Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழலால் அவப் பெயர்: சீன அதிபர்

Featured Replies

ஊழல் பிரச்சினை காரணமாக சீனாவும், அதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரித்துள்ளார்.

[size=3][size=4]சீனாவில் தற்போது தலைமை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]பீஜிங்கில் நடக்கும் மக்கள் காங்கிரஸ் அவையை துவக்கி வைத்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ, ஊழல் காரணமாக மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]அரச அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உயரிய தார்மீக நெறிகளை கைகொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.[/size][/size]

[size=3][size=4]சீனாவில் அரசியல் அதிகாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் இந்த நிகழ்வானது, பிரபல முன்னாள் அமைச்சர் போ ஜிலாய் மீதான கொலை மற்றும் ஊழல் புகார்களால் ஏற்கனவே பின் தள்ளப்பட்டது. சட்ட திட்டத்தையும், கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹூ ஜிண்டாவோ வலியுறுத்தியுள்ளார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/11/121108_chinachange.shtml

  • தொடங்கியவர்

[size=5]சீனாவில் பதட்டம் அதிபர் விலக புதிய அதிபர் வருகிறார்[/size]

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது காங்கிரஸ் கூட்டப்படுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன, தலை நகர் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

[size=2][size=4]அடுத்த வாரம் கட்சி புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று த கார்டியன் எழுதியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]தற்போது அதிபராக இருக்கும் கூ ஜிந்தா கடந்த பத்து ஆண்டுகளாக பதவி ஓட்டிவிட்டார் இவருடைய ஆட்சியில் பலத்த ஊழல் சீனாவில் மலிந்து புழுத்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டத்தில் இருக்கும் சுமார் 100 வரையான கொழுத்த முதலைகள் நாட்டின் தேசிய செல்வத்தையே சூறையாடும் ஊழல் பேர்வழிகளாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக தொடர் செய்திகள் வெளியாகியுள்ளன.[/size][/size]

[size=2][size=4]இந்த நிலையில் கடந்த வாரம் முக்கிய தலைவர் போசி லாய் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார், இவருடைய மனைவி மீது கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]உலகத்தின் முதலிடத்தை நோக்கி சீனா முன்னேறுவதாக மேலை நாடுகள் தொடை நடுங்க, சில சொட்டுக்கள் காற்சட்டையில் சிறு நீர் கழிக்க, சீனாவோ படு மோசமான அழிவுப் பாதைக்குள் உலகறியாத சுரங்க வழியால் பயணித்துள்ளமை இப்போது அம்பலமாகியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]தற்போதய அதிபருக்கு எதிராக உப அதிபர் ஸீ சின்பிங் கடந்த சில காலமாக வன்முறைக் கருத்துக்களை கூறி வந்துள்ளார், இவரே புதிய அதிபராகிறார்.[/size][/size]

[size=2][size=4]பழைய சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸீ சங்கூனின் மகனான இவர் கவர்னர் பதவி உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.[/size][/size]

[size=2][size=4]இவர் சீனாவின் புகழ்பெற்ற பாடகி பென் லியோனை ஒரு பிள்ளையுடன் மணமுடித்தவர், மகள் அமெரிக்காவில் படிக்கிறார்.[/size][/size]

[size=2][size=4]மேலைத்தேயங்களுடன் உறவு கொள்ளக்கூடிய இவர் உபஅதிபர் பதவியில் இருந்தாலும் உலகின் முன் தோன்றாமலே பணியாற்றி வந்தவர்.[/size][/size]

[size=2][size=4]ஒபாமா இரண்டாவது தடவை பதவிக்கு வர அதைவிட முக்கியமான எதிர் மாற்றத்தை சீனா அரங்கேற்றியுள்ளதால் ஒபாமாவை விட்டு விட்டு இவரைப் பாருங்கள் என்று மேலைத்தேய ஊடகங்கள் இன்று காலைச் செய்தி எழுதியுள்ளன.[/size][/size]

[size=2][size=4]இவர் பதவிக்கு வந்ததும் ஐந்து ஆண்டு திட்டம் ஒன்றை அ[/size][/size][size=4]மு[/size]ல் செய்து ஊழலை களையும் பணிகளை ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

[size=2][size=4]அதேவேளை சீனாவை நவீனமான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் இவரிடம் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன, உதாரணமாக சீனாவின் மரண தண்டனை முறையை இவர் எதிர்க்கிறார்.[/size][/size]

