Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் பிழைவிட்டோம் என்று சிங்கள மக்கள் விரைவில் உணர்வார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பிழைவிட்டோம் என்று சிங்கள மக்கள் விரைவில் உணர்வார்கள்

 

 

nayina_sing_03.jpgஆணவம் கன்மவினையை ஏற்படுத்துகின் றது என உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதி யரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறிய விடயம் ஈன்று சிந்திப்பதற் குரியது. இதன் காரணமாகவே ஆணவம் கொண்டோர் அழிவைச் சந்திக்கின்றனர் என்ற அவரின் உரை விளக்கம் மிகவும் யதார்த்தமானது. இஃது இலங்கைக்கு மிகவும் பொருத்துடையதும்கூட. இலங்கை நாட்டின் சமகாலப்போக்கை ஒரு கணம் சிந்தித்தால், இங்கு என்னதான் நடக்கிறது என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு ஜனநாயகப் பண்புகள் புதைக் கப்படுகின்றன. நாட்டின் பிரதம நீதியரசர் விடயத்தில் இலங் கையின் அரசியலமைப்பு செயற்பட்ட விதம், இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் அமைப் பின் தெளிவின்மையை அல்லது தனி மனித னுக்கு அது வழங்கியுள்ள அதிகாரக் குவிப்பை சுட்டி நிற்கின்றது.

அரசியல் அமைப்புக்கள் எப்போதும் தெளி வானவையாக, முரண்பாடற்றவையாக, குழப் பத்தை நீக்குபவையாக இருக்க வேண்டும்.  ஆனால், பிரதம நீதியரசராக இருந்த ´ராணி பண்டாரநாயக்கவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பதவி விலக்கியதிலிருந்து அரசியல் அமைப்பு ஏதோவொரு வகையில் சார்புபட்டு செயற்படுத்தக் கூடியதாக இருக்கின்றதென்பதை நாம் ஏற்றுத் தானாக வேண்டும். இது ஒருபுறத்திலிருக்க, தமிழர்களின் விட யத்தில் பராளுமன்றமும், நீதிமன்றமும் இணை ந்து நின்று எதிராக சாதித்தவற்றின் வினைப் பயனாக இப்போது பாராளுமன்றத்திற்கும் நீதி மன்றத்திற்கும் இடையே சிக்கல் நிலை ஏற்பட் டுள்ளது என்று கூறிக்கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதியரசரின் மேற்போந்த கருத்தியலை எடுத்துக் கொள்ளமுடியும். 

அந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பாராளு மன்றத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண் நிலை தென்பகுதியில், அரசு தொடர்பில் சந் தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்விளைவாக, இலங்கையில் இனப் பிரச்சினை இருக்கின்றது என்பதற்கப்பால் இலங்கையில் ஜனநாயகம் கேள்விக்குரியதாகி விட்டுள்ளது என்பதை தென்பகுதி மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வர். எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சி கண் டாலும் எவ்வளவுதான் இராஜதந்திரம் பிரயோகிக்கப்பட்டாலும் அறம் இல்லாத செயல்கள் நிச்சயம் கன்மவினைக்குட்பட்டு உள்ளதையும் இழக்கின்ற துன்பத்தை தரும் என்ற உண்மை நிரூபணமாகும் வாய்ப்பு இந்த நாட்டில் விரைவில் ஏற்படலாம்.

மிக நீண்டகாலமாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் படுகின்ற துன்பங்கள் கொஞ்சமல்ல. இந்தத் துன்பங்கள் பற்றி இம்மியும் கருத்தில் கொள்ளாமல் தமிழர்களை-அவர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விட்டோம் என்று புளகாங்கிதம் கொள்கின்ற சிங்கள மக்களும், அவர்களின் தலைமைகளும் நிச்சயம் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்வார்கள். அது,தமிழர்களுக்கு நாங்கள் பிழை செய்து விட்டோம் என்பதாக இருக்கும்

.http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=414:2013-01-15-04-49-29&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

 

 

 
  •  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிக நீண்டகாலமாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் படுகின்ற துன்பங்கள் கொஞ்சமல்ல. இந்தத் துன்பங்கள் பற்றி இம்மியும் கருத்தில் கொள்ளாமல் தமிழர்களை-அவர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விட்டோம் என்று புளகாங்கிதம் கொள்கின்ற சிங்கள மக்களும், அவர்களின் தலைமைகளும் நிச்சயம் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்வார்கள். அது,தமிழர்களுக்கு நாங்கள் பிழை செய்து விட்டோம் என்பதாக இருக்கும்

 

இதே போல் ஒருசில தமிழ்மக்களும் உணர்ந்துவிட்டார்கள்........உணர்கின்றார்கள்...........உணரப்போகின்றார்கள்.

"தமிழனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்ற SJV இன் வரிகளில் சில குறைபாடுகள் இருக்கிறது.

 

அவர் கூறியிருக்க வேண்டியது "தமிழனையும் சிங்களவனையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்பது.

 

சாதாரண சிங்கள குடிமகன் மோடையாவாக இருப்பதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சிங்கள  பொதுமகன் என்ன, தமிழன் என்ன, சீனன் என்ன வெள்ளையன் என்ன, பொதுமகன் எல்லோருமே மோடையாக்கள்தான். அதனால்தான் எல்லோருக்குமே அரசியல் பிரதிநிதிகள் தேவையாக இருக்கிறது. ரூசவெல்ட், லிங்கன், பிராங்கிளின், வாசிங்டனின் தேவை இந்த உண்மையால் மட்டுமே. 

 

இங்கே சிங்கள் ஆட்சியாளர்களிடம் அரசை கையளித்த சோல்பரியும், அதை எற்றுகொண்ட D.S.கூட்டமும் தான் உண்மையான மோடையாக்கள். அதிலும் குரங்கென்று தெரிந்து அதன் களுத்தில் பூமாலை போட்ட சோல்பரியைவிட மோடையா உலகில் பிறந்திருக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.