Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு! 
[sunday, 2012-12-30 10:20:57]
 
'நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் � முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா? � என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார். அவர், "முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக் கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர். இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இப்புதிய அறவழிப் போரினை ஏற்று ஊக்குவிக்கின்றன.
  
ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டம் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையேயான போட்டி அரசியலில் சிக்கிச் சின்னாபின்னமாகி உள்ளது.
 
ஈழத்தில் இன்று வாழ்வை மீள் கட்டமைக்கத் தடுமாறும் விதவைகள், உடல் உறுப்புகள் இழந்தோர், அனாதைக் குழந்தைகள் ஆகியோருக்கு தமிழக மக்கள் உதவவேண்டும். மத்திய மாநில அரசுகளும் ரோட்டரி, அரிமா உள்ளிட்ட சமூக அமைப்புகளும் இணைந்து செயற்படும் முறைப்படியான புனரமைப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
 
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வேகமாக விரிந்து வரும் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவும், அமெரிக்க - ஐரோப்பிய - ஜப்பான் நாடுகளுக்கு கவலை தருவதாகவும் உள்ளது. சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள்" என்று பேசினார்.

சீனா சம்பந்தமாக ஒரு தெளிவான கொள்கை மேற்குலகிடம் இல்லை. <_< 

 இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வேகமாக விரிந்து வரும் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவும், அமெரிக்க - ஐரோப்பிய - ஜப்பான் நாடுகளுக்கு கவலை தருவதாகவும் உள்ளது. சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள்" என்று பேசினார்.
 

 

எதுவரை சீனா செல்லும், எதுவரை இந்தியாவும் மேற்குலகமும் அனுமதிக்கும் என்பதில் பூகோள அரசியல் இருந்தாலும்,
சீனாவின் வளர்ச்சி தலைக்கு மேலாகவும் அதன் இராணுவ பலம் பெருத்தவிட்டதன் பின்னரும் - எல்லாமே பிந்திவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இந்திய மைய அரசின் கையாள் என்பது தெரிந்ததே.. :D

இவர் இந்திய மைய அரசின் கையாள் என்பது தெரிந்ததே.. :D

இந்த தெளிவு ஒவ்வொரு தமிழனிடமும் இருக்க வேண்டும் ................ :D

,இந்திய -இலங்கை புலனாய்வுத்துறையின் கையாள் என்பது உறுதிபடுத்தப்பட்ட உண்மை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா கூட எதிர்காலத்தில் சீனாவை கட்டுபடுத்துவது முடியாத காரியமாக இருக்க போகிறது, ஏனெனில் அமெரிக்க அதிகமாக கடன்வாங்கி இருப்பதே சீனாவிடம்தான், அதனால்தான் மகிந்த சீனாவுக்கு காவடி தூக்கிறான், நாலாபக்கமும் எதிரியை சம்பாதித்து வைத்து இருப்பது இந்தியாதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு! 

இவருக்கு வேறை வேலையே இல்லையா? மானங்கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இவருக்கு வேறை வேலையே இல்லையா? மானங்கெட்டவர்கள்.

 

உண்மைதான் இந்த தமிழ் நாட்டு கோமளிகளிற்கு வேறை வேலையே இல்லை .

உண்மைதான் இந்த தமிழ் நாட்டு கோமளிகளிற்கு வேறை வேலையே இல்லை .

 

 ஏன் தமிழ் நாட்டு கோமளிகள் என்ற பதம், இதை நிர்வாகம் கவனிக்க மாட்டாதா?

 

அவரை வேணுமென்றால் கோமாளிகள் என்று சொல்லாம். அதற்கு இப்படியா எழுதுவது?

 

புலம்பெயர் ஈழ கோமளிகளைவிட அவர்கள் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்
 ஏன் தமிழ் நாட்டு கோமளிகள் என்ற பதம், இதை நிர்வாகம் கவனிக்க மாட்டாதா?

 

அவரை வேணுமென்றால் கோமாளிகள் என்று சொல்லாம். அதற்கு இப்படியா எழுதுவது?

 

புலம்பெயர் ஈழ கோமளிகளைவிட அவர்கள் எவ்வளவோ மேல்.

 

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்

 

 இது வெள்ளிடை மலை

தமிழ்நாட்டு கோமாளி = தமிழ் நாட்டில் உள்ள கோமாளி?
or
தமிழ்நாட்டு கோமாளி = தமிழ் நாட்டில் உள்ள எல்லாரும் கோமாளி?

எது சரி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.