Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்களின் புரப்புரைகளை முறியடிப்பது எப்படி?- சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு கோத்தாபய விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GOTA-briefs.jpg

[size=4]புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

தியத்தலாவ இராணுவ முகாமில் நடத்தப்பட்ட இரண்டுநாள் செயலமர்வில் நேற்று, புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை முறியடிப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்பதற்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். [/size]

[size=4]

GOTA-briefs-diplomats1.jpg[/size]

[size=4]

GOTA-briefs-diplomats-2.jpg[/size]

[size=4]“தற்போது எல்லா சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டு, எல்லா வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

எவரும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் - எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயணம் செய்யலாம்.

53 ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வடக்கிற்கு பயணம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

அவர்கள் வடக்கு, கிழக்கில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத் திட்டங்களை பார்வையிட்டுள்ளனர்.

முன்னாள் புலிகளுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வின் முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொண்டுள்ளனர்.

பலாலிப் படை முகாம் தற்போது தேசிய பாதுகாப்புக்கான ஒரு நடவடிக்கையாக மட்டுமே பேணப்பட்டு வருகிறது.

அதனைச் சுற்றியுள்ள 17 கிராம அதிகாரி பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும் போது, வடக்கு,கிழக்கு இளைஞர்களும், முன்னாள் புலிகளும் சிறிலங்கா காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்கள் குடிமக்கள் பாதுகாப்புப் படையிலும் இணைந்து கொள்ள முடியும்.

தேசிய மற்றும் மாகாண அரசியலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் தவிர ஏனையவர்கள் எதிர்காலத்தில் உள்ளூர் சபைகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.

தற்போது பாடசாலைகள் கட்டப்பட்டுள்ளன அல்லது புனரமைக்கப்பட்டுள்ளன. வீதிக் கட்டமைப்புகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட தொடரூந்துப் பாதைகள், பாலங்கள் மீள அமைக்கப்படுகின்றன.

ஆனாலும், சிறியளவிலான அனைத்துலக ஊடகங்கள் மட்டும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை சுமந்து கொண்டு, சிறிலங்கா மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றன.

சிறிலங்காவின் சிறுபான்மை சமூகத்தின் அமைதியான, வளமான வாழ்வு பற்றி அனைத்துலக சமூகத்துக்கு அறியச் செய்ய வேண்டியது இராஜதந்திரிகளின் பொறுப்பு” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலமர்வில், புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் அனைத்துலக சமூகத்தை எவ்வாறு தவறாக வழிநடத்துகின்றனர் என்பது குறித்து சிறிலங்காவின் தேசிய புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு புலனாய்வு இணைப்பதிகாரி கேணல் ரி. சுரேஸ் சாலி ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120709106557[/size]

இவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையை முறியடிப்பதில் கண்ணும் கருத்துமாக நிற்கிறார்கள். ஆனால் எங்கடை ஆக்களோ விளையாட்டுப்போட்டி நடத்திக்கொண்டு இருக்கினம்.

அரசாங்கம் வேறு நாடுகளிடம் நடத்தும் போலி பரப்புரைகளை முறியடிக்க இனியாவது இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுப்போட்டி மற்றும் ஏனைய சமூக விடயங்களை பின்னொரு நாளிலும் செய்யலாம். ஆனால் அரசியல் நடவடிக்கைகள் உரிய காலப்பகுதிக்குள் செய்து முடிக்க வேண்டிய தேவை உள்ளது.

[size=4]“தற்போது எல்லா சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டு, எல்லா வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

எவரும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் - எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயணம் செய்யலாம்.[/size]

கொழும்பு யாழ் தரைவழி போக்குவரத்தின் போது இப்பொழுதும் ஓமந்தையில் பஸ்ஸினுள் வைத்து அடையாள அட்டையை பார்ப்பார்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அடையாள அட்டை வைத்திருக்காமல் பாஸ்போர்டை வைத்திருந்தால் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி பதிவு செய்து விட்டு மீண்டும் ஏற வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையை முறியடிப்பதில் கண்ணும் கருத்துமாக நிற்கிறார்கள். ஆனால் எங்கடை ஆக்களோ விளையாட்டுப்போட்டி நடத்திக்கொண்டு இருக்கினம்.

