Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைவர்ஸுக்குப் பிறகு ஆண்கள் சுதந்திரப் பறவைகளாக உணர்கின்றனர்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணம்.. இலக்கியம் தொடர்பா.. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா..! நமக்கு வேணாம் உந்த ரீச்சர் வேல..!

விட்டா நானே உலகத்தில உள்ள பெண்களை எல்லாம் நாசமாக்கிறன்னு சொல்லுவீங்க.. அவ்வளவு பெரிய ஆணாதிக்க வெறியன்னும் சொல்லுவீங்க..! பொண்ணுங்களுக்கு வாய்க்க விரலவிட்டா கூட கடிக்க வராதில்ல.. பால் குடிங்க..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • Replies 59
  • Views 5.7k
  • Created
  • Last Reply

பூவுலகின் மூத்த மும்மொழியாம் தமிழதன் இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில் உற்றுநோக்கும்போது பலர்பால் என்றே வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது.. :D நெடுக்சின் ஆணதிகாரத் தோரணை ஆண்பாலாகக் காட்டினாலும், அதற்காக இலக்கணத்தை மாற்ற முடியாதல்லவா??!! :lol:

நினைக்கிறான், எழுதுகிறான் என்பனவே ஆண்பாலாக வருவன. :D

அண்ணா, நினைக்கிறோம் எழுதுகிறோம் என்பது சாதாரணமாக பலர்பால் என்று தான் நான் சொல்லியிருக்கிறன்.

ஆனால் இந்த திரியில் நெடுக்ஸ் அண்ணா ஆண்பாலை மையமாக வைத்து கருத்து எழுதியுள்ளார்.

நினைக்கிறான், எழுதுகிறான் என்பன ஆண்பால் தான். ஆனால் ஒருமை.

பல ஆண்கள் நினைக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை ஆண்பால் இல்லை பலர்பால் என்று உங்களால் கூறமுடியுமா? இல்லை தானே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, நினைக்கிறோம் எழுதுகிறோம் என்பது சாதாரணமாக பலர்பால் என்று தான் நான் சொல்லியிருக்கிறன்.

ஆனால் இந்த திரியில் நெடுக்ஸ் அண்ணா ஆண்பாலை மையமாக வைத்து கருத்து எழுதியுள்ளார்.

நினைக்கிறான், எழுதுகிறான் என்பன ஆண்பால் தான். ஆனால் ஒருமை.

பல ஆண்கள் நினைக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை ஆண்பால் இல்லை பலர்பால் என்று உங்களால் கூறமுடியுமா? இல்லை தானே? :lol:

பல ஆண்களாக இருந்தாலும், பல பெண்களாக இருந்தாலும் அது பலர்பால் என்றுதான் வரும்.. ஆண்பால்கள் என்று வராது.. :D

தாலி அணிகிறோம் என்றால் சொற்களை வைத்து பெண்கள் என்று எடைபோட முடியாது. சொல்லப்பட்டதின் கருவைவைத்தே அவ்வாறு எடைபோடலாம். இவ்வாறு பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டது எமது தமிழ் மொழியாகும். :icon_idea:

பல ஆண்களாக இருந்தாலும், பல பெண்களாக இருந்தாலும் அது பலர்பால் என்றுதான் வரும்.. ஆண்பால்கள் என்று வராது.. :D

ஆம் அண்ணா,

ஆண்கள் பலர் சேர்ந்தாலும் பலர்பால் தான். (உயர்திணை பன்மை = பலர்பால் )

ஆண்களை குறிப்பிட்டு கருத்து எழுதுகிறார் என்பதை சொல்ல வந்து அதை ஆண்பாலில் முடித்து விட்டேன். தவறு என்பக்கம் தான். :) சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. :)

Edited by காதல்

தாலி அணிகிறோம் என்றால் சொற்களை வைத்து பெண்கள் என்று எடைபோட முடியாது. சொல்லப்பட்டதின் கருவைவைத்தே அவ்வாறு எடைபோடலாம். இவ்வாறு பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டது எமது தமிழ் மொழியாகும். :icon_idea:

இதை தான் நானும் சொல்ல வந்தன். நெடுக்ஸ் அண்ணாவின் கருத்துகளின் கருவை வைத்து தான் அவர் ஆண்களை மையமாக வைத்து கருத்து எழுதுகிறார் என்று சொல்ல வந்தன். :icon_idea:

[size=5]விவாகரத்து எடுத்தாலும் முன்னை நாள் மனைவியின் தொடர்புகளை அறிய முற்படுகிறவன்,அப்படி ஒரு நிலையில் ஒரு தொடர்பு இருந்தால் போதும் தொலைபேசி மிரட்டல்கள்,திட்டமிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தல் போன்றவற்றை சிலர் செய்கிறார்கள்.சிலர் மனைவியிடமிருந்து விலகினாலும் பிள்ளைகளின் படிப்பை பல்கலைகழகம் வரை கவனிக்கிறார்கள்.ஒரு சிலர் மற்றவர் பார்வையில் ஒப்பாரி வைப்பார்கள்,ஆனால் எப்படியோ நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.ஒரு விவாகரத்துக்கு ஆண் காரணமாகவிருக்கலாம் அல்லது பெண் காரணமாகவிருக்கலாம்.இருந்தாலும் பெண் மற்றவர்களுடன் பழக கொஞ்சம் பயப்படுவாள் ஏனெனில் சமுதாயம் என்ன சொல்லுமோ....(எல்லாரும் அல்ல)இந்த ஆண் மட்டும் தெரிந்தவர்களிடமெல்லாம் ஒப்பாரி வப்பார்கள்.விவாகரத்து பெற்றவர்களின் ஒப்பாரியை கேட்டு ஆணாகிலும் பெண்ணாகிலும் உங்கள் வீட்டில் மட்டும் அடைக்கலம் கொடுத்து விடாதீர்கள். ஒன்று இவர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்காமல் முடிவெடுத்தவர்கள்.அடுத்தது உங்கள் குடும்பமும் நாசம் தான்.

