Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையும் நானும்

Featured Replies

ஒரு அழகான​ காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் !

மலை விட்டு இறங்கிய​ அருவி மெதுவே தரை தட்டி நதியானது.

பார்வை பட்ட​ இடமெல்லாம் திரும்ப​ மனமின்றி பதிந்து நின்றது.

நதி நிலை அருகே தனி வழி நடந்தேன்.

கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த​ இயற்கை கட்டிய​ சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற​ பிரமை எழுவதை தவிர்க்க​ முடியவில்லை.

உயர்ந்து நின்ற​ அந்த​ மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது.

அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த​ போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது.

' உனக்கும் எனக்கும் அதிக​ வேறு பாடு ஒன்றும் இல்லை' என்றது.

புரியாது பார்த்தேன். ' மனதைச் சொன்னேன்' என்றது, 'கல்லாய் நிற்கிறாய் அதனால் சொன்னேன்' என்றது.

மெல்லச் சிரித்தேன். ‘உனக்கு புரியவில்லை. எனக்கு உணர்வுகள் இருப்பதனால் வேதனைகள் என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனவே’ என்றேன். ‘அது உன் விதி முடிந்தால் என்னிடம் அழுது தீர்த்து விடு ‘என்றது. உடன் பட்டேன்.

‘போலியான​ வாழ்வினில் புதைந்து போவது தான் உனக்கு பிடித்திருக்கிறது என்றால்,போய் வா’ என்றது. ‘

நீ எவ்வளவு தான் உயரமாய் இருந்தாலும் என் நிலை புரியும் பக்குவம் உனக்கில்லை. என்றாலும் உன் மீதான​ என் காதல் குறையாது ‘என்றவாறே புறப்பட்டேன். ‘என்ன​ தான் நான் கல்லானாலும் உனக்காய் காத்திருப்பேன் ‘ என்று குளிர் தென்றலினால் என் உச்சி முகர்ந்து அனுப்பியது.

அங்கிருந்த​ நாட்களெல்லாம்,இயற்கையோடும்,எனக்கு தெரிந்த​ மனிதர்களோடும் நான் என்னுள்ளேயே பேசிக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் வந்து போகும் அழகான​ தருணங்கள் அவை.....

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியள்ளீர்கள், கவிதை வடிவில் ஒழுங்குபடுத்தினால் நன்றாக இருக்கும், வாழ்த்துகள், தொடருங்கள்

  • தொடங்கியவர்

அருமையாக எழுதியள்ளீர்கள், கவிதை வடிவில் ஒழுங்குபடுத்தினால் நன்றாக இருக்கும், வாழ்த்துகள், தொடருங்கள்

அண்மையில் மலையடிவாரம் விடுமுறை போயிருந்தேன்.அங்கே தோன்றிய​ நினைவுகள் மட்டுமே,கவிதைக் குறிப்பில் போட்டு விட்டேன்,மன்னிக்கவும்.தமிழ் பற்றி பாரதிதாசன் கூறியதை ஞாபகத் திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. நினைக்கும் போதும் எழுதும் போதும் படிக்கும் போதும் மனம் மகிழும் ஒரு மொழியென்றால் அது உயிர்த் தமிழ் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பதிவு நன்றாய் இருக்கிறது உங்களிடம் திறமை இருக்கிறது அடிக்கடி உங்கள் பதிவுகளை தாருங்கள். [/size]

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

[size=4]பதிவு நன்றாய் இருக்கிறது உங்களிடம் திறமை இருக்கிறது அடிக்கடி உங்கள் பதிவுகளை தாருங்கள். [/size]

என் வலி அது தன் வழி தொலையும்-ஆனால்

என் ஈழத்தின் வலி எப்போ தொலையும்..?

  • தொடங்கியவர்

பசி

தமிழ் அன்னை தனக்கு நேர்ந்த​ அவலம் கண்டு -

தலை குனிந்து நிற்கிறாள்....தன்மானப் பசி தீர்க்க​ ..

மைந்தன் வருவான் என்று, புலம் பார்த்து காத்திருக்கின்றாள்...

தாய் மண்ணின் விடுதலைக்கு -தான் ஈன்ற​ மைந்தர்களை இழந்து தவிக்கின்றாள்.....அதனால்-

விடுப்பு பசி,விமர்சனப் பசி, வேண்டாத​ விவாதப் பசி விலக்கி,

விடுதலைப் பசி மட்டும் கொள்வோம்...!

நிலத்திலும், புலத்திலும், எம் பசியடக்கும் தடையுடைத்து- தமிழ் தாயின் சுதந்திரப் பசி தீர்ப்போம்... !

