Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸாட் பதவி விலக தயார் : ரஸ்யா திடீர் அறிவிப்பு

Featured Replies

[size=4]ஆஸாட் பதவி விலக தயார் : ரஸ்யா திடீர் அறிவிப்பு[/size]

[size=2][size=4]சரியான ஏற்பாடுகளை செய்து பாதிப்பில்லாமல் விடை கொடுத்தால் சிரிய அதிபர் ஆஸாட் பதவி விலகுவதற்கு தயார் என்று சற்று முன் ரஸ்ய தூதுவர் அறிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]பாரிசில் இருக்கும் ரஸ்ய தூதுவர் அலக்சாண்டர் ஓர்லோவ் ராய்டருக்கு சற்று முன்னர் வழங்கிய [/size][/size]

[size=2][size=4]பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]ஜெனீவாவில் இதற்கான சந்திப்பை நடாத்தி ஜனநாயக அதிகாரங்களை பகிர தயாராக இருந்தால் பதவி விலக அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]தற்போது போரை நடாத்தும் எதிரணியுடன் அவர் பேசத் தயாராக இருக்கிறார், இதனுடைய கருத்து பேச்சுக்களை நடாத்தியே விலக முடியும் என்பதாகும்.[/size][/size]

[size=2][size=4]சிரிய தகவல் அமைச்சகம் ரஸ்ய தூதுவரின் கருத்து தப்பானது என்று மறுத்துள்ளது, மேலும் இவருடைய கருத்து தப்பாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]சற்று முன் கிடைத்த தகவல்களின்படி சிரிய உளவுப்பிரிவு தலைவரும் மடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]ரஸ்ய தூதுவரின் பிரகடனம் மிகவும் சதித்தன்மை நிறைந்தாக இருப்பதால் சிரியா பெரும் குழப்பமடைய வாய்ப்புள்ளது.[/size][/size]

[size=2][size=4]ரஸ்யா சிரியாவை கைவிட தயாராகிவிட்டது தெரிகிறது…[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=110374[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]ரஸ்யா – சீனா மூன்றாவது தடவையும் வீட்டோ[/size]

ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக கடுமையான தடைகளை விதித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஸ்யாவும், சீனாவும் இணைந்து வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து தடுத்துள்ளன.

[size=2][size=4]நேற்று முன்தினம் ரஸ்யாவுக்கு கொபி அனானும், சீனாவுக்கு பான் கி மூனும் சென்று பேச்சுக்களை நடாத்தியபோது இரு நாடுகளும் வீட்டோ பாவிக்காது என்று ஒரு கருத்து நிலவியது, ஆனால் நேற்று அவை மனம் மாறி மூன்றாவது தடவையாகவும் வீட்டோவை பாவித்துள்ளன.[/size][/size]

[size=2][size=4]ஐ.நாவில் சிரியாவுக்கு எதிராக பெரும்பான்மை நாடுகள் ஒன்றுபட்டு நின்றாலும் ரஸ்யா – சீனாவின் வீட்டோ பாவனையால் ஐ.நாவால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]மறுபுறம் இரு நாடுகளும் தடை போட்டு வருவதால் சிரியாவில் தொடர்ந்தும் போர்க் கண்காணிப்புக் குழுவை வைத்திருப்பது தவறானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைமைதாங்கியுள்ள நோஸ்க் ஜெனரல் மேயர் றொபேட் மூட் தற்போது இதுவரை தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்கா நிராகரித்தாலும் மேலும் 30 தினங்களுக்கு இவர்களை சிரியாவிலேயே வைத்திருக்கும் உப திட்டம் ஒன்றை பிரிட்டன் முன் மொழிந்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]மறுபுறம் சீனா – ரஸ்யா இரண்டும் வீட்டோவை பாவிக்காமல் விட்டிருந்தாலும் இன்றுள்ள நிலையில் ஐ.நா பிரேரணையால் எதுவும் செய்திருக்க முடியாது.[/size][/size]

[size=2][size=4]தற்போது எல்லாமே அடிதலையாக மாறிவிட்டது, ஆஸாட்டே எங்கேயென்று தெரியவில்லை இதற்குள் ஐ.நா பிரேரணை கொண்டுவந்து யார் மீது போடுவது என்பதே கேள்வியாகும்.[/size][/size]

[size=2][size=4]ஆழமாகவும், அறிவுடனும் சிந்தித்துப் பார்த்தால் சீனாவும், ரஸ்யாவும் வீட்டோவை பாவித்து போலி நாடகம் ஆட, இராணுவத்தைப் பிளந்து, கூலிப்படைகளை நுழைத்து லிபியாவில் நடந்தது போல நாடகத்தை மேலை நாடுகள் கச்சிதமாக ஆடி முடித்துவிட்டார்கள்.[/size][/size]

[size=2][size=4]ஆஸாட் உயிர் வாழ ரஸ்யாவிடம் அனுமதி கேட்டுள்ளதாக வெளியான செய்தியை ரஸ்யா நிராகரித்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்கர்களை விட சீனாவும் ரஸ்யாவுமே தம்மை ஏமாற்றியுள்ளன என்ற விடயத்தை சொல்ல முடியாத வேதனையில் ஆஸாட் இருப்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=110368[/size]

Edited by akootha

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். நம்மளத்தான் யாரும் காப்பாத்தல

  • தொடங்கியவர்

[size=4]ரஸ்யா – சீனா மூன்றாவது தடவையும் வீட்டோ[/size]

[size=2][size=4]ஆஸாட் உயிர் வாழ ரஸ்யாவிடம் அனுமதி கேட்டுள்ளதாக வெளியான செய்தியை ரஸ்யா நிராகரித்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்கர்களை விட சீனாவும் ரஸ்யாவுமே தம்மை ஏமாற்றியுள்ளன என்ற விடயத்தை சொல்ல முடியாத வேதனையில் ஆஸாட் இருப்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.[/size][/size]

[size=4]வல்லரசுகள் தலையிட்டால் எங்கும் பிணவாடை தான் ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

அசாத் தப்பியோடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன.

