Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.

அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

தேர்தல் பிரசாரங்களில் புலிகளுக்கு எதிராகப் பேசாதீர் தனது கட்சியினருக்கு ஜெயலலிதா கடும் உத்தரவு

இந்திய பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கும் நிலையில், பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழக தொகுதிகளில் போட்டியிடும் தனது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களோ அவர்களுக்கு ஆதரவாக மேடைகளில் பேசும் முக்கியஸ்தர்களோ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருப்பதாக சென்னையில் இருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக 'பொடா" சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கும் கூடுதலான காலம் சிறையில் அடைக்கப்பட்டு இப்போது வெளியே வந்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றும் தேர்தல் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்கின்றனர்.

சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியும் கலைஞர் மு.கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க.வும் கூட்டாகச் சேர்ந்தே லோகசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த காலத்தில் ராஜீவ் காந்தி கொலையுடன் திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சி கூட, தேர்தல் கூட்டுக் காரணமாக, அந்த விமர்சனங்களையெல்லாம் பழைய கதையாக மறந்துவிட்ட நிலையில், தனது கட்சியினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசுவதனால், தேர்தலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை ஜெயலலிதா வெகுவாக உணர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள தனது வாசஸ்தலத்துக்கு அண்ணா தி.மு.க. வின் மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கீழ்மட்டக் கட்சித் தொண்டர்கள் கூட, வீணாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரைகளை ஆற்றாதிருப்பதை உறுதி செய்யுமாறு அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக சென்னைத் தகவல் ஒன்று தெரிவித்திருக்கிறது.

வைகோவின் பிரசாரங்களினால் காங்கிரஸ் கூட்டணிப் பக்கம் பெருமளவில் மக்கள் சாய்வதால் அச்சமடைந்திருக்கும் ஜெயலலிதா, தனது எதிரியான ரஜினிகாந்திடம் கூட்டத் தூது அனுப்பி, பழைய பகைமையை மறந்து செயற்படுவோம் என்று கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

மொட்டைத் தலையும் முழங்காலும்...!

~வன்னித்தலைமை, மட்டக்களப்பு-அம்பாறை போராளிகளுக்கு சமஅளவு அதிகாரங்களையும் பதவிகளையும் வழங்கவில்லை, கிழக்கிலங்கை பின்தங்கியிருப்பதற்கு வன்னித் தலைமையின் பாராமுகமே காரணம்| என்பதே கருணா தனது முடிவுக்காக முன்வைத்த குற்றச்சாட்டு.

மீண்டும் வன்னித் தலைமையுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால், இதுகுறித்து வன்னித்தலைமை என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்? - இது செய்தியாளரின் கேள்வி.

~உளவுத்துறை பொட்டம்மானையும், நிதித்துறை புகழேந்தியையும், காவற்துறை நடேசனையும் நீக்கி விடும்படி கூறுங்கள், நான் தலைவருடன் சமரசம் செய்து கொள்கிறேன்| - இது கருணா.

இந்த மூவரையும் நீக்குவதன் மூலம், கருணா கிளப்பியுள்ள கிழக்கிலங்கையின் பிரதேசவாதப் பிரச்சனை தீருவதற்கு எந்த வாய்ப்புமே இல்லை என்று பார்க்கும் பொழுது, கருணா எங்கேயோ சொதப்பி விட்டார் என்று இலகுவாகப் புரிந்து விடும்.

விடுதலைப் புலிகளின் தலைமையிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்த சில மணி நேரத்தில் வழங்கிய செவ்வியில், கருணா முன்வைத்த குற்றச்சாட்டும், அதற்கான நிவர்த்தி நிலைப்பாடும் இவை மட்டுமே.

பின்னர் சுதாரித்துக்கொண்டு, அதையும் இதையும் அடுத்தடுத்துச் சொன்னாலும், அந்த முதல் நாளில் அவர் கொடுத்த காரணம், அவரது நம்பகத்தன்மையை நலிவடைய வைத்துவிட்டது.

அடித்து முந்திக்கொண்டு நோர்வேயும், ஐப்பானும் தன்னிடம் ஓடிவந்து மடிப்பிச்சை கேட்கும், இறங்கிவந்து இணங்கிக்கொள் என்று தன்னிடம் கோரும், வன்னித் தலைமையை ஓர் இணக்கப்பாட்டிற்கு வரும்படி அழுத்தம் கொடுக்கும், இதற்கிடையில் கிழக்கிலங்கைத் தமிழர்கள் தன்னை கிழக்கின் விடுதலை நாயகனாகக் கொண்டாடுவார்கள் என்றெல்லாம் கருணா கனவுகண்டு கொண்டிருக்க, நடந்ததென்னவோ எதிர்மாறான நிகழ்வுகள் தான்.

