Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் கோடைக்கு குளிர்ச்சியூட்டிய காமதேனு!

Featured Replies

ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று.

killlinochchi.jpg

இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்!

1996ம் ஆண்டுக்கு முன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் அல்லது கிளிநொச்சிக்கு விஜயம் செய்தவர்கள் அனைவரும் இந்தக் காமதேனு என்ற பெயரை அறியாமல் இருந்திருக்கமாட்டார்கள்.கிளிநொச்சி நகரத்துக்கு வந்தால் ஒரு முறையேனும் காமதேனுவுக்கு போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எனக்குத் தெரிய காமதேனுவின் தரத்திற்கும் சுவையிற்கும் நிகராக இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்த காலத்திலும் கிளிநொச்சியில் காமதேனுவினை விஞ்ச (மிஞ்ச) எதுவும் வரவில்லை என்றே கூறலாம். கிளிநொச்சி நகரத்தில் A9 வீதியில் அமைந்து இருந்தது காமதேனு.

jjjjjjjjjjj.jpg

நான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த இடம் கிளிநொச்சி என்ற படியால் காமதேனுவுக்கும் எனக்குமான உறவு அதிகம் என்றே சொல்லலாம்.கிழமையில் எப்படியும் ஜந்து அல்லது ஆறு தடவை அங்கே போய் விடுவேன். காமதேனுவுக்கு போவது என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். அப்ப மிகவும் சின்னப்பையன் என்பதால் எப்படியும் வீட்டில் அடம் பிடித்து அப்பாவுடன் போய் விடுவேன். என்னைப்போல சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காமதேனு அனைவரையும் ஈர்க்கும் ஒரு சொல்லாக மாறியிருந்தது.

IRIN115C.jpg

சரி காமதேனு என்றால் என்ன என்று கேட்கிறீஙகளா? சொல்கின்றேன் கேளுங்கள்.காமதேனு என்பது ஒரு குளிர்களி நிலையம். இதனைக் குளிர்பாண நிலையம் என்றும் சொல்லலாம்.குளிர்பாணத்தை விட குளிர்களிதான் காமதேனுவில் பிரபலம். 60 ரூபாய்க்கு ஒரு பெரிய கப் நிறைய குளிர்களியை வைத்து அதில் அழகாக பழங்களினால் அலங்காகரம் செய்து அதில் ஒரு வேபர்ஸ் (Wafers) பிஸ்கட்டினை சொருகி தருவார்கள். (இதனை ஸ்பெஷல் ஐஸ்கிரீம் என்றும் அழைப்பார்கள்) கடும் வெய்யிலில் அதை அருந்துவது தேவாமிர்தம் அருந்துவது போல இருக்கும். ஏன் என்றால் எம்மைப் பொறுத்த வரை பாட நூல்களில் படித்த தேவாமிர்தம் எனப்படும் சொல்லுக்கான சுவையினை நாக்கில் உணரச் செய்தது இந்த காமதேனு தான்!.

ice-cream11.jpg

1996ம் ஆண்டில் அப்போதைய யுத்த சூழ் நிலையின் காரணத்தினால் மக்கள் இடம் பெயர்ந்து கிளிநொச்சி நகரை விட்டுச் சென்று 1998ம் ஆண்டு கிளிநொச்சியில் மீளக் குடியேறிய போது மீளவும் கிளிநொச்சி நகரத்தில் காமதேனுவும் இயங்க ஆரம்பித்தது. மீண்டும் காமதேனு பிரபலமாகத் தொடங்கியது. ஆனால் சிறிது காலத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தீடீர் என்று காமதேனு மூடப்பட்டது. அதன் குளிர்களியை ருசித்த பலருக்கு அது பெரும் கவலை தான். பின்னர் கொஞ்ச நாட்களில் அமுதசுரபி எனும் பெயருடன் அதே இடத்தில் குளிர்களி நிலையம் இயங்கத் ஆரம்பித்தது.

P1060460+%2528Medium%2529.JPG

காமதேனு என்ற பெயரில் இருந்த நன்மதிப்பின் காரணமாக அது இயங்காமல் போனதால் அதன் குளிர்களியை சுவைக்க முடியாமல் போன பலருக்கு அதே இடத்தில் இயங்கிய அமுதசுரபி கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனாலும் காமதேனு அளவுக்கு அமுதசுரபி பிரபலம் அடையவில்லை. காலப்போக்கில் அமுதசுரபி குளிர்களி நிலையம் அமுதசுரபி பேக்கரி யாக மாற்றமடைய குளிர்களி நிலையம் முற்றாக மூடப்பட்டது. அதன் பின்னர் பல குளிர்களி நிலையங்கள் கிளிநொச்சியில் தோன்றினாலும் காமதேனு அளவிற்கு ஒன்றுமே புகழ் பெறவில்லை. மீளவும் ஒரு இடப்பெயர்வை 2008ம் ஆண்டில் கிளிநொச்சி மண் சந்தித்து. இதன் பின்னர் மீண்டும் மக்கள் தற்போது அ(இ)ங்கே குடியேறியுள்ளார்கள். இப்போதும் காமதேனு அமைந்திருந்த அந்த இடத்துக்கு செல்லும் போது பழய ஞாபகங்களில் இருந்து மீளமுடியவில்லை. சந்தோசமாக சின்ன வயதில் காமதேனுவில் குளிர்களி அருந்தியது மீண்டும் என் நினைவலைகளைத் தாலாட்டுகின்றது.

kilinochchi1.jpg

எனக்கு மட்டும் இல்லை கிளிநொச்சியில் காமதேனுவில் குளிர்களி அருந்திய அனைவருக்கும் அந்த ஞாபகம் வருவது தவிர்கமுடியாதது. காலவோட்டத்தில் காமதேனு என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கு மறந்துவிட்டாலும்; அங்கே அருந்திய குளிர்களியின் சுவையினை பலராலும் என்றும் மறக்கமுடியாது. எத்தனை குளிர்களி நிலையம் கிளிநொச்சியில் வந்தாலும் காமதேனுவுக்கு நிகர் என்றுமே காமதேனு தான்!

காலப் பெரு வெளியில் கரைந்து போன நினைவுகளில் அழிக்க முடியாத நிழற்படமாக எம் நெஞ்சத்தில் இன்றும் நிழலாடுகின்றது காமதேனு!

அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:

குளிர்களி: ஜஸ்கிறீம்.

குளிர்பானம்: சோடா, சர்பத், கூல் டிரிங்க்ஸ்

அப்ப: அப்போது.

நன்றி - ஈழவயல்

எல்லாம் தொலைத்தவர்களாய் நாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள ஜஸ்கிறீமை விட ஊரில் ஜஸ்கிறீம் சுவையானது...பதிவுக்கு நன்றி

காமதேனு ஞாபகங்களை மீட்டதற்கு நன்றிகள்.

இப்படியான காலத்தால் தொலைந்தாலும் நினைவுகளில் தொலையக் கூடாதனவற்றை தொடந்து இணையுங்கள்.. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போல் பலரின் பால்ய காலங்களுடன் சேர்ந்தே தொலைந்துபோனவை இவை....படித்து முடித்தபோது எழுந்த பெருமூச்ச்சின் வெம்மை நெருப்பாய் சுடுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.