Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம்

கொழும்பு: முன்னாள் இலங்கை பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கா ஓர் கிறிஸ்தவராகப் பிறந்த போதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோவை திருமணம் செய்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951ம் ஆண்டு வரை இருந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.1951ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் துவக்கி மக்கள் செல்வாக்கை பெற்றார். 1956ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்கள மொழியை இலங்கையி்ன் அதிகாரப்பூர்வ மொழியாக்கினார். இந்த நிலையில் தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் திருஉருவச் சிலை உள்ளது. இங்கு ஹாங்காங்கை தலைமையைகமாக கொண்ட சங்ரிலா ஹோட்டல் நிர்மாண பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகளுக்காக பண்டாரநாயக்காவின் திருஉருவச் சிலையை அகற்றுவதற்கான நில அளவை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு இலங்கையில் உள்ள அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்னர்.

http://tamil.oneindia.in/news/2012/06/12/tamilnadu-former-sl-pm-bandaranaike-statue-155576.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தை முதல்முதல் கக்கிய இனத்துவேசியின் சிலையை கண்டிப்பாய் அகற்ற வேண்டும் . :D:icon_mrgreen:

மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்தார்கள் - சிங்களவர்கள் மகிழ்ந்தார்கள்

சைவ ஆலயங்களை அன்றும் இன்றும் இடித்து பௌத்த ஆலயங்களை கட்டுகிறார்கள் - சிங்களம் மௌனித்து வேடிக்கை பார்த்தது.

இப்பொழுது அவர்களின் சிலைகளையே உடைக்கின்றது சிங்கள இனவாதம். இப்பொழுது 'அதிருப்தியை' வெளியிடுவது காலம் தாழ்த்திய செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின்

திருஉருவச் சிலை

உள்ளது.

என்று தணியும் எங்கள் ஊடகங்களின், அடிமை மோகம்? :wub:

கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் திருஉருவச் சிலை உள்ளது.

என்று தணியும் எங்கள் ஊடகங்களின், அடிமை மோகம்? :wub:

தமிழினத்தின் முதல் எதிரியே பெரும்பாலான அரைவேக்காட்டு தமிழ் ஊடகவியலாளர்கள்!

தமிழ் ஊடகவியலாளர்களில் 98 % ஆனவர்கள் சுயபுத்தி, தமிழ் அறிவு, அடிப்படைக் கணித அறிவு, அடிப்படை வரலாறு, போன்றவை தெரியாதவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும், பிற்போக்கானவர்களாகவும், சினிமா பைத்தியங்களாகவும், தெளிவற்றவர்களாகவும், அடிமைப் புத்தி கொண்டவர்களாகவும் இருப்பது தான் வேதனையானது.

இவர்களது எழுத்துக்கள் நம்பகத்தன்மையற்றதாகவும், மக்களை பய பீதியில் - அடிமைத்தனத்தில் ஆழ்த்துவதாகவும் மட்டுமே அமையும்.

அற்புதன், நடேசன், தவபாலன், தமிழன்பன், சத்தியமூர்த்தி, நிமலராஜன் போன்ற ஒருசில ஊடகவியலாளர்களே விதிவிலக்காக இருந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதன்

ஆராவமுதன் அற்புதன் ஆரெண்டு தெரியுமோ?

ஆராவமுதன் அற்புதன் ஆரெண்டு தெரியுமோ?

தெரியும். அவர் உண்மையில் யாரால் கொலை செய்யப்பட்டவர் என்று தெரியுமோ?

இங்கு அவர் ஊடகவியலார் என்ற கோணத்தில் மட்டும் எல்லைகளை தாண்டி கருத்தெழுதப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் டக்கிளாசால் கொல்லப்பட்டார் என்பதற்காக அவர் புனிதர் ஆகமாட்டார்.

விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்ட ஒரு துரோகி அவர்.

எப்போதுமே அவர் புலி எதிர்ப்பாளர். அவரது ஊடகப் பணி என்பது காசு திரட்டுவதற்கானது.

விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எழுதினால் பத்திரிகை விற்பனையாகாது என்பதற்காகவே ஆதரவு வேசம் போட்டவர். இந்த ஆதரவு வேசமே அவர் எழுதிய அனைத்தையும் உண்மையென உங்களைப் போன்றவர்களை நம்ப வைத்துள்ளது.

பல்வேறு தடவைகள், உண்மைக்குப் புறம்மான தகவல்களைக்கூட எழுதியுள்ளார்.

இன்றைய தமிழ் இணைய ஊடகவியலாளர்களிடம் நீங்கள் சொன்னது போன்று தமிழ் அறிவு, போராட்டம் பற்றிய அறிவு ஊடக அறிவு என்பன அவ்வளவு இல்லைத்தான். இந்த அறியாமையே இது மாதிரியான தவறுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்கள் அற்புதன் போன்று பச்சோந்திகள் அல்ல.

அவசரகாலச் சட்டத்தை விமர்சித்து எழுதும் கையால் அதே அவசரகாலச் சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்தவர்.

இந்த ஆதரவு வேசமே அவர் எழுதிய அனைத்தையும் உண்மையென உங்களைப் போன்றவர்களை நம்ப வைத்துள்ளது.

இதிலிருந்து உங்கள் கற்பனைகளும் போலித்தனமும் நன்கு வெளிப்படுகிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலிருந்து உங்கள் கற்பனைகளும் போலித்தனமும் நன்கு வெளிப்படுகிறது!

செய்வது தேசத் துரோகம், காசுக்கு தேசப்பாசம் காட்டிய அற்புதனை சத்தியமூர்த்தி, தவபாலன் போன்ற ஊடகர்களுடன் இணைத்து விதிவிலக்கானவர் என்று எழுதிய எதனால்? அவனை நம்பிய படியால்தானே??

Edited by நீதி

சந்திரிக்காவுக்கு சிலை இருந்திருந்தால் திருதுராடிரன், வீமனின் சிலையை தழுவியதுபோல் தழுவப்பட்டிருக்கும். இது அப்பனின் சிலைதானே. உடைத்துவிட்டால் போகிறது..

Edited by மல்லையூரான்

இடிப்பதில் சிறப்புத்தேர்ச்சியும், வல்லமையும் பொருந்திய ஒரே ஒரு இனம் ....................

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் காலம் கனிந்துவரும்.

ஒருபுறம் மகிந்த மறுபுறம் பொன்சேகா சந்திரிகா ரணில் +

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் காலம் கனிந்துவரும்.

ஒருபுறம் மகிந்த மறுபுறம் பொன்சேகா சந்திரிகா ரணில் +

இல்லவேயில்லை....ஒருக்காலும் நடக்காது......பிரபாகரன்ரை பெயரைச்சொன்னாலே போதும் சிங்களவன் ஒற்றுமையாகிடுவாங்கள்........எங்கடையள் தான் 64 திசையாய் பிரிஞ்சு நிக்குங்கள்.*

செய்வது தேசத் துரோகம், காசுக்கு தேசப்பாசம் காட்டிய அற்புதனை சத்தியமூர்த்தி, தவபாலன் போன்ற ஊடகர்களுடன் இணைத்து விதிவிலக்கானவர் என்று எழுதிய எதனால்? அவனை நம்பிய படியால்தானே??

இதிலிருந்து உங்கள் கற்பனைகளும் போலித்தனமும் மீண்டும் மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்தப்படுகிறது! !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.