நோர்வேயும் ஐப்பானும் ஓடிவந்தது என்னவோ உண்மைதான், கருணாவும் தனது திட்டப்படிதான் எல்லாமே நகர்வதாக அனுமானித்ததும் உண்மைதான், ஆனால், வந்தவர்கள் வன்னித் தலைமையைச் சந்தித்துவிட்டு, சத்தமின்றித் திரும்பியபோதுதான் கருணாவுக்கு நிஐங்கள் வெளிக்க ஆரம்பித்தன.

கருணா எதிர்பார்த்த திசையில் காய்கள் நகரவில்லை என்பதால், இனி காய்களை தானே நகர்த்த வேண்டிய கட்டாய நிலை. அந்த முயற்சியில் தான், தற்போது பத்திரிகை எரிப்புக்கள், கடையடைப்புக்கள், கைதுகள், வேட்பாளர் சந்திப்புக்கள் எல்லாமே. இருந்தாலும் இதுஹ

~நேத்துப் பிறந்த குரங்கு குட்டிக்கரணம் போட்டுக் காட்டினமாதிரி| தானும் தலைமைக்கும் புத்தி சொல்லப் போய் தன்னிலை கெட்டுப்போய், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறல், திண்டாட்டம்!

உண்மைகள் இப்போது அடுக்கடுக்காய் வெளிவர ஆரம்பித்துள்ளன.

- கடந்த ஐந்து வருடங்களாக, கருணா தனக்கான தனித் தலைமையில் குறிவைத்து செயற்பட்டமை

- தனது குடும்பத்தை மலேசிய நாட்டில் குடிவைத்ததோடு, தனக்கென பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்தமை

- தலைவரின் உத்தரவில் உள்ளெடுக்கப்பட்ட பெருந்தொகை ஆயுத தளபாடங்களை தனக்கு மட்டுமே தெரிந்த இடங்களில் மறைத்து வைத்தமை

- தலைமைக்குத் தெரியாமல், தனக்கென ஓர் உளவுப்படை வைத்திருந்தமை

- தலைமைக்குத் தெரியாமல், தனக்கென ஓர் உயர்பாதுகாப்புப்படையை உருவாக்கியமை

- தலைமைக்குத் தெரியாமல், வெளிநாடுகளில் முதலீடு செய்தமை

- தலைமையின் முடிவின்றி, தன்னிச்சையாக முடிவுகள் எடுத்தமை

- அமைப்பின் துறைகளுக்கான பிரத்தியேக பொறுப்பாளர்களோடு கலந்தாலோசிக்காது செயற்பட்டு வந்தமை

- தனது நடவடிக்கைகளை மேலிடத்திற்கு அறிவிக்க மறுத்தமை

- தனது நேரடி நிர்வாகத்தின் கீழ், தன்னைப் பலப்படுத்தும் நோக்குடன் தனியாக ஒரு பத்திரிகை நடாத்தியமை

- அமைப்பிலிருந்த தனது சகோதரர்கள் இருவரை, தனது இரகசியத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியமை

- இன்னும் பல பண மோசடிகள், காதல் லீலைகள், இரகசியத் தொடர்புகள் மற்றும் மிரட்டல்கள், வன்முறைகள் என்று இப்பட்டியல் நீண்டு செல்லும்.

ஆக, கருணா சுயநல பாதுகாப்புக்காக பிரதேசவாதத்தைத் து}க்கியிராவிட்டால், இப்போது மட்டக்களப்பு பிரதேசமே கதிகலங்கிப் போயிருப்பது குறித்து அவசியம் கவலைப்பட்டிருப்பார். ஆனால், மட்டக்களப்பு மக்கள் கதிகலங்கினாலென்ன, கண்ணீர் விட்டாலென்ன, தமிழர் வியாபாரங்கள் பாழாய்ப் போனாலென்ன, பறிபோனாலென்ன, யாருக்கு அவர்களைப் பற்றிக் கவலை? கருணா பிரதேசவாதம் மூலம் தன்னைக் காத்துக் கொள்ள முயன்றாரேயொழிய கிழக்கையல்ல. இதை இன்னும் ஒரு சிறுதொகை கிழக்கிலங்கை மக்கள் உணர்ந்துகொள்ளாது இருப்பது அதிசயமாக இருக்கிறது.

கிழக்கைப்பற்றிக் கவலைப்படாது, வடக்கின் விடுதலையை வென்றெடுப்பதாக இருந்தால், வடக்கு மட்டும் தனிஈழமாக மலர்ந்து, இருபது வருடத்துக்கு முன்னரே இரண்டாவது சிங்கப்பூராக மாறியிருக்கும். கிழக்கும் இணைந்த தமிழீழம் தான் தமிழரின் தாயகம் என்று உறுதியாக வன்னித் தலைமை இருந்ததால் மட்டுமே, இதுவரை இந்தக் கடுமையான போராட்டம். வடக்கை மட்டும் வென்றெடுப்பதே வன்னித் தலைமையின் நோக்கமாக இருந்திருந்தால், கருணா என்ற ஒரு தளபதியை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக்கூட வாய்ப்பிருந்திருக்காது. கருணா என்ற முரளீதரன், புலிகள் அமைப்பில் பால்குடியாக இருந்தபோதே, தமிழீழப் பிரச்சனை தீர்ந்து போயிருக்கும். ஆனால், கிழக்கும் தேவை, அதுவும் வடக்கின் சமஅளவு அதிகாரங்கள் படிமானங்களோடு ஒன்றாகத் தரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்த ஒருவர், ஈழத் தமிழரின் வரலாற்றிலேயே, வே.பிரபாகரன் ஒருவர் தான்.

