Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழில்தான் பேசுகிறோமா? எழுதுகிறோமா? ஒரு அதிரடிப்பதிவு.

Featured Replies

        நாமெல்லாம் தமிழ்தான் பேசுகிறோமா? எனபதில் சந்தேகம் வந்துவிட்டது. நான் கொஞ்ச நாட்களாகவே 'மரபு தமிழ் இலக்கணம்' என்கிற நூலைப் படித்துவருகிறேன். அதில் தமிழ் மொழியில் கலந்து கிடக்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றி விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை எழுதும்போதும், பேசும்போதும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றும், முடிந்தவரையில் தமிழ் சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் உள்ளது. அதைப்படித்து சற்று குழப்பமாக இருந்தபோதுதான் எனது தோழி   ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, அது எப்படி என்றால்?


                 "தமிழ்  மொழியில் வடமொழிச் சொற்களை தவிர்க்கவேண்டியது அவசியம்தானா? இது நன்மை கொடுக்குமா?" "
 
            இதுதான் கேள்வி. என் மனதிற்குள் மேலும் குழப்பம் கூடிவிட்டது. தமிழ்மொழியில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாமா? கூடாதா? இதைப்பற்றி தெரியாமல்  எழுதினால் படித்த புலவர்களும், கவிஞர்களும்  நம்மளை இழிவாக நினைப்பார்களா? ஒண்ணுமே தெரியாத இவனெல்லாம் எழுத வந்துட்டான்யா! "இனி தமிழ் மெல்ல மெல்ல முழுவதும் அழிந்துவிடும்" என்று சபித்துவிடுவார்களோ? என்ற பயம் வந்துவிட்டது.
 
            சரி முதலில் நமது 'ஐயத்தை' போக்கவேண்டும் என்று புறப்பட்டேன். நமது முன்னோர்கள் அவர்களின் எழுத்துகளில் பிறமொழிச்சொற்களை பயன்படுத்திருக்கிறார்களா இல்லையா எனப் பார்ப்போம் என்று சென்றபோதுதான். மேலும் ஒரு குழப்பம் வந்தது. முதலில் வடமொழிச் சொற்கள் எவை எவைகள் எனத்தெரிந்திருக்கவேண்டும் அப்போதுதானே மிக எளிதாக கண்டுப்பிடிக்கமுடியும்.
 
         யார்  யாரெல்லாம் என்னுடைய இந்த பயணத்தில் கலந்துகொள்ளப் போறீங்க?  வாங்க போவோம். தமிழ்ச்சொற்களில் கலந்துக் கிடக்கும் வடமொழிச்சொற்கள் எவை எவைகள் என்றும், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதைப்பற்றி அலசுவோம்.
 
வடமொழிச்சொற்கள் மற்றும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் முறையே!
 
அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம் 
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை 
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம்,கால்கோள்
ஆசை - விருப்பம்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இந்திரன் - வேந்தன்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம் 
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்.
உபமானம் - ஒப்புப்பொருள்.
ஐசுவரியம் - செல்வம்.
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள் 
கவிஞன் - பாவலன்,புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு 
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி 
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம் 
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு.
சொப்பனம்  - கனவு.
சோதி - ஒளி.
ஞானம் - அறிவு.
தண்டித்தல் - ஒற்றுதல்.
தத்துவம் - உண்மை.
தரித்திரம் - வறுமை.
தர்க்கம் - சொற்போர்.
தவம் - நோம்பு.
தானதிகாரி - பொருளாளர்.
தாகம் - வேட்க்கை.
தாசன் - அடியான்.
தாரம் - மனைவி.
தானியம் - கூலம்.
தினம் - நாள்.
தெய்வம் - கடவுள்.
தேசம் - நாடு.
நகரம் - பட்டினம்.
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு.
நியாயவாதி - வழக்குரைப்போன்.
நிர்வாகசபை  - ஆட்ச்சிக்குழு.
நித்திரை - உறக்கம்.
நீதிபதி - முறைவேந்தன்.
பக்தி - அன்பு.
பரீட்சை - தேர்வு.
பத்திரம் - ஆவணம்.
பத்திரிகை - இதழ்.
பத்திராதிபர் - இதழாசிரியர்.
பாகம் - கூறு.
பாத்திரம் - கலம், தகுதி.
பிரகாசம் - ஒளி.
பிரசங்கம் - சொற்ப்பொழிவு.
பிரமசாரி - மாணி.
புராணம் - பழமை, பழங்கதை.
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்.
பூசை - வழிபாடு.
மந்திரி - அமைச்சன்.
மந்திரம் - மறைமொழி.
மாதம் - திங்கள்.
மாமிசம் - ஊன்.
முகூர்த்தம் - ஓரை.
முத்தி - வீடு.
மேகம் - முகில்.
மோட்சம் - வீடு.
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு.
வாகனம் - ஊர்தி.
வாதி - வழக்காளி.
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை.
விதி - ஊழ்.
விஞ்ஞானம் - அறிவியல்.
விஷேசம் - சிறப்பு.
வித்தியாசம் - வேறுபாடு.
விமர்சனம் - திறனாய்வு.
வியாசம் - கட்டுரை.
வைத்தியர் - மருத்துவர்.
ஸ்ரீமான் - திருவாளர்.
 