எந்த நாட்டுக்குச் செல்வது அவருக்குப் பாதுகாப்பு என்ற ஆலோசனையில் இருக்கலாம்.

ஆனாலும் ஒரு நாள் அவரும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தப்படலாம்.

  • தொடங்கியவர்

[size=4]சிரியாவிற்குள் நுழைய இஸ்ரேல் கபடத் திட்டம்[/size]

[size=2][size=4]ஈராக் – சிரியா எல்லைப் புறத்தில் உள்ள அப கமால் எல்லைப் புறத்தை போராளிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதை மீட்க சிரிய படைகள் கடும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.[/size][/size]

[size=2][size=4]கடந்த புதன் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்ட பின்னர் யுத்தத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்ற இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள சிரிய படைகள் இதுவரை சரியான முடிவை வெளிக்காட்டவில்லை.[/size][/size]

[size=2][size=4]சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மிகவும் பெரிய நகர் சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடியிருக்கும் பாரிய வட்டகை இதில் சிறிய பாக்கட் போன்ற பகுதியே போராளிகள் கைக்கு வந்துள்ளது, முழுமையான டமாஸ்கஸ்சையும் கட்டுப்பாட்டில் கொண்டுவர போராளிகளால் இயலாது என்கிறார் டென்மார்க் ஆய்வாளர் நாஸர் காடர்.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்பு வைத்து இரசாயன ஆயுதங்களை பாவிக்கும் நிலை ஒன்று உருவாகலாம் என்று எச்சரித்த இஸ்ரேல் தான் களமிறங்க வேண்டிய பருவம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறது.[/size][/size]

[size=2][size=4]போராளிகள் என்ற போர்வையில் அல் குவைடா பயங்கரவாதிகளும் களத்தில் நிற்பதாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்க இராஜாங்கத் துறையைச் சேர்ந்த சுசேனா ரைஸ் கூறும்போது ஐ.நாவிற்காக காத்திருக்காமல் அரபு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா களமிறங்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6ம் திகதி நடைபெற இருப்பதால் ஒபாமா அமெரிக்கப் படைகளை இன்னொரு போரில் மாட்டுப்பட வைக்கமாட்டார் என்பதால் நிலமை இழுபட்டு செல்கிறது.[/size][/size]

[size=2][size=4]ஆனால் தடாலடியாக இஸ்ரேல் களமிறங்கி கூத்துக்குள் கோமாளி புகுந்த கதையாக அல்லது சிவ பூசையில் கரடி புகுந்த கதையாக எல்லாவற்றையும் நாசமாக்க வழியிருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]இஸ்ரேல் யாருக்காக சிரியாவிற்குள் இறங்கப்போகிறது என்பது முக்கிய கேள்வியாகும்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=110401[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் யாருக்காக சிரியாவிற்குள் இறங்கப்போகிறது என்பது முக்கிய கேள்வியாகும்.

ஈரானை தாக்குவதற்கு ஒரு தளம் தேவை.சிரியாவை அதற்காக பயன்படுத்த இஸ்ரேல் முயற்சிக்கலாம்.ஹிஸ்புல்லாவின் நண்பர் சிரியா.ஹிஸ்புல்லாவின் எதிரி இஸ்ரேல்.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

ஈரானை தாக்குவதற்கு ஒரு தளம் தேவை.சிரியாவை அதற்காக பயன்படுத்த இஸ்ரேல் முயற்சிக்கலாம்.ஹிஸ்புல்லாவின் நண்பர் சிரியா.ஹிஸ்புல்லாவின் எதிரி இஸ்ரேல்.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

[size=4]இரண்டு நாட்களுக்கு முன்னால் பல்கேரியாவில் ஒரு தற்கொடைத்தகுதல் நடந்தது. கொல்லப்பட்டவர்கள் இஸ்ரேலியர்கள். அந்த நாட்டின் பிரதமர் நேத்தநியாகு உடனடியாக ஈரான் மீது பழியை போட்டார். [/size]

[size=1]

[size=4]ஆம், பிளவு பட்டு நிற்கும் அரபர்களை பாவித்து அணுஆயுத வல்லரசாக வர எண்ணும் பெர்சியர்களை அழிக்க எண்ணுகிறது இஸ்ரேல். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]சிரியா ரசாயன ஆயுத இருப்பு: ஒபாமா கண்டனம்[/size]

[size=4]சிரியா ரசாயன ஆயுதங்களை இருப்புவைத்துள்ளதற்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.சிரியாவில் கடந்தஆண்டு மார்ச் மாதம் முதல்அதிபர் பஷர்அசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.ஐ.நா.குழு அனுப்பி வைக்கப்பட்டும் அங்கு சண்டை ஓயவில்லை. இதனால் சிரியாவில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ள பகுதிகளை நோக்கி, ரசாயன ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகித்த அமெரிக்கா, போராட்டக்காரர்கள் மீது, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என, எச்சரித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் ரீனே நகரில் நடந்த மூத்த போர் வீரர்களின் 113-வது மாநாட்டில்அதிபர் ஒபாமா கூறியதாவது: [/size]

[size=4]சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு நிலைமை கவலையளிக்கிறது. சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பு வைத்துபிர‌யோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பிற்கு அதிபர் அசாத் தான் ‌பொறுப்பு. ஏற்கனவே பென்டகன் தரப்பில்அதிபருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.. அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதை இனிமேலும் ‌சகித்துக்கொள்ள முடியாது. அங்கு மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.