Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசுக்கு ஆபத்தில்லை: சோனியா காந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய் அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகல், அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, பரபரப்பான அரசியல் சூந்நிலைகளுக்கு ம்த்தியில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி,குலாம் நபி ஆசாத்,அம்பிகா சோனி உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். ராகுல்காந்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.அதுபோல் பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் செயற்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரதமர் கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களை பா.ஜனதா கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறது.பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை பா.ஜனதா அரசியலாக்கக் கூடாது என்று செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

செயற்குழுவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது,தற்போதைய சூழலில் பொருளாதார சீர் திருத்தங்கள் ஏன் தேவை என்பதை விளக்கினார்.பிரதமரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு கொடுக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 3 வழிகள் உள்ளதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட்டத்தில் பேசினார்.அவர் கூறுகையில், உற்பத்தியை பெருக்கி, அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும். பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். மானியத்தை குறைக்க வேண்டும் என்றார்.

[size="2"] [/size]

எனவே வெளிநாட்டில் இருந்து பணத்தை கொண்டு வந்து நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுத்து,மானியங்களை குறைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சியைப் பெற கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.அதை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக் கொண்டது.

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருவது நல்லது. அது விவசாயிகள், இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இதுபற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமாக எடுத்து கூற தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அன்னிய முதலீடு விளக்க கூட்டங்கள் நாடெங்கும் நடத்தப்படும்.அந்தக் கூட்டத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றியும் நாட்டு மக்களிடம் விளக்கப்படும்.

மத்திய அரசுக்கு ஆபத்தில்லை

மம்தா பானர்ஜி கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆபத்து இருப்பது போன்ற மாயை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று செயற்குழுவில் சோனியா உறுதிபட தெரிவித்தார்.

மத்திய அரசு நிலையானதாக இருப்பதாகவும் எனவே ஆட்சி பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை என்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் சோனியா கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வரை முக்கிய நலத்திட்டங்களை அமல்படுத்த முடியாது. இதை உணர்ந்து பா.ஜனதா கட்சி, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்மறையாக விமர்சிப்பதை கைவிட்டு, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்து கொள்ள வேண்டும் என்று சோனியா கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு ஜனார்த்தனன் திவேதி கூறினார்.

விகடன் செய்திகள்

  • கருத்துக்கள உறவுகள்

தானைத்தலைவரின் ஆதரவு இருக்கும்வரை காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை.. :icon_mrgreen:

தமிழ் நாட்டுக்குள் வந்து தமிழ் மக்களை சிங்கள இராணுவம்கொல்லுவதை மத்திய அரசு பார்த்துக்கொண்டிருந்தாலும் மத்திய அரசுக்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம் 3மணி உண்ணாவிரதி

[size=4]சிறுவர்த்தகங்களை அனுமதித்து மூலம் இந்திய அரசியவாதிகளின் கருப்பு பணம் இன்னும் வேகமாக வெளிநாடுகளில் வளரும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.