யப்பா இப்பவே கண்ணை கட்டுதே! இன்னும் எவ்வளவோ இருக்கு, இப்ப சொல்லுங்க , நாம தமிழ்தான் பேசுகிறோமா???????
 
யாருப்பா அது பாதி பயணத்தில் இறங்கி போகிறது. விடாதிங்க! விடாதிங்க! பிடிங்க அவரை. 
உதரணங்களைப் பார்ப்போம்:
முதலில் மகாகவி பாரதியார் வரிகளைப் பார்ப்போம்: அதில் அவர் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறாரா? இல்லையா?

தெய்வப் பாடல்கள் 29. காளிப் பாட்டு  
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்

ஞானப் பாடல்கள்

80. சிட்டுக் குருவியைப் போலே

 

  பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு                                (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு                                             (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.                                              (விட்டு)
 
அடுத்ததாகஅவையார் பாடலில்....
 
 
16. முத்தி காண்டல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - மில்லை
தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

வடமொழிச் சொற்களை, நமது சங்ககாலப் புலவர்களும், பாரதியார்,  அவையார் , இன்னும் பல கவிஞர்களும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் மிகக்குறைந்த சொற்களையே பயன்படுத்திருக்கிறார்கள் ஆகவே!. நாமும் நமது கதை - கட்டுரைகள், கவிதைகளில் பயன்படுத்துவோம். ஆனால் முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ்  சொற்களைப் பயன்படுத்துவோம்.
 

 

நாமும் நமது கதை - கட்டுரைகள், கவிதைகளில் பயன்படுத்துவோம். ஆனால் முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ்  சொற்களைப் பயன்படுத்துவோம்.

 

என்னைப் பொறுத்தவரையில் மொழி என்பது தொடர்பாடலில் ஒரு ஊடகம் . இது எவ்வளவுக்கு எவ்வளவு இலகுபடுத்தப்படுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு பாமரனையும் சென்றடையும் . நீங்கள் சொல்கின்ற தூயதமிழை எத்தனை வீதமானோர் கிரகிக்க தயாராக உள்ளார்கள் ? இல்லை தூயதமிழில்தான்   வரவேண்டும் என்றால் அதை ஒரிருவர்தான் வாசிப்பார்கள் .

Edited by கோமகன்

Tamil தமிழ் :rolleyes: :rolleyes: :unsure:
Hindi हिन्दी
Sinhala සිංහල
English English
Malayalam മലയാളം
Urdu اردو
Spanish español
Kurdish کوردی
French français
Japanese 日本語

இங்கு இரண்டு விடயங்கள் நோக்கத்தக்கது.

1. நாம் இன்று படிக்கும் சங்க இலக்கியங்களின் நேரடி சுவடியை (original copy) யாரும் பார்த்தது கிடையாது. யாரோ ஒருவர் பிரதி எடுத்ததுதான். அப்படி பிரதி எடுக்கும்பொழுது அந்த கால அரசியல், சமூக சூழலுக்கு ஏற்றவாறு சில விடயங்களை நீக்கியிருக்கலாம் , சில விடயங்களை சேர்த்திருக்கலாம், வார்த்தை பிரயோகங்களை  மாற்றியிருக்கலாம். ஆகையால் சங்க காலத்தில் சங்கத மொழியை(sanskrit) பாவித்தார்கள் என்று அறுதியிட்டு யாரும் கூற முடியாது.

2. இரண்டாவது  நாம் வடமொழி எனக் கொள்ளும் பல வார்த்தைகள் தமிழ் மொழியிலிருந்து வட மொழிக்குச் சென்று திரும்ப தமிழ் மொழிக்கு திரிந்து வந்திருக்கும்.  அல்லது நேரடி தமிழ் சொல்லாக இருக்கும். இதைத்தான் பாவாணர் ஆராய்ந்து வடமொழியில் இருக்கும் இருபது சதவீத சொற்கள் தமிழ் சொற்கள் என்றார். சமீபத்தில் மா.சோ.விக்டர் ஆராய்ந்து வடமொழியில் இருக்கும் நாற்பது சதவீத சொற்கள் தமிழ் சொற்கள் என்றார்.

