Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வரி "கவிஞர்" மல்லையை நோக்கிப் பாடுவதுபோல் இருக்கு.. :lol:

 

சரியாகச் சொன்னீர்கள் இசை :lol: :lol:

 

 

எங்கே புங்கை. எங்கே இன்றைய பாடல். இழுத்துவாருங்கள் அவரை. :D :D

 

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply

முதல் வரி "கவிஞர்" மல்லையை நோக்கிப் பாடுவதுபோல் இருக்கு.. :lol:

பரவாயில்லை. கவிஞர் என்னை நிலவு என்றுதான் கூரியிருக்கார்.  :D

 

இந்த பாடல் வசந்தகுமாரியும், திருச்சி லோகநாதனும் பாடியது. 

 

பதிவு மிகவும் அழிந்து போயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இசை, மல்லை, சுமே ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, பெரிய இடத்துப் பெண் படத்திலிருந்து, டி. எம்.எஸ் / பி.சுசீலா ஆகியோரின் குரல்களில், எம். ஜி.ஆர்/ சரோஜாதேவி/ நாகேஷ் , ஆகியோரின் நடிப்பில்...

 

அன்று வந்ததும் இதே நிலா....!

 

http://youtu.be/pceTA8B3X7E

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் இரண்டும் அருமை. நன்றி மல்லை, நன்றி புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமே!

 

இன்றைய பாடலாக, 'நான் ஏன் பிறந்தேன்' எனும் திரைப்படத்திலிருந்து, டி. எம். எஸ் / சுசீலா அவர்களின் குரலில், வாலியின் வரிகளில், சங்கர்/ கணேஷ் அவர்களின் இசையில், எம். ஜி. ஆர்/ கே.ஆர்.விஜயா அவர்களின் நடிப்பில், 

 

உனது விழியில்.....

 

 

 

டிஎம்எஸ் இன்  கம்பீரக் குரலில் வந்த பிடித்தமான இனிமையான பாடல்.  வாத்தியார் பாடல் வரிகளுக்காக கவிஞரை பிழிந்தெடுத்தாராம்.

 

அதுக்காகா கே ஆர் விஜயாவையும் நடிப்பில் பிழிந்தெடுதாரா என்று கேள்வி யாரும் கேட்கப்படாது. :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பாடல் புங்கை.. சங்கர்-கணேஷ் அவர்களின் இசை என்பதையே நம்ப முடியாமல் இருக்கும்.. எல்லாவற்றுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களின் வடிகட்டல்தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.. நான் அடிக்கடி கேட்டு இரசிக்கும் பாடல்களுள் ஒன்று.. :rolleyes:

 

 


டிஎம்எஸ் இன்  கம்பீரக் குரலில் வந்த பிடித்தமான இனிமையான பாடல்.  வாத்தியார் பாடல் வரிகளுக்காக கவிஞரை பிழிந்தெடுத்தாராம்.

 

அதுக்காகா கே ஆர் விஜயாவையும் நடிப்பில் பிழிந்தெடுதாரா என்று கேள்வி யாரும் கேட்கப்படாது. :D

 

பிலாப்பழத்தை யாராலும் பிழியமுடியுமா? :icon_idea:

1.குரல் எடுத்துக் கதைக்காத MGRக்கு TMS மிக மிக உயர்த்திப் பாடியிருக்கிறார்.  அது இந்த பாட்டுடன் சேர்ந்து வர வேண்டிய echo வுக்காக இருக்கலாம் போலிருக்கு. (உ+ம் இதயக்கனி படத்தில், காஸ்மீர், காஸ்மீர் பாட்டு) அப்படியாயின் அதை அடையாளம் காண முடியவில்லை.

2.ஆனால் சுசிலா சாதாரணமாகத்தான் பாடியிருக்கிறார். அது  mismatch.

3. நடிப்பின் இடத்தில் MGR  வில்லனிடம் இருந்து ஒழிகிறார்.  இசை அமைப்பு அதை சேராமல் குரல் உயர்த்திப் போகிறது. காட்சி இடம் சாதாரண பூங்கா.  திறந்த வெளி, வனம், மலைகள், கடல் கரை போன்றவற்றுக்கு அப்படி குரல் உயர்த்தும் போது ஒத்து போகும். நிறைய வித்தியாசமான முறையில் இசை அமைப்பு செய்திருக்கலாம்.

(எனக்கு சங்கர்-கனேசின் பாட்டுக்களை கண்டால் அப்படித்தான். பெரிது படுத்ததேங்கோ :D .)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை காட்சிகளை யார் பார்க்கச் சொன்னது மல்லை??!! :D கோலிவுட் படங்களில் அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது.. :wub: பாட்டு நல்லாயிருக்கா.. முடிஞ்சது மாட்டர்.. :D

உங்களை காட்சிகளை யார் பார்க்கச் சொன்னது மல்லை??!! :D கோலிவுட் படங்களில் அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது.. :wub: பாட்டு நல்லாயிருக்கா.. முடிஞ்சது மாட்டர்.. :D

 

Potato Chips ஆனாலும் சாப்பிடும் இடம்  bathroom என்றால் கொஞ்சம் கஸ்டம். அந்த chips சுவையாக இருப்பதில்லை. ஆனல் அதே பொருள் TV க்கு முன்னால் சுவை அதிகமாக இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி, இசை, சுமே, மல்லை ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, பாகப்பிரிவினை படத்திலிருந்து, டி.எம்.எஸ்/ சுசீலா அவர்களின் குரல்களில், சிவாஜி கணேசன்/ சரோஜாதேவி ஆகியவர்களின், அழகிய நடிப்பில் வரும், கிராமத்துப்பாடல்......