1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற காலம் முதல், வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒன்றான தமிழர் தாயகம் என்று உரிமை கொண்டாடுவதில் தேர்தல் காலத்தில் பலர் குளிர்காய்ந்திருந்தாலும், வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழர் தாயகம் என்பதை, வெற்றியின் போதும் தோல்வியின் போதும், ஏன், இந்திய இராணுவம் கொடுரப் போர் புரிந்து, கிழக்கில் வரதராஐப்பெருமாளை முதலமைச்சராக பலவந்தமாக நியமித்து, வடக்கும் கிழக்கும் இரு மாகாணங்களாக ஒரு முதலமைச்சரின் கீழ் இயங்கும் என்று றீல் விட்டபோதும் கூட, வன்னித் தலைமை அடர்ந்த காட்டுக்குள் இருந்து, வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு பிரதேசமே தமிழர் தாயகமாக அமையமுடியும் என்று ஒற்றைக்குரலில் hPங்காரமிட்டது.

அப்போதெல்லாம், குலைக்காமல் வாலையாட்டிய சின்னன்கள், பதவியையும் புகழையும் பணத்தையும் சுகத்தையும் கண்டதும், நச்சுப்பாம்பாக உருமாறியிருப்பது சுயநலம் தவிர வேறெதுவுமில்லை. பிரதேசவாதம் என்ற மொட்டைத் தலைக்கும், பொட்டம்மான் என்ற முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது, நகைப்பிற்கிடமானது.

பொட்டம்மான் நிர்வகிக்கும் உளவுத்துறை, வடக்கு கிழக்கு குறித்த பிரதேசவாரியான எந்த முடிவையும் எடுப்பதில் பங்கெடுக்கப் போவதில்லை, பங்கெடுத்திருக்கவும் வாய்ப்பில்லை. நீதித்துறையும், நிதித்துறையும், சட்டத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட வடக்கு கிழக்கை பிரிப்பதா இணைப்பதா என்ற வாதத்திலும் பிரதிவாதத்திலும் கலந்து கொண்டிருக்க வாய்ப்பேதுமில்லை. ஆக, கருணாவுக்கு ஆறாவது அறிவு, மீதி ஐந்தறிவின் வேகத்தில் செயற்பட மறுத்திருக்கிறது என்பதே நிஐம்.

எல்லாம் இப்போது நன்றாகப் புரிந்து விட்டது. பிரதேசவாதம் பொய், போராளிகளைக் கேட்டது பொய், கிழக்கை விட வடக்கை அதிகம் அபிவிருத்தி செய்ததென்ற கோசம் பொய், கிழக்கின் தனியான விடுதலை என்ற பிரச்சாரமும் பொய். பொய்களுக்கு ஆயுள் சிறிது என்பதை முரளீதரன் புரியாவிட்டாலும், தமிழ் மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள்.

இறுதியாக முரளீதரனுக்கு விரிந்திருக்கும் இரு வாய்ப்புக்கள், இரண்டே இரண்டு வாய்ப்புக்கள், தெளிவாகத் தெரிகின்றன:

1) பொது மன்னிப்பை ஏற்று, சரணடைந்து, சாவைத் தவிர்த்து, சரித்திரம் படைத்து, தமிழினத்திற்கு நிரந்தரப் புகழ் சேர்ப்பது.

2) நோர்வேயின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஈழப் போராட்டத்தை முற்றாகத் துறந்து, தனது மனைவி குழந்தைகளுடன் குடித்தனம் நடாத்துவது.

இந்த இரு வாய்ப்புக்களுக்கும் கூட, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் காலஅவகாசம் மிக சொற்பமே. ஏப்ரல் 2, தேர்தல் நாள். ~தேர்தல் செல்லுபடியானது, பாராளுமன்றம் அமையும்| என்ற முடிவு அதைத் தொடரும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம். அதுவரைதான் அவகாசம் இருக்கிறது முரளிக்கு. இரண்டில் ஒரு முடிவை விரைவாக எடுத்து, விடைபெற வினயமாய் வேண்டுகிறோம்.

ஏனைய எல்லா முயற்சிகளுமே, தமிழினத்தின் நிரந்தரத் துரோகி என்ற பட்டத்துடன், ஈழத்தமிழர் வரலாற்றில் இன்னுமொரு ஈனப்பிறவியாகப் பதிவு செய்யப்படும் கோரநிலைக்கே கோலமிடும்.