உதாரணத்திற்கு புஜம் என்ற சங்கத வார்த்தை புயம் என்ற தமிழ் வார்த்தையின் திரிபு
ஜவுளி -> சவுளி -> சவளுதல்
கல்யாணம் -> களியாணம் ->களி ->களித்தல்
இப்படி ஏகப்பட்டதைக் கூறலாம்.

இதை வடமொழிச் சொல் என்று கூறுவதற்கு முன் அதன் வேர்ச்சொல்லை ஆய்ந்து அறிந்துதான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி அரைகுறை பதிவுகளால் இருக்கும் தமிழ்ச் சொற்களையும் வடமொழிக்கு கடன் கொடுத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழீழன் உங்கள் சேவைக்கு. சங்க காலத்தில் இருந்தே வடமொழி தமிழுள் கலக்கத் தொடங்கிவிட்டது. எதையும் புதிதாகச் சொல்லும்போது மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது கிடையாது. அதற்காக மனம் தளராது உங்கள் பணியைத் தொடருங்கள்.
 
கோமகன் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே. புதிய சொற்கள் என்று ஒன்றும் இல்லை. நாம் அறியாத சொற்கள், மறந்துபோன சொற்கள் அவ்வளவே. கொஞ்சநாள் கடினமாக இருப்பது பின்னர் பழக்கத்தில் வந்தவுடன் இலகுவாகிவிடும். தமிழ் தமிழ் என்று வேடம் போடும் நாங்கள் தமிழ் எழுதி தமிழராய் வாழலாம்.

இங்கு இரண்டு விடயங்கள் நோக்கத்தக்கது.

1. நாம் இன்று படிக்கும் சங்க இலக்கியங்களின் நேரடி சுவடியை (original copy) யாரும் பார்த்தது கிடையாது. யாரோ ஒருவர் பிரதி எடுத்ததுதான். அப்படி பிரதி எடுக்கும்பொழுது அந்த கால அரசியல், சமூக சூழலுக்கு ஏற்றவாறு சில விடயங்களை நீக்கியிருக்கலாம் , சில விடயங்களை சேர்த்திருக்கலாம், வார்த்தை பிரயோகங்களை  மாற்றியிருக்கலாம். ஆகையால் சங்க காலத்தில் சங்கத மொழியை(sanskrit) பாவித்தார்கள் என்று அறுதியிட்டு யாரும் கூற முடியாது.

2. இரண்டாவது  நாம் வடமொழி எனக் கொள்ளும் பல வார்த்தைகள் தமிழ் மொழியிலிருந்து வட மொழிக்குச் சென்று திரும்ப தமிழ் மொழிக்கு திரிந்து வந்திருக்கும்.  அல்லது நேரடி தமிழ் சொல்லாக இருக்கும். இதைத்தான் பாவாணர் ஆராய்ந்து வடமொழியில் இருக்கும் இருபது சதவீத சொற்கள் தமிழ் சொற்கள் என்றார். சமீபத்தில் மா.சோ.விக்டர் ஆராய்ந்து வடமொழியில் இருக்கும் நாற்பது சதவீத சொற்கள் தமிழ் சொற்கள் என்றார்.

உதாரணத்திற்கு புஜம் என்ற சங்கத வார்த்தை புயம் என்ற தமிழ் வார்த்தையின் திரிபு

ஜவுளி -> சவுளி -> சவளுதல்

கல்யாணம் -> களியாணம் ->களி ->களித்தல்

இப்படி ஏகப்பட்டதைக் கூறலாம்.

இதை வடமொழிச் சொல் என்று கூறுவதற்கு முன் அதன் வேர்ச்சொல்லை ஆய்ந்து அறிந்துதான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி அரைகுறை பதிவுகளால் இருக்கும் தமிழ்ச் சொற்களையும் வடமொழிக்கு கடன் கொடுத்து விடுவார்கள்.

 

 

நன்றி தமிழீழன் உங்கள் சேவைக்கு. சங்க காலத்தில் இருந்தே வடமொழி தமிழுள் கலக்கத் தொடங்கிவிட்டது. எதையும் புதிதாகச் சொல்லும்போது மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது கிடையாது. அதற்காக மனம் தளராது உங்கள் பணியைத் தொடருங்கள்.

