Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தீஸ்கர் வனப்பகுதியில் கடும் சண்டை - 22 மாவோயிஸ்டுகள் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]maoist-30612-150.jpg[/size]

[size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நக்சலைட்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர்.[/size]

[size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்குள்ள பாஸ்தர் பிராந்தியம், பிஜப்பூர் மாவட்டத்தில், ஜாகர்குண்டா மற்றும் பசகுடா பகுதிகளில் சில்ஜெர் வனப்பகுதிகளில், நக்சலைட்கள் தேடுதல் வேட்டையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த 300 பேர், நேற்று முன்தினம் இரவில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.[/size]

[size=4]இந்த சண்டையில், நக்சலைட்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த ஆறு பேர் காயம் அடைந்தனர். கொல்லப்பட்ட நக்சலைட்களில் 17 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், மூன்று பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்கிறது. அத்துடன் நக்சலைட்களுக்கு எதிரான வேட்டையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சண்டையில் காயமடைந்த இரண்டு நக்சலைட்களும் பிடிபட்டனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம், ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.[/size]

[size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டில் நக்சலைட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இது. "போலீசாருடன் நடந்த சண்டையில், பிஜப்பூர் - தந்தேவாடா பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த, இரண்டு பிரபல நக்சல் தலைவர்களும் கொல்லப்பட்டனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த ஆறு பேருக்கு புல்லட் பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவச் சிகிச்சைக்காக ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது' என, மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.[/size]

[size=4]தற்போது தாக்குதல் நடந்த இதே பகுதியில் தான், 2010ம் ஆண்டு ஏப்ரலில், நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 75 பேர் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரடுமுரடான பகுதிதாக்குதல் நடந்த பகுதி, கரடு முரடான மலைப்பகுதி என்பதாலும், இந்தப் பகுதியில் நக்சலைட்கள் பெருமளவில் உள்ளனர் என்பதாலும், ஒரு டி.ஐ.ஜி., கமாண்டன்ட் அந்தஸ்து அதிகாரிகள் இரண்டு பேர், மாநில போலீசைச் சேர்ந்த ஒரு கூடுதல் எஸ்.பி., ஆகியோர், நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை வகிக்க நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]ஜாகர்குண்டா, சிந்தைனர், பசகுடா என, மூன்று முனைகளில் இருந்து நக்சலைட்களுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கை தொடுக்கப்பட்டது. இரண்டு ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பாஸ்தர் பிராந்தியத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால் மேனனை, மாவோயிஸ்ட்கள் கடத்தி, விடுவித்த பின்னர் நடந்த நக்சலைட்களுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கை இது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எந்த பொது மக்களைப்போட்டுத்தள்ளினார்களோ??? :( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எந்த பொது மக்களைப்போட்டுத்தள்ளினார்களோ??? :( :( :(

உண்மை சகோதரா !

அப்படி பொய் சொல்லுவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல இவர்களின் புளுகுகள் ஏற்க்கனவே நிறைய தடவை கேட்டிருக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை மாவேஸ்டகளின் போர் புலிகளை ஒத்ததாகவும் அங்கிட்டு பல ஆவணங்கள் கண்டு எடுக்க பட்டதாகவும் சொல்லபடவில்லையே அதை நினைத்து சந்தோச படுங்கோ.. :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை மாவேஸ்டகளின் போர் புலிகளை ஒத்ததாகவும் அங்கிட்டு பல ஆவணங்கள் கண்டு எடுக்க பட்டதாகவும் சொல்லபடவில்லையே அதை நினைத்து சந்தோச படுங்கோ.. :rolleyes: :rolleyes:

தோழர் புரட்சி,

சொல்லி இருப்பார்கள் , ஆனால் சொல்லும் அளவுக்கு மாவோஸ்ட்க்கள் என்னும் வளரவில்லை ....

உண்மையில் படுகொலை செய்யப்பட்டது மாவோ போராளிகள் என்றால் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

இந்தியக் காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.