Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்ற விசாரணையின் மூலம் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை - எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

[size=4]

எமது இனத்தின் மீது மிகப்பெரும் மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு தமிழ் அமைப்புகள் அதை மறைத்து சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி நடத்தும் போராட்டங்கள் மற்றும் மாநாடுகளினால் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை. மாறாக சிறீலங்கா இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளே இதனால் நன்மை அடையும் என தமிழின உணர்வாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.[/size][size=4]

அவர் மேலும் தொரிவிக்கையில், கடந்த ஆறு தசாப்தகாலமாக எமது மக்கள் மீது சிங்களம் திட்டமிட்ட படுகொலையைச் செய்து வருகின்றது. இப்படுகொலைகளுக்கு சிகரம் வைத்தால்போல் இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டுபோயினர். இப்படுகொலை உலக நாடுகளின் கண்முன்னால் நடத்தப்பட்டது. இதற்கான ஆதாரங்களும் இந்நாடுகளிடம் உள்ளன.[/size][size=4]

அது மாத்திரமின்றி மழைவிட்டும் தூவாணம் நிற்காததுபோல் இன்றும் தமிழர் பகுதியெங்கும் ஆட்கடத்தல், கொலை, பாலியல் வன்முறை, கலைகலாச்சார அழிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு என்பன நடந்தேறி வருகின்றன. இதுவும் இனவழிப்பின் பாகங்களே.[/size][size=4]

எமது விடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், உலக நாடுகளில் எமது புலம்பெயர் மக்கள் இப்போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சர்வதேசத்திடம் எமது மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது இதற்கு ஐ.நா ஊடாக உண்மையை ஏற்றுக்கொண்டு எமக்கு தனியான இறைமையுள்ள தமிழீழம் அமைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[/size][size=4]

jayanantha%20tk.jpg[/size][size=4]

இதனால் இன்று சர்வதேச சமுகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள் என்பன சிறீலங்காவில் இடம்பெற்றது மனிதப்படுகொலை என உறுதியாகத் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் தமிழினத்திற்கு ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு.[/size][size=4]

இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களும் சில தமிழ் அமைப்புகளும் எமது மக்கள் மீதான இனப்படுகொலை எதிர்த்தும் எமது இலட்சியமான தமிழீழத்திற்காகவும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் புலம்பெயர் மக்கள் மத்தியிலுள்ள ஒரு அமைப்புகள் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனிதப்படுகொலையை மறைத்து போர்க்குற்ற விசாரணையைக் கோரி போராட்டங்கள் மாநாடுகள் நடத்த முனைவது புலம்பெயர் மக்களின் உறுதியான போராட்டத்திற்கும் எமது இலட்சியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போர்க்குற்ற விசாரணையால் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.[/size][size=4]

இதனால் இனப்படுகொலை நடத்திய சிங்கள தேசமும் அதற்கு ஒத்துழைப்பாக நின்ற சில உலக நாடுகள் மற்றும் இந்தியா போன்றவற்றுக்கே சாதகமாக அமையும். இனப்படுகொலை என்ற நாமத்தையே உச்சரிக்கக் கூடாது அவ்வாறு உச்சாரித்தால் அது உலக நாடுகளுக்கு அல்லது வெள்ளையர்களுக்குப் பிடிக்காது என்ற ஒரு மாயையை இந்த அமைப்புகள் உருவாக்கி உள்ளன. இதனால் இந்த அமைப்புகள் எமது மக்களுக்கு நடந்த அந்த கொடூரத்தை மறைத்து வெறுமனே போர்க்குற்ற விசாரணையைக் கோரிவருகின்றன. போர்க்குற்ற விசாரணையால் எந்தவோரு நன்மையும் நடைபெறப்போவதில்லை.[/size][size=4]

அப்படி நடந்தாலும் அது நீண்டகாலம் இழுத்தடிக்கப்படும் அவ்வாறு இழுத்தடித்தும் இறுதியில் படைத்தரப்பினர் சிலருக்கு அதிகபட்சமாக சில வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இதனால் எமது மக்களுக்கோ எமது இனத்திற்கோ விடுதலை கிடைக்கப்போவதில்லை. எமது மண்ணுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் கனவுகளும் பலிக்கப்போவதில்லை.[/size][size=4]