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :unsure:

அவர்களுக்கு strategy தெரியும். <_< :wub:

அசைலிகளும்,சும்மா இருப்பவர்களும் ,ஏதும் செய்திருந்தால் லிஸ்ட் போட்டு சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

ஸ்டூடன்ட் விசாவில் வந்தவர்களும்,தேர்தலில் ஓட்டு போட்டவர்களும் தான் இதை பற்றி கதைக்க அருகதை உள்ளவர்கள். ^_^:wub::icon_idea:

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :unsure:

அவர்களுக்கு strategy தெரியும். <_< :wub:

அசைலிகளும்,சும்மா இருப்பவர்களும் ,ஏதும் செய்திருந்தால் லிஸ்ட் போட்டு சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

ஸ்டூடன்ட் விசாவில் வந்தவர்களும்,தேர்தலில் ஓட்டு போட்டவர்களும் தான் இதை பற்றி கதைக்க அருகதை உள்ளவர்கள். ^_^:wub::icon_idea:

நான் நாடுகடந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பானவள் அல்ல. அவர்களுக்கு தான் என் ஆதரவு. ஆனால் நடப்பதை தான் சொன்னேன்.

அதுசரி ஒவ்வொரு திரியிலும் எதற்கு மாறி மாறி கருத்து வைக்கிறீர்கள்? :wub: ஏற்கனவே இதற்கான எனது பதில் மற்ற திரியில் உள்ளது. போய் வாசியுங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் எஸ்கேப் ...கேள்வி கேக்கிற வேலையே வேணாம்... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி ஒவ்வொரு திரியிலும் எதற்கு மாறி மாறி கருத்து வைக்கிறீர்கள்? :wub: ஏற்கனவே

இது கூடவா புரியவில்லை? வடிவா வாசிச்சு பாருங்கோ புரியும். :)

ரியூப் லைட்டா இருக்கிறிங்களே :rolleyes::lol::icon_idea:

நான் எஸ்கேப் ...கேள்வி கேக்கிற வேலையே வேணாம்... :lol:

i like this..

sorryக்கா... லைக் முடிஞ்சுது.. பிறகு மறக்காட்டி குத்துறன்.

இது கூடவா புரியவில்லை? வடிவா வாசிச்சு பாருங்கோ புரியும். :)

ரியூப் லைட்டா இருக்கிறிங்களே :rolleyes::lol::icon_idea:

:lol: :lol: :lol:

மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

மற்றவர்கள் வந்து சொல்லப்போற பதிலை நீங்கள் பகிடியாக சொல்லிக்காட்டிப்போட்டியள். நான் நினைச்சன் சீரியசாக எழுதினீங்கள் எண்டு. ஏனென்டால் ஒவ்வொரு திரியிலும் என்னை கேள்வி கேட்பவர்கள் அதிகரிச்சு போச்சு. :lol: :lol: அதாலை நீங்கள் சொன்னதையும் சீரியஸா எடுத்திட்டன். :icon_idea:

Edited by துளசி

நான் எஸ்கேப் ...கேள்வி கேக்கிற வேலையே வேணாம்... :lol:

:lol: :lol:

கேள்வி கேட்க வேணும் அக்கா. அப்ப தான் திரியை வாசிப்பவர்களுக்கும் கொஞ்சம் பயன் கிடைக்கும். :lol: கொஞ்சம் தலையிடியும் கிடைக்கும். :icon_idea:

[size=4]சிங்களம் எமது தாயக பயணங்கள் ஊடாக எம்மை மேலும் அழிக்க எமது பணத்தை எமது தரவுகளை பயன்படுத்துகின்றான். [/size]

[size=4]

53 ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வடக்கிற்கு பயணம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
[/size]
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உரிய தீர்வினை வழங்கினால் புலம்பெயர்ந்த தமிழர்களின் பரப்புரைகளை முறியடிக்கலாம். அதை விட்டு விட்டு தமிழர்களின் நிலங்களை அபகரித்து புத்தர் கோயிலைக் கட்டினால் புலம் பெயர்ந்த தமிழர்களின் பரப்புரைகள் அதிகரிக்குமே தவிரக் குறையாது

[size=4]53 ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வடக்கிற்கு பயணம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர். [/size]

இதிலை பயங்கரவாதி கோட்டபாய எத்தனை பேரைக் கடத்தி கப்பம் வாங்கினான் என்று சிங்கள அரச பயங்கரவாதிகள் சொன்னால் நல்லது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.