந்த நாளில் மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு சிறைக்குள் கொண்டு போனோம்.

விசுகு தமிழரின் பண்பாட்டு தினங்கள் கொண்டாட்டங்களுக்கு சிறப்பாக இலங்கைச் சிறைகளில் யாரும்போய்வர அனுமதியில்லை இதெப்படி உங்களுக்கு சிறப்பான அனுமதி கிடைத்தது ?

[size=4]அனுராதபுர சிறையில் தைப்பொங்கல் கொண்டாட தடைhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=80440[/size]

வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிடைக்காது போன பொங்கல்!

http://elakolla.com/latestnews/?newsid=20120115204747&jcode=20120115235740

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.