Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை.

Featured Replies

பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை.

07 ஜூலை 2012

சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர்

'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார்.

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன்.

சமாதான முயற்சிக்கு அவரிடம் கோரிக்கை வைத்தேன். தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்காத நிலையிலும் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தேன்.

ஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சி வரை சென்று இரண்டு நாட்கள் காத்திருந்தேன். ஆனால் பிரபாகரனை சந்திக்க இயலவில்லை. அவரை சந்தித்திருந்தால் சமாதான முயற்சி வெற்றி பெற்றிருக்க்க்கூடும், பேரழிவும் தடுக்கப்பட்டிருக்கும்.

விடுதலை என்பது மிகவும் முக்கியமானது. அதை பெறுவதற்கு யுத்தி, சக்தி, அமைதி வேண்டும். முரட்டு பிடிவாதத்தினால் போரை வெல்ல முடியாது. தந்திர யுத்திகளால் தான் வெல்ல முடியும்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழ் வரலாற்றில் பெரிய கறுப்பு தினம். மனிதத் தன்மை அற்ற விஷயம். இந்திய அரசு நினைத்திருந்தால் பேரழிவை தடுத்திருக்க முடியும்.

அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்திலேயே கண்ணும் கருத்து கொண்டுள்ளார்கள். மக்கள் பற்றிய சிந்தனை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

போருக்கு பிறகு அகதிகளாக இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னேன். தமிழர்கள் அந்த நிலையிலும் பண்பாட்டுடன் நடந்துகொண்டது வியக்க வைத்தது.

இனி வரும் காலங்களிலாவது, தமிழர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்,' என்றார்

  • கருத்துக்கள உறவுகள்

தந்திர யுத்திகளால் தான் வெல்ல முடியும்.

ஒரு சாமியார் இப்படி சொல்லக் கூடாதே....அப்ப இவர் சாமியார் அல்ல ....வேறு ...

[size=5]அந்த நேரத்தில் இரசாயான ஆயுதங்களுடன் தயாராக இருந்த இந்திய, சிங்கள அரச இனப்படுகொலையாளர்களுக்கு அங்கு தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா என்று தெரிய வேண்டிய அவசியம் இருந்தது!

அதை அறிய இந்த புகழ்விரும்பிச் சாமியார் சொறி சொறி ரவிஷங்கரை (அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ) பயன்படுத்த இந்திய அரச பயங்கரவாதிகள் விரும்பியிருந்தனர். காட்டுமிராண்டிகளின் பிரதான குறிக்கோள் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்வது! தமிழ் மக்கள் மீது இந்தியக் காட்டுமிராண்டிகளுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது இன்றுவரை மீண்டும், மீண்டும் பல நூறுதடவைகள் நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்த சொறி சொறி ரவிசங்கருக்கு ஈழத் தமிழர் மீது உண்மையான அக்கறையிருந்தால், அதன் பின்னர் ஈழத்தமிழருக்காக என்னவெல்லாம் செய்தார் என்று பட்டியல் போடட்டும்! ஓரிரு தடவை சந்தித்ததால் ஒன்றும் ஆகிவிடவில்லை!

சாமியார் வேஷம் போட்டிருப்பதால் ஒருசில உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை அவருக்கு உள்ளது நன்கு விளங்குகிறது![/size]

கடவுளை என்னெண்டு சந்திக்கின்றது .

சந்திக்க வேண்டின் உன் அனுமதியுடன் சென்றிருந்தால் சந்தித்திருப்பார். இதில் ஏதோ குளறுபடி இருப்பதாகவே படுகிறது.

அவர் சாமியார் அல்ல வாழும் கலை நிறுவனர். இறுதி யுத்த நேரத்தில் அதை தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் வந்திருந்தார். பல முயற்சிகளை எடுத்து இருந்தார். சுவிஸ் ஆஸ்ரியா பாராளுமன்றங்களுக்கு சென்று நிலமைய எடுத்து விளக்கினார். நான் கூட அவருடன் சென்று இருந்தேன். அவர் அந்த நேரத்தில் கூட இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டினார். புலம் பெயர் தமிழர்கள் இந்தியாவை நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். உண்மையில் அவர் தமிழர் மீது கரிசனை கொண்டிருந்தார். எல்லா சாமியார்களும் கெட்டவர்கள் கிடையாது. எல்லா பாதிரியார்களும் (கஸ்பர்) நல்லவர்கள் கிடையாது. கஸ்பர் கூடவும் நான் பழகி இருக்குறேன் .

கடவுளை என்னெண்டு சந்திக்கின்றது .

போதையில் தாண்.