அன்புடன்,

காவலு}ர் கவிதன்

ரொறன்ரோ, கனடா

நன்றி - தமிழ் நாதம்

  • தொடங்கியவர்

Sri Lanka votes in tense election

Voting is underway in Sri Lanka in an early election which is being seen as a referendum on the peace process with the Tamil Tiger rebels.

The country has been in crisis since a bitter dispute erupted between President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickramasinghe.

The president called elections four years early.

Neither of the two main political parties is expected to win an outright majority in parliament.

But Mr Wickramasinghe sounded confident, when he arrived to cast his vote at a polling station in central Colombo soon after it had opened.

"I am certain people will vote for peace," he said.

"I am confident of securing a majority of seats."

Queues formed outside polling stations even before they opened, officials said.

Heavy security is in place for the vote with soldiers fanning out across the island nation.

For the first time there will be election monitors at every polling station in the country.

Early elections

For more than two years there has been rivalry between the president and the prime minister, who come from different political parties.

In a surprise move last November, President Kumaratunga took over the defence, interior and information ministries, effectively crippling the prime minister's government.

Then in February, the president called early elections, saying the ruling party had jeopardised national security in peace negotiations with the Tamil Tigers.

If there is a hung parliament the Tamil National Alliance, backed by the Tamil Tigers, may hold the balance of power.

Adding to the acute uncertainty, the Tamil Tigers have seen an unprecedented split after a breakaway commander, Colonel Karuna, said he wanted to form his own administration in the east to prevent discrimination by northern Tamils.

There are fears that fighting will break out between the rival rebel factions.

Exodus

The east of the country is already in turmoil as a result of the division.

Hundreds of Tamil businessmen, doctors and university staff have fled the area after anonymous leaflets were dropped warning Tamils who originate from the north should leave or else face being burnt to death.

Colonel Karuna has denied being behind the threats, but they were carried on the front page of a newspaper he controls, the BBC's Frances Harrison reports from Colombo.

One local businessman said he recognised the rebels who came to his house and ordered him to leave with only a few rupees in his pocket.

Several Jaffna Tamil doctors have also left the hospital in Batticaloa, prompting staff there to mount a protest.

Other people speak of Colonel Karuna's men coming to Jaffna Tamil shopkeepers, locking the shops, taking the keys away and telling them to go.

It looks as if it was an attempt to rid the east of Tamils who are not loyal to the breakaway commander, our correspondent said.

European Union election observers said they were concerned that significant numbers of people were being threatened in the east and they said they totally deplored such attempts at intimidation.

Even if Mr Wickramasinghe does receive a fresh mandate at the polls, President Kumaratunga will still be president for another year and so the unhappy cohabitation between the presidency and parliament is likely to continue.

நன்றி - http://news.bbc.co.uk

  • தொடங்கியவர்

"High Scale Impersonations Taking Place in Jaffna- Anandasangaree

Bandula Jayasekara in Colombo, SLT 1.50 P.M Friday 2 April. TULF leader and Independent Candidate V. Ananddasangaree says that high scale impersonations are taking place in Jaffna with the same group of people going from booth to booth and casting other peoples votes. He told The Lanka Academic from Jaffna " The TNA/LTTE are transporting hundreds in buses. They would do even more if they have more vehicles. Even schoolboys are going and voting. They are voting on behalf of their fathers and grandfathers." The TULF leader said he had never seen this type of impersonations and mass scale rigging in Jaffna before. He accused the government for allowing the buses to ply freely with impersonators without taking any action. He said, " We warned that the LTTE had collected polling cards of the dead and the displaced much earlier and that they were planning to do this. It is happening right now under our own nose. Presiding officers are also helping them. May be they are helpless. This is why we asked for officers from Colombo to be sent here."

The TULF leader said that elections in Jaffna must be made null and void.

Yesterday, well informed Tamil sources in Jaffna said that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had planned a mass scale vote rigging to ensure the victory of the TNA by casting the vote of nearly 90,000 dead and displaced people. They said that the LTTE would use nearly 5000 cadres to carry the vote rigging exercise. A candidate from a small party said that the LTTE had already warned local monitors not to interfere with their activities. He pointed out that the LTTE is determined to defeat the leader of the TULF V. Anandasangaree and members of other parties to ensure the representation of LTTE in parliament.

  • தொடங்கியவர்

Small Parties May Benefit in Sri Lanka

Associated Press, Thu April 1, 2004 22:27 EST . TIM SULLIVAN - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Soldiers were out in force for parliamentary elections Friday seen as a showdown between Sri Lanka - 's president and prime minister but also likely to give increased power to smaller parties in the war-savaged country. ``I am confident that the people will vote for a stable government,'' Wickremesinghe, the architect of Sri Lanka - 's peace bid with separatist Tamil Tiger rebels, said.

Voting picked up after officials formally declared the polls open at schools and government buildings which were turned into polling booths. At one polling booth in Colombo, 182 voters cast their ballot out of 1,800 registered voters in the first half-an-hour hour.

In eastern Sri Lanka - , ravaged by two decades of civil war, pre-poll violence left at least two people dead, including a candidate backed by Tamil Tiger rebels.