இறுதிப்போரின் போது எமது போராட்டம் நசுக்கப்பட்டதன் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு சிறீலங்கா இந்தியா மற்றும் சில உலக நாடுகள் பெரும் பிரயத்தனத்தைச் செய்து வருகின்றன. இந்தச் சதி வலைக்குள் எமது புலம்பெயர் மக்களோ அல்லது தன் அமைப்புகளோ சிக்கிவிடக் கூடாது.[/size][size=4]

அண்மைக்காலமாக புலம்பெயர் தமிழர்களின் ஓர் அமைப்பு எமது இலட்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தவிர்த்து அரசியல் நடத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த அமைப்புகள் தேசியத் தலைவரின் உருவப்படத்தைக் காட்சிப்படுத்துவது தேசியக்கொடியைப் பயன்படுத்துவது போன்ற விடயங்களை திட்டமிட்டு தவிர்த்து வருகின்றன. இதற்கு இவற்றைப் பயன்படுத்தினால் இங்கு போராட்டம் நடத்த முடியாது என்ற கருத்தையும் மக்கள் மத்தியில் ஊட்டி வருகின்றன. [/size][size=4]

புலம்பெயர் மக்கள் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்தே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்காக வெள்ளையர்கள் கோபித்து விடுவார்கள் என்பதற்காக எமது அடிப்படை கோட்பாடுகளையோ இலட்சியத்தையோ மறைத்துவிட முடியாது. அவ்வாறு செய்யத் துணிவில்லாவிட்டால் அப்போராட்டங்களைச் செய்யாமல்விடுவது சிறந்தது. எனவே இனப்படுகொலை என்ற விடயம் இன்று புலம்பெயர் நாடுகளில் மாத்திரமின்றி தமிழகத்திலும் ஒங்கி ஒலித்து சர்வதேசத்திற்கு ஆட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.[/size][size=4]

இந்நிலையில் புலம்பெயர் அமைப்புகளில் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சில அமைப்புகள் போர்க்குற்ற விசாரணையைக் கோரி பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் மாநாடு நடத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எமது இனத்திற்காக எடுக்கப்படும் காத்திரமான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியதே. எனினும் போர்க்குற்ற விசாரணை கோரி பிரமாண்டமான முறையில் தீர்மானம் எடுப்பது எமது பணியல்ல. அதனால் எமக்கு எந்தவிதத்திலும் நன்மை கிடைக்கப்போவதில்லை.[/size][size=4]

மாறாக எமது விடுதலை அமைப்பின் மீதும் பழிசுமத்தும் ஒரு முயற்சியாகவும் இது அமையும். எனவே மாநாட்டில் சிறீலங்கா மேற்கொண்ட இனைப்படுகொலையை கையில் எடுத்து அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதே சிறந்தது. அதை விடுத்து போர்க்குற்றம் என்ற எமது மக்களுக்கு நன்மை பயக்காத விடயத்தை கையிலெடுத்து தனி

வழி செல்லாமல் புலம்பெயர் மக்களுடன் ஓரணியில் நின்று இனப்படுகொலையை வலியுறுத்தி இவ்வமைப்புகள் போராட்டங்களை நடத்தி எமது கொள்கை இலட்சியம் நிறைந்த தமிழீழத்திற்காக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.[/size][size=4]

நன்றி : ஈழமுரசு[/size]

541077_374370792631953_226385574_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலையை நிரூபிக்க போர்க்குற்றம் நிரூபணம் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னை இன்னுமின்னும் வெளிக்காட்டிக் கொள்கிறார் தான் யாரென்பதை

  • தொடங்கியவர்

அவர் தன்னை இன்னுமின்னும் வெளிக்காட்டிக் கொள்கிறார் தான் யாரென்பதை

வெளிநாடு வந்தாலும் தன் இனத்தை மறக்காதவர்

அவர் சொல்லுறது சரியான பாதைதானே?

போர் குற்றத்தை வைத்து மகிந்தாவை தூக்குகு மட்டும் தான் அனுப்பலாம் ஆனால் தொடர்ந்து நிதி உதவி கொடுத்தால் தமிழீழம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வந்தாலும் தன் இனத்தை மறக்காதவர்

குணத்தை மறைக்காதவர்

அவர் சொல்லுறது சரியான பாதைதானே?

