Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு.. - ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.

பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.

இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.

நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.

ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.

கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.

என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.

காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.

என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.

சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.

சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.

ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...," என்றார்.

http://tamil.oneindia.in/movies/heroes/2012/07/i-m-avoiding-fans-public-like-debto-158455.html

உங்கள் இணைப்பிற்கு நன்றி பிழம்பு ............இங்கே நான் விசேடமாய் எதையும் கூற வரவில்லை உண்மையில் மாண்பு மிகு சிவாஜி கணேசன் அற்புதமான அருமையான

ஒரு நடிகர் என்பதுமட்டும் தான் உண்மை இவரது வாரிசுவான பிரபுவால் அந்த இடத்தை நிரப்பமுடியவில்லை என்பதே நான் பார்த்த விடயம் .[கலைஞன் என்றவகையில்] அந்த இடத்தை பிரபுவின் மகன் நிரப்பினால் தமிழ் கலை உலகம் மகிழ்ச்சி கொள்ளும்.பெருமைப்படும்.............ஆனால் அவரது பேரனாகிய [உண்மையா]சியாம் ????? பிரபுவை விட சிறந்த நடிகர் என்பதே எனது ஆதங்கம்...ஆனால் அவரைப்பற்றி ஏன் உந்த திரை உலகம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதே எனது அடுத்த கேள்வி ........என் மூன்றாவது கேள்வி உண்மையில் சியாம் சிவாஜி கணேசனுடைய பேரனா.??????......உண்மையில் நடிகர் திலகம் என்னும் பெயருக்கு தகுதிவாய்ந்த சிவாஜி கணேசனுடைய பெயரை இவர்கள் நிலை நிறுத்துவார்களா ??????ஆனாலும் நான் எம் ஜி ஆர் ரசிகந்தானுங்கோ................ :D :D

நான் ரஜனி ரசிகன்தான், இருந்தாலும் இவர் எவ்வளவு காலத்திற்குத்தான் கடன்காரனைப் போல இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார். அரசியலில் ஈடுபடாமல், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழக மக்களுக்கு எவ்வளவோ நல்ல திட்டங்களைச் செய்யலாம். பல மாநிலங்களிலும் செல்வாக்கு உள்ளவர். நல்ல மதிப்பும் உண்டு. அவரே முன்பு கூறிய, தேசிய நதி இணைப்பை ஆரம்பித்து வைக்க வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களை செய்வாரானால், தமிழக மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்பிற்கு நன்றி பிழம்பு ............இங்கே நான் விசேடமாய் எதையும் கூற வரவில்லை உண்மையில் மாண்பு மிகு சிவாஜி கணேசன் அற்புதமான அருமையான

ஒரு நடிகர் என்பதுமட்டும் தான் உண்மை இவரது வாரிசுவான பிரபுவால் அந்த இடத்தை நிரப்பமுடியவில்லை என்பதே நான் பார்த்த விடயம் .[கலைஞன் என்றவகையில்] அந்த இடத்தை பிரபுவின் மகன் நிரப்பினால் தமிழ் கலை உலகம் மகிழ்ச்சி கொள்ளும்.பெருமைப்படும்.............ஆனால் அவரது பேரனாகிய [உண்மையா]சியாம் ????? பிரபுவை விட சிறந்த நடிகர் என்பதே எனது ஆதங்கம்...ஆனால் அவரைப்பற்றி ஏன் உந்த திரை உலகம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதே எனது அடுத்த கேள்வி ........என் மூன்றாவது கேள்வி உண்மையில் சியாம் சிவாஜி கணேசனுடைய பேரனா.??????......உண்மையில் நடிகர் திலகம் என்னும் பெயருக்கு தகுதிவாய்ந்த சிவாஜி கணேசனுடைய பெயரை இவர்கள் நிலை நிறுத்துவார்களா ??????ஆனாலும் நான் எம் ஜி ஆர் ரசிகந்தானுங்கோ................ :D :D

சியாம் சிவாஜியின் பேர‌னா? புதுத் தகவலாயிருக்குது

சியாம் சிவாஜியின் பேர‌னா? புதுத் தகவலாயிருக்குது

அதைத்தான் நானும் கேள்வியாக கேட்டேன் சகோதரி ............யாரோ எனக்கு அடித்து கூறினார்கள்..................ஆனால் நான் தேடிப்பார்க்க நேரம் கிடைக்கவில்லை.............

இல்லையா ,ஆமா என்று எதைக்கூறினாலும் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன்........... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை காலத்து ஆக்களுக்கு ஊர்முழுக்க பிள்ளையளப்பா.......இப்பத்தையான் பொடியளுக்கு ஒரு பிள்ளைக்கே கஸ்ரமப்பா :D:lol::)

உங்கள் இணைப்பிற்கு நன்றி பிழம்பு ............இங்கே நான் விசேடமாய் எதையும் கூற வரவில்லை உண்மையில் மாண்பு மிகு சிவாஜி கணேசன் அற்புதமான அருமையான

ஒரு நடிகர் என்பதுமட்டும் தான் உண்மை இவரது வாரிசுவான பிரபுவால் அந்த இடத்தை நிரப்பமுடியவில்லை என்பதே நான் பார்த்த விடயம் .[கலைஞன் என்றவகையில்] அந்த இடத்தை பிரபுவின் மகன் நிரப்பினால் தமிழ் கலை உலகம் மகிழ்ச்சி கொள்ளும்.பெருமைப்படும்.............ஆனால் அவரது பேரனாகிய [உண்மையா]சியாம் ????? பிரபுவை விட சிறந்த நடிகர் என்பதே எனது ஆதங்கம்...ஆனால் அவரைப்பற்றி ஏன் உந்த திரை உலகம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதே எனது அடுத்த கேள்வி ........என் மூன்றாவது கேள்வி உண்மையில் சியாம் சிவாஜி கணேசனுடைய பேரனா.??????......உண்மையில் நடிகர் திலகம் என்னும் பெயருக்கு தகுதிவாய்ந்த சிவாஜி கணேசனுடைய பெயரை இவர்கள் நிலை நிறுத்துவார்களா ??????ஆனாலும் நான் எம் ஜி ஆர் ரசிகந்தானுங்கோ................ :D :D

சிவாஜியின் வாரிசான சிவகுமாரும் அவரது பேரன்களான சூர்யா மற்றும் கார்த்தி அவருடைய பெயரைக் காப்பாற்றுகிறார்கள்தானே? :D :D :D

என்ரை காலத்து ஆக்களுக்கு ஊர்முழுக்க பிள்ளையளப்பா.......இப்பத்தையான் பொடியளுக்கு ஒரு பிள்ளைக்கே கஸ்ரமப்பா :D:lol::)

கு.சா. உங்கட காலத்துப் பெண்கள் துணிவில்லாதவர்கள். ஆனால், இப்போதைய பெண்கள் பிள்ளை பெற்றவுடன் மிரட்டத் தொடங்கிவிடுவார்கள். :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.