இவர் தற்போது முகாம்கள் பல அமைத்து மன நலம் பாதித்துள்ளோரை வாழும் கலை மூலம் குணப்படுத்தியுள்ளார்.பாதிக்கப்பட்ட பல பெண்களை மீண்டும் நரககலோகத்திலிருந்து மீட்டு வாழும் கலை பயிற்சியின் மூலம் சாதாரண வாழ்க்கை வாழப்பழக்கியுள்ளார். நிழலி குறிப்பிட்ட அவரின் செவ்வியில் தமிழ் நாட்டு அரசியலை பாரதூரமாக சாடியிருந்தார்.அதே போல ராஜபக்ஸேயையும் கொடுத்தவாக்கை காப்பாற்றவில்லையென்றும் கூறியிருந்தார்.இதைவிட திரு சிறீதரன் பா.உ,திரு உருத்திரகுமார் அவர்கள் மற்றும் மலேசிய துணைப்பிரதமர் இன்னும் தமிழக தலைவர்கள் பேசியிருந்தார்கள்.இந்த விழா இம்முறை 3000 தமிழ் பேசும் மக்களுக்கு ஈழத்துக்கு அடுத்தபடியென்ன என்பதை வெகு தெளிவாக கூறியிருந்தது.

http://www.youtube.com/results?search_query=fetna+2012&oq=fetna&gs_l=youtube.1.0.0l6j0i10l4.2865.5337.0.8871.5.5.0.0.0.0.307.897.2j1j1j1.5.0...0.0.Ja5ssaK2R9s

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை என்னெண்டு சந்திக்கின்றது .

அதாகப்பட்டது மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் விரதம் இருக்க வேண்டும். இது முதற்படி. :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட் கூலியின் வேதனம் அவன் ஒரு வேளைச் சேற்றுக்கு வழி சொல்ல முடியாத போது, இந்த ஆன்மீக வழிகாட்டிகளின் கூலி மட்டும் பல ஆயிரங்களாக இருக்கின்றது. பணத்தேடல்களுக்கு எத்தனை முகமூடிகள்!

அவர் சாமியார் அல்ல வாழும் கலை நிறுவனர். இறுதி யுத்த நேரத்தில் அதை தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் வந்திருந்தார். பல முயற்சிகளை எடுத்து இருந்தார். சுவிஸ் ஆஸ்ரியா பாராளுமன்றங்களுக்கு சென்று நிலமைய எடுத்து விளக்கினார். நான் கூட அவருடன் சென்று இருந்தேன். அவர் அந்த நேரத்தில் கூட இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டினார். புலம் பெயர் தமிழர்கள் இந்தியாவை நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். உண்மையில் அவர் தமிழர் மீது கரிசனை கொண்டிருந்தார். எல்லா சாமியார்களும் கெட்டவர்கள் கிடையாது. எல்லா பாதிரியார்களும் (கஸ்பர்) நல்லவர்கள் கிடையாது. கஸ்பர் கூடவும் நான் பழகி இருக்குறேன் .

இதை அறிவோம்! உங்கள் கருத்து இவரின் போலி ஈழத்தமிழர் அனுதாபத்தை மேலும் வலுபடுத்துகிறது!

இக்கட்டான நிலையில் ஊடுருவி விஷயம் அறிய வேண்டுமென்றால் கொஞ்சம் ஈழத் தமிழருக்கு சார்பாக பேசவேண்டும், யாருக்கு ஆதரவாக உளவு பார்கிறாரோ, தேவை ஏற்படின் அவர்களையும் சாட வேண்டும்! அந்த நேரத்தில் மேற்குலகம் என்ன செய்யும் என்பது தமிழினப் படுகொலைகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும், வழிநடத்தும் இந்திய அரச பயங்கரவாதிகளுக்கு தேவையான விடயம்! எனவே அதற்கு இவர் பயன் படுத்தப்பட்டார் என்பதே உண்மை. அதனால் தான் அவர் மேலை நாடுகளுக்கும், கிளிநொச்சிக்கும் சென்றார். நீங்களும் அறியாமையால் உடன் சென்றுள்ளீர்கள்!

அவர் (காட்டுமிராண்டி) இந்தியாவை குறை சொல்வது, (காட்டுமிராண்டி) இந்திய மண்ணில் செய்திருக்க வேண்டும்! (காட்டுமிராண்டி) இந்திய மக்களிடம் இந்திய அரசின் போலித் தன்மையை உடைத்திருக்க வேண்டும். பெரும் பக்தர்களை உடைய இவர் நினைத்திருந்தால் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாரிய இனப் படுகொலைகளை தடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு "புலம் பெயர் தமிழர் இந்தியாவுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்" என்பது பொருத்தமற்றது. புலம் பெயர் தமிழரை இந்திய அரச பயங்கரவாதிகளை நோக்கி தள்ளும் ஒரு கபட முயற்சியும் அதில் உண்டு!

இவர் இன்னும் நித்தியானந்தா போல் மாறவில்லை! மாறமாட்டார் என்று நம்பலாம்! காரணம் இவர் இந்திய பயங்கரவாதிகளின் சந்தர்ப்ப கைக்கூலியாக இருக்கிறார்.இவர் சில நல்ல வேலைகளை தனது நாட்டில் செய்கிறார். அதற்காக நாம் ஏமாந்துவிடக் கூடாது! கூடப் போன நீங்கள் இன்று அவரிடம் தமிழினப் படுகொலைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை அவரது நாட்டில் ஏற்படுத்தக் கேளுங்கள்! சுயரூபம் தெரியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.