 

கோமகன் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே. புதிய சொற்கள் என்று ஒன்றும் இல்லை. நாம் அறியாத சொற்கள், மறந்துபோன சொற்கள் அவ்வளவே. கொஞ்சநாள் கடினமாக இருப்பது பின்னர் பழக்கத்தில் வந்தவுடன் இலகுவாகிவிடும். தமிழ் தமிழ் என்று வேடம் போடும் நாங்கள் தமிழ் எழுதி தமிழராய் வாழலாம்.

 

 

 

மன்னிக்கவேண்டும் சுமே எனது கருத்து இளம்பிறையனாருடன் ஒத்ததே மொழியாழ்கையில் நான் விசும்புக்கு வேட்டையாடத் தயாராகவில்லை :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிக்கவேண்டும் சுமே எனது கருத்த இளம்பிறையனாருடன் ஒத்ததே மொழியாழ்கையில் நான் விசும்புக்கு வேட்டையாடத் தயாராகவில்லை :) :) .

 

அப்ப நீங்கள் திருந்தப் போவதில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

குடத்தில் ஒரு துளி நஞ்சு விழுந்தால் குடத்தில் இருக்கும் தண்ணி முழுவதும் நஞ்சாகும்.ஆனால் கடலில் ஒரு துளி (பல துளிகள்) விழுந்தாலும் கடல் நீரானது அந்த நஞ்சினால் பாதிக்கப்படாது.மாறாக அந்த நஞ்சே கடல் நீரோடு இரண்டறக் கலந்து கடல் நீராகி விடுகிறது.தமிழ் கடல் போன்றது அதற்குள் பிற மொழிகள் கலப்பதால் பெரிய பாதிப்பு எதவும் வந்து விடப் போவதில்லை. மாறாக அந்த மொழிச் சொற்கள் தமது சுயத்தை இழந்து தமிழாய் மாறி விடுகிறது.இது மொழி வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டுகிறது.மேலும் இளம் பிறையினாரின் கருத்தும் ஏற்கத்தக்கதே.இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் சமஸ்கிருதம் அழிந்து போனது.எந்தக் கட்டுப் பாடுகளும் இன்றி எந்த மொழியையும் உள்வாங்கிஅந்த மொழியின் சுயத்தை அழித்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே தமிழின் சிறப்பு.தமிழில் இருந்து பல மொழிகள் பிறந்தாலும் இன்னும் இளமைத் தன்மையுடன் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் மிகப் பழைய மொழியாக தமிழ் இருப்பது அதன் விசாலத்தையும் செழுமையையும் காட்டுகின்றது.உதாரணமாக கொலை வெறிப் பாடலை எடுத்தக் கொண்டால் அதில் பாவிக்கப் பட்ட சொற்கள் 99 விழுக்காடு ஆங்கிலமாக இருந்த பொழுதும் அது ஒரு தமிழ்ப் பாடலுக்குரிய ஒலியமைப்பையும் சந்தத்தையும் கொண்டிருப்பதால் கேட்பவர் காதில் தமிழ்ப் பாடலாகவே ஒலிக்கிறது.அந்த சந்தம் மிக இலகுவாகவே மற்றைய இனத்தவருக்கும் சென்றடைந்து விடுகிறது.(ஒரு ரஸ்சிய நாட்டவர் இந்தப் பாடலை முணு முணுத்ததை கேட்ட பொழுது நான் வியந்து போனேன்).இங்கு ஆங்கிலம் தன் சுயத்தை இழந்து தமிழாகி விடுகிறது. மேலும் பாம்பு எப்படிச் சீறும்? ஸ்ஸ்ஸ் என்று சீறும். இந்த ஸ் என்ற ஒலிக்குரிய எழுத்து புழக்கத்தில் உள்ள தமிழ் நெடுங்கணக்கில் இல்லை.(ட் என்ற எழுத்தை ஏன் பாவிக்கிறார்கள் என்று விளங்கவில்லை)ஒரு வேளை இந்த எழுத்து ஆதித் தமிழில் இருந்து அதிகம் புழக்கத்தில் இல்லாமையில் தற்காலத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாமல் போயிருக்கலாம். பின்னர் மீண்டும் தமிழுக்கே சமஸ்கிருத எழுத்தென்ற பெயரோடு வந்திருக்கலாம்.அல்லது தமிழ்மொழியில் பாண்டித்தியம் பெற்ற வடநாட்டு அறிஞர்கள் தமிழில் படைப்புக்களைப் படைக்கும் பொழுது அவர்களூடாகத் தமிழுக்குள் அவர்கள் அறியாமலோ அல்லது வலிந்தோ விதைக்கப்பட்டிருக்கலாம்.வளமான மண்ணில் விழுந்த விதை முளைத்து அந்த மண்ணின் தன்மையைக் காட்டி இருக்கலாம். இதைத்தான் நிலந்தமை கால் காட்டும் என்றான் வள்ளுவன். ஆக தமிழ்பற்றாலும் தமிழ்வெறியாலும் வேறு மொழிகள் கலப்பதை தமிழ் உணர்வாளர்கள் விரும்பாவிட்டாலும்.மொழிக் கலப்பினால் தமிழ் அழியாது.மேலும் மேலும் வளர்ச்சி அடையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வடமொழிச் சொற்களை, நமது சங்ககாலப் புலவர்களும், பாரதியார்,  அவையார் , இன்னும் பல கவிஞர்களும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் மிகக்குறைந்த சொற்களையே பயன்படுத்திருக்கிறார்கள் ஆகவே!. நாமும் நமது கதை - கட்டுரைகள், கவிதைகளில் பயன்படுத்துவோம். ஆனால் முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ்  சொற்களைப் பயன்படுத்துவோம்.
 