 

தாழையாம் பூ முடிச்சு.......

 

http://youtu.be/TOKiUFO3eRU

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன், உடையார், சுமே ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, உத்தம புத்திரன் படத்திலிருந்து, கவிஞர் மருதகாசியின் வரிகளில், ஜி.ராமனாதனின் இசையில்,சிவாஜி கணேசன்/ பத்மினி ஆகியோரின் நடிப்பில், டி.எம்.எஸ்/ பி.சுசீலா ஆகியோரின் குரல்களில், முல்லை மலர் மேலே.........

 

http://youtu.be/mU4Tan-3OZ8

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உடையாருக்கும், சுமேக்கும் நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, படிக்காத மேதை படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், கே.வி.மகாதேவனின் இசையில், டி. எம். சௌந்தரராஜன், ராஜலட்சுமி ஆகியோரின் இனிய குரலில்,சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி ஆகியோரின் அழிகிய நடிப்பில்,

 

'ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா'.....

 

 

http://youtu.be/UWI1u2OLqrY

 

 

நான் மேலே தாளையாம் பூடிச்சு என்ற பாடலை எழுதியது யார் என்று யாருக்காவது தெரியுமா ஒரு கேள்வி போட்டதாக ஞாபகம்.  சில வேளைகளில் பதிவு பொத்தானை அழுத்தாமால் எழுந்து போவிடுகிறேன் போலிருக்கு. 

 

கதை ஒன்று திரும்பவும் பாடலாக. இசை அமைப்பும் கதையாகவே. சிவாஜியின் நடிப்பும் நன்று. TMS இன் குரல்கொடுப்பும் அபாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே தாளையாம் பூடிச்சு என்ற பாடலை எழுதியது யார் என்று யாருக்காவது தெரியுமா ஒரு கேள்வி போட்டதாக ஞாபகம்.  சில வேளைகளில் பதிவு பொத்தானை அழுத்தாமால் எழுந்து போவிடுகிறேன் போலிருக்கு. 

 

கதை ஒன்று திரும்பவும் பாடலாக. இசை அமைப்பும் கதையாகவே. சிவாஜியின் நடிப்பும் நன்று. TMS இன் குரல்கொடுப்பும் அபாரம்.

வேறு யாருமில்லை, மல்லை!

 

நம்ம கவியரசு கண்ணதாசனே தான் என்று பல தளங்கள் சொல்லுகின்றன!

 

http://tthamizhelango.blogspot.com/2012_11_01_archive.html

 

கவிஞர் கண்ணதாசன் காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன.தாழையாம் பூ முடிச்சு என்று தொடங்கும் பாடலில் கவிஞர்
 
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர் 

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

          -  பாடல் : கண்ணதாசன்  ( படம்: பாகப்பிரிவினை)
 

நன்றி புங்கை.

 

இந்த படத்திற்கு பட்டுகோட்டையும், மருதகாசியும் கூட எழுதியிருந்தார்கள்.  அதனால் யார் என்று கேட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே தாளையாம் பூடிச்சு என்ற பாடலை எழுதியது யார் என்று யாருக்காவது தெரியுமா ஒரு கேள்வி போட்டதாக ஞாபகம்.  சில வேளைகளில் பதிவு பொத்தானை அழுத்தாமால் எழுந்து போவிடுகிறேன் போலிருக்கு. 

 

 

 

வல்லாரை நினைவைப் பேணுவதில் வல்லது. சட்னி செய்து,வறுத்துச் சாப்பிடலாம். :D

 

வல்லாரை நினைவைப் பேணுவதில் வல்லது. சட்னி செய்து,வறுத்துச் சாப்பிடலாம். :D

 

நன்றி. :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125073

  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கும், மல்லைக்கும் நன்றிகள்!

 

இன்றைய பாடலாக 'சரஸ்வதி சபதம்' படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், கே. வி. மகாதேவனின் இசையில், சுசீலா அம்மாவின் குரலில், கே. ஆர். விஜயாவின் நடிப்பில்,

 

தாய் தந்த பிச்சையிலே....

 

http://youtu.be/xjiRbHe-VG4

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை. kr விஜயா நிறைய நாட்கள் கொடிகட்டிப் பறந்திருக்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த சுமேக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, ;நான் ஏன் பிறந்தேன்' திரைப்படத்திலிருந்து, கவிஞர் பாரதிதாசனின் வரிகளில்,சங்கர்- கணேஷின் இசையில், டி. எம். சௌந்தரராஜனின் குரலில், எம். ஜி. ஆர்/ காஞ்சனாவின் நடிப்பில்,

 

சித்திரச் சோலைகளே.......

 

http://youtu.be/BAe7us5Q5yY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.