Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்தக்கோரி இன்றைய தினம் யாழில் கையெழுத்து வேட்டை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

writing-seithy-150.jpg

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

  

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!

கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!

அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

 

என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனயீர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள்.

 

இராணுவ ஆட்சியை மேற்கொண்டிருக்கும் அரசிற்கு எதிராக அனைத்துவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் இலங்கை மக்கள் இருக்கின்றார்கள். மாணவர்கள் கைதினை எதிர்த்து ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறவில்லை. எதிர்ப்பரசியலை கட்டமைத்துக் கொள்ள தமிழ் பகுதியை பிரநிதித்துவம் செய்யும் அமைப்புகள் பெரும் தவறிழைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமவுரிமை அமைப்பின் இந்த செயற்பாடு முக்கியமானதாக அமைகின்றது.

 

இந்தப் போராட்டத்திற்கு தமிழ் பகுதியில் இருக்கும் சமூக ஆவலர்கள், ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். இணைந்து செயற்படுவதன் ஊடாகவே ஜனநாயக சமூகத்தை இலங்கையில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

 

சமவுரிமை இயக்கத்தினர் தொடர இருக்கும் போராட்டத்தை இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். ஜனநாயகப் போராட்ட வடிவங்களை ஊக்குவிப்பதன் ஊடாக போராட்டத்தினை வளர்த்தெடுக்க முடியும்.

பரந்து பட்ட ரீதியாக போராட்டங்களை வளர்தெடுப்பதன் ஊடாக அனைத்துவித ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும். அனைத்து ஜனநாயக சக்திகளே போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்!

அனைத்து முற்போக்காளர்களே, இடதுசாரிகளே இந்த போராட்டத்தினை வளர்த்திட ஒத்துழையுங்கள்!

 

இன, மத பேதம் கடந்து புதிய சமூகத்திற்கான பாதையை ஏற்படுத்துவோம்!.

சம உரிமை இயக்கம்

 

http://www.seithy.com/breifNews.php?newsID=73901&category=TamilNews&language=tamil

கழிவு எண்ணெய் வீச்சு

 

சமவுரிமை இயக்கத்தினர் யாழில் கையெழுத்து வேட்டையினை பெற்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீச்சப்பட்டுள்ளது.

 

 

பல்கலை மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கடத்தல் காணாமல் போனதை நிறுத்துமாறும் வலியுறுத்தி யாழ். பஸ் நிலையத்திற்குள் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றுக்கொண்டிருந்தது.


இதன்போதே கழிவு எண்ணெய்வீசப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் கழிவு எண்ணெயினை திரைச்சீலைக்கு முன்பாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

 

பல்வேறு  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாம் தமது கையெழுத்து வேட்டையினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும் சமவுரிமை இயக்கத்தினர்  தெரிவித்தனர்.

 

1(2060).jpg

 

1aa(13).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/56943-2013-01-15-06-56-49.html

யாழ் ஒட்டுக்குழு தலைவர் நாளை வந்து அறிவுரை கூறுவார்: " உங்களுக்கு கையெழுத்து உரிமை உள்ளது. ஆனால் வீட்டில் மட்டும் போடுங்கள்" என  ^_^ 

 

130115103941_jaffna_protest_304x171_bbc_

அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக

முறையில்கூட போராட்டம் நடத்தமுடியாத சூழ்நிலை:

போராட்டக்காரர்கள்

 

அத்துடன் மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, அந்தக் கையெழுத்து வேட்டை இடையில் கைவிடப்பட்டதாக சமவுரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

 

'அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவதற்குக்கூட யாழ்ப்பாணத்தில் சுதந்திரம் இல்லை' என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130115_jaffnaprotestoil.shtml

சம உரிமை இயக்கம் - யார் இவர்கள்??:  http://www.yarl.com/forum3/index.php?showtopic=112521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா சிங்கள பயங்கரவாதிகளுக்கு அகிம்சை வழியிலான போராட்டங்கள் புரியுமா ??????????? 

சம உரிமை இயக்கம் - யார் இவர்கள்??:

 

 

சரியாக தெரியும் வரை எல்லாம் விளலுக்கு இறைத்த நீர். சனம்  இவர்களும் ஆரோ ஆமியில் ஒரு பகுதி என்று நினத்துதான் கையெழுத்து போடுது.

இவர்கள் "போராட்டம் " என்று ஒரு பத்திரிகை இந்த மாதம் முதல் வெளியிடத்தொடங்கியுள்ளார்கள் .அதில் பல ஆக்கபூர்வமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது .சம உரிமை இயக்க அமைப்பாளர் ஜூட் சில்வா புள்ளேயுடனான நேர்காணலும் வந்துள்ளது. என்னிடம் சில பிரதிகள் இருக்கு யாருக்கும் தேவையானால் அனுப்பிவைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் "போராட்டம் " என்று ஒரு பத்திரிகை இந்த மாதம் முதல் வெளியிடத்தொடங்கியுள்ளார்கள் .அதில் பல ஆக்கபூர்வமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது .சம உரிமை இயக்க அமைப்பாளர் ஜூட் சில்வா புள்ளேயுடனான நேர்காணலும் வந்துள்ளது. என்னிடம் சில பிரதிகள் இருக்கு யாருக்கும் தேவையானால் அனுப்பிவைக்கின்றேன்.

இணையுங்கள் வாசிச்சு பார்ப்போம்....20 வருடங்களுக்கு பிறகு வாசு தேவநானயக்கார மாதிரி இந்த சில்வாவும் மாறக்கூடும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.