Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உளவுத்துறை இயக்குநருக்கு வைகோ கிடுக்குப்பிடி!

Featured Replies

இந்திய உளவுத்துறை இயக்குநருக்கு வைகோ கிடுக்குப்பிடி!

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

அதன் பின்னரும், விடுலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாயம் சென்னையில் கூடுவதாகவும், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் அதில் நேரில் ஆஜராகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாய கூட்டம் சென்னை எம்.ஆர்.பி.நகரில் `இமேஜ்’ அரங்கத்தில் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற தீர்பாய விசாரணையில் வைகோ பங்குபெற்று, உள்நாட்டு உளவுத்துறை இயக்குனர்.திரு.சுமன் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதியிடம் அனுமதி கோரினார், இந்த கோரிக்கையை முதலில் அரசு தரப்பு எதிர்த்தது.ஆனாலும் நீதிபதி ஜெயின் வைகோவின் கோரிக்கையினை ஏற்று சுமனை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தார். முன்னதாக நீதிபதி அவர்கள் இரு தரப்பினரையும் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணகளை முழுமையாக படித்து விட்டீர்களா என்று கேட்டார், வைகோ மற்றும் எதிர் தரப்பினர் “ஆம்” என்றனர்…

பிறகு வைகோ உள்நாட்டு உளவுத்துறை இயக்குனர்.சுமனை விசாரிக்க தொடங்கினார்…. அவரிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் “இல்லை” என்றும், “என்னிடம் சரியான தகவல் தெரியவில்லை.அது நீதிபதி அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளது” என்றும் கூறி கொண்டிருந்தார்..( அந்த ஆவணம் இன்னும் எதிர் தரப்பிற்கு கொடுக்கப்படவில்லை.இறுதி விசாரணையின் போது கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது..)

Vaikoo-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

வைகோ கேட்ட சில கேள்விகளும் அதற்கு சுமன் அளித்த பதில்களும்…

வைகோ கேள்வி: கடந்த 24 மாதங்களில், இந்தியாவில் விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ??

சுமன் பதில் : நிறைய வழக்குகள் இருக்கின்றது சரியாக தெரியவில்லை..

வைகோ கேள்வி: விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் உங்கள் கணக்கின் படி இந்தியாவில் எத்தனை உள்ளது??

சுமன் பதில் : நிறைய அமைப்புகள் உள்ளது… எண்ணிக்கை ஆவணங்களில் உள்ளது…. எனக்கு நியாபகமில்லை.

வைகோ கேள்வி: (மதிமுக தலைவர் என்ற முறையில் கேட்கிறேன் ) விடுதலை புலிகளின் ஆதரவு அமைப்புகள் பட்டியலில் மதிமுக-வும் உண்டா?

சுமன் பதில் : ஆம்.

வைகோ கேள்வி: விடுதலைபுலிகள் அமைப்புக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு என்று கூறுகிறீர்கள், அதற்க்கு தகுந்த ஆதாரமோ, ஏதேனும் வழக்குகளோ உண்டா??

சுமன் பதில்: அப்படி எதுவும் இல்லை…. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறும் மத்திய அரசின் வாதத்திற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.

இவ்வாறு விசாரணை தொடர்ந்தது…. .வைகோவின் எந்த ஒரு கேள்விக்கும் சுமன் அவர்களால் பதில் கூற முடியவில்லை, இதை கவனித்த நீதிபதி ஜெயின், .உள்துறை இயக்குநர் சுமனிடம் ’உங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணகளை முழுமையாக படிக்காமல் வந்துவிட்டது போல தெரிகிறது’ என்று கடிந்து கொண்டார்.. விவாதம் இவ்வாறு தொடர்ந்தது ..

தீர்பாயத்தின் விசாரணை நாளையும் காலை 10.30 மணிக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது … அப்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர். வைகோ தமது தரப்பு வாதங்களை முழுமையாக எடுத்து வைக்கவுள்ளதாக தெரிகிறது!

http://www.aanthaireporter.com/?p=11634

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா

வை. கோ அண்ணாவிடம் வளமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

அண்ணாவின் திறமையே தரவுகளையும் வரலாற்றையும் துல்லியமாக படித்து தெரிந்து வைத்திருப்பது தானே.......

Edited by விசுகு

[size=5]சட்டத்தரணிகள் நிறையப்பேரை நாம் உருவாக்கவேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சட்டத்தரணிகள் நிறையப்பேரை நாம் உருவாக்கவேண்டும்.[/size]

[size=5]நிச்சயமாக, திறமையான சட்டத்தரணிகளை உருவாக்குவதன் மூலம் எமக்கும் எமது இனத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நியாயம் தேடமுடியும். [/size]

[size=5]சட்டத்தரணிகள் நிறையப்பேரை நாம் உருவாக்கவேண்டும்.[/size]

சுமந்திரன், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்ற அரைவேக்காட்டு சட்டத்தரணிகள் தேவை இல்லை. ஒரு விவாதத்துக்குத் தேவையான ஆதாரங்களைக் கூட தேட வக்கில்லாத பேர்வழிகள். இலகுவில் விலை போகக் கூடியவர்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், யோகேஸ்வரன் போன்றவர்களுக்கு இருக்கும் வாதத் திறமை இவர்களுக்கு இல்லவே இல்லை.

நான் சந்தித்த 80 % ஆன ஈழத் தமிழ் சட்டத்தரணிகள் கடைந்தெடுத்த முட்டாள்கள்.

"தமிழர் விடுதலைக் கூட்டணி" சட்டத்தரணிகளின் கூட்டணியாகவே இருந்தது. இந்த அரைவேக்காடுகளால் தான் தமிழ் மக்கள் பிரச்சினை இவ்வளவு சிக்கலாக மாறியது.

வைகோ, துரைசாமி போன்ற சிறந்த சட்டத்தரணிகளை நாம் உருவாக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.