Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியிலிருந்து 8 வீராங்கனைகள் நீக்கம்

Featured Replies

லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து பாட்மின்டன் வீராங்கனைகள் 8 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த 8 வீராங்கனைகளும், வலுவான அணிகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரை விசாரித்த பாட்மின்டன் சங்கம், அந்த 8 வீராங்கனைகளையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://tamil.yahoo.com/ஒல-ம்ப-க்-ப-ட்ட-120800209.html

  • தொடங்கியவர்

[size=5]The women's doubles pair of (clockwise from top left) China's Wang Xiaoli (L) and Yang Yu, South Korea's Jung Kyung Eun (Top) and Kim Ha Na, [/size]

[size=5]Indonesia's Greysia Polii and Meiliana Jauhari and South Korea's Ha Jung-eun (L) and Kim Min-jung during their matches. The players have been disqualified for "not using one's best efforts to win a match."[/size]

f54248924ec5adc150ffb5b963f2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான பதக்கங்களை, சீனா எடுத்துக் கொண்டிருப்பதால்....

அடுத்த ஒலிம்பிக்குக்கு, சீனாவை சேர்க்கக்கூடாது. :D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

01-olympics-chiefs-launch-prob.jpg

ஒலிம்பிக் பேட்மிண்டன்: வேண்டுமென்றே மோசமாக ஆடிய வீராங்கனைகள்- விசாரணைக்கு உத்தரவு!

லண்டன்: அடுத்த சுற்றில் எளிதான அணியுடன் மோத வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே மோசமாக விளையாடியதாக சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்கள் பேட்மிண்டன் ஜோடிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்கு சர்வதேச பேட்மிண்டன் கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் சீன வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத அளவுக்கு தங்கப் பதக்கங்களைக் குவித்து வருவது குறித்து சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், தற்போது சீனா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா பேட்மிண்டன் வீராங்கனைகள் மோசடி ஆட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, தென் கொரியாவைச் சேர்ந்த 2 ஜோடிகள் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பேட்மிண்டன் ஜோடி மீதுதான் தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

வெம்ப்ளி அரங்கில்தான் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. உலகத் தரம் வாய்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் இங்கு கடுமையாக போராடி விளையாடி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டும், தங்களுக்கு காலிறுதிப் போட்டிகளில் எளிதான அணி வர வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே தோற்பது போல விளையாடியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இதையடுத்து இந்த நான்கு ஜோடிகள் மீதும் விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்திருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச பேட்மிண்டன் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு ஜோடிகளும் ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர். இந்த நிலையில் கடைசி சுற்றுப் போட்டியில் அவர்கள் மோதியபோதுதான், காலிறுதியில் எளிய அணியுடன் மோத வேண்டும் என்பதற்காக தங்களது கடைசிப் போட்டியில் தோற்பது போல இவர்கள் விளையாடியுள்ளனராம்.

சீனா வீராங்கனைகளான வாங் சியோலி மற்றும் யூ யாங் ஜோடி, கொரிய வீராங்கனைகளான ஜங் கியூரங் யூன் மற்றும் கிம் ஹா னா ஜோடியுடன் விளையாடியபோது வெற்றி பெறும் எண்ணத்திலேயே விளையாடவில்லை. மாறாக எளிதான ஷாட்களைக் கூட அடிக்காமல் வேண்டும் என்றே விட்டதாக புகார் எழுந்தது.

இதற்கு முக்கியக் காரணமாக, இப்போட்டியில் வென்றால் முதலிடத்தைப் பிடித்து விடும் இந்த சீன ஜோடி. ஆனால் அப்படி வந்தால், தங்களது நாட்டைச் சேர்ந்த டியான் குயிங் மற்றும் ஜாவோ யூன்லாயிடம் மோத வேண்டி வரும். அதை இறுதிப் போட்டி வரையாவது தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே நேற்றைய போட்டியில் கொரியாவிடம் தோற்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடியதாம் இந்த சீன ஜோடி என்கிறார்கள்.

அதேசமயம், நேற்றைய போட்டியில் கொரிய வீராங்கனைகளும் கூட தோற்பது போலவே விளையாடினர். இரு அணியினரும் வேண்டும் என்றே விளையாடுவதைப் பார்த்த போட்டி நடுவர் இரு அணி வீராங்கனைகளையும் கூப்பிட்டு ஒழுங்காக விளையாடுமாறு எச்சரித்தார்.