 

எமது விடுதலைப்போராட்டம் வெற்றியடைந்திருந்தால் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. ஆங்கிலம்----- முடியாது கன்னடா------முடியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------முடியாது ஏனைய மொழிகள்----முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்---- தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன். தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!! இவரால்: தினேஷ் தமிழன் வழி :- மணிகண்டன் ஆத்தூர் thanks-facebook

குடத்தில் ஒரு துளி நஞ்சு விழுந்தால் குடத்தில் இருக்கும் தண்ணி முழுவதும் நஞ்சாகும்.ஆனால் கடலில் ஒரு துளி (பல துளிகள்) விழுந்தாலும் கடல் நீரானது அந்த நஞ்சினால் பாதிக்கப்படாது.மாறாக அந்த நஞ்சே கடல் நீரோடு இரண்டறக் கலந்து கடல் நீராகி விடுகிறது.தமிழ் கடல் போன்றது அதற்குள் பிற மொழிகள் கலப்பதால் பெரிய பாதிப்பு எதவும் வந்து விடப் போவதில்லை. மாறாக அந்த மொழிச் சொற்கள் தமது சுயத்தை இழந்து தமிழாய் மாறி விடுகிறது.இது மொழி வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டுகிறது.மேலும் இளம் பிறையினாரின் கருத்தும் ஏற்கத்தக்கதே.இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் சமஸ்கிருதம் அழிந்து போனது.எந்தக் கட்டுப் பாடுகளும் இன்றி எந்த மொழியையும் உள்வாங்கிஅந்த மொழியின் சுயத்தை அழித்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே தமிழின் சிறப்பு.தமிழில் இருந்து பல மொழிகள் பிறந்தாலும் இன்னும் இளமைத் தன்மையுடன் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் மிகப் பழைய மொழியாக தமிழ் இருப்பது அதன் விசாலத்தையும் செழுமையையும் காட்டுகின்றது.உதாரணமாக கொலை வெறிப் பாடலை எடுத்தக் கொண்டால் அதில் பாவிக்கப் பட்ட சொற்கள் 99 விழுக்காடு ஆங்கிலமாக இருந்த பொழுதும் அது ஒரு தமிழ்ப் பாடலுக்குரிய ஒலியமைப்பையும் சந்தத்தையும் கொண்டிருப்பதால் கேட்பவர் காதில் தமிழ்ப் பாடலாகவே ஒலிக்கிறது.அந்த சந்தம் மிக இலகுவாகவே மற்றைய இனத்தவருக்கும் சென்றடைந்து விடுகிறது.(ஒரு ரஸ்சிய நாட்டவர் இந்தப் பாடலை முணு முணுத்ததை கேட்ட பொழுது நான் வியந்து போனேன்).இங்கு ஆங்கிலம் தன் சுயத்தை இழந்து தமிழாகி விடுகிறது. மேலும் பாம்பு எப்படிச் சீறும்? ஸ்ஸ்ஸ் என்று சீறும். இந்த ஸ் என்ற ஒலிக்குரிய எழுத்து புழக்கத்தில் உள்ள தமிழ் நெடுங்கணக்கில் இல்லை.(ட் என்ற எழுத்தை ஏன் பாவிக்கிறார்கள் என்று விளங்கவில்லை)ஒரு வேளை இந்த எழுத்து ஆதித் தமிழில் இருந்து அதிகம் புழக்கத்தில் இல்லாமையில் தற்காலத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாமல் போயிருக்கலாம். பின்னர் மீண்டும் தமிழுக்கே சமஸ்கிருத எழுத்தென்ற பெயரோடு வந்திருக்கலாம்.அல்லது தமிழ்மொழியில் பாண்டித்தியம் பெற்ற வடநாட்டு அறிஞர்கள் தமிழில் படைப்புக்களைப் படைக்கும் பொழுது அவர்களூடாகத் தமிழுக்குள் அவர்கள் அறியாமலோ அல்லது வலிந்தோ விதைக்கப்பட்டிருக்கலாம்.வளமான மண்ணில் விழுந்த விதை முளைத்து அந்த மண்ணின் தன்மையைக் காட்டி இருக்கலாம். இதைத்தான் நிலந்தமை கால் காட்டும் என்றான் வள்ளுவன். ஆக தமிழ்பற்றாலும் தமிழ்வெறியாலும் வேறு மொழிகள் கலப்பதை தமிழ் உணர்வாளர்கள் விரும்பாவிட்டாலும்.மொழிக் கலப்பினால் தமிழ் அழியாது.மேலும் மேலும் வளர்ச்சி அடையும்.
அதே...........

