Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை, புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள்: - மனோவிடம் விளக்கினார் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mahinda-150-news.jpg

மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனிடம் தெரிவித்துள்ளார்.  

 

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

 

மாண்டுபோனவர்களை நினைவுகூர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள். கடந்த காலங்களுக்கு நாட்டை மீண்டும் இந்த சம்பவங்கள் அழைத்து செல்வதை அனுமதிக்காதீர்கள். நாட்டின் முதன் குடிமகன் என்ற அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் நேரடி தலையீடு செய்யுங்கள் என மனோ கணேசன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்ததிற்கு பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

 

தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல.

 

யுத்தம் முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில் புலிகள் இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும், ஜே.வி.பியினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்து கூறுங்கள் என்று ஜனாதிபதி கூறினார்.

 

வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

எனினும் மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார்.

 

அத்துடன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=72180&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் போராடி நாட்டை ஒன்றாக்க இல்லையே. பிரித்தானியர்கள் ஆயுத பலத்தால் அதிகாரத்தால் ஒன்றாக்கியதை புலிகள் வரலாற்றுக்கு ஏற்ப பிரிக்கச் சொன்னார்கள். அதில என்ன தப்பு இருக்கிறது. முதலில் மகிந்தவும் சிங்களவர்களும் சரியான வரலாற்றைப் படிக்க வேண்டும். எங்கள் மாணவர்களுக்கு எது வரலாறுன்னு சரியாகத் தெரியும். கிட்டத்தட்ட முழுச் சிங்களவர்களுக்கும் இலங்கை தொடர்பான சரியான வரலாறு பற்றி.. புனர்வாழ்வு அளிக்க வேண்டி இருக்கிறது.  அதுவரைக்கும் நீங்க போய் ஓரமா உட்கார்ந்துக்குங்க சார். ஒரு 5 வருசம் ஆடும் ஆட்டமெல்லாம் ஆடுங்க. அப்புறம்.. வீட்டில போயி குந்திக்கேக்க தெரியும் அதிகார மோகத்தில் பேரின வெறியில் பேசியதன் தாக்கம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாயிண்டை எல்லாரும் நோட் பண்ணிக்குங்க... :D:icon_idea:

 

 

அத்துடன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றார்.

 

 தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல.
 

 

ஜே.வி.பி.ல் இருந்தவர்கள் பெரும்பான்மையினர் - சிங்களவர்கள். அவர்கள் ஏன் தனிநாடு கேட்டு போராடுவார்கள்  :wub:

  • கருத்துக்கள உறவுகள்
ஜே.வி.பி.ல் இருந்தவர்கள் பெரும்பான்மையினர் - சிங்களவர்கள். அவர்கள் ஏன் தனிநாடு கேட்டு போராடுவார்கள்  :wub:

 

அதுதானே. மகிந்த ஒருவேளை தன்னை மங்கி என்று நினைச்சுக் கொண்டிருக்கிறாரோ என்னவோ..??! :lol::D

இந்த திரியில் மகிந்தா சொல்வதை உண்மை என்று நம்பி விவாதங்கள் போவது ஏமாற்றமாக இருக்கிறது. அநாவசியமாக மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோபத்தபாயாவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதும் தெரியாது மாதிரி மகிந்தா நடிக்கிறார். ஆனால் கோபத்தபயா மாணவர்களை தனது கையின் கீழ் கொண்டுவர,  திசாநாயக்காவின் அறிக்கைக்கு காத்திருக்கவில்லை. மேலும் மகிந்தா, மனோ கனேசனுக்கு சொல்லும் அதே வசனதை தம்பியாரிடம் கூறி மாணவர் மீதான நடவடிக்கைக்கு திசாநாயக்கா வரும்வரை பொறுத்திருக்கும் படி கூறவில்லை. இதனால் பதுகாப்பு அமைச்சு விசாரணை எதுவுமின்றி புனர் வாழ்வு என்ற சித்திரவதை கூடத்திற்கு அனுப்பிவிட்டது. திசாநாயக்கா இல்லாமல் எப்படி மாணவர்கள் புனர் வாழ்வுக்கு அனுப்பட்டார்கள். சட்டத்தின் முன், நிரூப்பிக்கும்வரை மாணவர்கள் குற்றவாளிகளென்றும், திசாநாயகா அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபித்தால் மட்டும்தான் அவர்களுக்கு விடுதலை என்றா மகிந்தா கூறுகிறார்?

JVP யோ அல்லது LTTE யோ ஒருவரின் பாதையை ஒருவர் பின் பற்றவில்லை. JVP தமிழரின் நி்லங்களைளை சூறையாடவேண்டும் என்று பிரசாரம் செய்துதான் சிங்கள இளைஞர்களை ஆர்வமாக இயக்கத்தில் சேர்த்தது. அதே நேரம் LTTE தமிழர் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்றுதான் ஆட்களை சேர்த்தது. இலங்கையில் சட்டங்களின் படி JVP செய்த பிரசாரமும் சட்டத்திற்கு முரனானதே. அதே நேரம் புலிகள் சமாதான பேச்சுகளில் இருந்த நேரம், நாட்டை இரண்டாக உடனே பிரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அரசு குறைந்த பட்ச தீர்மானமான சுய நிர்ணய உரிமையை மறுத்ததினால்த்தான் பேச்சுவார்த்தை முன் செல்லவில்லை. இதனால் JVP யும் LTTE  யும் சட்டத்தின் நிலையில் சமனே. மேலும் அவர்களின் போராட்டத்தில் சில நடைமுறை வேறுபாடுகள இருந்தாலும் அடைப்படை நோக்கம் ஒன்றாகவேதான் இருந்தது. அது இலங்கையின் அரசியல்வாதிகள் அதிகாரத்தை தமது கைகளுக்குள் எடுத்து சர்வாதிகாரம் பண்ணுவதால், இரண்டு அமைப்புக்களும், தாம் பிரதி நிதிப்படுத்திய மக்களின் விடுதலையையே கேட்டன.

