Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் - அவர்களுக்காக 2 முறை ஆட்சியை இழந்தோம்: டெசோவில் முழக்கமிட்டார் கருணாநிதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi-deso-150-seithy.jpg

[size=4]இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.[/size]

[size=4]சென்னை, அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.[/size]

[size=4]மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுள்ளனர்.[/size]

[size=4]ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில் கூறியதாவது,[/size]

[size=4]'இலங்கைத் தமிழர்களுக்கு திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.[/size]

[size=4]மேலும் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்ததையும் திமுக நடத்திய போராட்டங்களையும் தமது உரையில் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார். இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆய்வரங்கில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

டெசோவில் முழக்கமிட்டார் கருணாநிதி!

மனுசனுக்கு பேசவே கஷ்டமாயிருக்கு...இவர் எப்படி முழக்கமிட்டிருப்பார்?

அன்று ஆட்சி இழப்புக்களுக்கு கலைஞரின் கையாலாகாத்தனமே காரணம்! ஈழத் தமிழர் ஆதரவு என்பது மக்களை மடையர்கள் என நினைத்து ஏமாற்றும் முயற்சி.

உள்நாட்டு அரசியலை முன்னிறுத்தியே கலைஞர் மட்டுமல்ல ஜெயலிதா உட்பட ஏனைய பெரும்பாலானவர்களின் ஈழத் தமிழர் ஆதரவு இருந்து வந்துள்ளது. இதில் வைகோ, நெடுமாறன், எம்.ஜி.ஆர். போன்ற ஒரு சிலரே விதிவிலக்காக இருந்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஆட்சியைத்தான் இழந்தாய் ஈழத்தில் எமது உறவுகள் உனது நடிப்பை நம்பி தமது சொந்தங்களை எல்லோ இழந்தனர்

அரசியலில் நீ பதவியில் இருப்பதற்காக சொந்தங்களின் உயிருடன் விளையாடி இருக்கின்றாய் உன்னை ஒருபோதும் மன்னிக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்ததையும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.

கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை.

இலங்கையில் ராசபக்சா கூட்டம் எழுதிப்பிடித்த பாதுகை "Karunanidhi Symbol of Corruption" என்று. வசிடர் வாயால் விசுவாமித்திரர். ப்தவி இழந்தகதை சொல்லி யாரை ஏமாற்றுகிறார். ஊழல் பேர்வழிகளான காங்கிரசும் கருணாநிதியும் ஆடிய இன்னொருநாடகம் அது. "அதாவது நான் அடிப்பது போல அடித்துக்கொண்டிருக்கிறேன். நீ அழுவது போல அழுது கொண்டிரு" .

இரண்டுமுறை ஈழத்திற்கு ஆதரவு கொடுத்ததிற்காக கருணாநிதியின் பதவியை பறித்த காங்கிரஸ் இந்த முறை ஏன் அனுமதி கொடுத்ததென்று ஏன் இன்னமும் காங்கிரசோ அல்லது கருணாநிதியோ விளங்கப்படுத்தவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.