இதையடுத்து போட்டி தொடர்ந்தது. இப்போட்டியில் கொரிய ஜோடி 21-14, 21-11 என்ற் செட் கணக்கில் வென்றது.

இதேபோல இன்னொரு கொரிய ஜோடியான ஹா ஜங் இயூன், கிம் மின் ஜங் ஜோடியும், இந்தோனேசியாவுக்கு எதிரான போட்டியில் தோற்பது போல விளையாடியது. அதே போல இந்தோனேசிய ஜோடியும் வேண்டும் என்றே தோற்கும் நோக்கில் ஆடியது. ஆனால் இந்தப் போட்டியில் இந்தோனேசியாவே வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியிலும் இரு நாட்டு வீராங்கனைகளும் வேண்டும் என்றே விளையாடியதால் போட்டியைப் பார்த்தவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். மேலும் போட்டி நடுவரும் கோபமடைந்தார். இரு அணியினரையும் அழைத்து கடுமையாக எச்சரித்தார்.இரு அணியினரையும் தகுதி நீக்கம் செய்யப் போவதாக கடுமையாக எச்சரித்தார்.

வேண்டும் என்றே விளையாடியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள, சீன, தென்கொரிய, இந்தோனேசிய அணிகளால் ஒலிம்பிக் போட்டிகளில் சர்ச்சை வலுத்துள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

அழுகுணி ஆட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதையநிலையில் விளையாட்டில் வெல்ல யுக்திகளும் அவசியம்

எனவே தப்பென்று சொல்ல முடியாது

லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தமது நாட்டு மகளிர் இறகுப் பந்து அணியினர் தெரிந்தே தோல்வியடையும் வகையில் விளையாடினர் என்று இந்தோனேஷியா ஒலிம்பிக் அணியின் ஒரு அதிகாரி பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்தச் சுற்றில் சுலபமான ஒரு போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில், அந்த வீராங்கணைகள், தமது அணி இடம்பெற்றிருந்த பிரிவின் கடைசிப் போட்டியில் அவ்வகையில் விளையாடினர் என்றும் அந்த அதிகாரி தெவித்துள்ளார்.

மோசமான வகையில், தோல்வியுறும் எண்ணத்துடன் விளையாடிய இரண்டு இந்தோனேஷிய ஜோடி மற்றும் தென் கொரியா, சீனா ஆகியவற்றிலிருந்து தலா ஒரு ஜோடியையும் சர்வதேச இறகுப் பந்து சம்மேளனம் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெறுவதிலிருந்து தடை விதித்தது.

இதனிடையே முன்னர் ஒலிம்பிக்ஸில் இறகுப் பந்துப் போட்டியில், இந்தோனேஷியா சார்பில் தங்கப் பதக்கம் வென்றவரான அலன் புடிகுஸுமா, இந்த வகையில் தான்கூட முன்னர் தெரிந்தே சில போட்டிகளில் தோல்வியடையும் வகையில் விளையாடியாதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

120802032811_yu_yang_304x171_afp_nocredit.jpg

ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள யு யாங்

முக்கியமான போட்டிகளுக்கு உடல் சக்தியை சேமித்து வைத்துக் கொள்ளும் வகையிலேயே இவ்வாறு தாமும் செய்ததாக புடிகுஸுமா கூறியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சீன வீரர்களில் ஒருவரான யு யாங், இறகுப் பந்துப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமது நாட்டு அணி ஒலிம்பிக் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்று கூறி சீனாவின் அரசு தொலைக்காட்சியில் அதன் இறகுப் பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மன்னிப்பு கோரியுளார்

http://www.bbc.co.uk/tamil/sport/2012/08/120802_indonesiabadminton.shtml

  • கருத்துக்கள உறவுகள்

120802032811_yu_yang_304x171_afp_nocredit.jpg

முக்கியமான போட்டிகளுக்கு உடல் சக்தியை சேமித்து வைத்துக் கொள்ளும் வகையிலேயே இவ்வாறு தாமும் செய்ததாக புடிகுஸுமா கூறியுள்ளார்.

புடிகுஸூமாவுக்கு, குசும்பு கூடிப்போச்சுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.