[size=2][size=4]எனவே புதிய அதிபரின் காலத்தில் சீனாவில் கூடுதலான ஜனநாயகம் மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]மறுபுறம் பெய்ஜிங்கில் குவிந்துள்ள இராணுவத்தைப் பார்த்தால் சீனா இன்னமும் பெரும் சிக்கல்களையே சந்திக்குமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]சீனா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் கனவுகளில் கிடக்க சதாரண சீனக் குடிமகன் பட்டினியில் வாடுகிறான்.[/size][/size]

[size=2][size=4]யாழ்ப்பாணத்தில் தமிழர் படும்பாடுதான் சீனாவில் சாதாரண சீன மக்கள் படும் பாடாக இருப்பது கவனிக்கத்தக்கது.[/size][/size]

[size=2][size=4]இந்த அவல நிலைகளை மாற்றி சீனாவை புதிய பாதைக்கு நகர்த்துவார் புதிய அதிபர் என்கிறார்கள் நோக்கர்கள்.[/size][/size]

[size=2][size=4]ஈரான், சிறீலங்கா விவகாரத்தில் பதவி விலகும் சீன அதிபர் எடுத்த மடைத்தனமான முடிவுகளை இவராவது மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=116704

இலங்கைக்கு கொடுத்த பணம் சம்பந்தமான ஊழல் பட்டியலை புதிய அதிபர் வெளிவிடுவரா?

  • தொடங்கியவர்

[size=5]மேற்கத்திய ஜனநாயகத்தை பின்பற்ற முடியாது : சீன அதிபர் ஹூ ஜின்டாவோ பேச்சு[/size]

[size=4]மேற்கத்திய நாடுகளை போன்ற, ஜனநாயகத்தை பின்பற்ற முடியாது, என சீன அதிபர் ஹூ ஜின்டாவோ தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு அடுத்தப்படியாக, மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, பீஜிங் நகரில், நேற்று துவங்கியது.நாடு முழுவதும் உள்ள, கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், 2,270 பேர், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.[/size]

[size=4]மாநாட்டை துவக்கி வைத்து, அதிபர் ஹூ ஜின்டாவோ பேசியதாவது:ஊழலை ஒழிக்க, கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதே போல, கட்சி ஒருமைப்பாட்டை காக்க வேண்டியதும் அவசியம். இதை நாம் செய்ய தவறி விட்டால், கட்சி சிதைந்து விடும். இதன் மூலம் ஆட்சிக்கும் பாதிப்பு ஏற்படும்.ஊழல் என்பது மக்களை பாதிக்கக் கூடியது. எனவே, இதை ஒழிக்க முன்பு எப்போதும் இல்லாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். [/size]

[size=4]கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்கள், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும், கறை படியாத நிலை இருக்க வேண்டும். குறிப்பாக, உயர் மட்ட அதிகாரிகள், இதை அவசியம் பின்பற்ற வேண்டும்.[/size]

[size=4]உலகின் மிகப்பெரிய ராணுவத்தை (23 லட்சம் வீரர்கள்) கொண்டுள்ளோம். [/size]இதை விரைவாக நவீனப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, கடற்படையின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.ஜனநாயகத்திற்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தீவிரமான அதே நேரத்தில் எச்சரிக்கையான வகையில் மாற்றங்கள் செய்யப்படும். மக்களால் நடத்தப்படும் தேர்தல், அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் வகையில் நிர்வாகம் போன்ற ஜனநாயக நடைமுறைகள் சட்டப்படி பின்பற்றப்படும்.

ஒரு போதும் மேற்கத்திய ஜனநாயகத்தை பின்பற்றும் திட்டமில்லை.இவ்வாறு ஹூ ஜின்டாவோ பேசினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான, போ சிலாய்,ஊழல், செக்ஸ் உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கியதோடு மட்டுமல்லாமல், கொலை செய்த மனைவியை காப்பாற்ற, அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தினார், என்ற புகாரின் பேரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதை கருத்தில் கொண்டு தான், கட்சியை மீறிய அதிகாரம் யாருக்கும் கிடையாது என, தனது உரையில் ஜின்டாவோ குறிப்பிட்டுள்ளார்.இந்த மாநாட்டில் கட்சியின் பொது செயலர் மற்றும் அதிபர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

தற்போதைய துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக அறிவிக்கப்படுவார், என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 15ம் தேதிக்குள், புதிய பிரதமர் பெயரும் வெளியாக உள்ளது.

மாநாடு சுமுகமாக நடக்கும் பொருட்டு, அரசியல் அதிருப்தியாளர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைக்கவும், புறாக்கள் மற்றும் பட்டங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%AA-194600813.html

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டம் செய்ய வேண்டும் ....இடதுசாரிகள் இடியப்ப சிக்கலில் இருக்கினம் போலகிடக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.