Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளரி

Featured Replies

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

                                                                  boomer.jpg

 

அமைப்பு :

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

எறியப்படும் முறைகள் :

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன் :

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் வளரி :

"வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது."

 

http://santhan.com/index.php/kalai/kalai400

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thanx_4_add_041.gif

  • கருத்துக்கள உறவுகள்

வளரி என்று ஒரு இணையத் தொலைக்காட்சி இருந்ததாக ஞாபகம்..

 

இந்த வளரி ஆயுதத்தை இப்போதும் யாரும் பயில்கின்றார்களா, பயன்படுத்துகின்றார்களா?

சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயுதம் என்ற ரீதியில் இந்த வளரிதான் இன்று அணுகுண்டாக மாறி உலகையே ஆட்டிப்படைக்கின்றது :)

இந்த ஆயுதத்தை பற்றி என் தாத்தா கூறக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள தொண்டிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட வளரியின் படம்(Source : http://tamilnation.co). 

 

valari.jpg

  • தொடங்கியவர்
வளரி என்று ஒரு இணையத் தொலைக்காட்சி இருந்ததாக ஞாபகம்..

 

இந்த வளரி ஆயுதத்தை இப்போதும் யாரும் பயில்கின்றார்களா, பயன்படுத்துகின்றார்களா?

 

இப்பொழுது வளரி பயில்கின்றார்களா என்று தெரியவில்லை . ஆனால சங்ககாலத்தில் இதன்பயன்பாடு இருந்திருக்கின்றது . நான் இணைக்கும் " வேங்கையின் மைந்தன் " சரித்திர நாவலில் இதன் பயன்பாட்டை அறியக்கூடியதாக இருக்கின்றது . வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கிருபன் .

  • தொடங்கியவர்
இந்த ஆயுதத்தை பற்றி என் தாத்தா கூறக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள தொண்டிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட வளரியின் படம்(Source : http://tamilnation.co). 

 

valari.jpg

 

மிக்க நன்றிகள் மேலதிக தகவலுக்கு ஆதித்த இளம்பிறையன் . மேலும் பெரிய சிறிய மருது சகோதரர்கள் இந்த வளரி வீசும் கலையில் கைதேர்ந்தவர்கள் என்று படித்திருக்கின்றேன் . வளரி பற்றிய மேலதிக படங்கள் இங்கே .

 

pumarang.jpg

http://1.bp.blogspot.com/_cUXwJ7o3uhw/Sex_EZnJclI/AAAAAAAAADA/wBVXWFdt_Aw/s1600/pumarang.jpg

 

sivagangai_valari.jpg

http://4.bp.blogspot.com/-C1NMkDnRyFc/UBskQAvCGJI/AAAAAAAAAAM/wUkI84cj01s/s1600/sivagangai_valari.jpg

வளரி தொடர்பான இணைப்பிற்கு நன்றி அண்ணா!

  • தொடங்கியவர்
வளரி தொடர்பான இணைப்பிற்கு நன்றி அண்ணா!

 

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மணி .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன். வளரியில் இத்தனை இருப்பதை இப்போதான் அறிகிறேன்.

  • தொடங்கியவர்
நன்றி கோமகன். வளரியில் இத்தனை இருப்பதை இப்போதான் அறிகிறேன்.

 

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சுமே .  ஏன் சங்கத்தமிழரின் ஆயுதங்களின் ஒன்றான " வளரி " இன்றைய அவுஸ்திரேலிய பழங்குடியனரின் பூமராங் பரிணாமமாக இருக்கக்கூடாது ?? விடையம் தெரிந்தவர்கள் யாராவது கருத்திடுவீர்களா ??

  • தொடங்கியவர்
ஆயுதம் என்ற ரீதியில் இந்த வளரிதான் இன்று அணுகுண்டாக மாறி உலகையே ஆட்டிப்படைக்கின்றது :)

 

 

அதாவது வளரியின் பரிணாம வளர்ச்சி அணுகுண்டு என்றால் ,  இன்றும் திராவிடரின் எச்சமாக பூமராங் அவுஸ்தேரிலிய பழங்குடிகளிடம் காணப்படுகின்றதே கிளியவன் ?  வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.