Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 வருடங்களுக்கு மேலாகக் காணாமல் போயிருந்த தாயாரை, கைதடி முதியோர் இல்லத்தில் கண்டு நெகிழ்ந்த வயோதிபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

old-lady-seithy-20121013-150.jpg

கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.

ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்த ஈஸ்வரனுக்குத் தெரியாது.இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.

பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.

தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்த ஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=68306&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

போரில் குடும்பத்தையே இழந்தவர் அன்னையைக் கண்டுள்ளார்.. என்ன ஒரு விந்தையான உலகம்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிவின் கொடுமை ஈழத்தில் பல உறவுகளிற்கு நன்கு தெரியும், இதன் வழியை அனுபவிக்காதவர்கள் ஈழத்தில் மிகமிக குறைவு இந்தனை வாசித்தபோது என்னை அறியாது கண்கள் கலங்கினது ..... சொந்தங்களிற்கு அடுத்த பிறவியிலாவது இப்படி ஒரு நிலைவரக்கூடது என்று வேண்டுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/4_1WP-vWMG0

அண்மையில் வாசித்த எத்தனையோ செய்திகளில் மனதை மிகவும் நெகிழ வைத்த செய்தி இது. அம்மா என்றாலே அரவணைப்பும் சிறகுக்குள் வைத்து காக்கும் அந்த பரிவும் தான் மனசுக்குள் வரும். தன் குடும்பத்தையே இழந்து பரிதவித்தவருக்கு மீண்டும் தாய் மடி கிடைப்பது என்பது எத்தகைய வரம் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/t-OY3PshnNM

  • கருத்துக்கள உறவுகள்

கல்மனதையும் கரையச் செய்வது..

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/t-OY3PshnNM

அழுவதற்கு கண்ணீருமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயின்பாசம்.......பிள்ளையின் பரிதவிப்பு........படைத்தவனின் கொடுமை....கண் கலங்குகின்றது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 30 வருடங்களாக எம்மவர்களில் பலர் வெவ்வேறு திசையில் பிரிந்து போய் இருக்கிறோம். உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத்தெரியாத நிலமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.