Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகளை கொலை செய்த சவூதியின் உதவி வேண்டாம்: ரிஷானாவின் தாய்

Featured Replies

என்னுடைய மகளை கொலைச்செய்த சவூதி அரசாங்கத்தினதோ  அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களின் எந்த உதவிகளும் தங்களுக்கு வேண்டாம் என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானாவின் தாய் அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.

 

 

அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ள ரிஷானாவின் தாயார், சவூதியைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57169-2013-01-18-07-17-08.html

  • தொடங்கியவர்

ரிசானாவின் குடும்பத்துக்கு அமைச்சர் ஹக்கீம் நிதியுதவி

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்துக்கு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

 

நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் ஐந்து இலட்ச ரூபாவை வழங்கியுள்ளார். இதேவேளை சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ்பெரேரா மூன்று இலட்ச ரூபாவை ரிசானாவின் குடும்பத்துக்கு நேரடியாக சென்று கையளித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2605

  • கருத்துக்கள உறவுகள்

சௌதியின் உதவிகளை மறுத்தது தங்கள் தன்மானத்தைப் பறைசாற்றியது. ஆனால் ஹக்கீமின் உதவியை ஏற்றுக்கொண்டது யோசிக்க வைக்குது.. :D

இளவரசர் போய் சேர்ந்திட்டார். ஈரானிய கப்பல் தப்பிவிட்டது. அரசியல் காற்றின் திசையை எதிர்வு கூறுவது கடினம்.

 

முதலில் தாய் பத்திரிகைகளுக்கு தனது மகளை காப்பாறுவதாக கூறிய அரசியல் வாதிகள் எங்கே என்றார். உடனே ஹிஸ்சபுல்லாஹ் சவுதி தனவந்தர் வீடு கட்டுவார் என்றார்.  பின்னர் இளவரசர் என்றார்கள். பின்னர் இளவரசருக்கு லஞ்சம் வழங்கும் படம் போடப்பட்டது. தாய் மகளை இஸ்லாமிய அரசு கொல்லவில்லை அல்லாஹ் தான் எடுத்திவிட்டார் என்றார். இப்போ சவுதியிடம் பணம் வேண்டாமாம். இளவரசர் போய்விட்டார். யார் பணத்தை அவரிடம்கொண்டு போய் திருப்பி கொடுக்க போகிறார்கள்? (அல்லது அவர் லஞ்ச பணத்துடன் மாறிவிட்டார்- ஒன்றும் கிடையாமல் ஏமாந்த தாய் இப்படி அறிக்கை விடுகிறாவா? :lol: )

 

எதற்கும் இலங்கை அரசிடம் மாட்டிய இவ இனி கட்டாயம் மந்திரியாக வந்துதான் ஆக வேண்டும். விரைவில் கீதாஞ்சலி கிளிநொச்சி பதவியை இராஜிமா பண்ணி தாய் வர இடமளிப்பா. அதன் பின்னர் கக்கீம் பதவி இராஜினாம பண்ணி தாயை நீதி அமைச்சர் ஆக்கலாம்.  ஏற்கனவே பிள்ளைகளுக்கு பதவிகளுக்கான வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கின்றன.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மகளை இழந்து தவிக்கும் தாயார் விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் சவூதியையும் இணைத்து அரசியல் செய்கின்றார்கள்.

அது ஏன் தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரருக்கு ஒரு துன்பம் வந்தால் தமிழினம் ஆகிய எமக்கு இரத்தம் கொதிக்குது .....ஆனால் தமிழனுக்கு என்ன என்ன கொடூரம் நிகழ்ந்தாலும் அவர்கள் இரத்தம் குளிராகுது ?நாம் இளிச்சவாயங்களா ..........அல்லது இதயம் கொண்டவங்களா

ரிசானாவின் விடயத்தில் எனது இரத்தம் கொதித்தது ...அதனால் உருவாகிய கேள்வி இது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாயார் அண்மையில் ஒரு பேட்டியில் தனது கணவன் வேலை செய்ய முடியாமைக்கு காரணம் புலிகள் என்று குற்றம் சாட்டி இருந்தார் ஆனால் கணவனோ ஆமியும் புலிகளாலும் எண்டு இரண்டு தரப்பையும் சொல்லி இருந்தார்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது இவர்களை பேட்டி காண சென்ற அந்த மூதூர் முஸ்லிம் பத்திரிகையாளர் புலி வாந்தி எடுத்தாரோ தெரியவில்லை

செத்தவீட்டிலைபோய் சரி பிழை கதைக்க்கூடாதுதான். ஆனால் இது கதைக்கவேண்டிய நேரம். ரிசானாவுக்கு நடந்த கொடுமை என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இன்று இன மத வேறுபாடு கடந்து அனைவரும் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் இது ஒரு தமிழனுக்கு நடந்திருந்தால் இந்தளவு தூரம் முஸ்லீம் சகோதரர்கள் அந்தத் தமிழனுக்காக குரல் குடுத்திருப்பார்களா அல்லது சவுதி அரசுக்கு ஆதரவாகக் கதைப்பார்களா???

  • கருத்துக்கள உறவுகள்

செத்தவீட்டிலைபோய் சரி பிழை கதைக்க்கூடாதுதான். ஆனால் இது கதைக்கவேண்டிய நேரம். ரிசானாவுக்கு நடந்த கொடுமை என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இன்று இன மத வேறுபாடு கடந்து அனைவரும் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் இது ஒரு தமிழனுக்கு நடந்திருந்தால் இந்தளவு தூரம் முஸ்லீம் சகோதரர்கள் அந்தத் தமிழனுக்காக குரல் குடுத்திருப்பார்களா அல்லது சவுதி அரசுக்கு ஆதரவாகக் கதைப்பார்களா???

 

தமிழகம் தூங்கிக்கொண்டிருக்கும் வரை தமிழன் நாதியற்றவன்.

அது விழிக்கணும்

இல்லாது விடில் விடிவில்லை.

அதனைச்செய்யும் சீமானை ஊக்குவிப்பதோடு

புலம் பெயர் தமிழர் ஒன்றாக நிற்கணும்

இந்த தாயார் அண்மையில் ஒரு பேட்டியில் தனது கணவன் வேலை செய்ய முடியாமைக்கு காரணம் புலிகள் என்று குற்றம் சாட்டி இருந்தார் ஆனால் கணவனோ ஆமியும் புலிகளாலும் எண்டு இரண்டு தரப்பையும் சொல்லி இருந்தார்

 

சுண்டு அந்தக் கட்டுரையை நானும் படித்திருந்தேன் அக் கட்டுரையின் ஆசிரியரின் புலிகள் மீதான காழ்புணர்வினை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கட்டுரைக்குள் தன் கருத்தை அழகாய் புகுத்தியுள்ளார். அதை அக்கட்டுரையை ஆழமாக வாசித்தால் புரியும்.  ஒரு இரங்கல் கட்டுரைக்குள் அழகாய் அரசியல் புகுத்தியுள்ளார் அந்த முஸ்லீம் எழுத்தாளர் எம்.பி.எம்.பைறூஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அண்ணா அவர் புலி வாந்தி எடுத்ததாகவே நானும் எண்ணுகின்றேன் திருத்த முடியாத ஜென்மங்கள்

  • தொடங்கியவர்

இந்த  ஆக்கத்தில் நியாயமாக பல பிரச்சனைகள் அலசப்பட்டுள்ளன :

 

ரிசானா விடயத்தில் மௌனம் ஏன்? : http://www.yarl.com/forum3/index.php?showtopic=115044

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.