Edited by கோமகன்

ஒரு இனத்தின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை காக்க வேண்டுமெனில் தன் மொழியைப் பற்றியும், இனத்தைப் பற்றியும் உயர்ந்த மதிப்பீடு  தன்னுள் இருக்க வேண்டும். ஆகையால் ஒவ்வொருவருக்கும் தமிழைப் பற்றிய பெருமிதம் இருக்க வேண்டும். இல்லாதவருக்கு அதை உணரச் செய்தல் வேண்டும்.

 

தமிழை அழிக்க முடியாது என்று நாம் ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருப்பதும் ஆகாது. காலத்திற்கேற்ப மாற்றங்களைச் செய்து, இளம் தலைமுறையினருக்கு நம் மொழியின் பெருமையை, அதன் தேவையை உணரச் செய்தல் வேண்டும். 

தமிழை வேறு யார் வளர்ப்பது?? நாம் தான் வளர்க்க வேண்டும். அது என்னிலிருந்து, உங்களிலிருந்து .... கூடுமானவரை நல்ல தமிழிலே பேசுவோம், நல்ல தமிழிலே எழுதுவோம். தமிழே நம் அடையாளம். நமது வாழ்வும், தாழ்வும் அதனாலேயே நடக்கும். வெல்க தமிழ்!! வாழ்க தமிழ் !!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகச்சொன்னீர்கள் ஆதித்தியன். அழியாது என்று மார்தட்டி அழிவைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட அழியாமல் இருக்க நாம் எம்மாலானதச் செய்ய வேண்டும். முதலில் எமது கையெழுத்துகளை தமிழில் போடுவோம். எழுதுவதைத் தமிழில் எழுதுவோம். தமிழர்கள் தமிழர்களுடன் தமிழில் உரையாடுவோம். தமிழர் என்று சொல்வதில் தமிழைப் பேசுவதில் நான் பெருமை கொள்கிறேன். :rolleyes:

ஒரு சொல்லை ஆய வேண்டுமெனில் அந்தச் சொல்லின் வேர்ச்சொல் என்ன என்பதை அறிய வேண்டும். மேலும் அதையொட்டிய கிளைச் சொற்களையும் காண வேண்டும்.  அந்தச் சொல்லுக்கு  வேர்ச்சொல் இல்லையெனில் அது வேறு மொழியிலிருந்து கடன் வாங்கப் பட்டதாகவே இருக்கும். சங்கத(வட)  மொழிச் சொல் எனப்படும் பல சொல்லுக்கு வேர்ச் சொல் என்னவென்று கேளுங்கள் யாருக்கும் தெரியாது. ஏனெனில் அது வேறு மொழியிலிருந்து வந்த சொல்லாக இருக்கும் . தமிழீழன் இணைத்தக் கட்டுரையில் இருந்த சில ஒத்த சொற்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். இந்த சொற்கள் அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள் என்கிறேன். 

பத்திரம்  
பாத்திரம் 
மந்திரம்
இயந்திரம் 
தரித்திரம் 
நட்சத்திரம் 

இதில் எல்லாச் சொற்களுமே திரம் என்று முடிவடைகிறது. முதலில் திரம் என்பது தமிழ்ச் சொல்லா ?? 

அதன் வேர்ச் சொல் யாது ??

தில் என்பது, பருமனால் ஆகிய திண்மையையும், அதனால் ஏற்படும் வலிமையையும், அதுகொண்டு செய்யப்படும் முரண்டையும் குறிக்கும்.