An uneasy tension prevailed in the area's main town, Batticaloa. Heavily armed soldiers were stationed every 100 yards in the Tamil-majority town.

In the Tamil heartland of northern Sri Lanka - , about 20,000 Tamil voters from remote rebel-held areas camped overnight to be able to cast their ballots at booths set up in areas between lands held by the rebels and the government, TamilNet Web site that reports on Tamil affairs said.

Opinion polls indicated that neither of Sri Lanka - 's two main parties were likely to win a majority in the 225-seat Parliament, which would force them to turn to smaller parties ranging from one tied to the Tamil Tiger rebels to one led by Buddhist clergymen to forge a coalition or get legislation passed.

The Sri Lankan media call the parties ``kingmakers,'' and while Sri Lanka - has long been accustomed to coalitions the most recent parliament was governed by one the role of small parties is likely to grow as top politicians struggle for a political mandate to resolve the civil war.

``In a situation of a hung Parliament, the importance of minority parties will be reinforced,'' said Paikiasothy Saravanamuttu, a political analyst with the Center for Policy Alternatives.

A fragile truce is holding between the government and Tamil Tiger rebels, who fought to try to carve out a separate homeland for minority ethnic Tamils who have long faced discrimination by the Sinhalese majority.

The election is, in many ways, a showdown between President Chandrika Kumaratunga and Wickremesinghe, and their rival approaches to ending the war.

Wickremesinghe, who signed a February 2002 cease-fire agreement, says he's the only politician who can negotiate with the Tigers. But the president takes a more hardline approach, and insists the prime minister has made too many concessions to the rebels.

Political violence has been rising in recent days in Sri Lanka - , although it remains far less rampant than in the last election in 2001, when 61 people were killed in political attacks.

மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.

அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.

  • தொடங்கியவர்

அமைதியாய் நடந்து முடிந்த இலங்கை தேர்தல்: 75 சதவீத வாக்குப் பதிவு

கொழும்பு:

பலத்த பாதுகாப்புக்கு இடையே, எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி இலங்கை நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலையொட்டி இலங்கை முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல இடங்களில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடும் கட்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, அதிபர் சந்திகாஜனதா விமுக்தி பெரமுனான் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவையே மிக முக்கியமானவை.

மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த 6,024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு இலங்கையில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

யாழ்பாணம் உள்ளிட்ட வட இலங்கையில் புலிகள் மற்றும் ராணுவம் வசம் உள்ள பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது. வாக்களிப்பதற்காக நேற்றிரவில் இருந்தே வன்னி பகுதியைச் சேர்ந்த சுமார் 20,000 வாக்காளர்கள் இந்த எல்லைப் பகுதியில் குவிந்துவிட்டனர்.

மேலும் இன்று காலையில் தங்களது பஸ்கள் மூலம் வாக்காளர்களை புலிகள் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்தனர். இப் பகுதியில் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டுப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் வாக்களித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிருபர்களிடம் பேசுகையில், அமைதிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்றார். அதிபர் சந்திரிகா கம்பகா மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

முன்னதாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பேசிய சந்திரிகா, தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளேன என்றார்.

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளையே முடிவுகளும் தெரிந்துவிடும்.

இத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. இதனால் சிறு கட்சிகளின் ஆதரவுடன் தான் அடுத்த அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் தேசியக் கூட்டணியும் அடுத்த ஆட்சி அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நன்றி - தட்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்

இலங்கைத் தேர்தல் : மதியம் வரை 62 விழுக்காடு பதிவு!

வெள்ளி, 2 ஏப்ரல் 2004

இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று நடைபெற்றத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் மதியம் வரை 62 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 வாக்குச் சாவடிகளிலும், கிழக்கு வடமொராச்சியில் உள்ள 32 வாக்குச் சாவடிகளிலும் இந்த அளவிற்கு வாக்குப் பதிவு நடந்துள்ளதாக புலிகள் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியுள்ளது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டை பரிச்சான், மகேந்திரபுரா மற்றும் முட்டூர் பகுதிகளில் இன்று மதியத்திற்குள் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகிவிட்டதாக தேர்தல் அதிகாரி காமினி ரோட்ரிகோ கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சுண்ணாகம், மல்லாகம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணி வரை 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளதென செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததென செய்திகள் கூறுகின்றன.

நன்றி - வெப் உலகம்

  • தொடங்கியவர்

13வது நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்.

வவுனியா ஓமந்தைப்பகுதியின் வாக்களிப்பு நிலவரம். 02.04.04

http://www.worldtamilradio.info/election2.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ

  • தொடங்கியவர்

13வது நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்.

மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் பகுதிகளில் வாக்களிப்பு நிலவரம். 02.04.04

http://www.worldtamilradio.info/election1.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ

  • தொடங்கியவர்

13வது நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்.

