Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட த தே கூ இணக்கம்! - சம்பந்தன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Era_Samapanthan150.jpg

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இந்தியாவுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமாலை 5 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட்டமைப்பினரிடம் எடுத்து விளக்கினார். தமிழ் மக்கள் இலங்கையில் சுய மரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற தனது நிலைப் பாட்டிலிருந்து இந்திய அரசு பின்வாங்காது என்பதை மன்மோகன் தம்மிடம் வலியுறுத்தினார் என்று சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

இந்தியக் காட்டுமிராண்டிகளுடனா?

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தமிழ் மக்களை பகடைக்காயாக பாவிக்க இந்தியாவிற்கு சம்பந்தன் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஈழத்தமிழர் பற்றிய வெளிப்படையான மற்றும் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை சம்பந்தன் தெரிந்துகொண்டுதான் இந்த நிலைப்பாட்டை எடுத்தாரா என்பதற்கு அவர் தமிழ் மக்களுக்கு விளக்கம் சொல்லவேண்டும்.

ஒரு மத்திய அரசின் மந்திரியும் இவருடன் கூட்டறிக்கை சேர்ந்துவிட வரவில்லை. இவர் ஏன் தனி அறிக்கை விட்டு தன்னைத்தான் அவமானப்படுத்துகிறார். நாளைக்கு இந்தியா இது ஒன்றையும் தான் சொல்லவில்லை என்றும் சொல்லும்.

[size=5]டில்லி விஜயம் திருப்தி! - இலங்கை அரசு மீது இந்தியா கடும் ஆத்திரத்தில் உள்ளது என்கிறார் சுமந்திரன்[/size]

தமிழர் பிரச்சினை குறித்தும் தற்போதுள்ள அரசியல் தீர்வு முயற்சிகளின் தேக்க நிலை குறித்தும் இந்தியாவின் முழுமையான கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள், இந்திய மீனவர் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை இந்திய அரசு கண்டித்துள்ளதுடன் கடும் ஆத்திரத்துடனும் உள்ளது என்றும் கூறினார்.

புதுடில்லியிலிருந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் திருப்தி அளிக்கக்கூடியதாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.

இலங்கை திரும்பிய பின்னர், அரசியல் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவீர்களா? அதற்கு இந்தியாவிடமிருந்து ஏதாவது அழுத்தங்கள் வந்தனவா என்று கேட்டதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், 'இல்லை. உடனடியாக அப்படிச் செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. அப்படியான அழுத்தங்கள் எதுவும் வழங்கப்படவும் இல்லை' எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் உத்தரவாதத்துடன் தீர்வுப் பேச்சுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், 'அப்படியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. என்றபோதிலும் இப்போதுள்ள நிலைமையை தெளிவாகக் கூறியிருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்' என்று கூறினார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தால் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் பேசியபோது இந்திய அரசு என்ன கூறியது என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், 'தமிழர் தாயகத்தில் இராணுவத்தால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளப் பட்டியல் இட்டுக் காட்டினோம். இந்திய அரசு இது தொடர்பில் இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள், இந்திய மீனவர் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை இந்திய அரசு கண்டித்துள்ளதுடன் கடும் ஆத்திரத்துடன் உள்ளது' எனப் பதிலளித்தார்.

http://ponguthamil.c...82-ccc61fd94b26

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

1153015029சுரேஷ்%20பிரேமச்சந்திரன்.jpg

இலங்கையின் ஏமாற்று வித்தையை இந்தியா உணர்ந்து விட்டது!

October 14, 2012 08:22 am

lg-share-en.gif

இலங்கை தொடர்பில் இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலகட்டம் விரைவில் வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர், ஆர். சம்பந்தர் தலைமையில் டெல்லி சென்றுள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்.

அந்தக் குழுவில், இடம் பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பது குறித்து பேட்டியளித்தார்.

´´இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட பல தலைவர்களிடம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றவில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது.

அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண முடிகிறது. இலங்கை அரசை எவ்வளவு தூரம் நம்புவது என்ற கேள்விகள் இருக்கின்றன. அதனால், இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலம் விரைவில் வரும்’’ என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை ஜனாதிபதி அரசிடமும் தன்னிடமும் அளித்த உறுதிமொழியின்படி எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்று இந்தியாவும் கருதும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக, அகிம்சைப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அப்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று இந்திய அரசிடம் தாங்கள் எடுத்துரைத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

சீனாவின் ஆதிக்கம், குறிப்பாக வடமாகாணத்தில் ராணுவ முகாம்களை நவீனப்படுத்துவதிலும், ராணுவக் குடியிருப்புக்கள் கட்ட நிதியுதவி அளிப்பதிலும் சீனா அதிக முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அது இலங்கைத் தமிழர் மக்களால் ஏற்க முடியாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இதுதொடர்பில் இந்தியா ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவும் முரண்பாடுகள் குறித்துக் கவலை வெளியிட்ட இந்தியப் பிரதமர், அந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், மிக விரைவில் அதுதொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும் என்று பிரதமரிடம் சம்பந்தர் அவர்கள் உறுதியளித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியாக ஒரு சரியான அமைப்பை முன்னெடு்த்துச் செல்ல ஒரு வலுவான கட்சி தேவை. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அப்படிப்பட்ட வலுவான கட்சியாக மாற்ற சம்பந்தர் அவர்கள் நிச்சயம் பணியாற்றுவார் என்று நம்புவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

(பீபீசி)

இந்தியர்கள் றால் போட்டு சுறா பிடிக்கப்பாக்கிறார்கள்..

றால், தன்னிலை தெரியாமல் மற்ற றால்களிடம், ஓட்டை படகு மீன்காறன், சுறாவின் மீது கடும் கோபமாக இருக்கிறான் எண்ட் பீத்திகொணடு திரியுது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.