Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து

அவசியம் வாக்களியுங்கள்!

ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம்.

அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்

http://www.webeelam.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களை http://www.webeelam.com/

இணையத்தளத்தில் தெரிவிக்கலாம்

காலம் தாழ்த்தக்கூடாது

இந்த நான்கு வருடத்தில் துரோகிகள் அதிகமானதும், நாட்டுப்பற்றாளர்கள், போராளிகள், தளபதிகள், பொதுமக்கள், என பலரை இழந்ததும் தான் மிச்சம்.

வேறு எந்த பலனும் தமிழ் மக்களுக்கு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

75 வீதமானமக்கள் தமிழீழமக்களை காப்பதர்க்காக தமிழீழவிடுதலைப்புலிகள் போரைதுவங்கவேண்டும் என கருதுகின்றனர்

www.webeelam.com

தம்பி வாசன் மிச்ச 25 வீதமும் ஏன் தலைகீழா நிக்குதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வாக்களித்தவுடன் புலிகள் உடன போரை தொடங்க போகினம். உங்கட கட்டளையை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கினம்.

சிறுபிள்ளைத்தனம்.

சற்று உலகத்தை பாருங்கள்.

சர்வதேசமும் இலங்கையரசும் என்ன செய்கின்றன?

வணக்கம்...

இங்கு இருந்து கொண்டு ..அரசியல் பேசுவது பிடிக்காது இருந்தாலும்....

இன்றைய கால கட்டத்தில்..சர்வதேசத்தின் அழுத்தங்கள் பற்றி சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கும் அதே நேரத்தில்..

நாட்டில் நடக்கும் படு கொலைகளை பார்க்கும் போது..வீணாக இப்படி செத்துமடிவதை விட சண்டை தொடங்குவது மேல் எனத்தோன்றுகின்றது.....இல்லை எனில் பேச்சுவார்த்தை முடியும் முன்னர் தமிழீழத்தில் தமிழ் மக்கள் இருப்பார்களா தெரியாது...அதன்பின்னர் பேச்சுவார்த்தையால் என்ன பலன்????

அத்துடன் சர்வதேசத்தின் அழுத்தம்....தமிழன் குரல்வளையைத்தான் கூடுதலாக நசுக்குகின்றது.....

இது எனது கருத்து..சரியா..தவறா ..? நீங்கள்தான் சொல்ல வேண்டும் :arrow:

நன்றி

கௌரிபாலன்

உங்கள் கருத்து சரியா தப்பா என்று நீங்கள் தான் சீர்து}க்கிப் பார்க்க வேண்டும். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்கு சுதந்திரம் உங்களுக்கு உண்டு.

அதுபோல் தற்போதைய நிலையில் எது வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை எம்மைவிட தாயகத்தில் வாழும் சொந்தங்களுக்கே உண்டு. ஏனெனில் முதலில் நன்மையடைவதும் பாதிக்கப்படுவதும் அவர்கள் தான்

அதுபோல் தற்போதைய நிலையில் எது வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை எம்மைவிட தாயகத்தில் வாழும் சொந்தங்களுக்கே உண்டு. ஏனெனில் முதலில் நன்மையடைவதும் பாதிக்கப்படுவதும் அவர்கள் தான்

அடியே என்ட செல்லம் வசம்பு

அந்த மக்கள் தான் போராட்டத்தில் தற்போது வலிய வந்து இனைகிறார்களாம் தெரியாதோ?

அந்த மக்கள் தான் சொல்ல்கிறார்கள் அடிக்க சொல்லி

மக்கள் ஆதராவு இல்லவிட்டால் ஒரு கன்னிவெடியும் வெடிகாதுடி வென்னைய்.............

இது என்ன எண்டால் அண்ணன் எப்ப போவன் தின்னை எப்ப காலியாகும் என்று காத்து இருக்கிற மாதிரி ஒரு கருத்து.......

இது ஒரு கருத்துக்கணிப்பு. இதைப் பார்த்துவிட்டு விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்க மாட்டார்கள். ஆனால் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது, அல்லவா? பெரும்பான்மையான மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்று தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நேற்று நடந்த நிலவரத்தில் சொல்லப்பட்ட கருத்து ஒன்று:

சிங்களத்தரப்பும், போராட்டத்திற்கு எதிரா ஏனைய சக்திகளும் இதுவரை காலமும் செய்து வந்த பிரச்சாரம் புலிகள் தான் யுத்தத்தை விரும்புகிறார்கள், புலிகள் தான் கடந்த காலத்தில் போச்சுக்களை குளப்பி யுத்தத்தை ஆரம்பித்தார்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக.

