Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்!

Featured Replies

[size=5]வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்![/size]

[size=4]வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் அமைப்பின் 18-வது திருத்தம் நாட்டின் குற்றச் செயல்கள் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகியுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய நேற்றுக் கூறினார்.17-வது திருத்தத்தில் கூறப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்கள் நாட்டில் குற்றச் செயல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தில் உள்ள ஊழலைக் குறைக் கவும் தேவையானவையாக இருந்தன.

அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பதவிகளையும் பதவி உயர்வுகளையும் வழங்கியதால் நாடு இக்கட்டான நிலைமை க்கு தள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் என வெவ்வேறு சட்டங்கள் உள்ளன.பதவிக்காலம் முடியும் முன்னரே மாகாண சபைத் தேர்தல் களை நடத்துவது வீண்விரயமாகவுள்ளது.உண்மையில் வடக்கில் உள்ள மக்கள் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.அங்குதான் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமாயின் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ, பொட்டு அம்மானோ உருவாகலாம்.முன்னர் அரசாங்க ஊடகங்களில் எமக்கு ஆகக்குறைந்த அளவில் சில நிமிடங்கள் அல்லது ஒரு பக்கமாவது கிடைத்து வந்தது.இப்போது எமக்கு அதுகூடக் கிடைப்ப தில்லை.அரசாங்க ஊடகங்கள் எம்மீது அவ தூறு கூற பயன்படுத்தப்படுகின்றன என அவர் மேலும் கூறினார்.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=29586

  • தொடங்கியவர்

[size=4]இன்னொரு யுத்தம் எம்மையே அழித்துவிடும். அதேவேளை வெறும் பார்வையாளர்களாக இருந்தாலும் எம்மை எதிரி(கள்) அழித்துவிடுவார்கள்.

தொடர்ச்சியான சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இன்னொரு ஆயுதப்போராட்த்திற்கு இடம்தராமல் எமது மக்களின் அரசியல் மனித உரிமைகள் வென்றெடுக்கவேண்டும்.[/size]

இன்னொரு யுத்தம் வருமோ இல்லையோ இப்படியே நாட்கள் கடந்து சென்றால் உறவுகளை இழந்த, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வளர்ந்து ஆயுதம் தாங்குவார்கள். அல்லது கிரினேட்தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கும்.

அதற்கு இடமளிக்காமல் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் யாழ்களத்திலேயே பலர் சுயநலமாக வெறும் பார்வையாளராக உள்ளபோது ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி ஆதரவு தேடுவது ரொம்ப கடினம். ஆனாலும் முயற்சி செய்யும் பலரும் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் பொய் பிரச்சாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உள்ளோம்.அதனை முறியடிக்க எல்லோரும் பாடுபட வேண்டும்.அரசியல்,ராஜதந்திர முறைகள் மூலம் சிங்கள இனவாத அரசின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்.தமிழில் மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் அந்தந்த நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் பத்திரிகைகள்,பொது ஊடகங்களில் உண்மை நிலைகளை எழுதலாம். சிங்களம் தனது

பொய் பிரச்சாரத்துக்கு என வகை தொகை இல்லாமல் செலவளிக்கிறார்கள்.

இதே கரு ஜெயசூரியாவின் கட்சி ஆட்சிக்கு வந்தால் அல்லது ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார் அல்லது என்ன செய்வார் என்பதை சொல்லத் தேவை இல்லை.

ஆம், வேற்றுமொழிகளில் எமது பிரச்சினை வர வேண்டும். நாம் நடத்தும் மகிந்தவுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கூட வேற்றுமொழி ஊடகங்களில் வரவேண்டும். அதே போல் வேற்றுமொழி தலைவர்களுடனும் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா இவங்க மட்டும் ஆட்சிக்கு வந்திட்டா அப்பிடியேய் வடக்கில பாலாறும் தேனாறும் சும்மா பிச்சுகிட்டு ஓடும்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எல்லோரும் சிங்களவனாகவே இருக்கின்றார்கள் தமிழர்கள் ?????????????????????????????

சிங்களவன் எல்லோரும் சிங்களவனாகவே இருக்கின்றார்கள் தமிழர்கள் ?????????????????????????????