ஈழத் தமிழனின் சிந்தையும் செயலும்-ஓர் கோட்டில் பயனிக்கும் நாளில்-

இலக்கு பசிக்கு இரையிடும் வேலை எளிதாகும்... ! - அதனால் இலக்கினை எட்டும் வரை பயனிப்போம் ஒன்றாய்… !

அதற்கான​ வேளாண்மை ஆரம்பிக்கட்டும் இங்கே… ! சுதந்திரக் கதிரறுத்து, சூரியப் படையல் இடும் வரை...

பயனிப்போம் …..ஒன்றாய்…!எதிர் காலம் ஒன்று வரும்… அது-இந்தப் பசி எல்லாம் தீர்க்கும் என்று நம்பி.....!

ஒரு அழகான​ காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் !

மலை விட்டு இறங்கிய​ அருவி மெதுவே தரை தட்டி நதியானது.

பார்வை பட்ட​ இடமெல்லாம் திரும்ப​ மனமின்றி பதிந்து நின்றது.

நதி நிலை அருகே தனி வழி நடந்தேன்.

கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த​ இயற்கை கட்டிய​ சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற​ பிரமை எழுவதை தவிர்க்க​ முடியவில்லை.

உயர்ந்து நின்ற​ அந்த​ மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது.

அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த​ போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது.

' உனக்கும் எனக்கும் அதிக​ வேறு பாடு ஒன்றும் இல்லை' என்றது.

புரியாது பார்த்தேன். ' மனதைச் சொன்னேன்' என்றது, 'கல்லாய் நிற்கிறாய் அதனால் சொன்னேன்' என்றது.

மெல்லச் சிரித்தேன். ‘உனக்கு புரியவில்லை. எனக்கு உணர்வுகள் இருப்பதனால் வேதனைகள் என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனவே’ என்றேன். ‘அது உன் விதி முடிந்தால் என்னிடம் அழுது தீர்த்து விடு ‘என்றது. உடன் பட்டேன்.

‘போலியான​ வாழ்வினில் புதைந்து போவது தான் உனக்கு பிடித்திருக்கிறது என்றால்,போய் வா’ என்றது. ‘

நீ எவ்வளவு தான் உயரமாய் இருந்தாலும் என் நிலை புரியும் பக்குவம் உனக்கில்லை. என்றாலும் உன் மீதான​ என் காதல் குறையாது ‘என்றவாறே புறப்பட்டேன். ‘என்ன​ தான் நான் கல்லானாலும் உனக்காய் காத்திருப்பேன் ‘ என்று குளிர் தென்றலினால் என் உச்சி முகர்ந்து அனுப்பியது.

அங்கிருந்த​ நாட்களெல்லாம்,இயற்கையோடும்,எனக்கு தெரிந்த​ மனிதர்களோடும் நான் என்னுள்ளேயே பேசிக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் வந்து போகும் அழகான​ தருணங்கள் அவை.....

உண்மையில் மலையின் அழகை ரசிப்பது எனக்கு பிடித்தவற்றில் முதல்மயானது..........உங்கள் உணர்வுகளை மலையை உவமானப்படுத்தி அழகாய் விளக்கியுள்ளீர்கள் .பகிர்வுக்கு நன்றி ......இதை வாசிக்க எனக்கு பிடித்த பாடலின் வரிகள் நினைவு வருகுது ........

இளைய பருவம் மலையில் வந்தால் தேகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ...........

ஓடை தரும் வாடைக்காற்று வானுலகை காட்டுது ......உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

என்னை எங்கோ கூட்டுது ............மலையின் காட்சி இறைவன் மாட்சி.............

ஒரு அழகான​ காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் !

மலை விட்டு இறங்கிய​ அருவி மெதுவே தரை தட்டி நதியானது.

பார்வை பட்ட​ இடமெல்லாம் திரும்ப​ மனமின்றி பதிந்து நின்றது.

நதி நிலை அருகே தனி வழி நடந்தேன்.

கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த​ இயற்கை கட்டிய​ சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற​ பிரமை எழுவதை தவிர்க்க​ முடியவில்லை.

உயர்ந்து நின்ற​ அந்த​ மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது.

அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த​ போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது.

' உனக்கும் எனக்கும் அதிக​ வேறு பாடு ஒன்றும் இல்லை' என்றது.

புரியாது பார்த்தேன். ' மனதைச் சொன்னேன்' என்றது, 'கல்லாய் நிற்கிறாய் அதனால் சொன்னேன்' என்றது.

மெல்லச் சிரித்தேன். ‘உனக்கு புரியவில்லை. எனக்கு உணர்வுகள் இருப்பதனால் வேதனைகள் என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனவே’ என்றேன். ‘அது உன் விதி முடிந்தால் என்னிடம் அழுது தீர்த்து விடு ‘என்றது. உடன் பட்டேன்.

