Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சான்டி போன கையோடு அமெரி்க்காவைத் தாக்கிய ஏதேனா புயல்: 1,700 விமானங்கள் ரத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க்: சான்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல் கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது.

ஏதேனாவால் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்த புது புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. அடுத்த 2 நாட்களில் ஏதேனாவால் கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும், நியூ இங்கிலாந்து பகுதியில் 6 முதல் 10 இன்ச் அளவுக்கு பனிபொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், நியூஜெர்ஸி, கனக்டிகட், பென்சில்வேனியா மற்றும் மசாசுசட்ஸில் மழை மற்றும் பனி பொழிவால் 1,710 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே சான்டியால் பல வீடுகள் மின்சாரமின்றி இருக்கையில் ஏதேனாவால் கூடுதல் வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. சான்டி புயல் தாக்கிய ஒரு வாரத்தில் வந்துள்ள ஏதேனாவால் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்..

http://tamil.oneindia.in/news/2012/11/08/world-after-sandy-another-storm-hits-new-york-new-jersey-164385.html

[size=1]

[size=4]விழுந்தவனை மாடேறி மிதித்த கதை. [/size][/size]

[size=1]

[size=4]ஆனாலும் இந்த அமெரிக்கர்கள் மீண்டும் எழுந்து வரும் வல்லமை ஆளுமை படைத்தவர்கள் ![/size][/size]

உறைபனி விழுந்து மரக்கிளைகளில் படிந்திருக்கு. இதனால் மரங்களின் கிளைகள் முறிந்து சில இடங்களில்திரும்ப மின்சாரத்தடைகள் வந்திருக்கு. சில இடங்களில் மரங்கள் முறிந்தும் தெருக்களை தடை செய்கிறது. ஆனல் வெப்பநிலை 32F க்கு மேலே இருப்பத்தால் ஏற்கனவே பனி உருக்க ஆரம்பித்துவிட்டது.

பலருக்கு மிகப்பெரிய பிரச்சனை இன்னும் பழைய புயலால் துண்டிக்கப்பட்ட அடிப்படை சேவைகள் வந்து சேரவில்லை. பொதுவில் மும்மாநிலங்களில் இன்னமும் காருக்கு எண்ணை வாங்க முடியாது. இதனால் வாகனங்களை சரியாக பயன்படுத்த முடியாது. இருந்தும் இந்த நிலைமில் ஒரு சின்ன மாற்றம் இன்று ..நாளை வரலாம் போல் தென்படுகிறது.

வீடுகளை இழந்தவர்கள் சரியாக மீள் வாழ்க்கை ஆரம்பிக்க வருடங்கள் ஆகலாம்.

காலநிலைக்கு மேலாக நாடு, புதிய தவணையின் முதல் வருடம், கடுமையான நிதி சிக்கல்களை சந்திக்கலாம். நேற்றை பங்கு சந்தை சரிவு, பிரதானமாக, ஜனநாயக்கட்சி- குடியரசுக்கட்சிகளுக்கிடையில் இருக்கும் கருத்து போராட்டத்தின் எதிரொலி போலத்தான் தென் படுகிறது.

தேர்தலில் வெற்றியின் பருமன் எதிர்பாராத அளவாக இருந்தாலும் முடிவு எதிர்பார்க்கப்படாதல்ல. இது போன இரண்டுவருட காலமாக இருந்த காங்கிரஸ்-அதிபர் இழுபறிக்களுக்கு ஒரு விடையையும் கொடுக்காமல் அதை தொடரவைத்துவிட்டது. ஓபாமா ஆர்வமாக கொண்டுவந்த தொழில்சட்டத்தை காங்கிரஸ் இந்த தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு வெற்றிக்காக அடித்து மூடியிருந்தது. ஆனால் அது தேர்தலில் பயனளிக்கவில்லை. ஒரு சமயம் இது காங்கிரசுக்கு ஒருபாடமாக அமையலாம். காங்கிரஸ் அதிபரடன் சேர்ந்து செயல் பட மறுத்தால் ஊடக சுதந்திரமும், படிப்பறிவு மேன்மையாகவும் இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதை இலகுவில் மூடி மறைப்பது கஸ்டம். அதன் பின் காங்கிரஸ் தேர்தலுக்கு போய் மக்களிடம் பொய்களை சொன்னால் அது இலகுவில் எடுபடாது என்பதை கடந்த தேர்தல் நன்றாக எடுத்து காட்டியிருக்கிறது. ரோமினியின் "நான் கட்சி வரம்புகள் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்வேன், ஆனால் ஒபாமா காங்கிரசுடன் செயல்பட மறுக்கிறார்" என்ற குற்றசாட்டை சண்டிப்புயல் எல்லோர் கண்களுக்கும் ஒரு அலக்காக தூக்கி வீசி எறிந்துவிட்டது. இதன் பின் காங்கிரஸ் இப்படி ஒரு விசப்பரீட்சையில் இறங்குமா அல்லது நாட்டுக்கு நல்லவற்றை தனது கட்சிக்கு நல்லது இல்லை என்று தட்டிகளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய செய்திகளில் குடியரசுக்கட்சியின் மக்களவை ஸ்பீக்கர் ஜோன் பொயிஹினர் காங்கிரஸ் நிதி சட்டங்களில் உடன்பாடு காணும் என்று கூறியிருக்கிறார்.

அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு நாடு திரும்ப பொருளாதார முன்னேற்றங்களை காணத் தொடங்கினால் இந்த புயல்களின் தாக்கங்களில் இருந்து நாடு மீள்வது இலகுவாகிவிடும்.

[size=4]

இன்றைய செய்திகளில் குடியரசுக்கட்சியின் மக்களவை ஸ்பீக்கர் ஜோன் பொயிஹினர் காங்கிரஸ் நிதி சட்டங்களில் உடன்பாடு காணும் என்று கூறியிருக்கிறார்.
[/size]

[size=4]இல்லாவிட்டால் குடியரசு கட்சி மேலும் வாக்குகளை இழக்கும் நிலை, குறிப்பாக இளையவர்கள் மத்தியில். [/size]

[size=1]

[size=4]இணைந்து செயல்படுவதையே பலரும் விரும்புகிறார்கள், Fiscal Cliff உட்பட. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.