குப்பிளான் வாக்குச்சாவடியிலிருந்து புவிராஜ். 02.04.04

http://www.worldtamilradio.info/kuppilan.ram

நன்றி - தமிழ் வெப் ரேடியோ

  • தொடங்கியவர்

இன்றும் நாளையும் கொழும்பு சூரியன் FM ரேடியோவை நேரடி ஒலிபரப்பாக இந்த முகவரியில் கேட்க்கலாம்.

http://swaasam.com:8000/listen.pls

அல்லது

http://www.sooriyan.sunmix.com/Main/home.html

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.

http://www.tamilwebradio.com/13election.htm :arrow: :arrow:

  • தொடங்கியவர்

வழமையை விட மிக அதிகமான மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:29 ஈழம் ஸ

இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டபின்னர், தேர்தல் ஆணையாளர் தெரிவித்த கருத்தில், வழமையை விட இம்முறை மிக அதிக அளவில் மக்கள் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளதாகவும், மொத்தமுள்ள பதிவுசெய்யப்பட்ட 12 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களில், 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்ததால், சிறிய அசம்பாவிதங்கள், விபத்துக்கள் தவிர, பாரிய ஒழுங்கீனங்கள், தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் நடைபெறவில்லை என்பது திருப்தியளிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் எதையும் இப்போது தீர்மானிக்க முடியாதிருந்தாலும், இரு பிரதான கட்சிகளில் எதுவும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறப்போவதில்லை என்றும், சிறு கட்சிகளின் தயவிலேயே ஆட்சியமைக்கும் நிலை, இரு கட்சிகளுக்கும் உருவாகும் என்றும் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

யாழ். பகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளார்கள்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:41 ஈழம் ஸ

யாழ். தேர்தல் தொகுதியில் தொடர்ச்சியான கடும் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களும், ஏனைய அனைத்து சிங்கள கண்காணிப்பாளர்களும், யாழ். வாக்களிப்பு நிலையங்களில் எதுவித வன்முறைகளோ ஒழுங்கீனங்களோ முறைகேடுகளோ நிகழவில்லை என்று கருத்துக் கூறியுள்ளார்கள்.

ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி.உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.உறுப்பினர்கள

  • தொடங்கியவர்

தேர்தலுக்கு முன்னதாகவே பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்த மட்டு.-அம்பாறை மாவட்டங்களில் தேர்தல் சுமூகமாக இடம்பெற்றுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:53 ஈழம் ஸ

ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஒவ்வொரு 100 யார் இடைவெளியிலும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டதுடன், அடிதடி மற்றும் கலவரம் அடக்கும் பொலிசாரும் அங்கே பெருமளவில் கடமையிலிருந்ததாகத் தெரியவருகிறது.

மட்டு.-அம்பாறை தொகுதியில் அமைந்திருந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலோ அல்லது அதை அண்டிய பகுதிகளிலோ எந்தவொரு சிறிய அசம்பாவிதத்திலும் ஈடுபடும் எவரையும் நோக்கி உடனடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் கடுமையான உத்தரவை ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் வழங்கியிருந்ததால், அங்கு ஒழுங்கீனங்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருணா குழுவினர் தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் குழப்பங்களை உருவாக்கியதால், முஸ்லிம் மக்களே பெருமளவில் வாக்களித்ததாகவும், தமிழ் வாக்காளர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் எதுவித அசம்பாவிதங்களுமின்றி தேர்தல் வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

மக்கள் இம்முறை மிகவும் ஆர்வத்தோடு வாக்களித்ததாகவும், கொழும்பில் அமைந்திருந்த ஒரு வாக்களிப்பு நிலையத்தில், நிலையத்தைத் திறந்தவுடன், முதல் அரைமணி நேரத்திற்குள் 182 வாக்காளர்கள் முண்டியடித்துக்கொண்டு வாக்களித்ததை அவதானித்ததாகவும் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், பேராசிரியர் ஐP.எல்.பீரிஸ் தெரிவித்துள்ள கருத்தில், ஐ.தே.முன்னணி மீண்டும் பலமான ஒரு அரசை அமைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை என்றும், மக்கள் தங்களது பலமான ஆதரவை மீண்டும் தமது கட்சிக்கு வழங்கியுள்ளார்கள் என்று தான் முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

உடனுக்குடன் இலங்கைத் தேர்தல் முடிவுகளை கனடியத் தமிழ் வானொலி (CTR) ஊடாக கேட்கலாம்

http://www.ctr24.com/

  • தொடங்கியவர்

உடனுக்குடன் இலங்கைத் தேர்தல் முடிவுகளை ஐ.பி.சி தமிழ் (IBC) ஊடாக கேட்கலாம்

http://www.ibctamilradio.com/

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

கிழக்கு நிலைமை குறித்து விளக்கமளிப்பதற்காக கரிகாலன், கௌசல்யன் ஐரோப்பா பயணம்

கிழக்கு நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக விடுதலைப் புலிகளின் மூýத்த உறுப்பினர் கரிகாலன் மற்றும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஐரோப்பியப் பயணத்திற்காக வன்னியிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்வதாக கருணா அறிவித்ததையடுத்து, அவர் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது முதல் இதுவரை காலமும் கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும், அந்த நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காகவே இவ்விருவரும் ஐரோப்பா செல்வதாக கூýறப்படுகிறது.