ஒரு அப்பா இரவுவேலை செய்கிறவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை.கை நிறைய சம்பளம். கடந்த பதினந்து வருடமாக பிள்ளைகளுக்காக போலி வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.பதினைந்து வருடங்களுக்கு முன்பே மனைவியின் கள்ள தொடர்பை அறிந்து கண்டித்துள்ளார்.அழுது கெஞ்சியுள்ளார்.அவரோ அதை நிறுத்தவில்லை.மூத்தது பெண்.அவள் பட்டபடிப்பை முடித்து திருமணமாகும் வரை பொறுத்திருந்தவர்.அண்மையில் விவாகரத்து பெற்றுள்ளார்.இவர் மதிப்புக்குரிய அப்பா என்று நான் நினைக்கிறேன். ஆனால் இது பற்றி தெரிந்தவர்கள் இவருக்கு வழங்கிய பட்டம் (பொண்ணையன்)அண்மையில் கொழும்பில் திருமணமாகி பல இரவை முடித்துகொண்ட தம்பதியினர் கணவரின் மூலம் வதிவிட உரிமையை பெற்று கனடா வந்து தனது உண்மையான காதலனுடன் சேர்ந்து கொண்டார்.கணவர் வதிவிட உரிமை சட்டத்தின் பிரகாரம் பத்து வருடங்களுக்கு இவரை பொருளாதார ரீதியில் பாதுகாக்க வேண்டும்.தற்போது அவர் அதை விலக்கி கொண்டார்.இவர் இப்போ நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ள பட்டு விட்டார்.இப்படி பல வழிகளில் ஆணும் பெண்ணும் துஸ்பிரயோகங்களை செய்கிறார்கள்.ஆகவே இதில் யார் பெரிது சிறிது என்று நினைக்காமல் இக்கருத்துகளத்தில் கிடைக்கும் அனுபவங்களை வைத்து சீரான குடும்ப வாழ்வில் எமது பிள்ளைகளை பாதுகாப்போம் என உறுதிகொள்ளுங்கள்[/size]

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இந்த திரியை வந்து வாசித்து விட்டு செல்கிறோம்.

ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருப்பது கடினம். இப்படி சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!

* இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.

* ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

* நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.

* நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக ‘காதல் செய்கிறேன்’ என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

* நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.

மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

தாயின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுற ஆண்.. ஏன் மனைவியின் புத்திமதியை ஏற்றிக் கொள்ளுறான் இல்லை. அதற்கு காரணம்.. அவன் தாயை நம்பும் அளவிற்கு மனைவி மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அவள் அவனோட நடந்துகொள்ளேல்ல.. அவனைப் புரிஞ்சு கொள்ள முயலல்ல என்று தானே.

இதுக்கு பதில் இந்த திரியில் இருக்கு. :)

http://www.yarl.com/...t=0#entry775896

இது யார் தப்பு.. ஆணினதா... பெண்ணினதா..???! பெண்கள் தங்கள் தந்தை.. சகோதர்கள் போல.. கணவன்.. காதலனை அணுகினா.. என்னா குறைஞ்சா போயிடுவினம்..! ஏன் அவனோட மல்லுக்கட்டினம்.. அநாவசியமா. வெறுப்பை ஏத்தினம். கடுப்பை வளர்க்கினம்...! இவற்றை களைஞ்சா ஆண் - பெண் நல்லுறவு நல்லா நீடிக்குமே. எந்த ஒரு ஆணும் அன்பான மனைவியை விட்டிட்டு ஓடமாட்டான். அவனுக்கு அப்படி ஒரு மனசே வராது..! அப்படி ஓடிறானுன்னா... அவன் சாதாரண மனிதனே இல்ல. எந்த மகனாவது அன்பு காட்டும் அம்மாவை விட்டிட்டு ஓடுவானா..???! :):icon_idea:

ஆண்கள் தங்கள் தாய் சகோதரிகள் போல் மனைவி, காதலிகளை அணுகினால் என்ன குறைந்தா போய் விடுவினம்? :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பதில் இந்த திரியில் இருக்கு. :)

http://www.yarl.com/...t=0#entry775896

ஆண்கள் தங்கள் தாய் சகோதரிகள் போல் மனைவி, காதலிகளை அணுகினால் என்ன குறைந்தா போய் விடுவினம்? :)

தங்கள் வீட்டு உறவுகள் போல் எங்கயோ கிடந்து வந்தவளை அதாவது மனைவியை,காதலியை அணுகினால் அவர்களின் கௌரவம் என்னாவது.....ம்ம்ம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.