 

புலிகள் தடை செய்யபட்ட இயக்கமாகவும், மக்கள் விடுதலை முன்னணி இல்லாமல் இருப்பதும் இன்னொரு சிங்கள இனவாத கொள்கையே. ஆனால் மகிந்த சொல்லவருவது போல் இன்று JVP திரும்ப போராட்டம் நடத்தி மகிந்தாவின் அரசை கவிழ்த்தால் அதில் அவர் வாளா விருந்து அது ஒரு சட்டப்படியான போராட்டம் என்பது போன்ற விளக்கம் ஒன்றை தரமட்டார். பாதுகாப்பு அமைச்சின் வெள்ளைவான் JVP குணரத்தினத்தை கடத்திய போது, மகிந்தா, பாதுகாப்பு செயலாருக்கு, JVP சட்டப்படியான இயக்கம் என்று விளக்கம் கூறி விடுவிக்கவில்லை. JVP குணரத்தினத்தை விடுவித்தது அவுஸ்திரேலியா. இதில் எல்லாம் தமிழர் எதிர்ப்பு தெளிவாக தெரிறது. எனவே பல்கலை கழக மாணவர்கள் துக்க நாள் அனுஷ்டிக்க முடியாது என்பது, JVP சட்டப்படியான இயக்கம் என்பதால் அல்ல. அது எங்கெல்லாம் இனவாதததை புகுத்தலாம் என்பதில் மட்டுமே இருக்கிறது. மேலும் மாணவர் கைதுசெய்யபட்டடிருப்பது புலி நடவடிக்கையால் என்று மகிந்தா கோட்டில் நடக்காத விசாரணக்கு தீர்ப்பளிக்க முடியாது.

 

இதே மாதிரியேதான் மகிந்தா தான் சம்பந்தர் உயிரோடு இருக்கும் காலத்தில் தீர்வு காண இருக்கிறார் என்பதும்.  இதை மகிந்தா செய்யும் போது தான் சம்பந்தரின் ஆயுளை எண்ணிகொண்டு காலம் கழிக்கிறார் எனபதை அப்படமாக, வெக்கமில்லமல் சொல்வதாகும். இதை மகிந்தா சொன்னால் முதலில் அவர் எத்தனை நாட்கள் சம்பந்தர் உயிர் வாழப்போவதாக கணக்கு பார்க்கிறார் என்பதைக் கூற வேண்டும் . பின்னர் தான் எத்தனை நாட்களுக்குள் தீர்வை எட்டிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார் என்பதையும் கூறவேண்டும். இதை நாங்கள் விளங்க மறுத்து அடம் பிடிப்பது மகிந்தாவுக்கு நன்மை தரும். மகிந்த இந்த பொய்யை செய்யும் நோக்கம்.

1. தமிழர்களை பிரிக்க.

2. சர்வதேசத்திற்கு தான்  தீர்வில் ஆர்வமாக இருக்கிறேன் என்று காட்ட.

3. தீர்வு முன்னேறாத காரணத்தை சம்பந்தர் மீது இலகுவாக போட.

 

மகிந்தா இதுவரையில் சொன்ன பொய்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய பொய்தான் சம்பந்தார் காலத்தில் தீர்வை செய்து முடிக்க இருப்பதாக கூறும் பொய்.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கக் கவுண்டமணி தான் அடிக்கடி நினைவில் வந்து போகின்றார்! :o

>> புலிகள் நாட்டைப் பிரிக்க போராட்டம் நடத்தினார்கள்.

 

அதுதான் நீங்க செய்த மாபெரும் தவறு. முழுநாட்டையும் வென்று எடுத்து, சாம்ராஜ்யம் அமைத்திருக்க வேண்டும்.  உங்களுக்கு கிடைத்த விலைமதிக்க முடியாத உயிர்தியாகங்கள், மனித குல வரலாற்றிலேயே யாருக்கும் கிடைக்கவில்லை. உங்களது படையினைக் கொண்டு, முழு இலங்கையையும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வென்று எடுத்து இருந்திருக்கலாம்.

 

நீங்களாகவே, வடக்கு, கிழக்கு என்று எல்லையை வகுத்து, அதனைப் பாதுகாக்கவே, உங்களது சக்தியையெல்லாம் செலவழிக்க வேண்டியதாகி விட்டது.  உலக வரலாற்றிலேயே, அலெக்ஸாண்டர், நெப்போலியன், முகலாய மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், அனைவருமே, படைகளை திரட்டி, பல நாடுகளை வென்று, சாம்ராஜ்யம் அமைக்கவே முயன்றார்கள்.

 

யாருமே, எல்லையை வகுத்துக் கொண்டு, அதனை பாதுகாக்க போராடவில்லை. என்றைக்கோ, முழு இலங்கையையும் நீங்கள் வென்று எடுத்து இருந்திருக்கலாம். அப்படி செய்து இருந்தீர்களானால், இன்னைக்கு, அவர்கள், ஐ.நா. சபை வாசலிலே நின்று கொண்டு புலம்பும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

 

இனியாவது, வடக்கு, கிழக்கு என்று உங்களது சிந்தனை, செயல்களை எல்லைக்குள் அடக்கிக் கொள்ளாதீர்கள். உண்மையில், பார் உலகமெங்கும் பரந்து விரிந்து வாழ்கின்றீர்கள். திங் குளோபல். ஆக்ட் லோக்கல். என்று செயல் ஆற்றுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.