Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயர்வு தாழ்வு

Featured Replies

பெரிய அலையும் சிற்றலையும் பக்கத்தில் பக்கத்தில் பயணித்திருக்க, சிற்றலை அழுதுவடிந்தது கண்டு

பேரலை கேட்டது. எதற்காக அழுகிறாய் என்று.

சிற்றலை சொன்னது. பாருங்கள் நீங்கள் தாம் எத்தனை பெரியவர். உங்களை போன்றோர் என்மீது

சாயும்போது என்போன்ற சிறியவர்கள் அழிந்து போகிறோம். எமக்கான வேதனை உமக்கெங்கே

புரிய போகிறது என்றது.

பேரலை சிரித்துக் கொண்டே சொன்னது.

உன்னை நீ அறிந்து கொண்டாயாயின் இத்தகு பிரச்சினை எழவே வாய்ப்பில்லை.

சிற்றலை கேட்டது “நான் அலையில்லையா பின் நான் என்ன ?? என்ன அறியவேண்டும் என்கிறீர்கள்”

பேரலை சொன்னது ” அலை என்பது தற்காலிக வடிவம் தான். நீயும் நானும் நீரின் எழுச்சி. சீற்றம்

அடங்கிடில் நீயும் நானும் ஒன்று தான். தண்ணீர். அப்புறம் எங்கே உயர்வு தாழ்வு வரும் ??

**

ஓங்கியுயர்ந்த நீரலை கண்டு

சீற்றம் தணிந்த சிற்றலை கேட்டது

வலியிற் பெரியீர்

வேதனை செய்குதீர்

விதியின் செயலால்

விளைந்ததோ இவ்வினை

சிறியதாய் இருப்பதால்

சிதறுகிறேன் அதனால்

பதறுகிறேன் நானும்

சிற்றலை சொன்னது கண்டு

பேரலை ஆர்பரித்து சொன்னது

மதியிலா மூடன் போல் மயங்கினாய்

நகைத்த பேரலை மேலும் சொன்னது

நீயும் நானும் யாதென உணர்ந்திடின்

துன்பம் என்பது எங்கே வந்திடும்

அலையாய் நான் இல்லையென்றால்

நான் யாராய் இருக்கிறேன்

குழம்பிய சிற்றலை ..

கேள்வியை தொடுத்தது

உந்தன் வடிவம் நிலையற்றதொன்று

வேகம் மறைந்தால்

நீயும் நானும் ஒன்று

கடலின் நீரில் விளைந்த நாம்

கடலில் ஒன்றாய் ஆகிப் போவோம்

என்று பேரலை சொன்ன

கருத்தினை கேட்டதும் சிற்றலையின்

கவலை தீர்ந்தது

***

கன்பூசியஸ் சொல்லுகிறார் :

சுயநலம் கொண்ட மனிதன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதிலேயே நேரம் செலவிடுகிறான்.

பின் மற்றவர்களால் தான் துன்புறுவதாகவும் நினைக்கிறான். எல்லாரும் இந்த இயற்கையின் ஓர் அங்கம்

என்பதை பல நேரம் மறந்து விடுகிறான்.

நன்றி அதீதம்.

  • கருத்துக்கள உறவுகள்

'ஒப்பீடு' என்பது இல்லாமல் போகும்போது, 'வளர்ச்சி' தடைப்பட்டுப் போகாதா, கரிகாலன்?

'பொறாமை' அங்கு வராத வரைக்கும், ஒப்பீடு ஒரு ஊக்கியாக இருக்கும்!

இணைப்புக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

தாழ்வு மனப்பான்மையே பலரது மன உளைச்சலுக்கு காரணம்

நன்றி

கதைக்கும்

கவிதைக்கும்

  • தொடங்கியவர்

[size="2"]புங்கையூரன் தங்கள் கருத்தை நான் அமோதிக்கிறேன், கருத்துக்கு நன்றி. பொறமை படாமல் ஒப்பிட்டு தங்கள் தங்கள் நிலைமைகளை உயர்த்த முயல்வது வரவேண்ட்க தக்கது. ஆனால் உயரத்தில் இருப்பவர் தங்களை மிதிப்பதாகவும் அவரது உயர்வுக்கு பொறாமையால் வேறு காரணம் கூறுவது போன்றவை கண்டிக்க தக்கது. [/size]

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் தங்கள் தங்கள் நிலைமைகளில் இருந்து மேலே போக வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு அது தாழ்வு மனப்பான்மையால் வந்தது என்று கூறமுடியாது என்பதே என்கருத்து.

உங்கள் கருத்துக்கு நன்றி விசகு

  • கருத்துக்கள உறவுகள்

நீயும் நானும் யாதென உணர்ந்திடின்

துன்பம் என்பது எங்கே வந்திடும்

வேகம் மறைந்தால்

நீயும் நானும் ஒன்று

இணைப்புக்கு நன்றிகள்!

ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் மற்றவர்களால் நாம் துன்புறுத்தப்படுகிறோம் என்பதுடன் எம்மால் மற்றவர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா என்பதையும் அறிய முடியும். நல்லவர்களுடன் எம்மை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் நாமும் நல்லவராக முயற்சி செய்யலாம். அதேபோல் உயர்ந்த இடத்திலுள்ளவர்களுடன் ஒப்பிட்டு நாமும் அவ்வாறு வரவேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யலாம். எனவே சுயநலம் கொண்ட மனிதன் தான் ஒப்பிட்டு பார்க்கிறான் என்று சொல்ல முடியாது. :)

ஆனால் "ஒரு தலைவர்" என்ற நிலையிருக்கும் போது நாமும் தலைவராக வேணும் என்று மட்டும் யோசிக்க கூடாது. இது தமிழர்களுக்கான advice. மற்றவர்களை விட தமிழர்கள் தான் தலைமை போட்டிக்கு அதிகளவில் அடிபடுபவர்கள். :wub:

உங்களுடைய கவிதை பகிர்வுக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்

நிலாமதி, துளசி உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

"நானும் தலைவர்" அக வேண்டும் என்று ஜோசிப்பதில் தவறு இல்லை ஆனால் அதற்கு தகுதி உடையவர்களாக தங்களை ஆக்கி கொள்ள வேண்டும், அதை அடைய நேர்மையான வழியில் முயல வேண்டும். எல்லாத்தையும் விட மக்கள் முன்வந்து ஏற்றுகொள்ள வேண்டும். இது எனது கருத்து மட்டும் தான்.

அமாம் துளசி உங்கள் "நான் தலைவர்" கருத்தில் வேறு ஒரு உள்குத்தும் இல்லை தானே? :lol: :lol:

நிலாமதி, துளசி உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

"நானும் தலைவர்" அக வேண்டும் என்று ஜோசிப்பதில் தவறு இல்லை ஆனால் அதற்கு தகுதி உடையவர்களாக தங்களை ஆக்கி கொள்ள வேண்டும், அதை அடைய நேர்மையான வழியில் முயல வேண்டும். எல்லாத்தையும் விட மக்கள் முன்வந்து ஏற்றுகொள்ள வேண்டும். இது எனது கருத்து மட்டும் தான்.

அமாம் துளசி உங்கள் "நான் தலைவர்" கருத்தில் வேறு ஒரு உள்குத்தும் இல்லை தானே? :lol: :lol:

:lol: :lol:

உள்குத்து எதுவும் இல்லை அண்ணா. தமிழீழ விடுதலை போராட்டத்தில் நாம் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டாலும் பலர் தாம் தலைவராக முயற்சி செய்தார்கள். அதை நினைத்து சொன்னேன்.

போராட்ட விடயத்தில் ஒரு தலைவரின் கீழ் மக்கள் திரளுவது தான் நல்லது. :)

வேலை செய்யும் இடங்களில் மனேஜர் ஆவது பற்றியும் சொல்லேல்லை. :lol:

Edited by துளசி

  • தொடங்கியவர்

:D :D :D

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும். அதிலும் சில சாதக பாதகங்கள் இருக்க தான் செய்கிறது. ஒரே கொள்கையை உடையவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை வேறாக கும் பொழுது பல தலைவர்கள் உருவாவது சகஜம். நான் எங்கள் போராட்டத்தை குறிப்பிட வில்லை. பொதுவாக சொன்னேன். உதரணத்துக்கு அபராஜிதன் பதிவேற்றிய நிலமெல்லாம் இரத்தம் தொடரில் பல பிரிவுகள் இணைந்து செய்யல பட்டத்தை குறிப்பிடலாம். எமது கதையில் நிங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை, ஒரே கொள்கையுடன் இறுதிவரை இருந்த ஒரே தலைவன். யாரும் அந்த இடத்தை அடைய முயட்ச்சிக்கலாம் ஆனால் காலவெள்ளத்தில் இவர்கள் எல்லாம் அடிபட்டு போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது மற்றவரை விட‌ நாங்கள் எந்த விதத்தில் குறைந்தவர்களாகவோ அல்லது தாழ்ந்தவர்களாகவோ இருக்கிறோம் என தெரிந்து கொண்டு அதற்கேற்ப எம்மை மாற்றிக் கொள்ளலாம் அது எம்மை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது என் கருத்து.

கதைக்கும்,கவிதைக்கும் பாராட்டுகள் யூகே கரிகாலன் தொட‌ர்ந்தும் எழுதுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.