தில்-திர்-திர-திரம் = திண்ணம், உரம், வலிமை, உறுதி, நிலைவரம்
திரம் - திரல் - திரள் - திரளை = திரட்சி, உருண்டை
திரளை - திரணை = திரண்ட மேடை, திண்ணை
திரள் - திரட்டு. திரள் - திரடு = மேடு
திரம் - திறம் - திறன் - திறல். திறம் - திறமை
திர-திரங்கு-திரக்கு. திரங்குதல் = திரண்டு சுருங்குதல், சுருங்குதல்.
திரக்கு = திரட்சி, கூட்டம், நெருக்கடி.

ரகரம் உரத்து றகரம் ஆயிற்றென்க. திறம் என்னும் சொல் தன்மையைக் குறித்தல்போல, அதற்கு இனமான 'திரம்', "திரை' என்னும் சொற்களும் தன்மையைக் குறித்துத் தொழிற்பெயர் விகுதியாகும். ஆக திரம் என்பது தமிழ்ச் சொல்.

உதாரணத்திற்கு மாத்திரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.
மா-மாத்திரம் = அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்னும் உலக வழக்கை நோக்குக. மேலை வடார்க்காட்டில் ஒரு பொருளின் விலையை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்று வினவும் வழக்கு இன்று முள்ளது. அங்கேயே நாட்டுப் படியை மானம் என்கின்றனர்.
மாத்தல் = அளத்தல், உருத்தல் = சினத்தல்.
மா+அனம் = மானம் = அளவு, படி, மதிப்பு.
மா-மாத்திரை = அளவிட்ட மருந்து, கண்ணிமைக் கால அளவு.

இதே மாதிரி  பாத்திரம், பத்திரம் என்ற சொல்லும்.
 பல்+து>பற்று = கெட்டியாகப் பிடித்துக் கொள்
பற்று+இ = பற்றி >பத்தி>பக்தி = இறைமேல் கொண்ட பிடிப்பு; (சிக்கெனப் பிடிப்பேன் எங்கு எழுந்து அருளுவது இனியே!). இது எல்லாம் நான் சொல்லவில்லை தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்னது.

எனக்கு தமிழ் அறிவு குறைவாக இருப்பதால் எல்லாவற்றையும் உடனே என்னால் நிறுவ இயலாது.  ஆனால் ஒன்று மட்டும் திண்ணம்.  மேலே இந்த கட்டுரையில் குறிப்பிடப் பெற்ற பாதிச் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. 
 

ஒரு சொல்லை ஆய வேண்டுமெனில் அந்தச் சொல்லின் வேர்ச்சொல் என்ன என்பதை அறிய வேண்டும். மேலும் அதையொட்டிய கிளைச் சொற்களையும் காண வேண்டும்.  அந்தச் சொல்லுக்கு  வேர்ச்சொல் இல்லையெனில் அது வேறு மொழியிலிருந்து கடன் வாங்கப் பட்டதாகவே இருக்கும். சங்கத(வட)  மொழிச் சொல் எனப்படும் பல சொல்லுக்கு வேர்ச் சொல் என்னவென்று கேளுங்கள் யாருக்கும் தெரியாது. ஏனெனில் அது வேறு மொழியிலிருந்து வந்த சொல்லாக இருக்கும் . தமிழீழன் இணைத்தக் கட்டுரையில் இருந்த சில ஒத்த சொற்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். இந்த சொற்கள் அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள் என்கிறேன். 

பத்திரம்  

பாத்திரம் 

மந்திரம்

இயந்திரம் 

தரித்திரம் 

நட்சத்திரம் 

இதில் எல்லாச் சொற்களுமே திரம் என்று முடிவடைகிறது. முதலில் திரம் என்பது தமிழ்ச் சொல்லா ?? 

அதன் வேர்ச் சொல் யாது ??

தில் என்பது, பருமனால் ஆகிய திண்மையையும், அதனால் ஏற்படும் வலிமையையும், அதுகொண்டு செய்யப்படும் முரண்டையும் குறிக்கும்.

தில்-திர்-திர-திரம் = திண்ணம், உரம், வலிமை, உறுதி, நிலைவரம்

திரம் - திரல் - திரள் - திரளை = திரட்சி, உருண்டை

திரளை - திரணை = திரண்ட மேடை, திண்ணை

திரள் - திரட்டு. திரள் - திரடு = மேடு

திரம் - திறம் - திறன் - திறல். திறம் - திறமை

திர-திரங்கு-திரக்கு. திரங்குதல் = திரண்டு சுருங்குதல், சுருங்குதல்.

திரக்கு = திரட்சி, கூட்டம், நெருக்கடி.

ரகரம் உரத்து றகரம் ஆயிற்றென்க. திறம் என்னும் சொல் தன்மையைக் குறித்தல்போல, அதற்கு இனமான 'திரம்', "திரை' என்னும் சொற்களும் தன்மையைக் குறித்துத் தொழிற்பெயர் விகுதியாகும். ஆக திரம் என்பது தமிழ்ச் சொல்.

