Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக வரைபடத்தில் மற்றொரு குட்டி சுதந்திர தேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக வரைபடத்தில் மற்றொரு குட்டி சுதந்திர தேசம்

உலக வரைபடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் சின்னஞ்சிறு தேசமொன்று உதயமாகிறது. மலைகளுக்கு இடையில் அட்ரியாட்டிக் கடல், அல்பேனியா, பொஸ்னியா, குரோசியா, சேர்பியா நாடுகளை எல்லைகளாகக் கொண்ட குட்டி பால்கன் நாடான மொன்டிநீக்ரோ சுதந்திர தேசமாவதற்குரிய அங்கீகாரத்தை அந்நாட்டின் 6 இலட்சத்து 50 ஆயிரம் குடிமக்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த 4 இலட்சத்து 85 ஆயிரம் பேர் வழங்கியுள்ளனர்.

1990 களில் இடம்பெற்ற போர்களால் யூகோஸ்லாவிய சம்மேளனம் ஏற்கனவே துண்டாடப்பட்டுவிட்டது. பொஸ்னியா, குரோசியா, மசிடோனியா, ஸ்லோவேனியா என்று தனித்தனி தேசங்களாக இவை வரலாற்று ஏட்டில் இடம்பிடித்திருக்கையில் சேர்பியாவுடன் ஒன்றித்திருந்த மொன்டிநீக்ரோ பூரண சுதந்திரம் பெறுவதற்குரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆணையை மக்கள் கடந்த திங்கட்கிழமை வழங்கியுள்ளனர்.

சர்வஜன வாக்கெடுப்பில் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு 55.4 சதவீதத்தினரும் சேர்ந்திருப்பதற்கு 44.6 சதவீதத்தினரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 55 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே இந்த வாக்கெடுப்பு முடிவுகள் செல்லுபடியானதாக அமையும். மிகவும் சொற்ப அளவில் அதாவது 0.8 சதவீதத்தில் மொன்டிநீக்ரோ மக்களின் அபிலாஷைகள் நிறைவேறுகிறது.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்திய ஆணைக்குழுவானது வாக்கெடுப்பு பெறுபேற்றை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முன்னரே பூரண விடுதலையை ஆதரித்து வந்த மொன்டிநீக்ரோவின் பிரதமர் மைலோ யுக்கானோவிக் `இது மொன்டிநீக்ரோவின் வரலாற்றில் மிக முக்கியமான நாள்' என்று முழங்கியுள்ளார்.

`சர்வதேச ரீதியாகவும் சட்டரீதியாகவும் முழுமையான அந்தஸ்துடைய சுதந்திர நாடாக மொன்டிநீக்ரோ விளங்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா?' என்று அந்நாட்டு மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் தமது வாக்குகள் மூலம் பதிலை வெளிப்படுத்தியிருக்கின்றனர

அதேசமயம், முக்கியமான ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மொன்டிநீக்ரோ விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடித்த அணுகுமுறையை ஐரோப்பாவுக்கென மட்டும் வரையறைப்படுத்தாமல் உலகின் சகல பகுதிகளுக்குமே விரிவுபடுத்துவது ஜனநாயக கோட்பாடுகளை உண்மையாகவே அரவணைப்போரை மகிழ்ச்சியுறச் செய்யும் விடயமாகும்.

அட வயித்தெரிச்சலை கிழப்ப எண்டே இந்த செய்திய இங்ககொண்டு வந்து கந்தப்பு போட்டிருக்கிறாரப்பா.... :evil: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் மொன்ட நிக்கிரோ ஆகுமா? என்ற தலைப்பில் அருஸ் எழுதிய ஆக்கம்.

http://www.tamilnaatham.com/articles/2006_...sh/20060526.htm

¦Á¡ñÊ¿¢ì§Ã¡Å¢üÌ Àì¸ò¾¢ø þó¾¢Â¡ §À¡ýÈ ´Õ ¿¡Î þøÄ¡¾ÀÊ¡ø «Ð ÍÄÀÁ¡¸ ¾ÉÐ þÄ쨸 «¨¼óÐÅ¢ð¼Ð.

முருகா..மிகவும் சரியாக சொன்னீர். நம்மை பிடித்த ஒரு சனி இந்தியா. இந்தியர்களுக்கு அவர்களது அரசியல் வாதிகள் தான் சனி. அவனுகளும் வாழ மாட்டான்கள், எஙளையும் வாழவிடமாட்டான்கள்.

சேர்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகி மொண்டநிக்ரோ நாடு தனியரசுப் பிரகடனத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

மொண்டநிக்ரோ தலைநகரான பொட்கொரிக்கோவில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கானப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 இலட்சத்து 50 ஆயிரம்.

தனியரசுப் பிரகடனத்தைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னைய யூகோஸ்லோவியா 1990-களில் சிதைந்த பின்னர் யூகோஸ்லோவியாவில் இணைக்கப்பட்டிருந்த 4 நாடுகள் தனியரசுப் பிரகடனத்தை வெளியிட்டன.

சேர்பியாவும் மொண்டநிக்ரோவும் இணைந்து 2003 ஆம் ஆண்டு வரை யூகோஸ்லேவியா கூட்டமைப்பாகவும் அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் சேர்பியா-மொண்டநிக்ரோ கூட்டமைப்பாகவும் இயங்கின.

அதன் பின்னர் சேர்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியரசாக இயங்குவது குறித்து மொண்டநிக்ரோ மக்களிடத்தில் மே 21 ஆம் நாள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தனியரசாகப் பிரிந்து சென்று இயங்க 55.5 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர்.

மொண்டநிக்ரோ மக்களினது தெரிவை சேர்பியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து இன்று தனியரசுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ரன்கோ கிரிவோகபிக் இப்பிரகடனத்தை வெளியிட்டார். அதன் பின்னர் சிவப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட நாட்டு தேசியக் கொடி விண்ணில் சுதந்திரமாகப் பறக்க அந்நாட்டுத் தேசியப் பண் இசைக்கப்பட்டது.

மொண்டநிக்ரோ மக்களுக்கு சேர்பிய அரச தலைவர் போரிஸ் டடிக் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். சேர்பியாவும் தனது தனியரசுப் பிரகடனத்தை வெளியிட உள்ளது.

யூகோஸ்லோவிய என்கிற முன்னைய கூட்டமைப்பில் மொத்தம் 6 குடியரசுகள் இருந்தன. தற்போது மொண்டநிக்ரோவும் சேர்பியாவும் பிந்ததையடுத்து யூகோஸ்லேவியாவில் இடம்பெற்றிருந்த அனைத்து நாடுகளும் சுதந்திர நாடுகளாகிவிட்டன.

http://www.eelampage.com/?cn=26626

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கதியில் வந்த செய்தியினைப்பார்க்க

http://sankathi.com/content/view/3301/26/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.