எனவே இந்த முறை மக்களின் எழுச்சிகள், அவர்களிடம் போச்சுக்கள் மூலம் தீர்வை பெறமுடியாது என்று நம்பிக்கையிழந்து செலும் மாற்றங்களை என்பவற்றை சர்வதேசம் அவதானித்து அறிந்து கொள்ளவேணும்.

நடந்து முடிந்தவற்றை இருதரப்பாரும் சொல்லும் போது அதை அவர்களுடைய பிரச்சாரத்திலிருந்து வேறுபடுத்திப்பார்பதில் 3ஆம் தரப்பிற்கு சிக்கல்கள் இருக்கு. ஆனால் நிகழ்காலத்தில் நடப்பவற்றை 3ஆம் தரப்பு குளப்பமின்றி அவதானித்து முடிவுகளிற்கு வருவதற்கு சந்தர்பமாக இந்த பொறுமையிருக்கிறது.

எங்கள் எல்லோருக்கும் சமாதானம்தான் வேண்டும். எந்த ஒரு மனிதனும் கொல்லப்படாத சமாதானம் வேண்டும். ஆனால் இப்பொழுது என்ன நடக்கின்றது. தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் தமிழினத்தை காப்பாற்றவும் தமிழீழத்தில் சமாதானத்தை கொண்டு வரவும் யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். இதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

www.webeelam.com இணயத்தில் மீண்டும் சுதந்திரப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று வாக்களிப்பவர்களும் அப்படித்தான் நினைப்பார்கள்.

தம்பி ராசா இளையதம்பி தமிழ்நாடு என்னத்திலை இருந்து விடுதலை பெற வேண்டும்.

சினிமாவிலை இருந்தா?

அரசியல்வாதிகளிடமிருந்தா?

இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக வேண்டும்

அரசியல்வாதிகள் சினிமா எல்லாம் தமிழ்நாட்டின் உள்விடயம்

இளையதம்பி, நீங்கள் தமிழ்நாட்டு தமிழரா இல்லை ஈழத்தமிழரா?

இளையதம்பி, நீங்கள் தமிழ்நாட்டு தமிழரா இல்லை ஈழத்தமிழரா?

தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்கள்...??? அவருக்கு சமாதி... சா.... தூபி கட்டப்போறீங்களா....??? ஆ..ஆ..ஆ :evil:

எது தேவையோ அதைக் கட்டுவம் :mrgreen:

எது தேவையோ அதைக் கட்டுவம் :mrgreen:

தெளிவாகத்தான் இருக்கிறீங்கள்... :lol:

எந்த நாடாக இருந்தால் என்ன? இரண்டுமே தமிழரின் தாயகம். என்னை "தமிழன்" என்று அடையாளப்படுத்துவதையே விரும்புகிறேன்.

இளையதம்பி, இரண்டும் தமிழரின் தாயகம் என்று தெரியும். நீர் தமிழன் இல்லை என்றா கேட்டேன்? தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்று கூறுவதற்கு எங்கிருந்து உரிமை பெற்றீர்கள்?

நீர் தமிழ்நாட்டுத் தமிழனா?

இளையதம்பி, இரண்டும் தமிழரின் தாயகம் என்று தெரியும். நீர் தமிழன் இல்லை என்றா கேட்டேன்? தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்று கூறுவதற்கு எங்கிருந்து உரிமை பெற்றீர்கள்?

நீர் தமிழ்நாட்டுத் தமிழனா?

:P :P :P

தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற வேண்டாம் எங்கள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றால் போதும்( அதுவும் அடங்காபிடாரி ஜெயலலிதாவிடம் முதல்)

தமிழீழம் சிறிலங்காவிடம் இருந்தும் தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும். இதை சொல்வதற்கு உலகின் எட்டுக் கோடி தமிழர்களுக்கும் உரிமை உண்டு. என் இனம் விடுதலை பெற வேண்டும் என்று விரும்புவதற்கு நான் யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதிகள் இளைக்கப்பட்டால் அங்கிருந்து குரல் வரவேண்டும். அல்லது மறைமுக உணர்வுகளாவது தென்பட வேண்டும். தமக்குள்ள அநீதிகளை எதிர்த்து போராடும் அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தெம்பு இருக்கின்றது என நினைக்கின்றேன்.