நோர்வே அனுசரணையாளர் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இலங்கை அரசின் சமாதானச் செயலகத்திற்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வட பகுதி மக்களை உடனடிýயாக வெளியேறுமாறு கருணா குழுவினர் விடுத்துள்ள மிரட்டல்களும், அதனால் அங்கிருந்து வட பகுதி மக்களில் குறிப்பிட்ட அளவினர் வெளியேறியுள்ள நிலையிலும், ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனம் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், ஐரோப்பாவிலிருந்து மட்டு. - அம்பாறை மாவட்டங்களுக்கு முன்னர் 3 கோடிý ரூýபாவிற்கும் மேற்பட்ட நிதியுதவியை தமிழ் மக்கள் வழங்கி வந்ததாகவும், தற்போதைய நிலையில் அதை அவர்கள் இடை நிறுத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், கரிகாலன் மற்றும் கௌசல்யன் ஆகியோர் ஐரோப்பிய பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

வெளியேற மறுக்கும் வட பகுதியினருக்கு தொடர்ந்து தொலைபேசி மூýலம் மிரட்டல்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வட பகுதியைச்சேர்ந்தவர்கள் உடனடிýயாக வெளியேற வேண்டும் என்ற கருணா குழுவினரின் மிரட்டலையடுத்து வட பகுதி மக்கள் வெளியேறி வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகர் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

மட்டக்களப்பிலிருந்து உடனடிýயாக வட பகுதி மக்கள் வெளியேற வேண்டுமென கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் கருணா குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

வர்த்தகர்கள், பொது மக்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள் என பெருமளவு வட பகுதி மக்களை வெளியேற்றியுள்ள கருணா குழுவினர், வெளியேற மறுக்கும் மக்களை தொலைபேசி மூýலமும், நேரிலும் சென்று மிரட்டிý வருவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட பகுதி மக்களின் இந்தப் பலவந்த வெளியேற்றத்தால் மட்டக்களப்பு நகர் நேற்று இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் நிலவி வருகின்றது.

நேற்று மட்டக்களப்பிற்குள்ளே உள்@ýர் பஸ்சேவைகளோ அல்லது மட்டக்களப்பிலிருந்து வெளிய10ர்களுக்கான பஸ் சேவைகளோ எதுவும் நடைபெறவில்லை. கடைகள், வர்த்தக நிலையங்கள் மூýடப்பட்டிýருந்ததுடன், அரச, தனியார் அலுவலகங்களும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, வட பகுதி மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு சந்தைப் பகுதியிலுள்ள வீடுகளுக்கு நேரில் சென்ற கருணா குழுவினர் அவர்களைக் கடுமையாக மிரட்டிýயதுடன், உடனடிýயாக வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்திருந்தனர்.

எனினும், நேற்று முன்தினம் வெளியேறியது போன்று நேற்று வட பகுதி மக்கள் பெருமளவில் வெளியேறாவிடிýனும், அவ்வாறு வெளியேறிச் சென்றவர்களை மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஆங்காங்கே வழிமறித்த கருணா குழுவினர், அவர்களை தீவிர சோதனைக்குட்படுத்தியுமுள்ளன

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றும் 18 மருத்துவ அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றம்

மிரட்டலை ஆட்சேபித்து மக்களும் ஊழியர்களும் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வட பகுதியைச் சேர்ந்த ஏழு வைத்திய நிபுணர்கள் உட்பட 18 மருத்துவ அதிகாரிகள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மட்டக்களப்பை விட்டு வட பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டுமென கருணா குழுவினர் விடுத்த எச்சரிக்கையை அடுத்தே டாக்டர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

தொலைபேசி மூலம் இவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களையடுத்தே இவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாக வைத்தியசாலையின் ஏனைய டாக்டர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் ருத்ரா, சத்திர சிகிச்சை நிபுணர் ஜீபரா, காது, மூக்கு, தொண்டை நிபுணர் சீவரெத்தினம், மனநல மருத்துவ நிபுணர் கணேசன், குழந்தை நல நிபுணர் திருமதி கணேசன் ஆகியோரும் வெளியேறியோரில் அடங்குவர்.

ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இருந்து பதில் உபவேந்தர் உட்பட யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ள நிலையிலேயே மருத்துவர்களும் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, ஆஸ்பத்திரியிலிருந்து வடபகுதியைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களும், வைத்தியர்களும் வெளியேறக் காரணமான மிரட்டலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் டாக்டர்கள் மீண்டும் திரும்பி வந்து ஆஸ்பத்திரியில் கடமையாற்ற வேண்டுமெனக் கோரியும் நேற்று நண்பகல் 11.30 மணிமுதல் 12.30 மணிவரை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களது இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது.