போர் குற்றத்தை வைத்து மகிந்தாவை தூக்குகு மட்டும் தான் அனுப்பலாம் ஆனால் தொடர்ந்து நிதி உதவி கொடுத்தால் தமிழீழம் கிடைக்கும்.

[size=4]தேவைப்படுவது : ஐ.நா. வாக்கெடுப்பு. [/size][size=1]

[size=4]அதை அடைவதற்கு ஒரு வழி : அங்கு நடந்தது, நடப்பது "இனப்படுகொலை" என நிரூபிக்கவேண்டும். [/size][/size][size=1]

[size=4]அந்த பாதைக்கு போர்குற்ற விசாரணைகள் உதவும். [/size][/size]

தேவைப்படுவது : ஐ.நா. வாக்கெடுப்பு.

[size=1][size=4]அதை அடைவதற்கு ஒரு வழி : அங்கு நடந்தது, நடப்பது "இனப்படுகொலை" என நிரூபிக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]அந்த பாதைக்கு போர்குற்ற விசாரணைகள் உதவும். [/size][/size]

சரியான கருத்து அகோதா அண்ணா

உண்மைதான்

இனப் படுகொலை என்னும் போதே ஐ.நா. வாக்கெடுப்பு, இன விடுதலைக்கு வழி கிடைக்கும். மகிந்த செத்தால் பிரயோசனம் இல்லை எமது இனம் விடுதலை பெறுதலே முக்கியம்

Edited by யாழ்அன்பு

யாரும் இலங்கையில் நடத்தது போகுற்றம் மட்டும்தான். அதில் இன அழிபொன்றும் நடைகவே இல்லை என்று விவாதிக்க வில்லை. வன்னியில் மட்டும் 150,000 களைக்காணவில்லை. ஐ.நா வின் நொண்டிக்குதிரை நிபுணர் குழு அதற்கு ஒரு விசாரணை நடத்தி 40,000 பெயர் தான் இறந்திருக்காலம் என்றது. அது நமக்கு பெரிய தோல்வி. ஆனால் நாம் அந்த பொய் விசாரணையை எதிர்க்க வில்லை. ஏற்று அதன் படி செயல்படக்கேட்டொம். எமக்கு தெரியும் அதில் இருந்த சில அங்கத்தவர்கள் உண்மையானவர்கள் என்பது. அவர்கள் கொடுத்த பரிந்துரை தான் இன்றைய ஐ.நா மீதான அறிக்கையின் அடிப்படை.

போர் குறத்தை பல சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. சில தம்மை ஏமாற்றிய மகிந்தாவை பழிவங்க பார்க்கின்றன. விசாணை ஆரம்பிக்க பட்ட பின்னர் ஜெயானந்தமூத்தி கட்டயம் வந்து தனது இணப்படுகொளை நிரூபணங்களை வைக்கட்டும். நாமும் எம்மால் இயன்ற அதி உச்ச நிருபணங்களைத்தான் வைக்க முயல்வோம். அன்று அதை இனப்படுகொலை விசாரணை ஆக்குவோம். ஆனால் அதற்காக இன்று நமக்கு அதரவு தர வரும், ICRC, ICG, IA போன்றவை போர்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வருகின்றன. அவர்களின் கைகளை ஏற்று முன் செல்வோம்.

போர்குற்றம் மூலம் எமக்கு சுயநிர்ணய அரசு பெற்றுத்தந்தாலும், சிங்களம் ஒரு நாள் அதை தனி நாடாக மாற்றும். இன்று நாம் நமக்குள் ஒரு கிட்டடிபாதையை தெரிய வேண்டும். நமக்கு சுதந்திரம் வேண்டும். அதேநேரம் வந்னியில் கிடந்து வாடும் மக்களுக்கும் ஒரு வயிறு உணவும் வேண்டும். வன்னி மக்களிடம் நாங்கள் "தனிநாடு பிரித்து தரும் வரை உங்கள் வறிற்றை கட்டி வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்ல முடியாது. எனவே நாம் போக வேண்டியது நடுப்பாதை மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.