Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் – விக்கிரமபாகு

Featured Replies

தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு படையினரை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய தமிழர்களைக் கொன்று குவித்த இந்த அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது எனவும் நவசமசமாஜக் கட்சி குறிப்பிடுகின்றது.

யாழ். குடாநாட்டில் படையினர் திட்டமிட்ட அடிப்படையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது உரிமைகளை ஜனநாயக விழுமியங்களுக்கமையப் பெற்றுக்கொள்ள முடியாத அதனை இன்னுமொரு தரப்பு தருவதற்கு மறுக்கும் சந்தர்ப்பத்தில் வன்முறைகளில் ஈடுபட்டே உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நிலைமை தோன்றுகின்றது. அதுதான் பிற்காலத்தில் தீவிரவாதமாக உருவெடுக்கும்.

தமிழர்கள் தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சாத்வீக வழியில் போராடினர், காந்திய வழியைப் பின்பற்றினர். ஆனால், சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழர்களை அடக்குவதற்கு முயற்சித்ததே தவிர, உரிமைகளை வழங்குவதற்கு முன்வரவில்லை.

அதன் பின்னர் ஏற்பட்ட உருவான ஆயுதப் போராட்டத்தால் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டனர். இரத்த வெள்ளத்தில் சடலங்கள் மிதந்தன. பிணம் தின்னும் மிருகங்களாக அப்போது அரசு செயற்பட்டது. அரசியல் நலன்களுக்காக விலைமதிக்கமுடியாத உயிர்களைக் கூட சர்வதேச சமூகம் கருத்திற்கொள்ளவில்லை.

இவ்வாறு பல இன்னல்களைச் சந்தித்த பின்னரும் கூட தமிழர்களின் துயரங்கள் அவல நிலைமைகள் தீரவில்லை. மாறாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையிலேயே அரசு ஈடுபட்டுள்ளது.

அனைத்தையும் இழந்து நடைப்பிணங்களாய் வாழும் வடக்கு மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே சொத்து அவர்களது காணிகளாகும். அதைக்கூட படை பறிப்பதற்கு முயற்சிக்கின்றது.

தமிழீழம் என்றொரு நாட்டைக் கைப்பற்றிவிட்டோம் என்ற ஆணவப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஒரு நாட்டை இன்னுமொரு நாட்டின் படை கைப்பற்றிய பின்னர் அந்த நாட்டின் நிலங்களை படை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதைத்தான் தற்போது இலங்கை படை வடக்கில் செய்கின்றது; இனியும் செய்யப்போகின்றது.

தமிழர்கள் இனியும் இல்லையென்ற அளவு பொறுமை காத்து வருகின்றனர். ஆனால், இந்தப் பேரினவாத அரசு அவர்களை சீண்டிவிட்டுப் போராட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது. வடக்கு மண்ணை தெற்கின் அடிமைப் பிரதேசமாக மாற்றியமப்பதே மஹிந்த அரசின் சிந்தனையாகும் என்றார்.

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/

யாரை கேட்டு இந்தாள் இப்படி உசுப்பேத்துகிறார்.

இவர் சொல்லிப்போட்டு போடுவார் வாங்கிறது யார்?

புலிகள் இருந்த காலத்தில் இப்படி சொல்லி சொல்லியே கொஞ்சபேருக்கு பிழைப்பு போனது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.மனச்சாட்சி ஒன்று இருந்தால் போதுமானது.இவரையும், மனோ கணேசனையும் தவிர யாரும் தமிழர்களுக்கு நடைபெறும் அட்டூளியங்களை வெளிப்படையாக கூறியதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டகல்ஸ் .. கருணா.. போன்றவர்களை சிங்களன் உருவாக்குகிறான் . என்றால் உங்களாலும் பலரை அங்கிட்டு உருவாக்க முடியும்.. லாஜிக்கு அதான்.. காசு காசு விட்டெறிந்தால் பலரை உருவாக்கலாம்.. ஏற்கனவே சொறிலங்காவில் .. பண வீக்கம் .. கைவீக்கம் கால் வீக்கம் என்று கிடக்கு..சும்மா நீதி.. நேர்மை.. நியாயம்.. என இருக்க கூடாது.. சைடில் கில்மா வேலைகளும் நடக்கணும்..

டிஸ்கி:

நான் இவரை சொல்லவில்லை .. இவர் ஆரம்பகாலத்தில் இருந்தே நல்ல மனிதனா தெரிகிறார்... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.