வைத்திய நிபுணர்களதும், டாக்டர்களதும் வெளியேற்றம் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளையும், நோயாளர்களையும் பெரிதும் பாதிக்குமெனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் 17 க்கும் மேற்பட்ட சிங்கள டாக்டர்களும் இன்று வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கருணா குழுவின் மிரட்டல், மட்டக்களப்பு மக்களைப் பிரதேச ரீதியாக அந்நியப்படுத்தி எதிர்காலத்தில் அவர்களது சொந்தப் பகுதியிலேயே அவர்களது இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடுமெனக் கூறி நேற்று மாலை மட்டக்களப்பில் சில பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

அபத்தங்களை நம்பினால் அட்டூýழியங்களே மிஞ்சும்

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளினால், அந்த இயக்கத்திற்குள் உருவான தகராறையடுத்து கிழக்கில் தோன்றிய நிலைவரங்கள் இப்போது அவற்றின் 'அருவருக்கத்தக்க திருப்பத்தை" அடைந்திருக்கின்றன.

பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரும் கருணாவுக்கு நெருக்கமானவரெனக் கருதப்பட்டவருமான இராஜன் சத்தியமூýர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மட்டக்களப்பில் வாழும் வட மாகாணத்தவர்கள் சில கும்பல்களினால் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு கொண்டிýருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் இருந்து வட மாகாணத்தவர்கள் வெளியேறுவதற்கான காலக் கெடுவையும், சொத்துகள், உடைமைகள் எதையும் எடுத்துச் செல்லக்கூýடாது என்ற எச்சரிக்கையையும் இந்தக் கும்பல்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூýலமாக பகிரங்கமாக அறிவிப்புச் செய்யக் கூýடிýய அளவுக்கு துணிச்சலுடன் செயற்படக் கூýடிýயதாக இருக்கிறது என்பது மிகவும் விசனம் தரும் விடயமாகும்.

கருணாவின் செயற்பாடுகளின் விளைவாக மட்டக்களப்பில் தோன்றிய நிலைவரங்களின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரதேசவாதம் கிளப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கருணாவின் வார்த்தைகளில் கூýறுவதானால் வன்னித் தலைமைத்துவம் கிழக்குப் போராளிகளைப் பாரபட்சமாக நடத்துவதாகவும் மேலாதிக்கம் செலுத்துவதாகவும் கருணா தரப்பினால் குற்றஞ் சாட்டப்பட்டது. இத்தரப்பினர் தங்களின் செயற்பாடுகளுக்கு கிழக்கு மக்கள் மத்தியில் 'நியாயம்" கற்பிப்பதற்காக பிரதேசவாதத்தைக் கிளப்ப ஆரம்பித்திருந்தார்கள் என்பதை ஆரம்பத்திலேயே வெகுவாக உணரக் கூýடிýயதாக இருந்தது.

பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் பேராசை கொண்ட சுயநலமிக்க அரசியல் வாதிகள் கிழக்கில் கடந்த காலத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பிய பல சந்தர்ப்பங்களைக் காணக்கூýடிýயதாக இருந்தது. ஆனால், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்த தமிழ்த் தாயகத்துக்காக உயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளை வழிநடத்திய ஒருவரினால் இத்தகைய கீழ்த்தனமான பிரதேசவாதம் கிளப்பப்பட்டிýருப்பதை தமிழ் மக்களினால் ஜீரணிக்கவே முடிýயாமல் இருக்கின்றது என்பது கசப்பானதொரு உண்மையே.

கடந்த இரு நாட்களாக வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் மட்டக்களப்பில் இருந்து 'பிரதேசவாதப் போர்வைக்குள் தங்களது நயவஞ்சகத்தனங்களை" மறைப்பதற்கு பிரயத்தனம் செய்யும் இக் கும்பல்களினால் அச்சுறுத்தப்பட்டு வெளியேறிக் கொண்டிýருக்கின்றார்கள். வாகனங்களில் வெளியேறிக் கொண்டிýருப்பவர்களின் வசமிருந்த சொற்ப உடமைகளும் வன்முறைக் கும்பல்களினால் இடைவழியில் மறிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அடாவடிýத்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூýடிýய திராணியுடைய ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மூýத்த அரசியல்வாதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடிýயாமல் முடக்கப்பட்டிýருக்கிறார்கள்

இவையனைத்தும் மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், சட்டம் ஒழுங்கைப் பேனும் தரப்பினரின் கண் முன்னால், நடைபெற்றுக் கொண்டிýருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிýயதாகும். இராஜன் சத்தியமூýர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் 'அதிர்ச்சியும் வேதனையும்" அடைந்து அறிக்கை விடுத்த நாட்டிýன் தலைவி மட்டக்களப்பில் இருந்து வட பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிýருக்கும் அடாவடிýத்தனம் குறித்து இன்னும் பகிரங்கமாக வாய் திறக்கவில்லை.

கருணா விவகாரத்தைத் தங்களின் கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான முனைப்பு தென்னிலங்கை அரசியல் முகாம்களிடையே தோன்றும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டேயிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.