உப்படியான கருத்துக்கள் தான் இந்தியா இன்னமும் ஈழப்போராட்டத்தை அச்சத்துடன் பார்ப்பதற்கு காரணமாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். ஆனால் சும்மா இந்த நேரங்களில் உப்படியான கதைகள் தான் பிரச்சனைகளைக் கொடுக்கின்றன.

இளையதம்பி,

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகப் பிரதேசங்கள் என்பதால் அல்ல. போராட்டம் ஆரம்பித்தது முதல் அது வழர்ந்து தேசியவிடுதலைப் போராட்டமாக பரிணாமம் பெறக் காரணம் மக்கள் ஆதரவு. பூரண மக்கள் ஆதரவிற்கு காரணம் அவர்களின் ஒன்றுபட்ட அனுபவங்கள். அதாவது திட்டமிட்ட குடியேற்றங்கள், மொழியுரிமைப் பறிப்புகள், இனரீதியான அடக்குமுறைகள், சம உரிமையற்ற ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள். இவற்றை ஜனநாயகரீதியாக தட்டிக்கேட்ட பொழுது வன்முறையாக கிடைத்த பதில்கள் கட்டவிள்த்துவிடப்பட்ட இனபடுகொலைகள்.

உலகத்திலுள்ள இனங்களெல்லாம் இனம் அடிப்படையே காரணமாக வைத்து தமது தாயகபிரதேசங்களிற்கு விடுதலை பெற வெளிக்கிட்டால் நிலமை என்ன?

எமது போராட்டம் ஆரம்பித்தது சிங்கள இனவாதத்தினால் அதற்கு தீர்வு தான் வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

பொரும்பான்மை சிங்கள இனவாதம் தமிழருக்கு சம உரிமை கொடுத்து மரியாதையோடு இணைந்து வாழும் பக்குவத்தை அடையவில்லை. அதாவது சிங்கள இனவாதத்திலிருந்து அடக்கு முறைகளிலிருந்து விடுவித்து சுயமான ஆட்சியில் மரியாதையாக வாழத்தான் போராட்டம் நடக்கிறது. இனரீதியாக எமது தாயகம் ஆனபடியால் பிரிந்து செல்ல வேண்டும் என்ற மிதவாத நோக்கோடு அல்ல.

எந்தப்பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் (இராணுவரீதியிலே அல்லது பேச்சுவார்த்தையிலே) எமது ஆட்சியில் வரவேண்டும் என்பது எமது தாயகக் கோட்பாட்டிலிருந்து நியாயப்படுத்தப்படுகிறது.

இனரீதியாக மொழி அடிப்படயில் கலாச்சாரரீதியில் எமக்கு தனித்துவம் இருக்கு நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல நாம் உரிமைகோரும் பகுதிகளின் பூர்வீகர்கள் என்ற வாதங்கள் வருகிறது.

நீர் பிறநாட்டவருக்கு ஈழத்தமிழரின் போராட்டத்தை விளங்கப்படுத்தி நியாயப்படுத்தும் போது மொட்டையாக எங்கடை தாயகத்தை நாங்கள் அடிச்சு பிடிக்க போராட்டம் நடத்துறம் எண்டால் உம்மை ஒரு பிற்போக்குவாதியாக மிதவாதியாக மாத்திரமல்ல ஒரு பயங்கரவாதியாக கூடப்பார்ப்பார்கள்.

எனவே தமிழ்நாட்டு இந்தியாவிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று சொல்ல உலகத்தமிழன் என்ற சார்பின் உரிமையிருக்கு என்று பினாத்தாதையும். என்இனம் விடுதலை பெறவேண்டும் என்று மொட்டையாக உளறாதையும். யார் என்னத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கொஞ்சம் சிந்தியும்.

மீட்டுத் தருமா???

இந்திய மண்ணின் மானத்தைக் காக்க

கார்கிலுக்குப் புறப்பட்டான்

காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன்

தடுத்தான் அவனது தம்பி

இனமான இளவேள்

அண்ணா! நீ புரியும் போர்

மீட்டுத் தருமா

நம் தமிழர் இழந்த

தேவிகுளம், பீர்மேடு,

வேங்கட மலை, கோலார் தங்கவயல்

கச்ச தீவு போன்றவற்றை

ஏன் நம்மின மக்களின்

காவிரியாற்று நீரையாவது

சிந்திக்கத் தொடங்கினான்

கார்கில் வீரன்.

-இளங்கோ (பிரித்தானியா)

நன்றி www.webeelam.com கவிதைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.