Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று உலக சனத்தொகை தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக சனத்தொகை தினம்

1804 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை ஒரு மில்லியார்டன். 1927 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை

இரண்டு மில்லியார்டன்.இன்றைய கணக்கின்படி உலகில் சுமார் ஏழு மில்லியார்டன் மக்கள் வாழ்கின்றனர்.

இது ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்.

உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்த பல அமைப்புக்களும் நாடுகளும்

பலவிதமான வழிகளில் முயற்சி செய்தபோதும் அல்லது இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதும் உலகசனத்தொகை குறைவதற்காக சான்றுகள் மிகக் குறைவானதாகவே இருக்கின்றன.

இன்றைய நிலையில் இன்னும் நாற்பது வருடங்களில் உலக சனத்தொகை ஒன்பது மில்லியார்டனாக உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.அதைவிட இன்னும் அதிர்ச்சியான தகவல் 2100 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 10 , 1 மில்லியார்டனாக உயரும் என்பது தான்.

மொத்த உலக சனத்தொகையில் 1 ,346 மில்லியார்டன் மக்கள் சீனாவிலும் 1 ,241 மில்லியார்டன் மக்கள் இந்தியாவிலும் வாழ்கின்றனர்.

உலகசனத்தொகை மில்லியன்

1.சீனா 1345

2.இந்தியா 1241

3.ஐக்கிய அமேரிக்கா 311

4.இந்தோனேசியா 238

5.பிரேசில் 196

6.பாகிஸ்தான் 176

7.நைஜீரியா 162

8.வங்களா தேசம் 150

9.ரஷ்யா 142

10௦.ஜப்பான் 128

உலகசனத்தொகைவளர்ச்சிஎன்பதுவளர்ந்துவரும்நாடுகளில் மிக மிக வேகமாக இருப்பதாக

ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சனத்தொகை வருடமொன்றுக்கு 83 மில்லியன் தொகையினால் அதிகரித்துவருகின்றது.

நாள் ஒன்றுக்கு பிறப்புக்களால் 230 000 சனத்தொகை அதிகரித்து வரும் வேளை உலகம் முற்றிலுமாக பிறக்கும் ஒவ்வொரு ஐந்தாவது குழந்தையும் தற்செயலாகவே பிறக்கின்றன.

பதின்ம வயதிலே குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் ஆபிரிக்க நாட்டுப் பெண்கள் இன்று முன்னிலையில் இருப்பதனால் அங்கு வேகமாகச் சனத்தொகை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றது. ஆபிரிக்கக் கண்டத்தில்

இந்த நூற்றாண்டில் சனத்தொகை உலகில் 35 % ஆக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரித்துவரும் சனத்தொகையைக் கட்டுப்படுத்த ஆபிரிக்க நாடுகளில் பல அமைப்புக்கள் போராடுகின்றன.

மக்களுக்கு கல்வி அறிவை ஊட்டி குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தெளிவை ஏற்படுத்தல் அவசியமாகின்றது.

ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புக்கள் சனத்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைத் திட்டமிட்ட குடும்ப அமைப்பு, கருத்தடைச்சாதன உபயோகிப்பின் அவசியம் குழந்தைகள் சுகாதாரம், போன்ற விடையங்களில் நடாத்துகின்ற போதிலும் அதையும் மீறி சனத்தொகை அதிகரிப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

உலக சனத்தொகையில் சுமாராக அரைவாசி மக்கள் இன்று 25 வயதை அடையாதவர்களாக இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத்தொகையைக் கட்டுப்படுத்தவது என்பது மிகக் கடினமான விடயமாகக்

இருக்கும் என்பது பல ஆய்வாளர்களினதும் கருத்தாக இருக்கின்றது.

உலகில் இன்று 925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வருடத்திற்கு 25 மில்லியன் குழந்தைகள் உலகில் பட்டினியால் இறக்கின்றன. போசாக்கின்மையால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றன. சனத்தொகை அதிகரிக்கும் நிலையில் பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதும் பிறந்த குழந்தைகள் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுவதும் உலகில் பட்டினி அதிகரிப்பும் மேலும் மேலும் இன்னும் அதிகரித்துச் செல்லும்.

ஆகவே திட்டமிட்ட முறையில் குழந்தைகளைப் பெற்று அவர்களை ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க உலக சனத்தொகை நாளான இன்று உறுதி பூணுவது அவசியமாகின்றது.

யாழிற்காக வாத்தியார்.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

இதே... வேகத்தில் சனத்தொகை பெருக்கம் ஏற்பட்டால்,

எதிர்காலத்தில்... உணவு, குடிநீர் போன்றவற்றுக்கு மக்கள் சிரமப்பட வேண்டி வரும்.

ஏற்கெனவே... இந்தியாவில், விளைநிலங்களில்... மக்கள் வீடுகள் அமைக்கிறார்கள்.

போதாக் குறைக்கு, காட்டு மரங்களை சகட்டு மேனிக்கு அழிப்பதால்... மழையும் பொய்த்து விட்டது.

ஜேர்மனியில்... 18 மில்லியன் ஆட்கள் திருமணம் கட்டாமல்... தனியே வாழ்வதால்,

ஜேர்மன் சனத்தொகை குறையப் போகின்றது என்று... அரசு கவலைபடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

pophist.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே... வேகத்தில் சனத்தொகை பெருக்கம் ஏற்பட்டால்,

எதிர்காலத்தில்... உணவு, குடிநீர் போன்றவற்றுக்கு மக்கள் சிரமப்பட வேண்டி வரும்.

ஏற்கெனவே... இந்தியாவில், விளைநிலங்களில்... மக்கள் வீடுகள் அமைக்கிறார்கள்.

போதாக் குறைக்கு, காட்டு மரங்களை சகட்டு மேனிக்கு அழிப்பதால்... மழையும் பொய்த்து விட்டது.

ஜேர்மனியில்... 18 மில்லியன் ஆட்கள் திருமணம் கட்டாமல்... தனியே வாழ்வதால்,

ஜேர்மன் சனத்தொகை குறையப் போகின்றது என்று... அரசு கவலைபடுகின்றது.

ஜேர்மனியில் குழந்தைகள் பிறப்பு வீதம் 1,4 ஆகத்தான் இருக்கின்றது....அதனால் சடுதியாக சனத்தொகை அதிகரிக்க வாய்ப்பில்லை :D உலகிலேயே மக்கள் அதிகமாக வாழும் நகரங்களில் டெல்லி இரண்டாவது(22,7 மில்லியன்) இடத்தில் உள்ளது.....முதலாவது இடத்தில் பெரிய டோக்கியோ நகரம் (37.2 மில்லியன்) உள்ளது.

Edited by வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.