‘போலியான​ வாழ்வினில் புதைந்து போவது தான் உனக்கு பிடித்திருக்கிறது என்றால்,போய் வா’ என்றது. ‘

நீ எவ்வளவு தான் உயரமாய் இருந்தாலும் என் நிலை புரியும் பக்குவம் உனக்கில்லை. என்றாலும் உன் மீதான​ என் காதல் குறையாது ‘என்றவாறே புறப்பட்டேன். ‘என்ன​ தான் நான் கல்லானாலும் உனக்காய் காத்திருப்பேன் ‘ என்று குளிர் தென்றலினால் என் உச்சி முகர்ந்து அனுப்பியது.

அங்கிருந்த​ நாட்களெல்லாம்,இயற்கையோடும்,எனக்கு தெரிந்த​ மனிதர்களோடும் நான் என்னுள்ளேயே பேசிக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் வந்து போகும் அழகான​ தருணங்கள் அவை.....

முதன்முதலாக எழுதியிருக்கின்றீர்கள் . அருமையான கவிநடை . பல சுயபடைப்புகளை களத்தில் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேலும் உங்கள் கவிதை பின்வருமாறு இருந்தால் நன்றாக இருக்கும் எனநினைக்கின்றேன் . தவறு என்றால் மன்னிக்கவும் .

அழகான​ தருணங்கள் அவை.....

ஒரு அழகான​ காலைப்பொழுது !

சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் !

மலை விட்டு இறங்கிய​ அருவி மெதுவே தரை தட்டி நதியானது.

பார்வை பட்ட​ இடமெல்லாம் திரும்ப​ மனமின்றி பதிந்து நின்றது.

நான் நதி நிலை அருகே தனி வழி நடந்தேன்.

கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை!

நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் .........

அந்த​ இயற்கை கட்டிய​ சுவரின் பின்னே

இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள்

என்கிற​ பிரமை எழுவதை தவிர்க்க​ முடியவில்லை.

உயர்ந்து நின்ற​ அந்த​ மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது.

அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா?

மனம் கேட்டது..!

உற்றுப் பார்த்த​ போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ?

' உனக்கும் எனக்கும் அதிக​ வேறு பாடு ஒன்றும் இல்லை' .

புரியாது பார்த்தேன்.

' மனதைச் சொன்னேன்'

'கல்லாய் நிற்கிறாய் அதனால் சொன்னேன்'

மெல்லச் சிரித்தேன்.

‘உனக்கு புரியவில்லை...........

எனக்கு உணர்வுகள் இருப்பதனால் வேதனைகள் என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனவே’

‘அது உன் விதி முடிந்தால் என்னிடம் அழுது தீர்த்து விடு ‘

நான் உடன் பட்டேன்.

‘போலியான​ வாழ்வினில் புதைந்து போவது தான் உனக்கு பிடித்திருக்கிறது என்றால்,போய் வா’ என்றது. ‘

நீ எவ்வளவு தான் உயரமாய் இருந்தாலும்

என் நிலை புரியும் பக்குவம் உனக்கில்லை.

என்றாலும் உன் மீதான​ என் காதல் குறையாது ‘

என்றவாறே நான் புறப்பட்டேன்.

‘என்ன​ தான் நான் கல்லானாலும் உனக்காய் காத்திருப்பேன் ‘

என்று குளிர் தென்றலினால் என் உச்சி முகர்ந்து அனுப்பியது.

அங்கிருந்த​ நாட்களெல்லாம்,.....

இயற்கையோடும்,எனக்கு தெரிந்த​ மனிதர்களோடும்

நான் என்னுள்ளேயே பேசிக் கொண்டிருந்தேன்.

என் வாழ்வில் வந்து போகும்

அழகான​ தருணங்கள் அவை.....

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஓ...! அமர்க்களம்..!

Edited by nirubhaa

  • தொடங்கியவர்

உண்மையில் மலையின் அழகை ரசிப்பது எனக்கு பிடித்தவற்றில் முதல்மயானது..........உங்கள் உணர்வுகளை மலையை உவமானப்படுத்தி அழகாய் விளக்கியுள்ளீர்கள் .பகிர்வுக்கு நன்றி ......இதை வாசிக்க எனக்கு பிடித்த பாடலின் வரிகள் நினைவு வருகுது ........

இளைய பருவம் மலையில் வந்தால் தேகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ...........

ஓடை தரும் வாடைக்காற்று வானுலகை காட்டுது ......உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

என்னை எங்கோ கூட்டுது ............மலையின் காட்சி இறைவன் மாட்சி.............

செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது வீசுதம்மா.......

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை உங்கள் கையில் தவழுது.......... வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.