உதாரணத்திற்கு மாத்திரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

மா-மாத்திரம் = அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்னும் உலக வழக்கை நோக்குக. மேலை வடார்க்காட்டில் ஒரு பொருளின் விலையை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்று வினவும் வழக்கு இன்று முள்ளது. அங்கேயே நாட்டுப் படியை மானம் என்கின்றனர்.

மாத்தல் = அளத்தல், உருத்தல் = சினத்தல்.

மா+அனம் = மானம் = அளவு, படி, மதிப்பு.

மா-மாத்திரை = அளவிட்ட மருந்து, கண்ணிமைக் கால அளவு.

இதே மாதிரி  பாத்திரம், பத்திரம் என்ற சொல்லும்.

 பல்+து>பற்று = கெட்டியாகப் பிடித்துக் கொள்

பற்று+இ = பற்றி >பத்தி>பக்தி = இறைமேல் கொண்ட பிடிப்பு; (சிக்கெனப் பிடிப்பேன் எங்கு எழுந்து அருளுவது இனியே!). இது எல்லாம் நான் சொல்லவில்லை தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்னது.

எனக்கு தமிழ் அறிவு குறைவாக இருப்பதால் எல்லாவற்றையும் உடனே என்னால் நிறுவ இயலாது.  ஆனால் ஒன்று மட்டும் திண்ணம்.  மேலே இந்த கட்டுரையில் குறிப்பிடப் பெற்ற பாதிச் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. 

 

 

இப்பிடி ஒரு தமிழ் வாத்தி எனக்கு அப்பவே கிடைச்சிருந்தால் , இப்ப சொல்லி வேலையைல்லை கண்டியளோ :D:lol::D .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு மொழிக்கலப்பே இல்லாமல் 'தமிழ் மொழியை பேச,எழுத முடியுமா? என்ற கேள்விக்கு என் பதில்.

 

நிச்சயமாக முடியாது என்பதே! எம்மையறியாமலே எம்முள் சில வடமொழிச்சொற்கள் தமிழ் போலவே கலந்து கிடப்பதால், 

 

இன்றும் பலர் 'சூரியனையே 'தமிழ் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்:)

 

அதனால் நம் மொழியின் வளத்தை அறிவது நமக்கு நல்லதே!.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் =ஆசு + இரியர் - குற்றங்களைக் களைபவர் எனப் பொருள் படும் . இதுவும் தமிழ்ச் சொல்தான். வழிபாடு என்பதே தமிழ்.

 

கதிரவன் என்னும் அழகான தமிழ் இருக்க சூரியன் எதற்கு?  நாம் மனம்வைத்தால் எதுவும் கடினமில்லை. முதலில் மனம்வையுங்கள் தமிழ்த் தங்கை :D

 

 

சூரியன் - இதன் மூல சொல் சூன் --> சுள் --> சுர் - சூரியன்

சூன் - நமக்கு பழக்க பட்ட சொல் இல்லை ஆனால் சுள் மற்றும் சுர் என்ற வார்த்தை சூடு என்ற பொருளை தரும்.

சூரியன்னும் தனி தமிழ் சொல்லே

1. அரையன் என்ற சுத்த தமிழ் சொல் அரசன் என்று திரிந்து பிறகு பேச்சு வழக்கில் ராசன் ஆகி பின் ராஜா என்று சமஸ்கிருதத்ல் ஆனது

2. இந்திரன் - இந்திரன் என்பது மழைக்கான கடவுள். நம் ஆதி தெய்வம்.இந்த சொல்லின் மூலம் - (வின் + து (ளி)) - விந்து (நீரை குறிக்கும் ) சிந்து என்பதன் மூல சொல்லும்

இந்த விந்து என்று சொல்லூவர். விந்து + அரண் = விந்துரண் - > விந்திரன் -> இந்திரன். இதுவும் சுத்த தமிழ் சொல்லே.

3. நகர் : இது நாகு அல்லது நகல் என்ற மொழி மூலத்தில் இருந்து வந்தது. இதன் பொருள் பரப்புதல் அல்லது அகன்று போதல் என்று பொருள். ஆறு என்பது நகர் என்று சொல்லலால் அறிய பட்டது. அதன் கரையில் தோன்றிய குடி இருப்பு நகர் என்று அழைகபைஇட்டது.

4. பூசை - பூ + செய் - என்பது பூசை ஆகி பூஜா என்று திரிந்தது .

Edited by sathyaonnet

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பேசுவது இருக்கட்டும் சீனாக்காரன் பேசுவதைக் கேளுங்கள்!!!!!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.