தமிழர்களில் பலர் சிங்களவர்களின் கைக்கூலிகளாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எல்லோரும் சிங்களவனாகவே இருக்கின்றார்கள் தமிழர்கள் ?????????????????????????????

தமிழன் தொடர்ந்து காட்டிக்கொடுக்குறதிளையும் கூட்டிக்கொடுகிறதிளையும் பிஸியா இருக்கான்

அது சரி ஏன் இன்னுமொரு பிரபாகரன் [தேசியத்தலைவர்] பொட்டம்மான் [மதிப்புக்குரிய] உருவாகவேண்டும்........

இன்று ஆயிரம் ஆயிரம் பிரபாகரன் அவர்களைப்போலவும் ,பொட்டம்மான அவர்களைப்போலவும் உருவாகியிருப்பதை அறியாமாலா இவர்கள்

கொக்கரிக்கிறார்கள்........ஏற்றுக்கொள்ள முடியவில்லையா......சரி அப்படி ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஒரே ஒரு கேள்வி உங்களிடம்...........முல்லிவாய்க்காலுக்கு முதலில் இருந்ததை விட

ஏன் இன்று இலங்கை படு பாதாள குழிக்குள் விழுந்துகொண்டு வருகிறது............முள்ளிவைக்காலுக்கு முன் இருந்த அமைதியும், சமாதானமும்,பாதுகாப்பும் தற்போது ஏன் மாயை ஆகிவிட்டது ......????????????????????

அது சரி ஏன் இன்னுமொரு பிரபாகரன் [தேசியத்தலைவர்] பொட்டம்மான் [மதிப்புக்குரிய] உருவாகவேண்டும்........

இன்று ஆயிரம் ஆயிரம் பிரபாகரன் அவர்களைப்போலவும் ,பொட்டம்மான அவர்களைப்போலவும் உருவாகியிருப்பதை அறியாமாலா இவர்கள்

கொக்கரிக்கிறார்கள்........ஏற்றுக்கொள்ள முடியவில்லையா......சரி அப்படி ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஒரே ஒரு கேள்வி உங்களிடம்...........முல்லிவாய்க்காலுக்கு முதலில் இருந்ததை விட

ஏன் இன்று இலங்கை படு பாதாள குழிக்குள் விழுந்துகொண்டு வருகிறது............முள்ளிவைக்காலுக்கு முன் இருந்த அமைதியும், சமாதானமும்,பாதுகாப்பும் தற்போது ஏன் மாயை ஆகிவிட்டது ......????????????????????

ஆயிரமாயிரம் போராளிகள் உருவாகலாம். தலைவர் வழிகாட்டலில் இயங்கலாம். ஆனால் அனைவரும் தலைவர் போல் ஆக முடியாது.

தலைவராவதற்கு, ஒரு அமைப்பை சரியாக கொண்டு நடத்தும் திறமை, தந்திரங்களை உபயோகித்தல், சூழ்ச்சிகளை அறிதல், அதை விட முக்கியமாக மக்களை ஒன்று சேர்க்கும் தன்மை என்பன வேண்டும். இது அனைவரிடமும் இருக்காது. ஆனால் அப்படியான திறமை உள்ளவர்கள் பலர் அழிக்கப்பட்டு விட்டார்கள்.

இப்பொழுதும் சிலர் நாட்டில் இருப்பார்கள். அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புவர். ஆனால் அவர்களையும் நாட்டு நிலைமை புரட்டி போட்டால் அவர்களும் தலைமை தாங்கலாம். அல்லது சிறுவர்கள் வளர்ந்து கூட தலைமை தாங்கலாம். இது எதுவும் நடக்காமலும் போகலாம். அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்.

ஆனால் இன்னொரு ஆயுத போராட்டத்தின் மூலம் பல உயிர்கள் அழிவதை எவரும் விரும்ப மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ தே க ஒரு வங்குரோத்துக் கட்சி.

சிங்கள் மக்களின் செல்வாக்கை இழந்த நிலையில் மீண்டும்

அவர்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக எல்லா வழிகளிலும்

முயற்சிக்கின்றது.

தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளை பின்பற்றுவது போல் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.